- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர்  -
ஜெயமோகன்From: "Jeya J Mohan" < இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Thursday, May 16, 2002 10:14 PM
Subject: Re: Re:

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு , பதிவுகளில் தேவகாந்தனின் எதிர்வினை படித்தேன். எனக்கு அவரது கருத்துக்களுடன் மாறுபாடு உள்ளது .அவர் எழுதிமுடித்தபிறகு எழுதுகிறேன். அவரது கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருக்கலாம் . பதிவுகள் அடிக்கடி renew செயயப்படுவதில்லை . ஆகவே அடுத்த பகுதிக்காக காத்திருந்து எத்தனைபேர் படிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் .இதை கவனிக்கவும்

ஜெயமோகன்
[உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு நன்றி. தேவகாந்தனின் கட்டுரையினை முழுமையாக வெளியிடாதது எங்கள் தவறு தான். பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்பும் போது நாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு tscu_inaimathi அல்லது inaimathitsc போன்றவற்றிலேதாவது எழுதி அனுப்பினால் எமக்கு முழுமையாகப் பிரசுரிப்பதில் சிரமமிருக்காது. திரும்பவும் தட்டச்சு செய்ய வேண்டிய சிரமமிருக்காது. இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைக் குறைக்க
முயற்சி செய்கின்றோம்.-ஆசிரியர்]
From: jeya mohan nagercoil
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, September 02, 2004 11:31 PM

டி செ தமிழன் எம் ஜி சுரேஷ் என்னை 'அம்பலப்படுத்தி விட்டது 'குறித்து புளகாங்கிதம் அடைவது ஆச்சரியம் அளிக்கவில்லை. இப்படி அடைபவர்களை முன்னால் கண்டுதான் சுரேஷ் அந்த அப்பட்டமான அவதூறை எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த தயக்கமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அந்த தரத்திலான அவதூறுகளை அவர் கவிதா சரண் காலச்சுவடு இதழ்களின் எல்லா இதழ்களிலும் கண்டு மேலும் மேலும் [மாதாமாதம் ] புளாகாங்கிதம் அடையலாம். - ஜெயமோகன் -
From: "Jeya J Mohan" < இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: < இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Saturday, August 10, 2002 12:31 AM

அன்புக்கும் மதிப்புக்குமுரிய வ ந கிரிதரன் அவர்களுக்கு , எங்கள் சிற்றிதழை ஒரு நண்பரின் உதவியுடன் இணையத்தில் கொண்டுவர முயன்று வருகிறோம். tscii எழுத்துரு சிறப்பானது என்று நண்பர் வெங்கட் சொன்னார் . அதை அந்த இணையதளத்தில் சென்று download செய்தோம். எங்களுக்கு சில ஐயங்கள்

1] tscii எழுத்துருவிலேயே பலவகை உள்ளனவே .அவை அனைத்துமே ஒன்றுதானா? முரசு அஞ்சல் tsc யை பயன்படுத்தலாமா ? மற்ற எழுத்துருக்களில் பல கட்டுரைகள் எங்களிடம் உள்ளன.அவற்றை இந்த எழுத்துருவில் எப்படி மாற்றுவது ? converter ஐ இறக்கிக் கொண்டோம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக இணைமதி யில் உள்ள ஒரு கட்டுரையை convert செய்தாலும் முரசு எடிட்டர் பக்கத்தில் அது இணைமதி என்றோ tab என்றோ தான் காணப்படுகிறது .அதை வெட்டி இணைய பக்கத்தில் ஒட்டினால் போதுமா? இணையத்தில் இதை பயன்படுத்த செய்யவேண்டியவை என்ன?வேறு ஏதாவது இறக்குவது தேவையா? பக்கங்கள் தானாகவே பார்ப்பவர்களுக்கு தமிழ் எழுத்துருவுக்கு மாறுமா?

ஜெயமோகன்
jeyamohan

[ ஜெயமோகனுக்கு: tscii எழுத்துகளைப் பொறுத்தவரையில் உள்ள நன்மை என்னவென்றால்... நீங்கள் ஏதாவதொரு tscii எழுத்தைப் பாவித்துத் தட்டச்சு செய்திருக்கலாம். அதனைப் பார்ப்பதற்கு , படிப்பதற்கு நீங்கள் பாவித்த tscii எழுத்து
இருக்க வேண்டுமென்பதில்லை. வேறேதாவது tscii எழுத்து இருந்தால் போதுமானது. உதாரணமாக நீங்கள் முரசு அஞ்சலின் இணைமதிtsc எழுத்தைப் பாவித்து எழுதியதை துணைவன்tsc அல்லது இன்னுமொரு tscii எழுத்து உங்களது கணினியில் இருக்கும் பட்சத்தில் வாசிக்க முடியும். ஆனால் tscii யில் உள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால்.. மைக்ரோசாப்டின் இண்டர்நெற் எக்ஸ்புளோரர் உலாவி கொண்டு பார்க்கும் போது தமிழ் எழுத்து 'இ' யினைப் பார்க்க முடியாது. இதனை முரசு அஞ்சலின் இரண்டாவது பதிப்பில் நிவர்த்தி செய்திருக்கின்றார்கள். tscii 1.71 பதிப்பில் உங்கள் ஆக்கங்களைத் தட்டச்சு செய்வதன் மூலம் இதனைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதற்கு InaiMathiTSCற்குப் பதில் TSCu_InaiMathi பாவித்துப் படைப்புகளைத் தட்டச்சு செய்ய வேண்டும். இணைமதியினை InaiMathiTSCற்கு அல்லது TSCu_InaiMathiற்கு மாற்றுவதற்குரிய வசதிகள் முரசு எடிட்டரிலேயே உள்ளதே. முதலில் முரசு எடிட்டரில் இணைமதி மூலம் தட்டச்சு செய்யப் பட்ட படைப்பினை திறந்து கொள்ளுங்கள். முதலில் முரசு எடிட்டரிலுள்ள edit மெனுவில் SelectAll என்பதைத் தெரிவு செய்யுங்கள்.அதனை TSCu_InaiMathiற்கு மாற்ற வேண்டுமானால்.. முதலில் +Murasu மெனுவிலுள்ள set encodingஐ tscii1.7ற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின் +Murasu மெனுவிலுள்ள Convert Selectionஇல் ToTSCII1.7 என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது இணைமதியிலுள்ள உங்களது படைப்பு tscii1.7ற்கு மாற்றப் பட்டிருக்கும். இதன் பின் மீண்டுமொருமுறை எடிட் மெனுவிலுள்ள SelectAll என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின் TSCu_InaiMathi என்பதையும் தெரிவு செய்யுங்கள். எ-கலப்பை என்னும் மென்பொருளினைப் பாவிப்பதன் மூலமும் தமிழில் இலகுவாகத் தட்டச்சு செய்து கொள்ளலாம். இதனை http://www.tamil.net/newtamil/ekalappai_1.html என்னும் இணையத் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பக்கங்கள் தானாகவே பார்ப்பவர்கள் கணினியில் தமிழில் தெரிய வேண்டுமானால் 'டைனமிக் எழுத்து' முறையினைப் பாவிக்க வேண்டும். இதற்கென்று சில மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன. உதாரணமாக bitstream.com (http://www.bitstream.com) இதற்குரிய மென்பொருளினை வழங்குகின்றார்கள். இதன் மூலம் நீங்கள் பாவிக்கும் எழுத்துக்குரிய டைனமிக் எழுத்தினை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் பின் உங்கள் இணையப் பக்கத்திற்குரிய HTML Source Codeஇல் அதற்கு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். -ஆசிரியர் - ]
From: "Jeya J Mohan" < இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: < இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Wednesday, August 21, 2002 10:46 PM

அன்புள்ள வி என் ஜி

தங்கள் இணைய இதழை இன்றுதான் பார்த்தேன் . மன்னிக்கவும் நான் போன முறை தவறுதலாக நாங்கள் எழுதிய கட்டுரையின் செப்பம் செய்யப்படாதாமுதல் பிரதியை அனுப்பியிருக்கிறேன் . அதே கட்டுரையின் முழுமையா பிரதியை இத்துடன் அனுப்பி வைத்துள்ளேன் .தயவு செய்து அதை நீக்கிவிட்டு இதை போட முடியுமா? மின்னஞ்சலில் இணைப்பு தந்தபோது வந்த பிழை அது .

இத்துடன் ஒரு பகுதி உள்ளது . திகம்பரன் அவர்களின் வினாக்களுக்கு பதில் எழுதியுள்ளேன்.சரவணனுக்கு அனுப்பியுள்ளேன்.அவனது பங்கையும் சேர்த்தபிறகு அனுப்புகிறேன். திகம்பரன் சிறப்பான வினாக்களை அழக்காக எழுப்பியுள்ளார் .எங்களுக்கு மிக உதவிகரமானது . ஜீவன் கந்தையா எழுதும் பகுதியும் மிக நன்றாக உள்ளது .நண்பர்களிடம் வாசிக்கும்படி சொல்லியுள்ளேன். அவரிடம் வாசிக்க வைக்கிற தீவிரமான [சற்று அமிலம் கலந்த ] நடை உள்ளது . அவரிடம் நான் முரண்படுவது அவர் இலக்கியத்தை ஒரு பயன்படுபொருளாக காண்பதில் அளிக்கும் அழுத்தம் . அத்துடன் அவர் மொழியில் ஒரு கசப்பு இருந்தபடியே உள்ளது .அது ஒரு இயல்பு , அதன் இடத்தையும் நான் மறுக்கவில்லை .நான் நேர்மாறாக நம்பிக்கை கொண்டவன் .

ஜெயமோகன்
jeyamohan
From: "Jeya J Mohan" < இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: < இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Thursday, October 03, 2002 10:00 PM

I am enclosing the Arivippu of our web magazine. We will be glad if you publish this at your magazine .[Like the one about 'Theem tharikida' under the

picture .
Thankyou
jeyamohan

My other id is
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

SOLL PUDHIDHU IS GOING ONLINE!
VISIT www.marutham.com a fortnightly web magazine

நன்றி: பதிவுகள்.காம் - https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5576:2019-12-16-12-15-10&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R