1. என் மகிழ்வறத்தை உன் சிரிப்பால் மீட்டிடு! {ஒரு காதலனின் இலகு மொழிச் சங்கீதக் கவிதை]                                                      

-பேராசிரியர் கோபன் மகாதேவா -ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!   
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி  
என்னுள் இன்னும் கொலுவிருக்கும் காதலி.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!  
உன் சிரிக்கும் சித்திரத்தைக் காண்கையில்   
என் உளத்தில் வாழ்வின் ஊக்கம் கூடுதே.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!   
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி! 
உனை நான் மறவேன். உனை நான் துறவேன்.   
உனை நான் துறவேன். உனை நான் மறவேன்.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!     
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
நான் உன்னுடன் சேருமட்டும் சிரித்து உன்  
தங்கம் போன்ற திருமுகத்தைக் காட்டிடு.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி 
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி! 
நாங்கள் மீண்டும் கூடுமட்டும் சிரித்து நீ   
ஆனமட்டும் எனது வாழ்வை ஊக்கிடு.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
உன் சிரித்த சித்திரத்தால் என்றுமே
என் உளத்தில் மகிழ்வறத்தை மீட்டிடு.                       

என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி!                                                   
என்னுள் என்றும் கொலுவிருக்கும்
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!!


 



கவிதை 2: அகதிஆகிய தமிழர்: அடுத்த அடி!                                    

-பேராசிரியர் கோபன் மகாதேவா -அகதி ஆகிய தமிழரிற் பலர்      
அகிலம் எங்கும் சிறகு அடித்தார்.        
பறந்து சென்றும் பரந்து நின்றும்  
பற்பல வழிகளில் பாடுபட்டார்.  

அகதி ஆகிய தமிழரிற் பலர்     
ஈழதேசத்தில் தங்கி நின்று                                  
வெறுப்பினுள் வாழ்ந்தும், வெகுளாது   
வெல்லும் வழிகளை ஆராய்ந்தார்.

அகதி ஆகிய தமிழர் பெரிதாய்   
அடங்கி ஒடுங்கி முடங்கவில்லை.                            
இனம் சாகவில்லை. இளைக்கவில்லை.  
அடிமைகளும் ஆகவில்லை.

அகதி ஆகிய தமிழரிற் பலர்   
அகிலம் எங்கும் பறந்து சென்றார்.      
அமெரிக்காவில், வெளியிருந்து இயங்க
நிழல்-அரசு ஒன்றினைப் பிரசவித்தார்.                     
ஐநாவுக்குள் ஒழித்துப் புகுந்தும் 
தமிழ் ஆதங்கம் அடித்து உரைத்தார்.   
கேலிச் சித்திர நவீன வழியில் 
கொடுங்கோலரை நடுங்க வைத்தார்.    
பொப்-ரகப் பாட்டால் பறை அடித்து  
வசை மழையினை மாரி பொழிந்தார்.

இங்கிலாந்து, கனடாவில், ஊடகங்களால்  
தம் அநீதியை உலகிற்கு அறிவித்தார்.
சங்கம்-கூட்டிச் சம்மேளனங்களில்
உரிமைகள் வெல்லும் வழி ஆய்ந்தார்.               
ஆலயங்கள் ஏற்படுத்தி, அகதிகளை அணைத்து 
அவரின் ஆத்ம-பலத்தை அதிகரித்தார்.                 
பங்குநேரப் பள்ளிகள் நிறுவிச் 
செந்தமிழ் அறிவைப் பெருக வைத்தார்.  
நூல்கள் வெளியிட்டு நுண்ணறிவினால்  
இலக்கியம் காக்க வழி வகுத்தார்.                 
புதினப் பத்திரிகைகள், ஒலி-ஒளி ஊடகச் 
சேவைகள் பலவைச் செவ்வனே செய்தார்.

அவர்களைப் போலவே, அவுஸ்திரேலியா, 
பிறான்சு, யேர்மனி, டென்மார்க், சுவீடன்
நோர்வே, சுவிஸ் போன்ற நல் நாடுகளின்    
அகதித் தமிழரின் பகுதிப் பல பங்கும்...  
ஆண்டுகளாய் அளித்து ஆழமாய் வேரோடி 
வளர்ந்து விளைந்த விருட்சங்கள் ஆகும்.

தாயகம் தங்கிய அகதிகள் தொண்டுகள்  
அடிப்படை முறையில் அளப்பரியனவாம்.
காயங்கள் தாங்கிக் கனத்த இடர்களிடை
களைக்காது இளைக்காது அன்னார் அங்கு
மாயத்தால் வாழ்ந்து உபாயத்தால் வழிவகுத்து   
உசிதமாய் உரிமைப்போர் நடத்தி உள்ளார்!

சொல்லி முடிந்தவை, அகதித் தமிழரின்
கூட்டுத் தொண்டுகள், சேவைகள் ஆகும்.
சொல்வதற்குப் பல உண்டு, தனித்துச் செய்த
திறமைகொள் அகதிகள் சாதனை நிரல்கள்:

தொலைபேசும் துறையில் உலகில் பெயர்-பதித்தார் 
தன்திறனால், தமிழ் அகதி நல்லார் ஒருவர்.
விலையான பங்குச் சந்தை வியாபாரத்தில்
பணம் குவித்தார், வேறொரு அகதித் தமிழர்.
கலைகளிலும் கல்வியிலும் உலகில் மினுங்குகிறார் 
ஆயிரமாயிரம் தனித் தமிழ் இளைஞர்.
நிலைபெற்ற நவீன ஈமெயில் தொடர்பைத்  
தொடக்கியதும் தமிழ் அகதியாம் ஒருவர்.
பல்கலைக் கழகம் பலவற்றில் பெரும்பெரும்
ஆசிரியப் பணியிலும் பற்பல தமிழர்.
நல்லறிவைப் பரப்புதற்குத் தனிநூல்கள் எழுதி
நோற்கின்றார் பல்நூறு அகதித் தமிழர்.   

யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும்
பாதையிற் சென்ற பல தனித் தமிழர்  
எதிர்த்த தடைகளை உடைத்துச் சென்று
புதுப்புதுப் பாதையில் புதிய நாடுகளில்          
எந்த வேலையும் எளியதெனாது எடுத்து 
அந்தந்த நாட்டுக்கு அயராது உழைத்துப்          
பந்தங்களுக்குப் பிரயாணப் பணமும் அனுப்பி  
முந்தி வந்தோர் எஞ்சியரை எவ்வாறோ இழுத்து   
பலசரக்குக்கும் பெற்றோலும் பகலிரவாய் விற்று 
நித்திரை இன்றி  நீள்நேரம் உழைத்துக்     
கடுங்குளிர், இருள், கறுப்பு-நிறப்-பேதம்...
மொழிப் பிரச்சினையையும் பிரயாசையால் வென்று
கரிசனையாய் உள்நாட்டார் உள்ளங்கள் கவர்ந்து 
பரந்து பல சமூகத் தளங்களிற் புகுந்து   
அரசியலார், ஆசிரியர், எந்திரிகர், வைத்தியர்கள்,
வியாபாரத் தொழிலாளர், சட்டத்தரணிகள்,      
கணக்காளர், உணவகத்தார், உதவியர், விநியோகர், 
குப்பை-கூட்டிஎறிவோர், கோப்பை-கழுவித்துடைப்போர், 
இவ்வாறு பல்மட்டத் தொழில்கள் பார்க்கின்றார்...
இவ்வுலகு அடங்கலும் ஈழ அகதித் தமிழர்.

இருக்கும் எம் அகதி-நிலை இன்று இதுவானால் 
அடுத்து நாம் மேலும் ஆழ்ந்து தூரமும் நோக்கி...
வருங்காலம் எவ்வாறு சென்றால் எல்லார்க்கும்
நன்றென்று சிந்தித்து முன்செல்வோம் வாரீர்!

விலங்குகள்தான் வேறுவேறு மனித இனத்தோர் 
என்றே எம் விஞ்ஞான அறிஞர் சொல்கிறார்.
விலக்கானவர் அல்லர், இலங்கையின் நான்கு
இனத்தாரும் என்பதும் அதிலே அடங்கும்.
சிறுபான்மைத் தமிழர், மூவினத்தின் நாம்கூட, 
வேறு வேறு விலங்கினங்கள் ஆவோம் அல்லவா?
கடைசியில் மூவினமும் கூடித் தனி நாடு
அடைந்து வாழ்ந்தாலும் ஒரேஇனம் ஆவோமா?
ஒரேமொழியைப் பேசிடினும் மதமும், இயல்பும் 
வரலாற்றாலும் வேறுபட்டோர் நாமெல்லோ?
ஒரேமொழிபேசி அம்மொழியில் தினமும்  
அரசியலில் அடிபடும் தமிழ்நாட்டைப் பாரீர்! 

இலங்கையின் பெரும்பான்மைச் சக-இனத்தோரும் 
நூதனப் பயம் ஒன்று கொண்டோரே கண்டீர்!
பலவழியில் தமிழ்பேசும் மக்களை மெச்சி  
மனதில் உயர்த்துவதால், பயமும் உள்-உறைந்தோர். 
பக்கத்திருந்து பளிச்சிடும் எம் பழம்பெரும்
தமிழ்நாடும் மாபெரும் பூதமாம் அவர்க்கு.

எக்காலமும் அக் கற்பனைப் பிரிவுப் பயம் 
நிறைவேறும் சாத்தியம் இல்லவே இல்லை.
ஏன் எனும் விளக்கத்தை வரி இரண்டில் மேலே,
நல்ல முறையில் நான் சொல்லியே உள்ளேன்.

எனினும் தீங்கில்லாப் பல்வகைப் பாம்புகள்
போன்றவைக்கும் மனிதர் அஞ்சுதல் போலே... 
சனிதோசச் சந்தேகமும் போலவே... அப் பயம் 
தமக்கு உண்டேஎன்று அவரே சொல்லியுள்ளார்.
எனவேதான் ஐம்பதுகள் ஒருமொழித் திணிப்பும்,
ஓர வஞ்சனையும், இன ஒதுக்கலுமாம்.
எனவேயே எம் இளைஞரின் 30-ஆண்டு
ஆயுதப் போரும், அழிவுகளும், மௌனமுமாம்.
சந்ததி ஒன்று சண்டையில் சங்கமம் ஆயிற்று.
வெந்தன தீயில், எம் சுபீட்சமும், சாந்தியும்.
நடந்துவந்த பாதை சரி.  நாளையின் வழி எது?

இனி நாம் இலங்கையில் இவ்வாண்டு பிறந்து 
விடிந்துள்ள புரட்சியின் வழியினிலே சென்று    
மனம்மாறி இன்றுள்ள நேச இணக்கமுள்ள 
தேசீயப் புரட்சி-வழிப் புதுமை அரசுடன்...
இனவழியில் ஒற்றுமையும் உரிமைகளும் பேசி 
இணங்கும் சாத்தியம் திடமாய்த் தோன்றுது..

நாமும் எம் சமூகத்தின் சாதிப் பிரிவினையும், 
சீதனத்தின் சீர்கேடும் என்றோ துறந்து விட்டோம்.
ஆண்-பெண் சமத்துவத்தை எம்ஆழ்ந்த, நீண்ட
அனுபவத்தால் நினைவாக்கி ஏற்றும் விட்டோம்.
இராச தந்திரங்களை அரசியல் துறைதனில் 
அனுபவத்தால் அண்மையிலே கற்றும் விட்டோம்.

இவ்வாறு எம் பழைய சில, பாரதூரக் குறைகள்
எம்மிடம் இன்று இல்லாது ஒழிந்திட்ட படியால்,
தமிழர்க்கு ஆண்டவனால் கிடைத்த எதிர்க்கட்சித்
தலைமையையும் உசிதமாய்ப் பாவனை செய்து
தமிழினம் மூன்றும் தன்மையாய்த் தர்க்கித்து 
எம் உரிமைகளை உசிதமாய் இணங்கலாம் என்பேன்!

சிங்களச் சோதரர்க்கும் புத்தி-மதிகள்
இங்கு சில நாம் சொல்லவே வேண்டும்.
தமிழ்பேசும் இனத்தாரை இனிமேல் உம்சோதரராய்
தயக்கங்கள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ளுவீர்! 
சமத்துவமாய் நடத்தினால் அவர்களும் உம்முடன் 
சமத்துவமாய்ச் சேர்ந்து தம் தோள்களை இணைத்து 
உமது சிங்களத் தீவை, தம் தமிழின் ஈழத்தைத்
தமதும் எனப் பேணிப் பரிவுடனே சீர் செய்து
அக்காலக் கலாநிதி ஆனந்த குமாரர் போல்...
அருணாச்சலம், இராமநாதன் சான்றோரைப் போல்...  
எக்காலமும் உமது கலாச்சார, இன-வழி
மேன்மைக்குத் தமிழரும் உதவிடுவார் காண்பீர்!

சிறிலங்கா, இலங்கை, சிங்களத்-தீவு, ஈழம்...
வெறிகொண்டு எவரும் எப்பெயரில் அழைத்தாலும்
இன்று வசிக்கின்ற எல்லார்க்கும் இது சொந்தம்.
நன்றே நாம் நாலினத்து, நால்-மதத்தாரும் சேர்ந்து
ஒற்றுமையாய் உழைத்து ஒற்றுமையாய்ப் பேணி
சற்றும் இனிப் பிணங்காமல் சமாதானமாய் வாழ்வோம்!


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R