பதிவுகள் முகப்பு

மண்ணும் சொல்லும்: மஹ்மூத் தர்வீஷின் கவித்துவ இயக்கவியலும் , எம்.ஏ. நுஃமானின் மொழிபெயர்ப்பு அரசியலும்! (பகுதி 1) - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
16 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தத்துவார்த்த அறிமுக உரை (Comprehensive Introduction)

1. நுழைவாயில்: உலக இலக்கியப் பரப்பில் எதிர்ப்பின் அழகியல் (The Aesthetics of Resistance)

இருபதாம் மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக இலக்கியப் பரப்பில், ஒடுக்குமுறைக்கு எதிரான கவிதை மொழி என்பது வெறும் சொற்களின் சேர்க்கையாக இருக்கவில்லை. அது வரலாற்றின் சிதைவுகளுக்குள் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் அசைக்க முடியாத கூட்டு நனவிலியாக (Collective Unconscious) விளங்கியது. லத்தீன் அமெரிக்காவின் பப்லோ நெருடா, கியூபாவின் நிக்கோலஸ் கியென், ஆப்பிரிக்காவின் லியோபோல்ட் செங்கோர் மற்றும் நுகுகி வா தியாங்கோ போன்ற ஆளுமைகளின் வரிசையில், மத்திய கிழக்கின் ஆகப் பெரும் தத்துவார்த்தக் குரலாக ஒலிப்பவர் பலஸ்தீனத்தின் தேசியக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆவார்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில், சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட (Internally Displaced) ஒரு சமூகத்தின் இருத்தலியல் துயரத்தை, உலகளாவிய மானுடப் பொதுத்தளத்திற்கு நகர்த்திய பெருமை தர்வீஷுக்குரியது. கவிதை என்பது அழகியல் இன்பம் தரும் ஒரு நுகர்வுப் பொருள் அல்ல; மாறாக, அது காலனிய மற்றும் சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் மேலாதிக்கச் சொல்லாடல்களை (Hegemonic Discourses) உடைத்தெறியும் ஒரு 'பொருளாயுதக் காரணி' (Material Weapon) என்பதை அவரது ஒட்டுமொத்த கவித்துவத் தடமும் நமக்கு நிரூபித்துக் காட்டுகிறது.

2. தமிழ் அறிவுச்சூழலும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் கொடையும் (The Tamil Intellectual Context)

தமிழ் இலக்கியச் சூழல், குறிப்பாக ஈழத்து இலக்கியப் பரப்பு, தசாப்த காலங்களாகப் போர் மற்றும் இடப்பெயர்வின் வலிகளைத் தன் சொந்தக் குருதியில் அனுபவித்த ஒன்று. இத்தகையதொரு சூழலில், பலஸ்தீனத்தின் ஆகப் பெரும் எதிர்ப்புக் குரலான தர்வீஷை தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகம் செய்ததன் மூலம், பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பண்பாட்டுப் பரிமாற்றத்தை (Cultural Exchange) நிகழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க ...

இத்தாலியப் பயணத்தொடர் இத்தாலியப் பயணம் (3 & 4) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
16 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3

நகரம் 1916 ஆம் ஆண்டின் முதல் யுனெஸ்கோ நிறுவனத்தால்  அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் நகரமாக உள்ளது. சுற்றி வர திராச்சை தோட்டங்கள் சுற்றியிருக்கும் நிலப்பரப்பில், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த நகர், கோட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.

அக்காலத்தால் வந்த இந்த ரஸ்கனி (Tuscany)என்ற ,இதே  பிரதேசத்தில் பிறந்த (Piazza Pio 11) பாப்பண்டவரின் பேரில்  அவர் பின்பு பாப்பாண்டவராகியபின் (Pope Pius II),  இந்த மாதிரி நகரம் கட்டப்பட்டது

பாப்பாண்டவரின் வேண்டுகோளின் பேரில், பேர்னாடோ (Bernardo Rossellino) என்ற கட்டடக் கலைஞரால் நிறைவேற்றப்பட்டது. அந்த இடத்திலிருந்த ஊரின்  அமைப்பை மாற்றி, புதிதாக இந்நகரத்தை மனிதவுணர்வுத் தத்துவம்  (Humanist Philosophy) அடிப்படையாகக் கொண்ட முதலாவது நகரமாக அமைக்கப்படுகிறது. இங்கு மக்கள் கூடும் பிரதேசம், அதைச் சுற்றி மக்கள் வாழும்  இடங்களாக இந்த நகரம் உருவாக்கப்பட்டது.

ஆரம்பக் காலத்தில் அரச மாளிகைகள்,பிரபுக்களின் வசிப்பிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள் தவிர்ந்தவை எல்லாம், சாதாரண மக்கள் வாழ்வது  குடிசை போன்ற அமைப்புகளாகவே இருந்தது. ஐரோப்பாவில் முக்கியமாக இத்தாலியில் 15ம் நூற்றாண்டுகளில் உருவாகிய மறுமலர்ச்சி யுகம் உருவாக கத்தோலிக்க  பாப்பாண்வரகளது பங்கு மிகவும் முக்கியமானது. இதுவே (Humanist Philosophy) பிற்காலத்தில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஓவியம்,சிற்பம், கட்டிடக்கலைகள் வளர்ச்சியடைந்தது மேலும் பல்கலைக்கழகங்கள் பல நகரங்களில் தோன்றக் காரணமாகும்.

மேலும் படிக்க ...

காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்! - முனைவர் கு.வளர்மதி -

விவரங்கள்
- முனைவர் கு.வளர்மதி -
அரசியல்
15 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர் - - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -


முன்னுரை

இன்றைய உலகில் பெண்களின் பங்கு மகத்தானது. ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வாக்கினை ஏற்ற பல தலைவர்களுள் அண்ணல் காந்தியடிகளும் ஒருவர். பெண்ணைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என திருவள்ளுவரும், வருங்காலம் பெண்ணுடையது தான் என வினோபாஅடிகளும் கூறுகின்றனர். அடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் ஆன்மா ஒன்றே. இருவருக்கும் உணர்வுகளும் ஒன்றே. ஒருவர் மற்றவர் உதவியின்றி வாழமுடியாது. ஆண் காலங்காலமாக பெண் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பினும், ஆடவரிடையே தோன்றிய மகான்கள் பெண்ணை ஆணுக்குச் சமமென்றே மதித்திருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் பங்கு கணிசமானது என்பதை மறைக்க முடியாது. காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: தன்னலம் கருதாத சிவராசா மாஸ்டர்! இலங்கை ஆசிரியர் சங்கத்தில் அர்ப்பணிப்புமிக்க தோழர்! - முருகபூபதி -  

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள் ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.
அதனைப்படித்தவேளையில் சிவராசா மாஸ்டர் அவர்களுடனான முதல் சந்திப்பும், அவருடனான தொடர்பாடல்களும்தான் நினைவுக்கு வந்தது. அவர் குறித்த அஞ்சலியுடன், இந்த நனவிடைதோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஆயுதக்கிளர்ச்சி நடந்தது. அக்காலப்பகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – கலாநிதி என். எம். பெரேரா மற்றும் பீட்டர் கெனமன் ஆகியோர் தலைமை தாங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சமசமாஜக்கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த கூட்டணி அரசு பதவியிலிருந்தது.

ஆயுதம் ஏந்திய இயக்கமாக ஜனதா விமுக்தி பெரமுன உருவாகி, அதில் அங்கம் வகித்த ஏராளமான சிங்கள இளைஞர்களினால், அந்த கிளர்ச்சி எழுச்சிகொண்டது. எனினும் அரசின் அடக்குமுறையினால் அந்தப்போராட்டம் முறியடிக்கப்பட்டு, பலர்கொல்லப்பட்டனர், மேலும் பலர் சிறைவைக்கப்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை, போகம்பர, மகஸின், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட பல பிரதேசங்களில் அமைந்திருந்த சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் கொழும்பில் நீதியரசர் அலஸ் தலைமையில் குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நடைபெற்றது. அக்காலப்பகுதியில் இலங்கை ஊடகங்களில் அந்த விசாரணைகள் தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இன்று போல், அக்காலப்பகுதியில் உடனுக்குடன் செய்திகளை படிப்பதற்கான ஊடக சாதனங்கள் இருக்கவில்லை.

மேலும் படிக்க ...

கரிசல் மண்ணின் உயிர்த்துடிப்புடன் கூடிய மொழியில் யதார்த்தவாதப் படைப்புகளைத் தந்தவர் பூமணி !

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
14 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சில நாட்களுக்கு முன்புதான் இங்குள்ள டொரோண்டோ நூலகக் கிளையொன்றிலிருந்து எழுத்தாளர் பூமணியின் ஐந்து நாவல்களை உள்ளடங்கிய 'பூமணி நாவல்கள்' தொகுப்பினை, நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது, இரவல் வாங்கி வந்திருந்தேன். நேற்று அவரது மறைவு செய்தி வருகிறது, ஆழ்ந்த இரங்கல்.

தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை. யதார்த்தவாதப் பாணியில், கரிசல் மொழியினை உயிரோட்டம் மிக்கவையாகப் புனையப்பட்டவை இவரது புனைவுகள்.

இந்திய மத்திய அரசின் சாகித்திய அமைப்பின் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். தனது 'கருவேலம் பூக்கள்' கவிதையைத் திரைப்படமாக்கி இயக்கியவர். 'அசுரன்' திரைப்பட மூலக் கதையும் இவருடையதுதான். அது இவரது 'வெக்கை' நாவலின் தழுவல்.

மேலும் படிக்க ...

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு சாதனை விருது - 2026! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
14 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 33 வருடங்களாக கனடாவில் இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்தகால சாதனைகளுக்காக ‘பிகைன்ட் மீ இன்ரநாசனல் மீடியாவால்’ 2026 ஆம் ஆண்டுக்கான சாதனை விருதான ‘லெஜன்ட் அன்ட் ஐகோன்’ (டுநுபுநுNனு’ளு ரூ ஐஊழுNளு) விருது கொடுத்துப் பாராட்டப் பெற்றது. இந்த நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமை 20-6-2026 ஆம் ஆண்டு, ரொறன்ரோ மக்னிக்கல் வீதியில் உள்ள பிரைட்டன் மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட சாதனையாளர்கள் சிலரும் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக புற்றுநோய் தடுப்பு சிறப்பு வைத்தியர்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. நிறுவனங்களுக்கான சிறப்பு விருது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு வழங்கப்பெற்றது.

மேலும் படிக்க ...

சனாதன தர்மம் பற்றிச் செயற்கை நுண்ணறிவுடன் நீண்டதோர் உரையாடல்! உரையாடியவர் வ.ந.கிரிதரன்

விவரங்கள்
உரையாடியவர் வ.ந.கிரிதரன்
நேர்காணல்
14 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
- சனாதன தர்மம் பற்றிச் செயற்கை நுண்ணறிவுடன் நீண்டதோர் உரையாடல்!  உரையாடியவர் வ.ந.கிரிதரன். -
அண்மையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி சனாதன எதிர்ப்பு  பற்றித்தெரிவித்த கருத்துகள் தமிழகத்துக்கப்பால், பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தன. ஆர்ப்பாட்டங்கள் பல உதயநிதிக்கெதிராக எழுந்தன. இந்நிலையில் சனாதனம் பற்றிய சரியான புரிதலை அறிய வேண்டும் என்னும் அவாவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவுடன் நடத்திய விரிவான உரையாடலிது. 
 
என் பல கேள்விகளுக்கு விரிவாகத் தனது கருத்துகளை எடுத்துரைத்தது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் கருத்துகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில் உள்ள உண்மை எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வுரையினை முழுமையாக வாசிக்கும் உங்களில் எவருக்காவது அவற்றில் முரண்பட்ட கருத்துகள் இருந்தால் அறியத் தரலாம். அது காத்திரமான  தர்க்கத்துக்கு வழி வகுக்கும்.
 
செயற்கை நுண்ணறிவு
 
சனாதன தர்மம் என்றால் என்ன
 
சனாதன தர்மம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும், இதற்கு "நிலையான தர்மம்", "நித்திய ஒழுங்கு" அல்லது "மாறாத நெறிமுறை" என்று பொருள். இது மனிதர்களால் உருவாக்கப்படாத, காலத்தைக் கடந்து எப்போதும் நிலைத்திருக்கும் இயற்கையின் அடிப்படை விதிகளையும் ஆன்மீகக் கொள்கைகளையும் குறிக்கிறது. நவீன காலத்தில், இது இந்து சமயத்தின் மற்றொரு பூர்வீகப் பெயராகவும், அதன் வாழ்க்கை முறையாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க ...

“கறிமுசா’: (ஓடை – iii) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
12 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“தங்க வேலாயுதபுரம்” – “அங்குதான் காணி வாங்கி இருக்கின்றேன். காட்டு தொங்கல். யானைகள் அலைந்து திரியும் காட்டு தொங்கல்”.

கிட்டத்தட்ட ஐந்து வருட காலத்தின் பின் இவனுடன் மீண்டும் பயணிக்கின்றேன்.

இந்த நான்கைந்து வருடங்களில் இவனில் எவ்வித மாற்றத்தையும் கண்டேனில்லை. அண்மையில் கூட முல்லை நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்று கண்ணீர் வடித்து விட்டு வந்திருந்தான்: “இடத்தை விட்டு வெளியே வரவே மிகுந்த கஷ்டப்பட்டு போனேன். இரண்டு மணி நேரம் குடும்பத்தாருடன் ஆட்டோவில்… அவ்வளவு சனம் அப்பிப்போய் இருந்தது”. கேட்டிருந்தேன்: “மற்ற நினைவேந்தல் தினங்களுக்கு நீங்கள் செல்வதில்லையா?

“இல்லை. மாவீரர் நாள்தான் என்னை உலுக்கி பிடிக்கும் தினம். எனது அருமை தோழர்கள் - இதயத்தை வருடும் எனது நண்பர்கள் - தங்கள் இன் உயிரை வந்த இந்த பெருநாள் - அடடா எப்படிப்பட்ட தோழர்கள்! எப்படிப்பட்ட வாழ்க்கை அது…”.

ஆனால் ‘காணிக்குச் சென்று வருவோமா’ என்பதே அவனது முதல் கோரிக்கையானது. ஒருவேளை தான் மிக அண்மையில் வாங்கி போட்டிருந்த அந்தக் காணியை எனக்குக் காட்ட அவன் ஆசைப்பட்டிருக்க கூடும் - அல்லது அவனுக்கே அங்கே செல்ல வேண்டிய ஒரு தேவையும் எழுந்திருக்கலாம். இருந்தும் இவை அனைத்தும் நான் சம்பந்தப்படாதது. ஆனால் உடனடியாக ஒப்புக் கொண்டேன். ‘காட்டு தொங்கல்’ என்ற பதத்தால் நான் பெரிதும் கவரப்பட்டேன்.

‘கடல் குளிப்பு’ என்று ஏற்கனவே நிச்சயித்திருந்த அன்றைய தினத்தை மாற்றி இவனுடன் புறப்பட்டேன்.

மேலும் படிக்க ...

எஸ்.ஜானகி - தன் கூவலை நிறுத்திய இசைக்குயில்!

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
12 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அடுத்தடுத்துத் தமிழ்த்திரையுலகின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா என்று இன்று தென்னிந்தியாவின் இசையரசி என்றழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகியை இழந்திருக்கின்றோம். இவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பங்குபோட்டுக்கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.

இசை, நடிப்பு, எழுத்து, பாட்டு, பேச்சு எனப் பல் துறைகளில் எம் இன்பதுன்பங்களில் பங்கு பற்றும் கலைஞர்கள் தம் கலைப்படைப்புகள் மூலம் எம் வாழ்வில் பின்னிப்பிணைந்தவர்கள். எம் இருப்பில் அவர்களுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. இவர்கள் மறைந்தாலும் இவர்கள் வழங்கிய கலைப்படைப்புகளுக்கு அழிவில்லை. அவை நிரந்தரமானவை. அவ்வகையில் தாம் சிறந்து விளங்கிய கலைகளூடு இவர்கள் மானுட சமுதாயத்தின் வரலாற்றில் தொடர்ந்தும் பயணிப்பார்கள்.

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை மற்றும் பாலியல்ரீதியிலான அழுத்தங்கள், வன்முறைகள் பற்றியும்...

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
11 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம். இப்பொழுது அதிகமாகப் பல்கலைக்கழகங்களில் இவ்விதமான அழுத்தங்கள் மாணவிகள் மீது பிரயோகிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
10 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி.  இப்பாடலை யு டியூப்பில் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=EmO3UvN7Cl4  ' வ.ந.கிரிதரன் பாடல்கள் ' சானலை 'Subscribe' செய்வதன் மூலம் உங்கள் வாசலுக்குப் புதிய பாடல்கள் விரைவாக வந்து சேரும். உங்கள் ஆதரவு 'சான'லின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருக்கும்.]


சக்தியும் , பொருளும்!  

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

பொருளென்று ஒன்றும் இல்லை என்றுகூறும்
பவுதிகத்தின் வழிநின்று பார்த்தால் கண்ணே!
அடிப்படைத் துணிக்கைகளும் சக்தியன்றோ கண்ணம்மா!
சக்தியின் நாட்டியமா நம்மிருப்பும் கண்ணம்மா!

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

மேலும் படிக்க ...

ம.ஆச்சின் கவிதைகள் (முன்னாள் தமிழ் நாடு தொல்லியல் துறை மாணவர்) -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
09 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. தொல்லியல் அறிஞர் எஸ். ராஜகோபால்: மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக் கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவர்!

மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக்
கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவரே!
திண்ணிய பாறைத் திருவுடம்பில் தூங்கியநற்
பண்ணிய கதைகளைப் பாரறியச் செய்தவரே!
​தமிழி எனும்மூத்த தாயவளின் தொன்சுவட்டைப்
அமிழ்தனைய கையால் அசைத்துப் படித்தவரே!
புதையுண்ட காசுகளின் பொன்னான மாண்பையெல்லாம்
சபையேறி அன்று சாற்றி உரைத்தவரே!
​வீர நடுகல்லில் விம்மியெழுந்த வீரர்களைச்
சீரான நெஞ்சோடு இங்கு எழுப்பி நிறுத்தியவரே!
'ஆவண' ஏடெல்லாம் உம்முடைய முத்திரையே!
யாவருளர் ஐயா இனிமேல் உம்மைப்போல்?
​கல்லெழுத்தைத் தேடிக் களம்நோக்கி ஓடியநற்
காலடிகள் ஓயக் காரணம்தான் ஏனோ?
எல்லோர்க்கும் அச்செழுத்தைக் கற்றுத் தந்துவிட்டுச்
சொல்லாமல் கொள்ளாமல் சோகமாய் மறைந்ததென்ன?
​மௌனப் பழமையின் மாமொழியைப் பெயர்த்தவரே!
இன்றுநீரே ஏனோ மௌனமாய் ஆகிவிட்டீர்?
தொன்மை வரலாற்றைத் தொட்டுப் படித்தவரே!
இன்று வரலாறாய் நீரே மாறிவிட்டீர்!
​பாறை எழுத்துக்கள் தேய்ந்து அழியலாம்...
பாரில் உம்புகழ் என்றும் அழியாதே!
கண்ணீரில் மூழ்கிக் கசிந்துருகி நிற்கின்றோம்...
நெஞ்சில் நிலைத்தெழுந்த கல்வெட்டே நீரே!                       

மேலும் படிக்க ...

இத்தாலியப் பயணம்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
08 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன என்ற வாசகம், அக்காலத்து ரோம ராச்சியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே, நாங்கள் ஏற்கனவே கட்டார் வழியாகச் செல்ல திட்டமிட்டிருந்த எங்களது இத்தாலியப் பயணம் திசை மாறியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டிருந்த போரின் காரணமாக மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் எங்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவே நினைத்திருந்தோம். ஆனால், இறுதி இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல் வந்தது: “புறப்படுங்கள்” என்ற அறிவிப்பு.

அவர்களின் திட்டமிடலின்படி, எங்கள் பயணம் மெல்போர்னிலிருந்து தென் பசிபிக் சமுத்திரத்தைத் தாண்டி, சிலி நாட்டின் தலைநகரமான சாண்டியாகோ சென்றது. அங்கிருந்து தென் அமெரிக்கக் கண்டத்தைக் குறுக்காகக் கடந்து, அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேலாக பறந்து ஸ்பெயின் தலைநகரமான மாட்ரிட் சென்று, பின்னர் ரோம் சென்றடைந்தோம்.

சில நிமிடங்களில் பயணம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் தள்ளப்பட்டோம். ஒரு வருடத்திற்கு முன்பே பணம் செலுத்தி பதிவு செய்த பயணத் திட்டம் என்பதால் குழப்பம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் வரலாற்று நாயகர்களான ஜு லியஸ் சீசர்(Julius Caesar) மற்றும் மார்க் அந்தனி(Mark Antony) நினைவுக்கு வந்ததுடன் அவர்கள் எனது கையை பிடித்து அழைத்தது போன்ற நினைப்பு என்னிடம் எழுந்தது. சியாமளாவின் சம்மதமும் கிடைத்ததால், பயணத்தைத் தொடர முடிவு செய்தோம்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: மாவை நித்தியானந்தனின் இரண்டு நாடகங்கள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
08 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது.  அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில்  நதியாக்குவதில்தான்  அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன். இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், மெல்பனில் நண்பர் மாவை நித்தியானந்தனின் பவள விழா நடைபெற்ற வேளையில் எழுதிய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

மாவை நித்தியானந்தன், மட்டக்களப்பில் இயங்கிவரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருதும், கம்பன் கழகத்தின் மாருதி விருதும் பெற்றிருப்பவர். அண்மையில் மாவை நித்தியானந்தன் வெளியிட்டிருக்கும் இரண்டு நாடக நூல்களப்பற்றி எழுதும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது.

இனிச்சரிவராது, ஐயா லெக்சன் கேட்கிறார் ஆகிய இரண்டு நூல்களும் மாவை நித்தியின் புதிய வரவுகள். ஏற்கனவே மேடையேற்றப்பட்ட நாடகங்கள்தான் இவை இரண்டும். நடிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள், படிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள் என இரண்டு வகை இருப்பதாக அறிஞர் மு. வரதராசன் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். மாவை நித்தியின் நாடகங்களும் அத்தகையன.

ஐயா லெக்சன் கேட்கிறார்

ஐயா லெக்சன் கேட்கிறார் நாடகம் 1973 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில், கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்றத்தின் விழா நடந்தவேளையில் அங்கு மேடையேறியது. அன்று அங்கே பார்த்த இந்த நாடகத்தை பலவருடங்களுக்குப்பின்னர் மெல்பனிலும் பார்த்திருக்கின்றேன்.
ஒரே நாடகப்பிரதியில் இரண்டு நாடுகளிலும் வேறு வேறு கலைஞர்கள் பங்கேற்ற நாடகம் இது.

மேலும் படிக்க ...

சிறுகதை: மாறவேண்டியது யார்? - பாலமுருகன். லோ -

விவரங்கள்
- பாலமுருகன். லோ -
சிறுகதை
07 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

படுக்கையறையின் மெல்லிய வெளிச்சத்தில் ரேகா தன் மகன் விஷால் பக்கம் திரும்பிப் படுத்திருந்தாள். திடீரென அவளது தூக்கம் சற்றே கலைந்தது. விழித்தவள் தன் மகனைப் பார்த்தாள்; அவளுக்குள் பதட்டம் எழுந்தது. விஷால் தன் உள்ளங்கையை உயர்த்தி, வலது ஆள்காட்டி விரலால் தொடர்ந்து மேல்நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தான். இதைக் கவனித்த ரேகா, அவனது முகத்தை உற்றுப் பார்த்தாள். விஷால் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, அதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்.

பதறிப் போன ரேகா அவனை உலுக்கினாள்.

“கண்ணா விஷால், எழுந்திரு.”

“என்ன ஆச்சு உனக்கு?”

“டேய், கண்ணை முழி,” என்று அவனிடம் இரண்டு மூன்று முறை கூப்பிட்ட பிறகு, விஷால் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.

“என்னம்மா… என்ன ஆச்சு? ஏன் என்னை எழுப்பினீங்க?” என்றான்.

“கண்ணு, நீ தூக்கத்துல என்ன பண்றேன்னு தெரிஞ்சுதா?”

“ஏம்மா, தூக்கத்துல அப்படி என்ன பண்ணியிருப்பேன்? நல்லா தூங்கியிருப்பேன்,” என்றான்.

“இல்லடா விஷால், நீ தூங்கியிருந்தா நான் ஏன் உன்னை எழுப்பப் போறேன்? நீ தூங்கு, காலையில பேசிக்கலாம். உங்க அப்பாவும் ஊருக்கு போனவரு; காலையில வந்துடுவாரு. நீ தண்ணி குடிச்சிட்டு படு,” என்றாள் ரேகா.

மேலும் படிக்க ...

FeTNA இன் 39ஆவது மாநாடு! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
நிகழ்வுகள்
07 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.

மறைமலை அடிகள் அவர்களையும், இராஜராஜ சோழனையும் முதன்மைப்படுத்தியிருந்த நிகழ்ந்த இம்மாநாட்டில், ‘சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும்’ என்ற நிகழ்ச்சியுடன் என் முதல் நாள் ஆரம்பமானது. (துவக்கமா, தொடக்கமா என்ற ஆய்வுக்குள் செல்வதற்கு நான் விரும்பவில்லை.) நிகழ்ச்சியை ஆரம்பித்துப் பேசிய சுபா காரைக்குடி அவர்களினதும், தொகுத்தளித்திருந்த அருள்ஜோதி சுப்பிரமணியம் அவர்களினதும் தமிழும், சொற்கோர்வைகளும் மிகவும் அழகானவையாக இருந்தன. புதுமைப் பித்தனின் கதைகளைப் பற்றிப் பேசிய பெருந்தேவி அவர்களின் பேச்சு, அந்தக் கதைகளை மீளவும் வாசிக்கவேண்டுமென்ற தூண்டலைத் தரும் சிறப்பான பேச்சாக அமைந்திருந்தது. நகைச்சுவை பற்றிப் பேசிய சாம்ராஜ் அவர்கள் குறிப்பிட்டிருந்த உதாரணங்கள் நகைச்சுவையானவையாக எனக்கிருக்காததால், இலக்கியத் தோட்ட நிகழ்வொன்றில் அவர் பேசிய பேச்சை ரசித்ததுபோல, அதை என்னால் ரசிக்க முடியவில்லை. ஈழத்து எழுத்தாளர்கள் ஏன் போரைப்பற்றி மீளமீள எழுதுகிறார்கள் என்பது பற்றி தமிழ்நதி அவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசினார். (நான் அங்கிருந்ததாலோ அல்லது என் எழுத்துகளை வாசிக்காததாலோ அப்படி எழுதுபவர்களின் பெயர்களில் என் பெயரையும் சேர்த்துக்கொண்டார். போரின் கொடுமையை நேரில் பார்க்காதபடியாலும், வேறு சில காரணங்களாலும் நான் போரைப் பற்றி எழுதுவதில்லை என்பதையும் இதில் சொல்லவேண்டும்.) அத்துடன் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் என்ற பிரிவில், ஈழத்திலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்திருப்பவர்களின் படைப்புகளும் அடங்குவதே சரியானது என்றார். ரொறன்ரோவில் பெற்றுக்கொள்ள முடியாமலிருந்த தமிழ்நதியின் இரு நூல்களை நியூஜேர்சியில் வைத்துப் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.

மேலும் படிக்க ...

சிறுகதை: யானைகளும் மனிதர்களும் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
சிறுகதை
07 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாலத்தை கடந்து, கார், குன்று போல் அமைந்திருந்த, மேட்டு நிலத்தில் ஏற தொடங்கிய போது, சூட்டு முள் அசாதாரணமாக உச்சத்தை தொட்டிருந்தது. திடுக்கிட்டேன். காரை வலப்புறமாய் ஒடித்துத் திருப்பினேன். இரு புறமும் காடுகள். வலப்புறமாய், மற்றொரு கார் வாயை பிளந்து கொண்டு நின்றிருந்தது. எனது காரைப் போல சூடேறி இந்த வனாந்தர பிரதேசத்தில் ஆள் அரவமற்று அகப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்ன? அந்த காரின ட்ரைவர் கதவுகளின் ஜன்னல் வழியாக யாருடனோ கதைத்தப்படி நின்றிருந்தான்.

இனி, செய்வதற்கு ஒன்றுமில்லை. இறங்கிய போது, மற்ற காரின் சொந்தக்காரன் என்னிடம் மெதுவாக வந்து என்ன பிரச்சினை என்றான். தண்ணீர் இல்லை என்றேன். பரவாயில்லை. இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது காரில் இருந்து ஒரு பிளாஸ்டிக் போத்தலை இழுத்தெடுத்தான். இந்த ஒரு லீட்டரால் ஆக போவது ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தேன். குறைந்தபட்சம் எனது காருக்கு ஆறு லீட்டர் ஊற்றியாக வேண்டும். அன்புடன் நீட்டிய அவனது உதவிக்கரத்தை மறுத்து, காரில் பின் சீட்டில் இருந்த ஐந்து லீட்டர் கேனை எடுத்து கொண்டு பாலத்தை நோக்கி, வந்த வழியே, அந்த நடுக்காட்டில் நடக்க ஆரம்பித்து விட்டேன்.

வெப்ப அலை வீசும் முன்னரே, விடிய தொடங்கியதும் அக்கரைப்பற்றில் இருந்து, புறப்பட்டு வந்திருந்தேன். அந்த இளங் காலையில் சுகமான காற்று வேறு. ஆனால் இப்போது? வாகனம் எப்போது சூடு பெறத் தொடங்கி இருக்கும்? பாதையின் இருபுறமும் அடர்ந்த காட்டு மரங்கள் அமைதியாக நின்றிருந்தன, அமைதியுடன் பார்த்தப்படி. காற்று வேறு இல்லை. பாலத்தின் அடியே மிக அகலமான, மஞ்சள் நதி ஓடிக் கொண்டிருந்தது. மேல் பிரதேசத்தில், பெய்யும் மழையில், இப்படி கலங்கல் அடைந்து ஓடுவதாக இருக்கலாம். இம் முனையில் ஹ{ம்…ஹ{ம்… இறங்க முடியாது. ஒருவேளை பாதையின் மறுமுனையில் இறங்க கூடிய பாதை ஏதாவது இருக்கலாம். ஆனால் அங்கேயும் இதே கதைத்தான். அப்படி, என்றால் இனி வந்த வழியே நடந்து, பாலத்தின் மறுமுனையை மீண்டும் அடைந்து, காட்டின் வழியாக இறங்கி, காட்டுக்குள் சென்று நதியை அடைந்தாக வேண்டும். ஆம், அங்கே இறங்குவதற்கு வசதிதான். ஆனால், நதியை நோக்கி, காட்டு பிரதேசத்தினுள்ளேயே நடக்க வேண்டும் - அது தண்ணையாக இருந்த போதிலும். பாலத்தின் நடுப்பகுதியை நான் மீண்டும் கடந்து கொண்டிருந்த போது, ஒரு கெப் வாகனம் என்னை கடந்து சென்றது. பின்னால் ஐந்தாறு இளைஞர்கள், நீல நிற, அழுக்கடைந்த யூனிபோர்மில் இருந்தார்கள்.

மேலும் படிக்க ...

இணையத்தில் இருந்து: ஆர்வமுள்ள மனதை வளர்த்தல் - டேவிட் அட்டன்பரோவின் 100 ஆண்டுகள் - டிஜி -

விவரங்கள்
- டிஜி -
சுற்றுச் சூழல்
07 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



[இணையத்தில் வெளியாகும் முக்கியமான படைப்புகளை , அவை பிறமொழிகளில் இருப்பின் அவற்றின் மொழிபெயர்ப்புகளை இப்பகுதியில் தருவதில் பதிவுகள் பெருமையுறுகின்றது. அவ்வகையில் 'நேச்சர்ஸ் நோட்பாட்' (NaturesNotepad) என்னும் ஆங்கில வலைப்பதிவிலிருந்து இக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு பகிரப்படுகின்றது. தமிழ் மொழிபெயர்ப்பு - கூகுள் செயற்கை நுண்ணறிவு. சரி, பிழை திருத்தம் - வநகி.]


சூழலியலாளர் டேவிட் அட்டன்பரோ இந்த ஆண்டு தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவர் செய்த புரட்சிகரமான பணிகளின் மூலம் என்னை எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பதைப் பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் அவரது ஆவணப்படங்களைப் பார்த்து, அவரது தனித்துவமான குரலைக் கேட்டு வளர்ந்தேன். அது  நான் வளர வளரச் சுற்றுச்சூழல் மீதான எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. தொலைக்காட்சியில் அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவர் மேற்கொண்ட , இயற்கையின் அதிசயங்களை மிக அருகில் இருந்து பார்க்கும்,   அற்புதமான சாகசப் பயணங்களைக்  கண்டு, நான் எப்போதும் வியந்து போவேன்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல்: அந்தக்காலத்து அரிக்கன் லாம்பு! - இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
06 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாலை நேரத்தில் சூரியன் மறைந்து,வெளிச்சம் மெதுவாகக் குறைந்து இருள் படரத் தொடங்கியது.அந்த மாலைக் கருக்கலில் கிணற்றடியில் துலாவில் அள்ளி அள்ளி தண்ணீரை தொட்டிக்குள்ளும், பெரிய வாளிக்குள்ளும் இறைத்துக்கொண்டிருந்தேன்.
அம்மா உடுப்புக்களை தோய்த்துக்கொண்டிருந்தார்.

அம்மாவுக்கு இப்படியாக ஒத்தாசை செய்வது மட்டுமன்றி,தோய்த்து அலம்பிய துவாய்களைப் பிழிவதென்றாலும்,அங்கே என் கைகளின் பலம் வேண்டும் அம்மாவுக்கு! அம்மாவுக்கும் எனக்குமான அமைதியான சம்பாஷணைகள் இங்குதான் அநேகமாக அரங்கேறும்.அதற்குள் சோகங்களும்,கூடவே சுகங்களும்கலந்திருக்கும். மாறாக எதிர்காலத் திட்டங்களையும் இந்தக் கிணத்தடியில்தான் அம்மா ஆரம்பித்துவைத்தார் என்றும் சொல்லலாம்.இல்லத்திற்குள் மட்டும்தானா நம் சுகவாழ்விருந்தது? இல்லையே! வாழ்ந்த காணி, ஆட்டுப்பட்டி, மாட்டுத்தொழுவம், கோடி, மூலை முடக்கென வளவிற்குள் சுற்றிவர இருந்த நம் பாதம் பதித்த எல்லா இடங்களிலும் எமக்கொரு கதையிருந்ததே! மாமரத்தின் நிழலில்,.வேம்பின் கீழே போட்டிருந்த கட்டிலில். வாழை மரங்களிற்காய் வாய்க்கால் வெட்டி, பாத்திகட்டி தண்ணீரை ஓடவிட்டுப்பாத்திருந்த அந்தப்படிகளில்.கிணற்றடியில் நின்ற கமுகு மரங்கள்.எங்கள் வேலிக்கும் அடுத்த வீட்டுப் பூரணம் அக்கா வீட்டுக்குமான குறுக்குவழிப்பொந்து.

மேலும் படிக்க ...

நீலகிரி படகர்களின் தொல்மரபில் சங்கக் கூறுகள் - ‘மதிலு’ – ‘அக்க பக்க’ – ‘ஏகித்து கட்டோது’! - முனைவர்.கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- முனைவர்.கோ.சுனில்ஜோகி -
ஆய்வு
04 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.


நீலகிரி படகர்கள் குறிஞ்சி வாழ்வியலை இடையாறாது பின்பற்றி வருபவர்கள். அவர்களை நீலகிரியில் வாழ்கின்ற குறிஞ்சி ஆயர்கள் எனலாம். ‘நாக்கு பெட்டா’ என்று வரையறுத்து வாழ்கின்ற நீலகிரியின் இவர்தம் புழங்குவெளி சிறப்பான கட்டமைப்பினை உடையது. இயற்கை சான்றது. தகவமைப்பின் நுட்பங்களை உட்செறித்தது. காலநிலைக்கேற்பக் காப்பு நிலையைத் தரித்தது. கடும் குளிரினையும், அடர் பனியினையும், அடை மழையினையும் கொண்ட நீலகிரியில் வாழ்வதற்குப் புறப் பாதுகாப்பினைத் தாண்டி, உணர்வுநிலை நீடும் அகப் பாதுகாப்பும் அவசியம். இது, சுற்றத்தால் அமைவது. அவ்வகையில் ‘மதிலு’, ‘அக்க பக்கா’ எனும் படகர்களின் புறம் சார்ந்த தொல்கூறுகளையும், ‘ஏகித்து கட்டோது’ எனும் அகம்சார்ந்த கூறினையும் இக்கட்டுரை ஆய்கிறது. இவை மூன்றும் சங்கக் கூறுகளோடு நெருங்கிய தொடர்புடையது நோக்கத்தகுந்தவை.

மதிலு கொரோச்சோது

தொல்காப்பியர் “இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்” (தொல்காப்பியம், புறத்திணையியல், 69) என்ற உழிஞைத்திணையை வரையறுக்கும்போது குறிப்பிடும் வரிகளில் இடம்பெறும் மதில் எனும் சொல்லாச்சி படகர்களிடம் பண்பாட்டுச் சொல்லாக இன்றும் வழக்கிலுள்ளது. கோட்டைச்சுவற்றினை மதில் எனும் வழக்கம் இன்றும் படகர்களிடம் உண்டு. வீட்டின் நடு அறைகளின் இடைவாயிலை இவர்கள் ‘மதிலு’ என்று அழைக்கின்றனர். இது இரண்டு அறைகளுக்கான இடைத்தடுப்பாக இருப்பதோடு வீட்டின் அகல் விளக்கினை வைக்கும் இடமாகவும் திகழ்கிறது. இந்த மரபார்ந்த வழக்காறு இவர்களின் மரபறிவையும் பறைசாற்றுவது நோக்கத்தக்கது.

மேலும் படிக்க ...

நீலகிரி படகர்கள் எனும் ஆயர்கள்! - முனைவர்.கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- முனைவர்.கோ.சுனில்ஜோகி -
ஆய்வு
04 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.


மானுட சமூகத்தின் இயங்கியல் வழக்காறுகளில் உறைகிறது எனலாம். வாழ்வியல் ஒழுகலாறுகளை அடியொற்றிய தகவமைப்பு, பண்பாடு மற்றும் மரபுநிலை போன்ற கூறுகளாலான வழக்காறுகள் மரபறிவின் திரட்சியாகும். ஒருவகையில், வழக்காறுகள் வரலாறுகளுக்கு அடிப்படையாகத் திகழ்வதையும், வரலாற்றைவிட மேலோங்கி நிற்பதையும் மறுப்பதற்கில்லை. நாட்டுப்புறவியல், மானுடவியல் போன்ற அனைத்து நிலையிலான ஆய்வுகளுக்கும், குறிப்பாக, மானுடவியல் ஆய்வுகளுக்கு அடிச்சரடாகத் திகழும் இவை பண்பாட்டின் தொகைநிலையெனலாம். அவ்வகையில், ஆயர்வாழ்வியலின் களஞ்சியமாகத் திகழும் திருப்பாவையில் இன்றும் வழக்கிலுள்ள சில ஆயர் வழக்காறுகளை இக்கட்டுரை ஆய்கிறது.

திருப்பாவையின் களம் ஆயர்பாடியாகும். அதில் ஆயர்களின் பல்வேறு வழக்காறுகள் செறிந்துள்ளன. ஆயர்ச் சமூகத்தைக் கூர்ந்த கள ஆய்வின் விளைவாக எழுந்த இலக்கியமாக இதைத் துணியலாம். அதோடு, இதில் இடம்பெறும் சில ஆயர் வழக்காறுகள் சங்கம்தொட்டு வழக்கிலிருப்பவை. அதனைச் சங்க, ஆயர்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவும் அச்சமூகத்தின் நெடிய பண்பாட்டினை, மரபினை வெளிப்படுத்தும் நிலைக்களன்களாகவும் கொள்ளலாம். அவ்வகையில், ஆய்வின் எல்லைகருதி, திருப்பாவையில் இடம்பெறும் ‘சிறுவீடு’, ‘காசும் பிறப்பும்’ ஆகிய தொன்மையான ஆயர் வழக்காறுகளை நீலகிரியில் வாழ்கின்ற ஆயர்களான ‘படகர்’ இனமக்களின் வழக்காறுகளுடன் இணைத்து இக்கட்டுரை ஆய்கிறது.

படகர்கள் எனும் ஆயர்கள்

நீலகிரியில் வாழ்கின்ற படகர்கள் ஆயர்கள் என்பதை அவர்களின் ‘படகா’ எனும் பெயரே சான்றுபகர்கின்றது. ஆயர் என்பதும் ஆயர்பாடி என்பது எவ்வாறு ஆநிரை வாழ்வினைச் சுட்டுகின்றதோ அதேபோல, ‘பண்டுகா’ எனும் சொல்லிலிருந்து உருவான ‘படகா’ எனும் சொல்லும் ஆயர் வாழ்வியலை உணர்த்துகின்றது. படகர்களின் மொழியான ‘படுகு’ மொழியில் ‘பண்டா’ எனும் சொல் மந்தைகளை, குறிப்பாக எருமை மந்தைகளைக் குறிக்கிறது. எருமை மந்தைகளைப் பேணுபவர்கள், எருமை மந்தைகளை உடையவர்கள் எனும் அடிப்படையில் இவர்களின் வாழ்வியலை இப்பெயர் குறித்து நிற்கின்றது. அதற்கேற்பவே, அவர்களின் வாழ்வியலிலும் எண்ணற்ற எருமைகள் சார்ந்த வழக்காறுகள் விரவியுள்ளன. சான்றாக அவர்களின் வாழ்வியலை வரையறுக்கும் “பண்டா பதுக்கு” எனும் இணைச்சொல்லினைக் கருதலாம். இதில் ‘பதுக்கு’ எனும் சொல்லிற்கு வாழ்வு என்றும் ‘பண்டா’ என்பதற்கு ஏற்கனவே கண்டதுபோல எருமை மந்தையென்றும் பொருள். அதாவது, எருமை மந்தைகளே வாழ்வு என்பதை இது சுட்டுகின்றது.

மேலும் படிக்க ...

அரங்க முகாமைத்துவம் : நாடக தயாரிப்பு திட்டங்கள் அடிப்படையில் மாணவரை நிர்வகித்தல்! - பா.பிரதாரிணி -

விவரங்கள்
- பா.பிரதாரிணி -
ஆய்வு
03 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அறிமுகம்

மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.

அதாவது, நாடகமானது மனித நேயத்தைப் போல மிக பழைமையானது. நீண்ட கால கலாச்சார மரபு மற்றும் அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்ட அன்றாட நடவடிக்கைகளிலிருந்து அனைத்து நாடக நடவடிக்கைகளும் உருவாகின. கலாச்சாரத்தின் மறுநிகழ்வு கலை என்பதை நாடகம் உணர்த்துகின்றது. அரங்கானது மனித வாழ்வியலை கற்பிக்கும் ஒரு பாடமாகும். அரங்கானது சமூக சிந்தனைக்கும் சமூக ஒருங்கு சேரலுக்கு அமையவும் வளர்ச்சியடைகின்றது. சமூக பண்பாட்டில் இன்றியமையாத நிறுவனங்களில் ஒன்று நடிப்பும் பார்வையும் என்று நோக்கி வந்த முறைமைக்கு மாறாக நாடகம் இன்று புதிய அர்த்தங்களை வேண்டி நிற்கின்றது. நாடகம் மனிதனை, மனித உணர்வுகளை, முரண்பாடுகளை, சிக்கல்களை, போராட்டங்களை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முகாமைத்துவ வகையாகவும் விளங்குகின்றது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் தாமரைச்செல்வியின் படைப்புலகம் பற்றிய எனது பார்வை! - பவானி சற்குணசெல்வம் ( நெதர்லாந்து) -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் ( நெதர்லாந்து) -
இலக்கியம்
03 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                           [ எழுத்தாளர் தாமரைச்செல்வி]

ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.

தாமரைச்செல்வியின் படைப்புலகின் மையத்தில் மனிதனே நிற்கிறான். குறிப்பாக, தன்னுடன் வாழ்ந்தவர்கள், தன் கண்முன் துன்பங்களைச் சுமந்தவர்கள், போராலும் இடம்பெயர்வாலும் வாழ்வியல் சிக்கல்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வாழ்க்கை அனுபவங்களே அவரது எழுத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளன. இதனால் அவரது கதைகள் வாசகர்களுக்கு மிக நெருக்கமானதாகவும் இயல்பானதாகவும் தோன்றுகின்றன. அவர் காட்டும் உலகிற்குள் வாசகன் எளிதில் நுழைந்து, கதாபாத்திரங்களோடு பயணித்து, அவர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்கிறான்.
அவரது கதைகளை வாசித்து முடிக்கும் போது மனம் கனக்காமல் இருப்பது அரிது. கண்ணீரை வரவழைக்கும் வலிமை அவரது எழுத்தின் தனிச்சிறப்பாகும். ஆனால் அந்தக் கண்ணீர் வெறும் துயரத்தின் வெளிப்பாடு அல்ல; அது மனித நேயத்தின் சாட்சியும் கூட. இது அவரது படைப்பாற்றலின் முக்கியமான அடையாளமும் ஆகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இலக்கியப் பணியில் ஈடுபட்டு வரும் தாமரைச்செல்வி, தொடக்கக் காலத்தில் காணப்பட்ட அதே உற்சாகத்துடனும் படைப்புத் திறனுடனும் இன்றும் இயங்கி வருகிறார். காலம் மாறினாலும் அவரது எழுத்தின் இளமை மாறவில்லை. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை உணர்ந்து அவற்றை இலக்கிய வடிவமாக்கும் ஆற்றல் இன்னும் அவரிடம் உயிர்ப்புடன் உள்ளது.

மேலும் படிக்க ...

டிஜிட்டல் காலனியத்துவமும் 'தரவுமயமாக்கலுக்கு' எதிரான உடலும்: மஹ்மூத் தர்வீஷின் கவிதை வெளிவழியே ஓர் அல்காரித எதிர்ப்பு மெய்யியல் ஆய்வு! - ஏ.எச்.எம் நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம் நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
02 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுருக்கம் (Abstract)

இக்கட்டுரை, மஹ்மூத் தர்வீஷின் ‘அடையாள அட்டை’ (1964) கவிதையை, சமகால டிஜிட்டல் காலனியத்துவம் மற்றும் தரவு ஏகாதிபத்தியக் (Data Imperialism) கோட்பாடுகளின் வழி ஒரு தீர்க்கதரிசனப் பிரதியாக (Prophetic Text) மறுவாசிப்பு செய்கிறது. நவீன ஆக்கிரமிப்பு அரசுகள், ஒடுக்கப்பட்ட குடிகளை வெறும் புள்ளிவிவரங்களாகவும், பயோ-மெட்ரிக் தரவுகளாகவும் சுருக்கி ஆளும் 'அல்காரிதக் கண்காணிப்பை' (Algorithmic Surveillance) இக்கவிதை எவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கு முன்பே மொழிரீதியாக எதிர்கொண்டது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. ஷோஷனா ஜூபோஃப்பின் ‘கண்காணிப்பு முதலாளித்துவம்’ (Surveillance Capitalism), அகிலெ எம்பெம்பேயின் ‘மரண அரசியல்’ (Necropolitics), மற்றும் ஜார்ஜியோ அகம்பனின் ‘வெற்று உயிர்’ (Bare Life) ஆகிய கோட்பாடுகளின் துணையோடு, தர்வீஷின் ‘அடையாள அட்டை எண் ஐம்பதாயிரம்’ என்ற வரிகள், மனித உடலைத் தரவுமயமாக்கலுக்கு (Datafication) உட்படுத்தும் நவீனத் தொழில்நுட்ப வன்முறைக்கு எதிரான ஓர் இருத்தலியல் தற்காப்புப் பிரகடனம் என்பது இங்கு நிறுவப்படுகிறது.

மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் பற்றி உலகளாவிய கல்வித்துறையில் இதுவரை விரிவாக ஆராயப்படாத, தமிழ் மற்றும் சர்வதேசச் சூழலுக்கு முற்றிலும் புதிய நான்கு அதிநவீனக் கருத்தியல் கோட்பாடுகளை (Emerging Research Paradigms) இங்கு முன்வைக்கிறேன்.

இவை தர்வீஷின் பிரதிகளுக்கு முற்றிலும் புதிய தத்துவார்த்த ஒளியை வழங்கும்:

I. நரம்பியல்-அழகியலும் அதிர்ச்சி நினைவகமும் (Neuro-Aesthetics and Trauma Memory)

இதுவரை தர்வீஷின் கவிதைகள் அரசியல் அல்லது சமூகவியல் நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டன. ஆனால், ‘அதிர்ச்சி சார் ஆய்வுகள்’ (Trauma Studies) மற்றும் மூளை-அழகியல் (Neuro-Aesthetics) வழி இதனை அணுகலாம்.

மேலும் படிக்க ...

பெண்ணுரிமைப் புரட்சி: பாரதியாரும் பாரதிதாசனும்! - முனைவர் அ. கார்வண்ணன்

விவரங்கள்
- முனைவர் அ. கார்வண்ணன் -
ஆய்வு
02 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்:  முனைவர் அ. கார்வண்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை – 600061. 


முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சமூகம் அடைந்த மறுமலர்ச்சியில் பெண்ணுரிமையும் சமூக விடுதலையும் பிரிக்க முடியாத இரு பெரும் கூறுகளாக விளங்கின. காலங்காலமாக ஆணாதிக்கச் சமூக அமைப்பிலும் வைதிகச் சடங்குகளிலும் கட்டுண்டு கிடந்த பெண்ணினத்தை விடுவிப்பதில், மகாகவி சுப்பிரமணிய பாரதியும் அவரது வழியைப் பின்பற்றிப் புரட்சிகரக் கருத்துகளை படைத்த பாவேந்தர் பாரதிதாசனும் ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது. பாரதி தேசிய மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளின் பின்னணியில் பெண்ணுரிமையைப் பாடினார். அவரைத் தொடர்ந்து, பாரதிதாசன் தந்தை பெரியாரின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கத்தின் பின்னணியில் ஜாதி ஒழிப்பையும் பெண்ணுரிமையையும் இணைத்துப் புரட்சிக் கருத்துகளை முன்வைத்தார். எனவே, இவ்விரு ஆளுமைகளின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் மற்றும் சமூக விடுதலைப் பங்களிப்புகள் குறித்தும் அவற்றுள் நிலவிய கோட்பாட்டு முரண்பாடுகள் குறித்தும் ஆரய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்

சமூக, அரசியல், பொருளாதார விடுதலைகளுக்கு இணையாகப் பெண் விடுதலைக்கும் பாரதியார் முதன்மை இடமளித்தார். பெண்களை வெறும் இல்லறப் பொருளாக மட்டுமே பார்த்த சமூகப் பார்வையை மாற்றி, அவர்களைச் 'சக்தி' வடிவமாகவும், தேசத்தின் உன்னதமான மனிதர்களாகவும் நிலைநிறுத்துவதற்கான முயற்சியை அவர் தனது படைப்புக்களின் வழி வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை! - ஊர்க்குருவி -
  2. சிங்கத்தின் கண்கள்! - ஜோதிகுமார் -
  3. கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' நூல் வெளியீடு! - வ.ந.கிரிதரன் -
  4. பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!
  5. பாரதிராஜா! - ஜோதிகுமார் -
  6. திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களும் கற்குவையும்! - முனைவர் ஆ. சந்திரன் -
  7. ஈழத்து எழுத்தாளர் முல்லை அமுதனின் வாழ்வும் பணிகளும்! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர் -
  8. மியன்மார் நாட்டில் தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சி! - கார்த்திக் , மியன்மார் -
  9. சூழலியல் சமநிலை நோக்கில் நீலகிரி படகர்களின் ‘கரு ஹரசோது’ சடங்கு! - முனைவர் கோ.சுனில்ஜோகி -
  10. எழுத்தாளர்களும் EMPATHYயும்! - லதா ராமகிருஷ்ணன் (பொருளாளர், WELFARE FOUNDATION OF THE BLIND) -
  11. சிறுகதை இலக்கியம், சமூக நிஜங்கள் மற்றும் இளம் தலைமுறை - “காலத்தின் கண்ணாடி”! - பவானி சற்குணசெல்வம் -
  12. தமிழ்ச்சிற்றிதழ் வளர்ச்சியில் 'கனவு'! - முனைவர். ப. தமிழ்ப்பாவை -
  13. செயற்கைப் புலமையும், ஆழ்நிலை அரசின் மறைக்கரமும் அல்லது சகுனிகளும், செயற்கைப் புலமையும்! - ஜோதிகுமார் -
  14. கனேடிய இலங்கை மன்றம்: 'இலங்கையில் வன்முறை அரசின் 83 ஜூலைக் கலவரமும் , வெலிக்கடைச் சிறைப் படுகொலையும்' (நந்தன வீரரத்னவின் புலனாய்வு நூலைத் தழுவிய அரசியல்)! - தகவல்: கோணேஸ் -
பக்கம் 1 / 130
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி