இலங்கையில் முன்னர் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையில் இந்த வாரம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு கல்வி நிதியத்தின் அம்பாறை மாவட்ட தொடர்பாளர் அமைப்பான பாண்டிருப்பு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் தலைவர் திரு. ந. கமலநாதன்( ஓய்வு நிலை அதிபர் ) அவர்களின் தலைமையில் இருதினங்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவி பெறும் மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் நிறுவகத்தின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


ஒவ்வொரு மாணவருக்கும் ஆறு மாதங்களுக்கான ( 2024 ஜூலை முதல் டிசம்பர் வரைக்குமானது ) நிதிக் கொடுப்பனவாக ரூபா 24 000/- வழங்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில் இணைந்துள்ள அன்பர்களின் ஆதரவினால், இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வாரம் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பில் நடந்த இந்நிகழ்வில் மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் உப தலைவர் திரு.பி வசந்தன் , பொருளாளர் திரு. த. ரவிச்சந்திரன் ( ஆசிரிய ஆலோசகர் ),  உப செயலாளர் திரு. வே.நகுலேஸ்வரன் ( ஆசிரியர் ) , செயற்குழு உறுப்பினர்களான செல்வி. ஞா. தர்மிகா, திரு. சி. புனிதன் ( ஓய்வு நிலை அதிபர் ), திரு . க. யனார்த்தன் ( முகாமைத்துவ உத்தியோகத்தர் ) ஆகியோர் மாணவர்களுக்கு நிதியுதவிகளை வழங்கி வைத்தனர்.

அத்துடன் அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உறுப்பினர் திருமதி வள்ளி ஶ்ரீகாந்தா அவர்கள் அனுப்பிவைத்த மாணவர்களின் தாய்மாருக்கான உடு புடவைகளும வழங்கப்பட்டது.

தமது பிரதேச மாணவர்களின் கல்வி விருத்தியில் அக்கறை கொண்டு தொடர்ந்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி  நிதியத்திற்கும் அதன் நிருவாகிகளுக்கும் பாண்டிருப்பு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் திரு.

ந.கமலநாதன் நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி தெரிவித்தார்.

இனிவரும் நாட்களில், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கம்பகா, மலையகத்தில் நுவரேலியா மாவட்ட மாணவர்களுக்கும் இந்த ஆண்டின் இறுதி ஆறுமாதங்களுக்கான மாணவர் நிதிக்கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R