நேற்றிரவு தலைவி திரைப்படத்தை அமேசன் பிரைம் வீடியோவில் பார்த்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதானமாகக் கொண்ட கதை. இதற்கு முன்னர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கிடையில் நிலவிய உறவினை மையமாகக்கொண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் 'இருவர்' வெளிவந்திருந்தது. ஆனால் 'தலைவி'திரைப்படத்தின் வெற்றியாக நான் கருதுவது பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வும் , நடிப்பும்.

'இருவர்' திரைப்படத்தில் மோகன்லாலை, பிரகாஷ்ராஜைத்தான் நாம் நினைவு கூர்வோம். அவர்கள்நடித்த பாத்திரங்களை அல்ல. ஐஸ்வர்யா பச்சன் மட்டும் சிறப்பாக ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருந்ததாக உணர்ந்தேன். ஆனால் 'தலைவி' திரைப்படத்தில் கங்கனா ரணாவத்தும், அரவிந்தசாமியும் முறையே ஜெயலலிதாவாகவும், எம்ஜிஆராகவும் முற்றாகவே தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள். கலைஞராக நடித்த நாசரும் ஓரளவுக்குத் தன்னை மாற்றுவதில் வெற்றிகொண்டிருக்கின்றார் என்றே கூறலாம். ஆனால் முதலிருவரும் முற்றாகவே தம்மை அப்பாத்திரங்களாகவே மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். படம் முழுவதும் எம்ஜிஆர் , ஜெயலலிதாவாகவே அவர்கள் தென்பட்டார்கள். கங்கனா ரணாவத்தாக, அரவிந்தசாமியாகத் தென்படவேயில்லை. அவ்வளவுக்கு இருவருமே அவ்வாளுமைகளின் இயல்புகளை உள்வாங்கி நடித்திருக்கின்றார்கள். மிகவும் சிரமமான பணியினைச் சிறப்பாக, எப்பொழுதும் மனத்தில் நிலைத்திருக்கும் வகையில் செய்திருக்கின்றார்கள். அதற்காக இயக்குநர் விஜய் அவர்களைப் பாராட்டலாம். இத்திரைப்படத்தின் மூலம் கங்கனா ரணாவத்துக்குச் சிறந்த நடிகைக்கான மத்திய அரசின் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆணாதிக்கம் நிறைந்த தமிழ்த்திரையுலகில், அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் ஜெயலலிதா அடைந்த அவமானங்கள், அவற்றை அவர் எதிர்கொண்டு வெற்றிகொண்டு தன்னை நிலை நிறுத்திய வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அதனைச் சிறப்பாகவே இத்திரைப்படத்தில் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

படத்தின் இன்னுமோர் முக்கிய அம்சமாக நான் கருதுவது எம்ஜிஆர் , ஜெயலலிதாவுக்கிடையில் நிலவிய மானுட உறவு. அதனை வெளிப்படுத்துவதில் கத்தி மேல் நடப்பதுபோல் நடந்திருக்கின்றார் இயக்குநர். எம்ஜிஆர் என்னும் ஆளுமை எவ்வளவு தூரம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஆட்டிப்படைத்திருக்கின்றது என்பதைப் பொதுவாகவே ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். குறிப்பாக எழுத்தாளர் வாஸந்தி அவரது நூலான 'மனமும் மாயையும்' நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். எம்ஜிஆரைத் திருமணம் செய்து பகிரங்கமாகவே அவரது இன்னுமோர் துணையாக அறியப்படவே ஜெயலலிதா முயற்சி செய்தார் என்பதையும் அறிந்திருக்கின்றோம். அது அவர்களிருவரும் நேபாளத்துக்கு விஜயம் செய்தபோது இரகசியமாக நடைபெற்றதா என்பதில் பலருக்கு இன்னும் சந்தேகமுண்டு என்பது அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு இன்னும் இருக்கின்றது என்பதையும் அவரைப்பற்றிய வாஸந்தியின் வாழ்க்கை வரலாறு வெளிப்படுத்துகின்றது. அதே சமயம் வலம்புரி ஜான் அவரது கட்டுரைகளில் ஜெயலலிதா எம்ஜிஆரால் புறக்கணிப்புக்குள்ளாகிய காலகட்டத்தில் அவரைச் சீண்டி, தன் காலடியில் கொண்டு வருவதற்காக எடுத்த ஆயுதமே அவரது சோபன் பாபுவுடனான தொடர்பும், அது பற்றிய குமுதத்தில் வெளியான தொடர்கட்டுரையும் என்பார். உண்மையில் அது ஜெயலலிதாவைப்பொறுத்தவரையில் நன்றாகவே பயனளித்தது என்பதை வரலாறு காட்டி நிற்கின்றது. உடனடியாகவே முதல்வராகவிருந்த எம்ஜிஆர் தலையிட்டு அத்தொடரை நிறுத்தியதுடன் பின்னர் எம்ஜிஆர் ஜெயலலிதாவைப் பகிரங்கமாகவே அரசியலுக்குள் கொண்டு வந்தார். எனவே இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ,. ஜெயலலிதாவுக்கிடையிலான உறவு பற்றிக் காட்டியுள்ளது பெரிதாக ஆச்சரியத்தைத் தரவில்லை. ஆனால் இருவருக்கிடையிலான தனி மனித உணர்வுகளை இத்திரைப்படம் முதன் முதலாக வெளிப்படுத்தி நிற்கிறது. அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் எம்ஜிஆர் மீதான தனது காதலை அவர் தன் நெருங்கிய தோழிக்கு சோபன்பாபுவுடனான தொடர்புக்குப் பின்னரும் கூறியிருப்பதை எழுத்தாளர் வாஸந்தியின் ஜெயலலிதா பற்றிய நூல் பதிவு செய்திருக்கின்றது. 'எம்ஜிஆரைத் தான் காதலிப்பதாகவும் அவர் ஒருத்தரே தன் வாழ்வில் இருக்கக்கூடிய ஆண் என்றும் ஜெயலலிதா சொன்னதாகவும் சாந்தினி சொன்னார் ' என்று மேற்படி நூல் கூறுகின்றது.

இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள என்னுமொரு முக்கிய விடயம் ஆர்.எம்.வீரப்பனின் நடத்தை. ஆர்.எம்.வி முடிந்தவரை ஜெயலலிதாவை எம்ஜிஆரிடமிருந்து திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி கடுமையாக முயற்சி செய்திருக்கின்றார். திரையுலகில் அவரால் ஓரளவு வெற்றியடைய முடிந்தாலும் . அரசியலில் அதனை அவரால் சாதிக்க முடியவில்லையென்பதையும் வரலாறு காட்டி நிற்கின்றது. உண்மையில் ஆர்.எம்.வீ இவ்விதமே செயற்பட்டார் என்பதை அவரே தன் வாயால் வாக்குமூலம் அளித்திருக்கின்றார். எழுத்தாளர் வாஸந்தியின் 'ஜெயலலிதா மனமும் மாயையும்''நூல் அதற்குச் சாட்சியாக விளங்குகின்றது. எனவே இத்திரைப்படம் ஆர்.எம்.வீரப்பனைச் சரியாகவே வெளிப்படுத்தியுள்ளதாகவே நான் கருதுவேன். சமுத்திரக்கனியும் சிறப்பாகவே வீரப்பன் பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

மொத்தத்தில் ஜெயலலிதா நடிகையாகவிருந்து , தமிழக முதல்வராகும் காலம் வரையிலான அவரது வரலாற்றைத் 'தலைவி' பேசுகின்றது. அதில் வெற்றியும் அடைந்திருக்கின்றது. தற்போதுள்ள கோவிட் - 19 சூழலில் ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரையரங்க வசூலில் மட்டும் தங்கியதொன்றல்ல. ஆடியோ, வீடியோ, தொலைக்காட்சி, ஓடிடி போன்ற டிஜிட்டல் உரிமைகளையும் உள்ளடக்கியதொன்று. அவ்வகையில் 'தலைவி' வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படமே என்பதையே செய்திகள் தெரிவிக்கின்றன.

'தலைவி' திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்: https://www.youtube.com/watch?v=CnMG1BbxJg4


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்