உமாமகேஸ்வரன்- ஷேர்லி கந்தப்பா -( தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி  கந்தப்பா (Shirley Candappa)  அவர்கள் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையான Uma Maheswaran A MAN WHO CHANGED THE COURSE OF SRILANKA’S ETHNIC CONFLICT  என்னும் கட்டுரையினை முடிந்த வரையில் குறுகிய நேரத்தில் மொழிபெயர்த்திருக்கின்றேன். 18.02.2019 அன்று Daily Mirror  பத்திரிகையில் வெளியான கட்டுரை இது. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான ஆயுதபோராட்டத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி  கந்தப்பா அவர்கள் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரை உமாமகேஸ்வரன் அவர்களைப்பல்வேறு கோணங்களில் எடை போடுவதாலும், பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை உள்ளடக்கியுள்ளதாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான உமாமகேஸ்வரனின் ஆரம்பகால உறவு, தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் புரட்சிகர அமைப்பான ஜே.வி.பியுடனான தொடர்புகள் என பல விடயங்களை உள்ளடக்கியுள்ள கட்டுரையிது. )


பெப்ருவரி 18 உமா மகேஸ்வரனின் வருடாந்த நினைவுதினமாகும்.  உமா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகத்தலைவர், 18.2.1945 அன்று பிறந்தார்.  கோழைத்தனம்மிக்க கொலையாளி ஒருவனின் குண்டினால் 16.7.1989 அன்று அவர் பம்பலப்பிட்டியாவிலுள்ள ஃப்ராங்பேர்ட் பிளேஸில் கொல்லப்பட்டார்.

நான் முதன் முறையாக உமாவை அறிந்தது 1977 பொதுத்தேர்தலையடுத்து, வடக்கில் அகதி முகாம்களை அமைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளில் ஒருவராகவே.  அன்றைய பிரதமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பொருளாதாரத்தைத் தனியுடமை  ஆக்குவதற்கான தனது திட்டங்களைச் சீர்குலைக்கக்கூடிய தனது எதிரிகளை அடக்குவதற்காகவும், அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களுக்கெதிராகவும், மலையகத்தமிழர்களுக்கு எதிராகவும் கூடக் குண்டர்களை ஏவி விட்டார். 

அப்பொழுது நான் தேசிய கிறிஸ்தவ சபையின் அபிவிருத்தி ஆணைக்குழுவின் செயலாளராகவிருந்தேன்.  அரசாங்க ஒத்துழைப்பால் உருவான இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு , இடம் பெயர்ந்த  தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான திட்ட உருவாக்கத்துக்கு உதவுவது என்னுடைய பணி. சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்; அவர்களில் பலர் மலையகத்தமிழர்கள்.  மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். அத்துடன் நூற்றாண்டுக்கும் அதிகமாகக் கடுமையாக உழைத்த தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

தமிழிழ மக்கள் விடுதலைக்கழகத்துக்காக கருத்துகளை வெளியிடும் பேச்சாளரான ஸ்கந்தா அவர்களின் கூற்றின்படி உமாவைக் கொன்ற சூத்திரதாரி கழகத்துக்குத் தெரிந்தவராக இருந்தபோதும், கொலையின் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்தபோதும், உமாவின் கொலைக்குத் திட்டமிட்ட, பின்னாலிருந்த சூத்திரதாரிகள் யாரென்பது தெளிவாகத்தெரியவில்லை.  கொலைக்கு உரிமை கோரிய , கழகத்திலிருந்து பிரிந்த குழுவான பரந்தன் ராஜனின் குழுவினரின் கோரிக்கையினை அவர் நிராகரித்திருந்தார். ராஜனும் அவரது குழுவினரும் இந்திய உளவுத்துறையினால் பராமரிக்கப்பட்டு வந்தனர்.  அவர்கள் உமாவின் கொலைக்கு உரிமை கோரியதற்குக் காரணம் அவ்விதம் கூறும்படி இந்திய உளவுத்துறை அவர்களை வேண்டியதனாலிருக்கக்கூடும்.

உமாவின் மரணத்தின்போது இலங்கையில் நிச்சயமற்ற , பதட்டமான , உறுதியற்ற நிலை இருந்தது என அவர் மேலும் கூறினார்.  நாட்டின் வடகிழக்கு  இந்திய இராணுவத்தின் (இந்திய அமைதி காக்கும் படை என்னும் பெயரைக்கொண்ட இந்திய இராணுவத்தின், முழுமையான  கட்டுப்பாட்டிலிருந்தது. இலங்கை இராணுவமானது  ஜெயவர்த்தனேயின் அரசானது தயக்கத்துடன் கைச்சாத்திட்டிருந்த இந்தியாவுடனான உடன்படிக்கையின் சரத்துகளின்படி முகாம்களிலேயே எவ்வித உதவியுமற்று முடங்கிக்கிடந்தது.

நாட்டில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை எப்பொழுதுமே எதிர்த்து வந்த  ஜனாதிபதி பிரேமதாசா இக்கட்டான நிலையிலிருந்தார்.  அவர் ஏற்கனவே இந்தியாவை விடுதலைப்புலிகளுடன் யுத்தம்  புரிந்துகொண்டிருந்த அமைதிப்படையினரை வெளியேற்றுமாறு இந்தியாவைக் கேட்டிருந்தார். அக்காலகட்டத்தில் ஜேவிபியானது தனது இரண்டாவது போர்முனையினைத் தனது தெற்குக்கிளர்ச்சி மூலம் திறந்திருந்தது.  அவரவர் இடங்களில் பொதுமக்களின் ஆதரவினைப்பெற்றிருந்த விடுதலைப்புலிகளுக்கெதிராகவும், ஜேவிபிக்கெதிராகவும் , இரு  முனைகளில் ஒரே சமயத்தில் போரிட முடியாது என்பதைப் பிரேமதாசா உணர்ந்திருந்தார். ஜேவிபி கழகத்துடன் தொடர்பிலிருந்ததையும் தனது உளவுத்துறையின் மூலம் அவர் அறிந்திருந்தார்.

சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்கத்தின்மேல் அடக்குமுறையினைப் பிரயோகிக்கும் அமைப்பினை மாற்றி, அதனிடத்தில் மக்கள் அரசினை ஸ்தாபிப்பதற்கு சிங்கள , தமிழ் உழைக்கும் வர்க்கத்துக்கிடையிலான ஒற்றுமை அவசியமென்பதை உமா எப்பொழுதுமே நம்பியிருந்தார். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்ப காலத்தில்கூட அவர் இந்தியத் தலையீட்டின் ஆபத்துகள் பற்றி எடுத்துரைத்திருந்தார்.

இதனை அவர் பங்களாதேஷ் தந்த படிப்பினைகள் என்னும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் முதலாவது ஆவணங்களொன்றில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இலங்கையின் முதலாவது தலைமறைவு வானொலியான தமிழீழத்தின் குரல் என்னும் வானொலியினைத் தமிழ், சிங்கள, மற்றும் ஆங்கில மொழிகளில் , முதலாளித்துவ அமைப்பினை அனைத்துப்பகுதி மக்களும் பொதுவேலைத்திட்டத்தில் இயங்கி முறியடிப்பதற்கு  விளக்கமளிப்பதற்கான வழிகளிலொன்றாக அவர் ஒழுங்கமைத்து செயற்படுத்தியிருந்தார்.  உள்வாங்கப்படும் போராளிகளைத் தமிழ் தேசியவாதம், இனவாதம் போன்றவற்றிலிருந்து மீட்பதற்காக அவர்களுக்கு மார்க்சியம் போதிப்பதற்காகத் தனியான கல்வி நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தது.  திருமதி குமாரதுங்க உமாவின் சென்னை காரியாலயத்துக்கு விஜயம் செய்தபோது அவ்வகுப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைக்குத் தனது பாராட்டினைத்தெரிவித்திருந்தார். உமா சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவியான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவுடனும் தொடர்புகொண்டிருந்தார். அத்துடன்  றோஸ்மண்ட் பலஸிலிருந்த அவரது இருப்பிடத்தில், இந்திய அமைதி காக்கும் படை தீவினுள் வந்தடைந்த பின்னர்,  டி.சிவாராம் மற்றும் என்னுடன் மரியாதை நிமித்தம் சென்று சந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் விஜயகுமாரதுங்க, நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதியாகப்பின்னர் உருவான சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரையும் சந்தித்திருக்கின்றார். அத்துடன் எல்லா மார்க்சியக் கட்சித்தலைவர்களையும் சந்தித்திருக்கின்றார். தனது வழியிலிருந்து விலகி, அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் சிங்கள வலதுசாரி அமைப்புகளின் தலைமைகளுடனும் பேச்சு வார்தைகள் நடத்தினார்.

பிரிந்து கிடந்த தமிழ் சிங்கள சமூகங்களிடையே இணக்கமான உறவினை ஏற்படுத்துவதற்காக உமாவுடன் நானும், திரு,சித்தார்த்தனும், திரு.ருக்மன் சேனநாயக்கவும் மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சென்று சந்தித்தோம் அவர்களுக்குத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நோக்கங்களையும், காரணங்களையும் விளங்கப்படுத்துவதற்காக.  கிறிஸ்தவப்பாதிரிமார்கள் உமாவுக்கு தமது நன் நிமித்த ஆசிகளை வழங்கிய அதே சமயம் தமிழ் ஆயுததாரிகளின் சில அமைப்புகளின் செயல்கள் சிங்கள மக்களின் சில பகுதியினரை இனப்பிரச்சினை விடயத்தில் தீவிர எண்ணங்களை மேற்கொள்ளத் தள்ளிவிடுகின்றது  என்பதையும் அறிவுறுத்தினர். அச்சமயம், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இனவாதக்கொள்கைகள் காரணமாக   திரு.சேனநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி விட்டிருந்தார்.  ருக்மன் ஜெயவர்த்தனாவின் பிரிக்கும் அரசியலானது நாட்டை அதன் அழிவுக்குக்கொண்டு செல்லுமென்று நம்பினார்.

உமாவின் சொல்லும், செயலும் இலங்கை மக்களுக்கு முழுமையாக ஆதரவானது.  இந்தியாவானது நாம் ஒளிவதற்கான பின்வளவு என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே உமாவின் அரசியல் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளையிட்டு இந்திய அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என்பது ஆச்சரியமானதொன்றல்ல.  உமா இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளுடனும் , சுதந்திரக் கட்சியுடனும் தொடர்புகளைப்பேணிவருவதையும் அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். இந்திய அதிகாரிகள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆயுதங்களைக் களைந்தது அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தபோதிலும், அவர் அவ்விதம் ஆச்சரியம் அடைந்திருக்கத் தேவையில்லை.  அவரது தலைமைத்துவமானது இலங்கையின் உறுதியினைச் சீர்குலைக்கும் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

அப்பாவிகளை ,   தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களை குண்டர்களின் மூலம் தாக்குவதற்கு அனுமதியளிக்கும் ஜனநாயகம், அக்குண்டர்களைத் தண்டனையிலிருந்து காக்கும் ஜனநாயகம் ஜனநாயகமே அல்ல என்று அவர் என்னிடம் கூறினார்.  இது பாஸிஸ்ட் அரசு. பாஸிஸ்டுகளை எதிர்கொண்டு, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அத்துடன் மக்களைக் கட்டுப்படுத்த பாஸிசத்தைப் பாவிக்கும் அரசினை நாம் நீக்க வேண்டும்.

இக்காலகட்டத்தில்தான் உமாவின் மனமானது பெருங்கொந்தளிப்புக்குள்ளானது.   விடுதலைப்போராட்டம் உருவாகுமிடத்து அதன் வழிமுறைகள் விடயத்தில் முரண்பட்ட ஆனால் முன்பே அறிந்திருந்த பிரபாகரனை அவர் அதிக அளவில் சந்திக்கத்தொடங்கினார். பிரபாகரனும் இடம்பெயர்ந்த மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்தார். பிரபாகரனுடான உமாவின் தொடர்பானது இன்னுமொரு தளத்தில் செல்லத்தொடங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்னெடுத்துக்கொண்டிருந்த அகிம்சை வழியிலான போராட்டம்  வெற்றியினைத் தரப்போவதில்லை என்னும் உறுதியான முடிவுக்கு உமா வந்திருந்தார். 1977இன் இறுதிப்பகுதியில் உமா பிரபாகரனுடன் புதிய புலிகள் என்னும் அமைப்பில் இணைந்தார்.  உமா புதிய புலிகளில் இணைந்த சிறிது காலத்தில் இலண்டனை உறைவிடமாகக் கொண்ட தமிழரும், ஈழப்புரட்சிகர அமைப்பின் ஸ்தாபகருமான திரு.இளையதம்பி இரத்தினசபாபதி முதலாவது ஆயுதப் பயிற்சித்திட்டத்தை ஒழுங்கமைத்தார். அத்துடன் புதிய புலிகளின் தலைவரையும் பங்குபற்றும்படி அழைப்பு விடுத்தார்.  தமிழில் மட்டுமே போதிய பாண்டித்தியத்தைப் பிரபாகரன் பெற்றிருந்த காரணத்தால் உமாவை அத்திட்டத்தில் பங்குபற்றும்படி ஆலோசனை வழங்கினார்.  அத்திட்டத்தில் பங்குபற்றுவதற்கான நெறிமுறைகள் ஆங்கிலத்தில் புலமையுள்ள , தலைமைத்துவப் பொறுப்பிலுள்ள ஒருவரை வேண்டி நின்றதால், பிரபாகரன் புதிய புலிகளின் மத்திய குழுவுக்கு உமாவைத் தலைவராக்குமாறும், அவ்வாயுதப்பயிற்சித்திட்டத்தில் பங்குபற்றுமாறும் சிபார்சு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக , உமாவின் தலைமைத்துவத்தின் கீழ்  புதிய புலிகள் என்னும் அமைப்பின் பெயரானது தமிழீழ விடுதலைப்புலிகள் என மாற்றமடைந்தது.  ஆயுதப்பயிற்சி முடிந்து திரும்பியதும் பிரபாகரனுடனான உமாவின் உறவானது பல்வேறு இடையூகளுக்குள்ளாகியது.  உமாவின் கூற்றுப்படி பிரபாகரனுடனான பிளவுக்கான பிரதானமான விடயங்களாக பிரபாகரனின் அமைப்புக்குள் பிரச்சினைகளைக் கையாளும் வழிமுறை மற்றும்   அமைப்பின் நிதியினைத் தவறாக, சட்டவிரோதமாகக் கையாள்பவர்கள், மது அருந்துபவர்கள் என அவர் சந்தேகிப்பவர்களுக்குக்  கங்காரு-நீதிமன்றங்கள் மூலம் அவர் நீதி வழங்கும் வழிமுறை போன்றவையிருந்தன.

இப்பிளவின் இறுதி விளைவு பிரபாகரன் அமைப்பின் மூத்த உறுப்பினரும், விடுதலைப்போராட்டத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தவருமான செட்டியைக் கொன்றபோது தோன்றியது.  செட்டியைக் கொன்ற பின்னரான , மத்தியக் குழுக்கூட்டத்தில் உமா பிரபாவைக் கடுமையாகக் கண்டித்தார். அத்துடன் சந்தேகத்தின்பேரில் அமைப்பின் உறுப்பினர்களைக் கொல்வதைப் பிரபாகரன் நிறுத்த வேண்டுமென்று வேண்டினார்.   உமாவுக்கான தனது பதிலாகப் பிரபாகரன் தனது பிஸ்டலையெடுத்து, உமாவுக்கு முன்னால் வைத்துவிட்டுக் கூறினார்  பெரியவரே! நான் ஏதாவது தவறு செய்திருந்தால்,  அத்துடன் இம்மனிதன் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அமைப்பின் நிதியினை தவறாகப்பயன்படுத்திய விடயத்தில் சுற்றவாளியென்றால், இதோ எனது துப்பாக்கி.. எடுத்து என்னைச் சுடவும்..

அத்தருணத்தில் உமா தொடர்ந்தும் பிரபாவுடன் இயங்க முடியாதென்பதை உணர்ந்திருந்தாரென்பதை என்னிடம் கூறினார்.  அதன் பிறகே, உமா கூட்டணியினரின் இளைஞர் அமைப்பிலிருந்து இணைந்திருந்த விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்களையும், தன் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஏனைய இளைஞர்களையும் ஒரே மனதுச் சிங்கள மக்களுடனும், ஏனைய இனக்குழுக்களுடனும் ஒன்றிணைந்து நாட்டில் வளரும் இனவாதத்தை,  தீவிர தேசியவாதத்தை  எதிர்த்துப் போரிட இணங்கச்செய்து உள்வாங்கிடத்தொடங்கினார்.

உமாவின் புதிய உபாயமானது பிரபாகரனால் வன்முறையாக எதிர்க்கப்பட்டது.  விடுதலைப்புலிகள் அமைப்புக்குத் தலைவராகத் தன்னால் நியமிக்கப்பட்டவரின் நோக்கம் அமைப்பை உடைப்பதாகவுள்ளது.  அவர் உமாவிடம் இவ்விதமான செயற்பாடுகளை நிறுத்தும்படி வேண்டினார். அத்துடன் உமா இயக்கப்பெண் உறுப்பினருடன் இரகசியத்தொடர்பினைப் பேணி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

குற்றச்சாட்டுகளும், பதிற் குற்றச்சாட்டுகளும் ஆத்திரமும், கசப்பும் நிறைந்த நிலைக்கு இட்டுச் சென்றன. பிரபாகரனின் மனநிலையினை உணர்ந்திருந்த உமா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகினார்.  கிழக்குக்கு இடம் பெயர்ந்தார். அங்கு வறிய தமிழ் மீனவர்களாலும், விவசாயிகளாலும் பராமரிக்கப்பட்டார்.

~இங்குதான் மார்க்சிசம் மீதான எனது நம்பிக்கை உறுதியானது என உமா கூறினார்.   யாழ்ப்பாணத்திலுள்ள உயர்சாதி மக்கள் மற்றும் என் உறவினர்கள் கூட, பிரபாகரன் மீதான பயம் காரணமாக  என்னுடன் இணைவதற்குப் பயந்துகொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் வறிய விவசாயிகள், மீனவர் மக்கள் எனக்கு இருப்பிடம் வழங்கினர்.

இறுதியாக உமா இலங்கையைச் சகல விதமான வெளியார் தலையீடுகளிலிருந்தும்  பாதுகாப்பதற்கான அவரது முயற்சிக்காக, ஜூலையில்  கொல்லப்பட்டார்.  மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டெலா போன்ற இமயங்களுடன் ஒப்பிடக்கூடிய ஓர் உருவமல்லர் உமா.  அவர் தனது தவறுகளையுமிழைத்திருக்கின்றார்.  பல பாரதூரமானவையும்  கூட. ( உதாரணமாக 1988இல் மாலைதீவுச் சதியின் தலைவரான அப்துல் லுதுவிக்கு ஆதரவுக்கரம் நீட்டியது போன்ற ).

கலாநிதி கொல்வின் ஆர்.டி .சில்வாவின் இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் (‘Ceylon under British Rule)  நூலின்படி குறிப்பிட்ட சிங்களத்தலைவர்களின் இனவாதமே இலங்கையின் இனப்பிரச்சினையானது விரைவாகப்பற்றியெரியக் காரணமென்றால்,  சாதாரணத் தமிழர்களும், சிங்களவர்களும் அவர்களைக் கட்டிப்போட்டுள்ள முதலாளித்துவத் தளைகளிலிருந்து விடுபட ஒன்றிணைந்து போராட வேண்டியது தேவையானது. அதுவே தமிழரின் விடுதலைப்போராட்டத்தினை இனவாதம் பக்கம் திருப்பாமல் தடுக்கும் என்பது  உமாமகேஸுவரனின் திடமான நம்பிக்கையாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here