1

ஆன்ம உணர்த்திறன்

மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.

மனுக்குலத்தின் மீது அவன் கொள்ளும் பேரன்பு சமூகநீதிக் கோரி, அவனைச் சமரசம் இன்றி தேடலுக்கு உட்படுத்தி, அவனுக்கு ஆன்மப் பக்குவத்தை அளிக்கக்கூடும். இருந்தும் இந்நகர்வில், அவனுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் - அவன் தரக்கூடிய விலை, அவன் எதிர்க்கொள்ளவேண்டிய துன்பங்கள் - இவையனைத்தும் உடன் நிகழ்வதே ஆகும்.

சுருங்கச் சொன்னால், இப்பயணிப்பின் போது அவன் சுமக்க முனையும் சுமையின் எடை அசாதாரணமானது எனக் கூறலாம். இத்தகைய ஓர் சமன்பாட்டில்தான், பாரதி எனும் இவ் இருபத்து நான்கு வயது இளைஞன், ஏற்கனவே வகுத்தளிக்கப்பட்ட, கறாரான திட்டங்கள் ஏதுமின்றி இச்சுமையைத் தூக்க சம்மதிக்கின்றான்.

இக்காலப்பகுதியில், இவ்இளைஞன், தன் ஆன்மாவைக் கட்டியெழுப்பும் விதம் எமது கவனத்துக்குரியது. பல் கூறுகளாய் அமையக்கூடிய அவனது தேடல்களின், ஒரு கூறு கடவுள் சம்பந்தமானது.

ஒருசந்தர்ப்பத்தில் மகா கலைஞன், மக்சிம் கார்க்கி கூறுவான்: “உனது கடவுள் யார் என்ற கேள்விக்கு நேர்மைமிக்க எந்த மனிதனும் விடையளிப்பது சற்றுச் சிரமமானதே (1898).

பாரதி பொருத்து, ஆழ ஆய்வு செய்யும், பேராசிரியர் கைலாசபதி கூறுவார் : “இவன் ஒரு சாக்த பக்தன்” என.

ஆக, 24 வயது பாரதியின் கடவுள் யார் என்ற கேள்வி ஒரு பரபரப்பான கேள்வியாக உருக்கொள்ளக்கூடியதுதான். தன் ஆன்மாவைக் கட்டுவிக்க அல்லது நிலை நிறுத்த அல்லது தாங்கிக்கொள்ள இவன் எதை எதைக் கருத்தில் கொள்கின்றான் - தன் கடவுளை எப்படி இவன் தேடிக்கொள்கின்றான் என்பதெல்லாம் சிந்தைக்குரிய கேள்விகளே ஆகும். (கடவுளும் மதமும் வேறு வேறு எனில்).

2

விவேகானந்தரும் மத நிமிர்வும்

விவேகானந்தரின் ஆளுமைப்பொறுத்து இவ் இருபத்து நான்கு வயது இளைஞனின் வியாசமொன்றின் ஆரம்பப் பகுதியில், பின்வருமாறு கூறப்படுகின்றது : “தன்நலம் பாராட்டல், ஆசை, அச்சம் எனும் குணங்கள் செறிந்த உலக மாயை என்ற பாறைக்குட்பட்டிருக்கும் தேரையாகிய நான்… தெரிந்தமட்டிலேயே விவேகானந்த சுடரின் பெருமையைச் சிறிது பேசத்தொடங்குகின்றேன்…” (பக்கம் 178).

பிற்பட்ட காலத்தில், “உலக மாயை” என்ற கருத்தோட்டம் குறித்து தத்துவ அடிப்படையில் தன் வீச்சை இவன் எடுத்தியம்பும் போது, மேற்பட்ட கருத்தோட்டத்தை இவன் எதிர்கொள்ளும் விதமும் அதற்கெதிராய் செயல்பட்ட பண்பும் வேறுபட்டது.

இருந்தும், விவேகானந்தரின் வாழ்வு – பார்வை பொருத்த தகவல்களை, இக்கட்டுரையில் பாரதி என்ற இவ்இளைஞன் கூறிநிற்கும் போது, இவ்இளைஞனின் வாழ்வுப்பொறுத்த எண்ணப்பாடுகளும் பார்வைகளும் கூடவே வெளிப்படுவதாய் உள்ளன - இத்தகவல்கள் போன்றே!

18ம் வயதில் நரேந்திரர் (விவேகானந்தர்) பி.ஏ பரீட்சை தேறினார். 12 வயதான உடனே நரேந்திரர் கடவுளர் அநேகர் என்ற கொள்கையை நம்பாமல் நிறுத்திவிட்டார். பிரம்ம ஸமாஜத்தார் ஈசனைப்பற்றி கொண்டிருக்கும் கோட்பாடே தகுதியானதென்று நம்பத்தொடங்கினார்… ஆனால் சிறிதுக்காலத்திற்கு அப்பால் இவருக்கு பிரம்மஸமாஜத்திலேயே இருந்த பற்று நீங்கிவிட்டது” (பக்கம் - 181).

ஸ்ர்வாந்தர்யாமியாகிய பிரமத்தைப் பிரத்தியக்ஷ்மாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் நரேந்திரருக்கு ஏற்பட்டது. பிரம ஸமாஜத்தார் ஏதோ சில ஐதீகங்களை வைத்துக்கொண்டு பழைய பிரார்த்தனைகளையும் ஜெபங்களையும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது ஸ்வாமிக்கு இசையவில்லை”. “நேரே பிரத்தியக்ஷ்மாக அனுபவிக்கப்படாத பிரமத்தினிடத்திலே பக்தி வைப்ப தெங்ஙனம்? எனக்குத் தெரியாத ஒரு பொருளின் மீது நான் எவ்வாறு அன்பு செலுத்த வல்லேன்? இந்த சமயத்தில் “ஸ்வாமிகள் நிரீசுரவாதியாகி விட்டனர்” (அழுத்தம் எம்முடையது).

இந்த ஜகத்திலே ‘பிரமத்தை யொழிய வேறொன்றுமில்லை’ யென்ற பெருங்கொள்கையை உலகத்தாருக்கு எடுத்துப்போதனை செய்யவந்த இம்மஹான், இந்த ஜகத்திலே ‘தெய்வமே கிடையாது’ என்ற கொள்கையைச் சிறிது காலம் வைத்திருந்தார். ஆனால், இக்கொள்கை சொற்ப காலத்திற்கப்பால் நீங்கிப்போய்விட்டது.” (பக்கம் 182).

மேற்படி கூற்றுக்களின் முதல் முக்கியத்துவம், இவ் இளைஞன் தான் கூறவரும் விடயம் சார்ந்த தகவல்களை, முழுமையாகத் திரட்டி, ஒன்று சேர்த்து, அவற்றைக் கற்று தேரும் பண்பு கொண்டவனாக இருக்கின்றான் என்பது நாம் உடனேயே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மற்றும், “பெரும் கொள்கை” என இவன் “பிரமத்தை” வர்ணிக்க முற்படுவது இவன் அன்று கொண்டிருந்திருக்கக்கூடிய நம்பிக்கையை எடுத்தியம்புவதாக உள்ளது. (பல கடவுளாரின் இருப்புக்களை நிராகரித்து).

இந்த ஜகத்தில் பிரமத்தை ஒழிய வேறொன்றுமில்லை என்ற பெரும் கொள்கையை உலகத்தாருக்குப் போதனை செய்ய வந்த இம்மகான்…” என இவ்இளைஞன் கூறும் போது ஏனைய மதக்கொள்கைகளை இவ்இளவயதிலேயே கற்று தேர்ந்து, தனது ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்துள்ளான் இவன் என்பது தெளிவாகின்றது.

விவேகானந்தரின், வாழ்க்கை தரிசனம் குறித்து பின்வருமாறு கூறுகின்றான், இவ்இளைஞன்: “பிரம கள்ளுண்டு… பல இடங்களில் யாத்திரை புரிந்து… இமயமலைக்கு சென்று… வாழ்ந்து… இதற்கப்பால் லேகோபாகாரம் செய்ய வேண்டும் எனத் திருவருள் இவருக்கு உண்டாகிவிட்டது… இந்திய தேசத்தில் ஆண்களெல்லாம்… சரீர பலம், மனோ பலம், ஞான பலம் என்ற மூன்றுமல்லாது அற்ப வாழ்க்கையை வாழ்கின்றார்கள்… அதன் பேரில் இமயமலை சாரலில் இருந்து இந்த மகாரிஷி இறங்கி வந்து… பல இடங்களில் சுற்றிவிட்டு… சென்னை வந்து சேர்ந்தார்…”

அதாவது பிரம கள்ளுண்டு, இமயமலை சாரல்களில் தவம் புரிந்த இம்மகாரிஷியானவர், இப்படி இறங்கிவந்து நலிந்துப்போய்கிடக்கும் இந்திய மக்களை நிமிர்த்தும் பொருட்டு சென்னைக்கு வந்து சேர்வது இவ்இளைஞனுக்கு ஏற்புடையதாகின்றது.

இங்கே, இரு விடயங்கள் தெளிவாகின்றன :

ஒன்று, இவ்இளைஞன் பயணித்திருக்கக் கூடிய பல்வேறு மதமார்க்கங்கள் - நம்பிக்கைகள் (பிரமசமாஜம் உட்பட). பின் அந்த பழைய பிரார்த்தனைகளையும் ஜெபங்களையும் வெறுமனே மனனம் செய்து, சொல்வதென்பது உபயோகமற்றது என உணர்ந்து அவன் பிரமத்தை வந்துசேரும் முடிவு.

இது, அவன், அக்காலப்பகுதியில், தன் கடவுளை எங்கெங்கு தேடி அலைகின்றான் எனக் கூறும் அதேவேளை, அது மலையடிவாரத்தில் தனித்து தவங்களில் ஈடுபடுவதாய் இருக்கக் கூடாது – அது இறங்கிவந்து மக்களுடன் இரண்டர ஒன்று கலந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடிப்பே இவ்இளைஞனில் முனைப்பாகத் தட்டுப்படுவதாகத் தென்படுகின்றது.

வேறுவார்த்தையில் கூறினால், இக்காலப்பகுதியில், இவ்இளைஞனின் கடவுள் யார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, இவனது விவேகானந்தர் குறித்த வியாசம் அமைந்து போகின்றது.

அதாவது, விவேகானந்தர்பால் தான் ஈர்க்கப்படும் காரணங்களாக இரண்டைக் கூறத்துணிகின்றான் இவ்இளைஞன். ஒன்று, பல்கடவுள்கள் இருப்பதை நிராகரித்து, “பிரமம்” என்பதில் வாசம் செய்யும் இவனது அவா. இரண்டாவது, அந்த பிரமமானது, மக்களுடன் வந்து இணைந்து சேவையாற்ற வேண்டும் என இவன் சிந்தித்து தெளியும் பண்பு.

இவை இரண்டும், இவ்இளைஞனின், அதாவது, இவ்இளைஞனின், இருபத்து மூன்று-இருபத்து நான்கு வயது காலப்பகுதியிலேயே நடந்தேறுவது விசேடமானது.

ஆனால், விவேகானந்தரின் மேற்படி “அறிமுகத்துக்கு” முன்னரே, இவ்இளைஞனின், மதம் சம்பந்தமான எண்ணக்கருக்கள், ஏற்கனவே முளைவிட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கக்கூடும், என்பதை நாம் அனுமானிக்கலாம்.

தனது விவேகானந்தர் கட்டுரைக்கு முன்பாக இவ்இளைஞன் மலையாள நம்பூதிரிகளுக்கிடையிலான சீர்திருத்தம் குறித்து பின்வருமாறு எழுதுகின்றான் : “ஞானமற்ற, முரட்டுத்தனமான, மூடப்பக்தி பிடிவாதத்திற்கு நம்பூதிரி கூட்டத்தினரே முக்கிய பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள்” (பெப்ரவரி 1906 : பக்கம் 171).

(நம்பூதிரிகளில் ஒருவரான கேரளா மாக்சியவாதியாக அறியப்படும், நம்பூதிரிபாத்தின் பாத்திரமும், இவ்வகையில், ஒப்புநோக்கத்தக்கது என்பது வேறு விடயம்).

இங்கே, இவ் இளைஞனின் மதம் பொறுத்த தேடலுடன், சமூகத்தில், மதம் பொறுத்த தேடலுக்கான கீற்றும் தென்படுகின்றது.

பாரதி, என்ற இவ் இளைஞன், “ஞானமற்ற” “முரட்டுத்தனமான” “மூடப்பக்தி” என்று சொல்வதற்கூடு எதனை இனங்கண்டு கொள்கின்றான் என்பது கேள்வியாகின்றது.

மார்க்ஸ் குறிப்பிட்ட, அதே களிம்பு தட்டிப்போன, இந்து மதத்தின் சாரத்தையா இவன் குறிக்கத் துணிகின்றான் என்பது விடயம்.

இமயமலை சாரலில் இருந்து இறங்கிவரும் விவேகானந்தர் கூட மனிதன், ஆண்மை இழந்து, பேடிகளின் கூட்டமாக இருப்பது கண்டு நெஞ்சு வாடுகின்றார். அன்றைய இந்தியாவில், இருந்திருக்கக்கூடிய, மதம்-கலாசாரம்-பண்பாடு என்பன அனைத்துமே முற்றாய் மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவையை, என அவர் உணர்ந்திருக்கலாம். விவேகானந்தரின் பார்வையில் இக்கலாசாரம்-பண்பாடு-நம்பிக்கை என்பன பிரதியீடு செய்யப்பட்டாக வேண்டும் என அவாவுறுவது வேறுவிடயம். ஆனால், இதன் போது, மதங்களுக்கான புதிய பொருட்கோடல் இங்கு ஆரம்பமாகிறது, என்பதே முக்கிய கருப்பொருளாகின்றது.

இப்பின்னணியில், பாரதி முயன்றது எதனை என்பது கேள்வியாகின்றது. இருவருமே மனிதனை மாத்திரமன்றி, அதனது அடித்தளமாய் அன்று இருந்திருக்கக்கூடிய, மதத்தினையும் நிமிர்த்த முற்படுகின்றார்கள் எனக் கூறுவதே பொருத்தமானது.

3

மாதர் கோரிக்கைகள்

இதனைப் போலவே, மாதர் தொடர்பிலான பாரதியின் சிந்தனையிலும், உக்கிரம் தாண்டவம் ஆடுவதை, இக்காலப்பகுதியில், நாம் காணக்கூடியதாக உள்ளது.

பஞ்சாபியிலுள்ள மாரிப்பூர் என்ற ஊரில், 1905களில் நடந்தேறிய, சதி தகனம் பற்றிய வழக்கு தொடர்பிலான விசாரனைக்குறிப்பை, அவன் மார்ச் 1906ல், சக்கரவர்த்தினியில் எழுதும்போது பின்வருமாறு எழுதுகின்றான் :

“…அவள் முகத்திலே துணி ஒன்றைக் கொண்டு மூடினதின் பேரில் அவளது கழுத்துவரை வரட்டிகளை அடுக்கி, நெருப்பைக் கொளுத்திவிட்டு, அந்நெருப்பிலே மூடபக்தி கொண்ட மகாபாதக மிருக ஜனங்கள், எண்ணெய், நெய் முதலியவற்றைக் கொண்டு சொரிந்தார்கள்… மத்தளங்கள் அடித்தும், ராம் ராம் என்று கூக்குரலிட்டும் அவளது அழுகை குரல் வெளியே கேளாதப்படித் தடுத்துவிட… (அவள்)… சிறிது நேரத்துக்கெல்லாம் சாம்பராகிவிட்டாள்…” (பக்கம் :192).

இவ்வரிகளில், காணக்கிட்டும் “மூடபக்தி கொண்ட மகாபாதக மிருக ஜனங்களும், ராம் ராம்” என அவர்கள் கூக்குரலிடுவதும், அவனது சிந்தனையின் உக்கிரத்தை மாத்திரமல்ல – ஆனால் ராம், ராம் என்ற வார்த்தைப் பிரயோகத்தின் உண்மை வேர்களையும், அவனுக்குக் காட்டுவதாயுள்ளது. வழக்கை மேன் முறையீடு செய்துள்ள பாதகர்கள் குறித்து குமுறுவான் :

அந்த ஸ்தலத்திற்கு வருமளவும் ஸதி தகனம் நடக்கும் என்பது, தமக்குத் தெரியாதென அப்பிலிலே சொல்கின்றார்கள்…”

பந்து மிருகங்கள் என்ன பொய் கொண்டு வந்திருக்கின்றனவோ அறியோம்…”

“20 வயது கன்னிகையை ஆவலுடன் கொளுத்தி பாத்துவிட்டு, தமது நீச உயிர்களுக்கு, கஷ்டம் வரும்போது பொய் ஓலமிடுகின்ற இந்த ஈனர்களை கோட்டார் இலேசாக விடமாட்டார்களென்று நம்புகின்றோம்…” (பக்கம்:192).

மாதரின் இந்நிலைக்குறித்து, அக்கினி குழம்பாய், குமுறும் பாரதியை, இவ்இளைஞனில் காண்கின்றோம். ஆனால் அவனது கோபக்குரல் மாத்திரமே இங்கே முக்கியத்துவப்படுவதாயில்லை. அன்றைய இந்தியாவின், இறுகிப்போய்கிடந்த மத நிலைமையினையும், இவ்வரிகள் வெளிக்கொணர்வதாகவே அமைகின்றது. (இதனையே அன்றைய ஆங்கில அமைப்பு, எப்படி தகர்க்கப்போகின்றது என்பது இணைந்த, வேறு விடயம்.)

4

நிவேதிதாவின் சந்திப்பு

1905இன் இறுதியில், நடந்தேறியதாய் கூறப்படும் நிவேதித்தாவின் சந்திப்பு, இவ்இளைஞனின் எழுத்துக்களில் தீவிரம் காட்ட செய்திருக்கக் கூடும் எனவும் நம்பப்படுகின்றது. ஆனால் இத்தகைய ஒரு சந்திப்பு நிகழாதிருப்பினும் கூட, மாதர் பொறுத்து, இவன் இவற்றை எழுதக்கூடியவன்தான் என்பது, இச்சந்திப்புக்கு முன் எழுதப்பட்ட “துளசிபாய்” என்ற கதையின் மூலம் தெளிவுறுத்தப்படுகின்றது. (நவம்பர் 1905). துளசிபாயி கதையும் ‘ஸதி தகனம்’ எனும் விடயத்தை, தொடுவதாயுள்ளது. அங்கே, பெண்ணை - இளம் நங்கையை – ரோஹினி நதிகரையில், மயானத்தில் எரிக்கப்போகின்றார்கள். இதை தடுக்கும் பொருட்டு, இதற்காகக் குழுமியிருக்கும் ஒரு ராஜபுத்திர கூட்டத்தை நெருங்குகிறான், ஒரு, மகமதிய போர் வீரன்.

பாரதி, இம்மகமதிய வீரனுக்கூடு கூறுகிறான் :

பிராமணர்களை பற்றிய பயம் கிடையாது… கண்டவுடன் ஓடி விடுவார்கள்…”

மேலும், ராஜபுத்திர வீரம் குறித்து, ஏளனத்துடன் கூறுகின்றான் :

ராஜபுத்திரர்களின்… வீர ரத்தம் பொங்குகிறது… விழிகள் சிவந்தன… மதக் கிரியைகள் நடக்கும் இடத்தில்… ஏனையா… நிற்கின்றீர்..”

இதற்கு, அக்பரின் ஆட்சி முறைமையில், இத்தகைய ஸதி தகனங்கள் நடைபெறக் கூடாது, தடுக்கப்பட்டு விட்டனவே

என்ற மகமதிய வீரனின் கூற்றுக்கு, குழுமியிருக்கும் ராஜபுத்திரர்கள் பதிலாகக் கூறுவது :

“நீ யாரடா மகமதியன்.. பாரத பூமிக்கு மிலேச்சனடா அரசன்…”

புரோகித பிராமணர்கள் ஓடிவிடுகின்றார்கள். பெரும் வாள்வெட்டு இடம் பெறுகின்றது. துளசிபாய் காப்பாற்றப்படுகிறாள் - இது துளசிபாய் கதையில் இடம்பெறும் சம்பவங்கள்.

அன்றைய இந்தியாவில் காணப்பட்ட, இவ்வகையான கொடூர ஜனங்களும், அவர்களுக்கு அடித்தளமாய் அமையும், அற்ப சமூக அமைப்பும் இங்கே விவரிக்கப்படுகின்றது என்பதும், இது, ஆங்கிலேய செயற்பாடுகளால் எப்படி தகர்க்கப்படக் கூடியதாக உள்ளது என்பதுமே கேள்வியாகின்றது, இப்புள்ளியிலேயே ஒரு  “புதிய வித்து” முகிழ்க்கவும்கூடும் என்றும் கார்ல்மார்க்ஸ் கருதிய கூற்றின் முக்கியத்துவம் வந்து சேர்கின்றது. மதம் பொறுத்தும், மக்கள் பொறுத்தும், விவேகானந்தர் பொறுத்தும், ஸதி தகனம் பொறுத்தும், தன் எழுத்துக்களையும், தன்னையும் அர்பணிக்கத் துணியும், இவ், 24 வயதும் அரும்பாத இளைஞன், யார்? மார்க்ஸ் குறிப்பிட்ட அப்புதிய வித்தின் ஒரு கீற்றா என்பதே இங்கே எழக்கூடிய கேள்வியாகின்றது.

(வணக்கத்துடன் : காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுப்பு 1 : சீனி. விசுவநாதன் - பக்கங்கள் : 200 வரைக்கும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதியார் ஓவியம்: நன்றி இந்து தமிழ்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

 
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here