- சுப்ரபாரதிமணியன் -

நானும் இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.  தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன். திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை  என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள்.

செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .

. தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள்,  தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே,  மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி  திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் .

இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட  வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால்  பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி  திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சுப்ரபாரதிமணியனின் 'மற்றும் சிலர்'

துணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் 'மற்றும் சிலர்'.  இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் (சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர் )ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு  சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக  ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய  முதல் நாவல் 'மற்றும் சிலர்'.

சுப்ரபாரதிமணியனின் 'சுடுமணல்'

என் இரண்டாவது நாவலான 'சுடுமணல்' கூட இடம் பெயர்வு சார்ந்த ஒரு படைப்பு என்று சொல்லலாம். 'சுடுமணல்' நாவலில் தண்ணீர் பிரச்சனை, இந்திய தேசியம் போன்ற மாயைகள் நம்மை அலைக்களித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அந்த தண்ணீர் பிரச்சனை -காவிரி கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கின்ற போது தமிழர்கள் அங்குஇருக்கும் தமிழர்கள்  படும் சிரமங்கள் என் பல படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன .இந்த சுடுமணல் நாவலில் அப்படித்தான் அந்த பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருந்தேன். அதில் இடம்பெறும் மனிதர்களும் களமும் ஹைதராபாத் ஆக இருந்தது. பெங்களூர் போன்ற நகரங்களில் மற்றும் பூகோள ரீதியான விஷயங்கள் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லாததால் நான் அப்போது வசித்து வந்த ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதினேன். அதில் தண்ணீர்  பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது .ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மக்கள் இடம்பெயர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் அகதிமுகாம்கள் போன்று அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் தங்குவதும் சில கதாபாத்திரங்களை பாதிக்கிறது . உயிர், உடமைக்காக தமிழரகள் இடம் பெய்ர்கிற அவலம்.இது பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்ற நாவலாகும் .என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றியக் கதையாக இருந்தது, அதில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பின் தமிழகத்தில் இந்திய ஆசிரியர்கள் எண்ணீக்கை குறைக்கப்பட்டு  நீக்கப்பட்டு இருந்த சூழலில் ஒருவர் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிற  கட்டாயம் ஏற்படுவதை சித்தரித்து இருந்தேன். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாய் இடம்பெயர்வும் இடம்பெயர்வு சார்ந்து மக்கள் நகரும்போது ஆள்கடத்தல் நிகழ்வதும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவை.

சுப்ரபாரதிமணியனின் 'நீர்த்துளி'

என் 'நீர்த்துளி'  நாவலில் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு சம்பந்தமாக நீதிமன்றம் தந்த ஒரு தீர்ப்பை ஒட்டி சுமார் 700 சாயப்பட்டறைகள் மூடியபோது அந்த சாயப்பட்டறைகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் வெளி மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் வேறு மாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் சேர்ந்து வாழும் ஒரு தம்பதியர் அல்லது சேர்ந்து வாழும் ஒரு ஆணும் பெண்ணும் இந்த பொருளாதார சிரமத்தினால் பெரும் அலைச்சலுக்குள்ளாக்குவது  தங்களை வேறுபடுத்திக் கொள்வதும் என்றானது .அதை அந்த நாவலில் பதிவு செய்திருந்தேன்.

உலகமயமாக்களில் வியாபாரம் என்பது பொதுவாக விட்டது .உலகமே ஒரு சந்தை என்றாகிவிட்டது இந்த சூழலில் வெளிநாட்டுக்காரர்கள் நம் நாட்டிற்கு வரும் போதும் அல்லது அவரவர் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதும் சாதாரணமாகிவிட்டது அப்படித்தான் வியாபாரம் பொருட்டு எண்பதுகளில் வடமாநிலத்தில் இருந்து முதலீடு செய்வதற்காக வட இந்தியர்கள்,  மார்வாடிகள் திருப்பூருக்கு வந்தார்கள் தங்களின் பொருளாதார முதலீடு காரணமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள். பனியன் தொழிலில் வேரூன்றிய மரபான பல சாதி சார்ந்த மக்களை ஓரங்கட்டிவிட்டு பொருளாதாரரீதியாக தங்களை முன்னிறுத்திக் கொண்டார்கள். இந்த அம்சங்களை நான் ” சாயத்திரை “ நாவலில் சொல்லியிருக்கிறேன். உலகமயமாக்கலில் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்யும் சூழல் சகஜமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நைஜீரியர்கள் திருப்பூருக்கு வந்து செல்கிறார்கள். திருப்பூருக்கு வந்து பனியன். பிற பின்னலாடைகளை எடுத்துச் செல்வது, வியாபாரம் செய்வது என்ற ரீதியில் சுற்றுலா விசாவில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இங்கிருக்கும் விடுதிகளில் தங்குவார்கள் சில நாட்கள் தங்கியிருந்து தங்கள் வியாபாரத்தை பார்த்து விட்டு செல்வார்கள் ,இவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல கூட ஆரம்பிக்கும்போது இவர்கள் விடுதிகளில் மட்டுமல்ல வாடகை வீடு எடுத்து தங்க ஆரம்பித்தார்கள் ,அதுவும் சாதாரண விளிம்புநிலை மக்கள் உள்ள பகுதிகளில் வீடு எடுத்து தங்கும் போது அந்த பகுதி இளம் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதும் அதிக வாடகை கொடுத்து உள்ளூர்காரர்கள் கவர்வதும் என்பதும் சாதாரணமாகிவிட்டது .இவர்களுடைய நடமாட்டமும் கலாச்சார பின்னணிகளும் உணவு பழக்கவழக்கங்களும் உள்ளூர் மக்களுக்கு பல வகைகளில் அதிர்ச்சியை தந்தன. இந்த அனுபவங்கள் பாரம்பரிய மதம் சாதி சார்ந்த உள்ளூர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்களை நகரின் மத்திய பகுதியில் இருந்து வெளியேற்றுவது அல்லது அவர்களுக்கு வீடு தரக்கூடாது என்ற கட்டாயங்கள் பலரை நகரைவிட்டு திருப்பூருக்கு அருகில் இருந்த பல கிராமங்களுக்கு இடம்பெயரச் செய்தது. அவர்களில் பலர் தமிழ் பெண்களையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .காதலித்து தமிழ் பெண்களை கவர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய குணம்  இயல்பில் இருந்த நல்ல விஷயங்களை தமிழ் பெண்கள் புரிந்து கொண்டு அவர்களை காதலித்திருக்கிறார்கள். காத்திருந்திருக்கிறார்கள் இந்த அம்சங்கள் உள்ளூர் கலாச்சாரத்தில் மிகுந்த பாதிப்புகளை கொண்டு வந்திருக்கிறது. இந்த பாதிப்புகளை நான்  ” நைரா “ என்ற நாவலில் பதிவு செய்திருக்கிறேன் .அதேபோல் தேனீர் இடைவேளை, முறிவு போன்ற நாவல்களில் பக்கத்து மாநிலங்களில் இருந்து வந்து சுமங்கலி திட்டம் என்ற வகையில் வேலை செய்யும் இளம் பெண்களின் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறேன் ,ஆரம்பத்தில் கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களிலிருந்து இதுபோல் இளம் பெண்கள் வேலைக்கு வந்தார்கள் பின்னர் இப்போது பீகார் ஒரிசா வங்காளம் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து கூட பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள் திருப்பூருக்கு வந்திருக்கிற இடம் பெயர்ந்த மக்களின் தொகை சில லட்சங்களைத் தாண்டும்.. இந்தக் இடம்பெயர்வு பொருளாதாரரீதியாக அவர்கள் மனதில்  வரவேற்கப்பட்டு இருக்கிறார்கள் அல்லது அந்த மாநிலங்களில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவு என்பதை மீறி சாதிய ரீதியாக அவர்கள் அங்கு அடக்கி ஒடுக்கப்பட்டு இருப்பதை இன்னொரு முகமாய் காட்டுகிறது எனலாம் . என் முதல் நாவலில் இடம்பெயர்வு  என்பது ஒரு வகையில் மாநில அரசுகளின் ஒரு தாக்கமாக இருந்தது .பின்னால் என் நாவலில் இடம் பெற்ற இடம்பெயர்ந்த மக்கள் உலகமயமாக்கலின் தாக்கத்தால் தங்கள் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை இழந்து  விவசாயம் போன்ற சிறு தொழில்களில் நிலைத்திருக்க முடியாமல் திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அடைக்கலமாகிறார்கள் . இந்தத் தன்மையை காட்டியிருக்கின்றனஅந்நாவல்கள்.

மாலு நாவலில் சுற்றுலா விசாவில் மலேசியா செல்லும் தமிழர்கள் அங்கேயே தங்கி சட்டவிரோதமாக விடுதிகளில், தோட்டக்காடுகளில் வேலை செய்வதும் அங்கு அவர்களின் இடம் பெயர்பு அவர்களை அந்நியர்களாக்குவதையும் அனுபவமாக்கியிருக்கிறேன்.


பேராசிரியர் ஆனந்தகுமார் (தலைவர் , தமிழ்த்துறை , காந்தி கிராம பல்கலைக் கழகம் திண்டுக்கல் மதுரை) அவர்களின் ஒரு குறிப்பை கீழே தந்துள்ளேன்:

சுப்ரபாரதிமணியனின் 'நைரா'

'நைரா': திருப்பூரில்  நைஜீரிரியர்களின் வருகையும் தாக்கமும் பற்றிப் பேசுகிறது . தமிழ் சமூக மாற்றம் எப்படி இருக்கிறது.உலகில் பல்வேறு மாறுதல்கள் எப்படி உள்ளன .தேசியம் கூட அர்த்தமில்லாமல் போவது எப்படி. சர்வதேசத்தில் குழும முதலாளித்துவம் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அவர் கூறுகிறார் .இன்றைக்கு திருப்பூர் யார் கையில் இருக்கிறது.பூர்வீகமாக பருத்தி,  நெசவுத் தொழிலின் நகரமாக இருந்திருக்கிறது ,பிறகு விசைத்தறிக்கு  மாறி பனியன்  நகரமாகபரிணமித்து விட்டது. அந்த பனியப்  நகரத்தில் தொண்ணூறுகளில் பல்வேறு வட இந்தியர்கள் வருகை வியாபாரத்திற்கு என்றுவந்தனர்.அது . முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியது .  2000ம் ஆண்டில் தென் மாவட்ட மக்களும் பக்கத்தில் உள்ள மாநிலமக்களும் குறிப்பாய் கேரள மக்களும் அங்கு இடம் பெயர்ந்தனர் தொழிலுக்காக, அது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. பத்துஆண்டுகளுக்கு முன்னால் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக குடிபெயர ஆரம்பித்து இன்றைக்கு அவர்களின்ஆக்கிரமிப்பில் உள்ளது. சமீப ஆண்டுகளில் வியாபாரத்திற்கு என்று வந்து சேர்ந்த நைஜீரியர்கள் வியாபார ரீதியிலும்கலாச்சார ரீதியிலும் உள்ளூர் மக்களை பாதித்திருப்பதை அவரின் நைரா நாவல் பேசுகிறது ஒருவகையில் சிங்களக்குடியேற்றங்களுக்கு ஒப்பாக இந்த நைஜீரியன் குடியேற்றம் என மிகைப்படுத்தப்படலாம், ஈழத் தமிழருடைய பிரச்சனையைஅணுகும் போக்கில் இப்படி நைஜீரியரின்  வருகையை சற்று மிகைப்படுத்தி ஒப்பிடலாம் .நைஜீரியர்கள் பனைமரம் போல்உயரமாக இருக்கிறார்கள் .மது மாட்டுக்கறி போன்றவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் பெண்களுடன்பெண்களுடனான பாலியல் தொடர்பு அதிலும் குறிப்பாக இளம் தமிழ் பெண்களை பயன்படுத்துவது குறித்த சில குறிப்புகள்போன்றவை உள்ளூர் மக்களை அதிர்ச்சி அடையச் செய்யும். உலக முதலாளித்துவம் வட்டார முதலாளித்துவத்துடன் இணைந்துஅல்லது வட்டார முதலாளித்துவத்திற்குள் மாற்றிக் கொண்டு விட்டது அதன் குறியீடாய் பல்வேறு மக்கள் நம் தொழில்நகரங்களில் வந்து வேலை செய்கிறார்கள். வியாபாரம் செய்கிறார்கள். தென் மாவட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் இருந்தும்திருப்பூருக்கு இடம்பெயர்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்கள் ஒரு வகை. அங்கு வந்து சமீபகாலமாய் ஒடியா பீகார்வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகளிலிருந்து வந்து குடியேறி இருக்கும் மக்கள் பற்றிய சரியான கணக்கெடுப்பு இல்லை .அந்தகணக்கெடுப்பு முறைப்படுத்துகிறது போது அதிர்ச்சி தரலாம். இப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கக் கூடியமக்களில் 10 சதவீதம் மட்டும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். பூர்வீக குடிகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள்இருக்கிறார்கள் மற்றவர்கள் எல்லாம் ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பியர்கள் என்று அங்கே ஆக்கிரமித்திருக்கிறார்கள் .அதேபோலதிருப்பூரில் பல்வேறு வகையான பிரதேசங்களைச் சார்ந்த மக்கள்  இருக்கவே நில மாசு நீர் மாசு கலாச்சாரம் குறித்தமுரண்பாடுகள் போன்றவை அதிர்ச்சி தரும் வகையில் நைராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன .

சுப்ரபாரதிமணியனின் 'ரேகை'

அதேபோல் சமீபத்தில் வந்திருக்கும் அவர் நாவல் ”ரேகை“, ஒரு சாதாரண கிராமம், ஆனால் அந்த கிராமத்தில் கூடகார்ப்பரேட் தாக்கம் இருக்கிறது ,அந்த கிராமத்தில் மரபுரீதியான ஜோதிடம் பார்க்க கூறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,அந்த மரபு நம்பிக்கை உண்மையா ,  பொய்யா என்ற கேள்விகளோடு இந்த நாவல் பயணிக்கிறது வெளியூரிலிருந்து வந்துகாத்திருந்து ,தங்கி ஜோதிடம் பார்த்து செல்பவர்கள் இருக்கிறார்கள் .ஜோதிடத்தை வியாபாரமாகி கொண்டிருக்கிறார்கள்.உள்ளூர் தொழிலாளர்கள் பக்கத்தில் இருக்கும் திருப்பூருக்கு தொழில் நிமித்தமாய் இடம் பெயர்கிறார்கள். அங்கிருக்கிறதோட்டங்களிலும் கரும்பு காடுகளிலும் வேலை செய்வதற்கு பீகார்காரர்களும் ஒடிய காரர்களும் வந்து விட்டார்கள். அப்படி ஒருகிராமம் தான் ரேகை நாவலில் இடம்பெறுகிறது . சமூக மாற்றத்தில் நம்பிக்கை கொண்ட சுப்பையா போன்ற முக்கியமானகதாபாத்திரங்களும் இந்த நாவலில் இருக்கிறார்கள். வீதி நாடகங்கள் திரைப்பட முயற்சிகள் மூலமாக சமூக மாற்றத்தை பதிவுசெய்ய முடியும், அதற்கான காரணங்களை விளக்க முடியும் என்பதை சுப்பையா போன்ற கதாபாத்திரங்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் மக்களுடைய பல்வேறு பிரச்சனைகள் ,இளைய தலைமுறை இன்றைக்கு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள்ஆகியவற்றை இந்த நாவல்  காட்டுகிறது, சோதிடம், மரபு நம்பிக்கை மீதான பல கேள்விகளையும் இந்த நாவல்முன்னிறுத்துகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் அனுபவங்களோடு என் படைப்புக்கு அனுபவங்களும் என் படைப்பிலக்கிய அனுபவங்களும் பல ஆண்டுகளாய் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.இனறைய உலகில் இடம் பெயர்வு இலக்கியம் ஒரு முக்கியப் பங்காற்றியிருப்பதை தமிழ்ச்சுழலிலும் அடையாளம் காணலாம் .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்