அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் சமூகப்பணியாளரும், தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவருமான சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதியிருக்கும் Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 26 ஆம் திகதி ( 26-02-2022 ) சனிக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் ( 692-724 , Waverley Road, Glen Waverley 3150 ) நடைபெறும்.

திருமதி பிருந்தா கோபாலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நூல்வெளியீட்டு அரங்கை, திருமதி பாக்கியம் அம்பிகைபாகர், திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பர்.
அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களை நினைவுகூர்ந்தவாறு, இலங்கை உட்பட உலகெங்கும் போரினால் மறைந்தவர்களுக்கும் கொவிட் பெருந்தொற்றினால் இறந்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

எழுத்தாளர் திரு. முருகபூபதி, வழக்கறிஞர் திரு. ஜே பிள்ளை ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து, எழுத்தாளர் சட்டத்தரணி ‘பாடும் மீன் ‘ சு. ஶ்ரீகந்தராசா, கலாநிதி ஆனந்த ஜெயசேகரம், திரு. ஜூட் பிரகாஷ், ஆகியோர் நூல் நயப்புரை நிகழ்த்துவர். நூலாசிரியர் திரு. சபாரத்தினம் சுந்தரமூர்த்தி ஏற்புரை நிகழ்த்துவார். இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R