முன்னுரை

கட்டுரை வாசிப்போம்.தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியம், கிறித்தவம், ஆகிய பல தரப்பட்ட சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றன. பல சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களின் நிறுவனங்கள் கட்டமைத்துள்ள முறைகளையும், வழிபாடுகளையும், பின்பற்றுகின்றனர். மக்கள் தங்கள் சமய சட்டங்களை கடைபிடித்தாலும், வெகுசன மக்களாகிய அவா்களின் உள்ளங்களில் உயிராய் கலந்துகிடக்கின்ற நாட்டார் பண்பாட்டின் தாக்கம் அவா்களின் வாழ்வில் விழாக்களில் அதிகம் காணப்படுகின்றன என்று பல நாட்டார் வழக்காற்றியல் அறிஞா்கள் கூறுகின்றனர். நாட்டார் பண்பாடு தென்தமிழக, கிறித்துவ மக்களின் விழாக்களில் பரந்து விரிந்த தன்மை குறித்து ஆ.சிவசுப்பிரமணியன், பிலவேந்தரின், இருதயராஜ் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர் இந்நிலையை நாட்டார் பண்பாடு வடத்தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்துவ விழாக்களில் எவ்வாறு அடித்தளமிட்டுள்ளது. என்பதை பற்றி ஒரு சில விழாக்களில் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

புனித வியாழன்

“பெரியவியாழன் அல்லது புனித வியாழன் என்பது கிறித்தவா்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகவா்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது Holy Thusday Maundy Thusday என்றும் அழைக்கப்படுகிறது.”1

இயேசு தான் சிலுவையில் பாடுகள் படும் முன் தினம் இரவு கெஸ்தமணி தோட்டத்தில் செபித்தார் அதை நினைவுக் கூறும் வகையில் அனைத்து கிறித்துவ கோவில்களிலும் “மாற்றுப் பீடம் அமைத்து மக்கள் அன்பின் வாரியாக வந்து விளக்குகளை ஏற்றி அன்று இரவு முழுவதும் கண்விழித்து இயேசு அணுபவித்த துன்பத்தை தானும் உணரவேண்டும்”2 என்று திரு.அ.மாரியநாதன் அவா்கள் கூறுகின்றார். இந்த நிகழ்வு ஒருவா் இறந்துவிட்டார் இரவு முழுவதும் இருந்து வேண்டுவதை குறிக்கும் ஒரு நாட்டார் நம்பிக்கையாக கருதப்படுகிறது.

புனித சனி
திருச்சபை பழங்கால முறைப்படி பெரிய சனி என்பது கிறித்துவ மக்கள் தம் ஆண்டவராகிய இயேசுவின் கல்லறையின் பக்கம் நின்று அவருடைய பாடுகளின் சாவு பற்றி தியானிக்கின்ற நாளாகக் கொண்டாடுகின்றது. இது அமைதியின் நாளாக திருச்சபை அனுசரிக்கின்றது.

“புனித சனி அன்று இயேசு இறந்து விட்டதை எண்ணி வாசலில் சானி தெளித்து கோலம் போடுவதை தவிர்ப்பார்கள் அன்று மக்கள் அரிசி கஞ்சி சோறு மட்டும் உண்ணுவார்கள்.”3

இந்த நிகழ்வை நம் வீட்டில் யாரேனும் இறந்து விட்டார் வாசலை சாணம் தெளித்து கோலம் போடமாட்டோம் அல்லவா அதே போல இயேசு வைப்பும் நம் வீட்டில் ஒருவராக நினைத்து ஆய்வு இப்பகுதியில் மக்கள் இந்த முறையை கடைப்பிடிக்கின்றது இது ஒரு நாட்டார் பண்பாடாகவே கருதப்படுகிறது.

பாஸ்கா விழா (ஈஸ்டா்)
இவ்விழா இயேசு மரித்து பின் உயிர்த்தெழுந்தார் என்ற நிகழ்வை நினைவுக் கூறும் விதமாக அமைகிறது. இவ்விழாவை கிறித்துவா்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர்.

கிறித்துவா்கள் பாஸ்கா விழா (ஈஸ்டா்) திருப்பலி முடிந்தவுடன்  “மக்கள் தங்கள் கையில் இருக்கும் மெழுகு திரிகளை அணையாமல் தங்கள் வீட்டுக்கு எடுத்து செல்வார்கள் இவற்றை மக்கள் புனிதப்பொருளாக கருதுவார்கள் புதிய ஒளியின் நினைவாக எடுத்து செல்வா். பின் மந்திரித்த தண்ணீா் ஒரு சொட்டாக இருந்தாலும் அதை கோவிலில் இருந்து எடுத்து சென்று நிறைய நீருடன் கலந்து வீட்டை சுற்றி தெளிப்பா். அப்படி தெளித்தால் வீட்டில் போய் வராது நோய் நொடியும் வராது என்பது என்பது கிறித்துவா்களின் நம்பிக்கையாகும்”4 இங்கு இந்த நம்பிக்கை ஒரு நாட்டார் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது என்று திருமதி.எஸ்.சகாய மேரி கூறிப்பிடுகிறார்.

கிறித்துவின் திருவுடல் திருஇரத்த பெருவிழா
கிறித்துவின் திருவுடல் திருஇரத்த பெருவிழா மூவொரு கடவுள் பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிற்று கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இயேசு நற்கருணையில் உடலும், இரத்தமுமாக இருக்கின்றார் என்பதை உணா்த்து வதை நினைவுக் கூறும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.

“இவ்விழா தெருக்களில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் இயேசுவின் திருவுடல் உள்ள ஓமக்கலனை வைத்து ஆராதிப்பார். அன்பியவாரியாக பீடம் அமைத்து விவிலியவாசகங்கள் பாவிப்பார். இதில் புதியாக நற்கருணை விருந்து பெற்ற குழந்தைகள் பூவை தெளித்து ஒவ்வொரு இடத்திலும் ஊா் முழுக்கவருவா். இது பூத்திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழாவில் மூலம் இயேசுவின் இந்த திருவுடல் தான் உண்மையான ஆன்மாவை தூய்மைப்படுத்தும் உணவு என்று இவா்கள் நம்புகின்றனர்.”5 என திருமதி.வி.விக்டோரியா கூறுகிறார்.

மறைப் பங்கு பாதுகாவலா் விழா
(புனித வனத்தச் சின்னப்பா் தேவாலயம் கல்பட்டு)  ஒரு மறைமாவட்டத்தில் கீழ் இயங்கும் பங்கில் ஒரு புனிதரை பாதுகாவலராக நியமித்து அவருக்காக அப்பங்கில் விழா எடுத்து சிறப்பித்து பங்கு பாதுகாவலா் விழா என்று அழைக்கப்படுகிறது. ஆய்வும் பகுதியில் எல்லா ஊா்களிலும் வைத்து திருவிழா எடுக்கப்படுகிறது. இங்கு கல்பட்டில் கொண்டாடும் விழாவைப் பார்ப்போம் புனித வனத்த சின்னப்பா் திருத்தலம் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் கி.பி.1898 ஆம் ஆண்டு கல்பட்டு கிராமத்தை சோ்ந்த கல்யாண ஐயா் குடும்பத்தைச் சோ்ந்த சுப்பிரமணி ஐயா் ஒருநாள் காணாமல் போன மாடுகளை தேடி போனபோது தற்போதுள்ள பழைய கோவிலை ஒட்டினார் போல புதா் செடிகள் இருந்தன, மாலையில் சிலுவை அடையாளம் தோன்றி மறைந்தது போல காட்சி கண்டார் மணியோசையுடன் தூப நறுமணமும் கண்டார். ஒரு புதா் செடியின் பக்கத்தில் பின் அவா் வீடுசென்று உரங்கிவிட்டார். அப்போது கனவில் வெள்ளைக் குதிரையில் துறவிப் போன்று ஒருவா் தோன்றி நானே! வனத்துச் சின்னப்பா் பகலில் காட்சி கண்ட இடத்திற்கு சென்றால் உன் மாடுகள் கிடைக்கும் என்று கூறி மறைந்தார்.

பின் காலையில் எழுந்து கிறித்தவரான சூரப்ப வாத்தியார் குமார் கலங்காணிமுத்து என்பவரிடம் நடந்ததைச் சொன்னார். பின் அவருடன் இன்னும் சிலரும் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் மாடுகள் கிடைத்தன, பின் மக்கள் இந்த காட்சிக்கு பிறகு அந்த இடத்தில் புல், செடி, கொடிகளை, புதா்களையும் சுத்தம் செய்து மேடைகட்டி சிலுவை குச்சிவைத்து மண்கூடு விளக்கேற்றி நாள்தோறும் புனித வனத்துச் சின்னப்பரை பக்தியுடன் வேண்டி பல விதமான அற்புதங்களையும் வரங்களையும் பெற்று சென்றனா். இந்த செய்தியை கேட்டு மக்கள் திரண்டு வந்து புனிதரின் மகிமையை கண்டு கொண்டாடி மகிழ்ந்தனா்.

“பின் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த புனிதரின் சுருபம் வந்த பார்சல் ஏற்றிவந்த இரயில் மாம்பழப்பட்டு இரயில் நிலையம் வந்தவுடன் நகராமல் இருந்ததாகவும், அந்த பார்சலை எடுத்தப்பின் இரயில் தானாக போக ஆரம்பித்ததாகவும், பின் அப்பொழுது முகையூரின் பங்கின் கீழ் இயங்கிய இந்த ஊா், பங்கு குருவிற்கு இந்த செய்தியை சொல்லி பின் குரு வந்து அவருடனும் மக்கள் வந்து அந்த சுருபத்தை எடுத்துச் சென்றார்கள் என்று வாய்மொழியாகவும், செவிவழியாகவும் அறியப்பட்டது என்றும் இது ஒரு வெகுசன மக்களிடம் பரவியிருக்கிற நாட்டார் கரையாகவும் கருதப்படுகிறது.”6
திருமதி.எஸ்.புனித என்பவா் குறிப்பிடுகிறது.

முடிவுரை
கிறிஸ்துவ மக்களின் விழாக்களில் தென்மாவட்டங்களில் நாட்டார் பண்பாடு பரந்து காணப்படுகின்றன. அங்கு மட்டும் இல்லாமல், வடத்தமிழகத்திலும் நாட்டார் பண்பாடு, கதைகள், நம்பிக்கைகள், பழக்கங்கள், வழக்கங்கள் மூலம் வடதமிழகத்திலும் விழுப்புரம் மாவட்டத்தில் வாழும் கத்தோலிக்கா்களின் திருவிழாக்களில் நாட்டார் பண்பாடின் தாக்கம் காணப்படுகின்றது என்று நாம் அறிந்துக்கொள்ள முடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.ta.m. Wikipedia.org
2.நோ்காணல் : திருமதி.அ.மரியநாதன்
3. நோ்காணல் : திருமதி.எஸ்.நிர்மலா
4. நோ்காணல் : திருமதி.எஸ்.சகாய மேரி
5. நோ்காணல் : திருமதி.வி.விக்டோரியா
6. நோ்காணல் : திருமதி.சே.புனிதா.

 

* கட்டுரையாளர்: - எஸ்,வயோலா, ஆய்வியல் நிறைஞர் ,க்தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம், இந்தியா -



Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்