இலங்கை ஆட்சியாளரின் அதிகாரத்தில் “நல்லிணக்கம்’’ ஒரு கபடம் சாட்சியமளிக்கும் - சண்முகதாசனும், பொன்னம்பலமும், செல்வநாயமும்
“அரசியலை அதன் தோற்றத்தில் அல்ல, அதன் உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற மேதமைமிக்க கூற்று ஒன்று உண்டு. கொலைக் களத்திற்கு கருணை இல்லம் என்று பெயரிடுவார்கள். சித்தரவதை முகாமிற்கு அன்பு மாடம் என்று பெயரிடுவார்கள். சிறைச்சாலைக்கு தர்மசாலை என்று பெயரிடுவார்கள். என்பதையொத்த தீர்க்கதரிசனம் 1940களின் பிற்பகுதியில் உரைக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக ஜோர்ஜ் ஓவல் எழுதிய “1984” என்ற தலைப்பிலான கருத்துருவ நாவல் இதற்கு சிறந்த உதாரணம். இந்தவகையில் தமிழின அழிப்பிற்கு “நல்லிணக்கம்” என்று பெயரிட்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இலங்கை அரசியலில் இலங்கையர் தேசியவாதம், இனஐக்கியம், நல்லிணக்கம் என்பன தோல்வி அடைந்துவிட்டமைக்கான வரலாற்றுச் சின்னமாக எஸ். ஹன்டி பேரின்பநாயகம் விளங்குகிறார். காலனிய ஆதிக்க எதிர்ப்பு, இலங்கையர் தேசியவாதம், பூரண பொறுப்பாட்சி, சமூக சமத்துவம் என்பன இவர் முன்வைத்த அரசியல் கொள்கைகளாகும். 1931ஆம் நடைமுறைக்கு வந்த டெனாமூர் அரசியல் யாப்பு மேற்படி கூறப்பட்டதான பூரண பொறுப்பாட்சியை வழங்கவில்லை என்று கூறி அந்த யாப்பின் கீழான முதலாவது பொதுத் தேர்தலை (1931) முன்னின்று பகிஷ்கரித்த முன்னணித் தலைவர்களில் எஸ். ஹன்டி பேரின்பநாயகம் முதன்மையானவர்.
இத்தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றிய அழைப்பிற்கு அப்போது தென்னிலைங்கையில் காணப்பட்ட அனைத்து முன்னணிச் சிங்களத் தலைவர்களும் வரவேற்பும் ஆதரவும் அளித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாண குடாநாட்டின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் வெற்றிகரமாக பகிஷ்கரிக்கப்பட்ட போது அதில் எந்தொரு சிங்களத் தலைவரும் தமது பகுதிகளில் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவில்லை. ஆனால் அக்காலத்தில் பகிஷ்கரிப்பு பற்றி சிங்களத் தலைவர்கள் வரவேற்று வாழ்த்தத் தவறவில்லை. குறிப்பாக அப்போது மிகப்பெயர் பெற்ற சிங்கள அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு. பிலிப் குணவர்த்தன லண்டனில் இருந்து Searchlight, 20-27.6.1931 என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்தது.



‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.
தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஆனந்த விகடனின் தொலைக்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரை ஊழல் ராணி என்றும், கொள்ளைக்காரி என்றும் ஆவேசமாகத்திட்டித்தீர்க்கும் காணொளியினை யு டியூப்பில் கண்டேன்.
தனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும் இலக்கியத்தையும் சிறிய ஆய்வில் ஒப்பிடுவோம்.
பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய உடலை கட்டிப் பிடித்து முத்தமிட எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் விரைவில் பூரண குணம் பெற்று வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் மாரடைப்பினால் அவர் மறைந்த செய்தியினை அப்பலோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. தமிழகத்தின் ஏன் இந்தியாவின் வசீகரமான மக்களின் மனங்கவர்ந்த அரசியல் தலைவர்களிலொருவராக அவர் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார். தமிழகத்தின் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுச்சிறப்பும் அவருக்குண்டு. ஆழ்ந்த வாசிப்பும், பன்மொழி அறிவும் மிக்கவராக விளங்கியவர் ஜெயலலிதா. இவர் எழுத்தாளர், பத்திரிகையாளரும் கூட. கலையுலகைப் பொறுத்தவரையில் சிறந்த நடிகை மட்டுமல்லர் சிறந்த நாட்டியக் கலைஞராகவும் விளங்கியவர்
ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக் காலகட்டத்தில் இலங்கை அரசுடனான முரண்பாடுகளினால், அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளினால் மற்றும் அந்நிய ஆதிக்க சக்திகளுக்குகிடையிலான முரண்பாடுகளினால் பலியாகிய அனைத்துப்போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்வோம். சிறைகளில் வாடும் அனைவரையும் நினைவு கூர்வோம். நடைபெற்ற போராட்டச்செயற்பாடுகள் அனைத்தையும் சுய விமர்சனம் செய்வோம். முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக்காமல் , நட்புரீதியில் இனியாவது கையாள்வோம். பிரித்தாளும் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் அடக்கு, ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் அனைத்துப்பிரிவு மக்களுடனும் நிபந்தனையற்ற கலந்துரையாடல்களை மேற்கொள்வோம். எதிர்கால சுபீட்சத்துக்கு அடிப்படையான செயற்பாடுகள் இவை.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









