முல்லை அமுதன்ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை. ஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும். குறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை. கோ.றஞ்சகுமாரின் 'மோகவாசல்' தொகுப்பு மீள் பிரசுரம் பெற்றிருந்தாலும் அதில் அவரின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அதற்காக வேறு யாரும் எழுதவில்லை என்பதல்ல. சிறுகதைகளை கனதியாக எழுதுகிற பலரும் இருக்கிறார்கள் தான்.

தமிழ்க் கதைஞர்வட்டம் காலாண்டுகளில் வெளிவந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சிறப்புச் செய்வதும், ஞானம் சஞ்சிகையூடாக சிறுகதைப் போட்டிகள் நடாத்தப் பட்டும் வருவது நல்ல பயனைத் தந்துள்ளதை மறுக்க முடியாது. இங்கிலாந்திலிருந்து 'பூபாளராகங்கள்' நிர்வாகிகளால் வருடா வருடம் நடத்தப்பட்ட சிறுகதைகள் பலவற்றைச் சொல்லி நின்றன. 'புதினம்' பத்திரிகையினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் அதிகமாக நல்ல சிறுகதைகளே வந்து பரிசுக்குழுவினரை வியக்கவும் வைத்தது.

அலை பிறகு சிறுகதைகளுக்குப் பிறகு நல்ல சஞ்சிகையாக நாம் பார்த்த 'மூன்றாவது மனிதன்' இதழ் கணிசமான சிறுகதைகளைத் தந்தது எனலாம்.

சிரித்திரன், மல்லிகை, தீர்த்தக்கரை, புதுசு, நந்தலாலா, தாயகம், நான், செம்பருத்தி, ரோஜாமலர், விடிவு, துயரி, சரிநிகர், ஓலை, அகல், பெண், சிறகுகள், போது, சமாதானம், கீறல், கொழுந்து, நதி, விவேகி, கலைச்செல்வி, கலைமுகம், கிருதயுகம், பூரனி, மருதம், மறுமலர்ச்சி, கண், கலைக்குரிசில், மாற்றம், வசந்தம், புத்தொளி, யாழ், முத்தூர் முரசு, தாகம், கோணைத்தென்றல், தாரகை, வெளிச்சம், பூவரசு, படிகள், ஜீவநதி, கிருதயுகம், அம்பலம், புதிய தரிசனம், அஞ்சலி, அகிலம், இருக்கிறம், வியூகம், நதி, தோழி, உதயம், உள்ளம், கனவு, செங்கதிர், கிழக்கொளி, குமரன், திருப்பம், திசை புதிது, பூங்காவனம், பெருவெளி, புதுமை இலக்கியம் ,மறுகா, மலர், நவரோஜா, கலைமுகம், ஞானம், நங்கூரம், சமர், வாகை, மேகம், வசந்தம் ,அஞ்சலி , ஏகலைவன், திசைபுதிது, புதிய உலகம், பிரியநிலா, தொடர்பு, தொன்டன், களம், தடாகம், மின்விழி, சமாதானம், கலாவல்லி, மாணிக்கம் இப்படிப் பல சஞ்சிகைகளும், தினகரன், சுடர், வீரகேசரி, தினக்குரல், தினச்சுடர், சங்கமம், ஈழநாடு, ஈழமுரசு. நமது ஈழநாடு, ஈழநாதம் , உதயன், சஞ்சீவி, திசை, ஈழமணி, ஈழகேசரி, சுதந்திரன் எனப் பல பத்திரிகைககளும் சிறுகதைகளை பிரசுரித்து வளம் தந்தன எனலாம்.

புலம்பெயர் சஞ்சிகைகளாக அ.ஆ.இ, ஈழகேசரி, அம்மா, கமலம், கலப்பை, ஆதவன் எக்ஸில், காலம், மண்வாசம், நான்காவது பரிமாணம், உயிர்நிழல், உயிர்மெய், தமிழ் உலகம், தமிழர் தகவல், அலை ஓசை, மண், காகம், கற்பகம், மேகம், இனி, கலைவிளக்கு, கலைஓசை, இலண்டன் , சுடரொளி புலம், தேடல், கலைவிளக்கு, பாலம், பூவரசு, அக்னிக்குஞ்சு, மரபு, சுவடுகள், மௌனம், ஓசை, காற்றுவெளி, கதலி, தமிழ்உலகம், கண், இளைஞன், ஆனந்தி,

,பத்திரிகைகளாக புதினம், தாய்வீடு, வடலி, தமிழர் செந்தாமரை, நிருபம், ஈழமுரசு,, பாரிஸ்முரசு, நிலவரம், தமிழன் வழிகாட்டி, உதயன், ஈழநாடு (பாரிஸ்,கனடா)

கூடவே,

பிரதேச மட்டத்திலான இலக்கிய-சாகித்திய விழா மலர்கள், கல்லூரி-பாடசாலை-பல்கலைக்கழக விழா மலர்கள், தனியான- கழக தொகுப்புக்கள் என வெளி வந்த சிறுகதைகள் அதிகம் பேசின எனலாம். அண்ணளவாக ஆயிரக்கணக்கில் வெளிவந்தாலும் அரசியல், இனமுரண்பாடுகளினால் பலரிடம் சென்று சேர வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம்.

தனிமனித துயரம், அரசியல் சித்தாந்தம், இடபெயர்வு, இனநெருக்கடி, வறுமை, காதல், வர்க்க முரண்பாடு, சீதனக் கொடுமை எனப் பலவற்றை அழகாகவும் ஆணித்தரமாகவும் சொன்ன சிறுகதைகள் ஏராளம்.

இருள்வெளி, பத்மநாப ஐயர் தொகுத்த தொகுப்புக்கள், தேனகம், இளந்தளிர், விடுதலைபுலிகள் தொகுத்த முத்தமிழ் விழா மலர்கள், புலிகளின் குரல் வானொலியினர் தொகுத்த தொகுத்த மலர் இப்படி பலதையும் சொல்லலாம். எல்லாவற்றையும் ஒரு சேர பார்த்து இதுவரை நல்ல விமர்சனத்தை வைக்கவில்லை. இதுவே பல அசௌகரியங்களை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

திருகோணமலையில் ஈழத்து இலக்கியச் சோலை, கோணைத்தென்றல், அம்மா பதிப்பகம், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், கல்கின்னை தமிழ் மன்றம் போன்றனவும் கணிசமான நூல்களை வெளியிட்டுள்ளன

புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் பொ.கருணாகரமூர்த்தி, விமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன், அ.முத்துலிங்கம், இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ் போன்றவர்களின் சிறுகதைகள் அதிகம் பேசப்பட்டன. எனினும் 'மண்' சிவராஜா, இந்துமகேஷ், வண்ணைதெய்வம், தேவகாந்தன், எம்,ரி.செல்வராஜா, கல்லாறு.சதீஷ், தமிழ்ப்பிரியா, களவாஞ்சிக்குடி.யோகன், பாரதிபாலன், லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி, குரு அரவிந்தன், மா.கி.கிரிஸ்டியன், த.சு.மணியம், கௌசல்யா.சொர்ணலிங்கம், சாந்தினி.வரதராஜன், அகில், வி.ரி.இளங்கோவன், உதயணன், சிவராஜா(ஜேர்மனி, ஹேமா, ராகினி.பாஸ்கரன், இளைய அப்துல்லா, ரமேஷ் சிவரூபன், நவஜோதி. யோகரத்தினம், இரா.தணிகாசலம், ந.கிருஷ்ணசிங்கம், கோவிலூர்.செல்வராஜன், மாதுமை, லெ.முருகபூபதி, சாரங்கா, விக்கி.நவரத்தினம், டானியல்ஜீவா, சந்திரா.ரவீந்திரன், சந்திரவதனா.செல்வகுமாரன், சாந்தி.ரமேஷ் வவுனியன், விக்னா.பாகியநாதன் போன்ற பலரின் சிறுகதைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கதைக்களம், பாத்திரத் தேர்ந்தெடுப்பு, மொழியின் ஆளுமை வளம் சற்று தூக்கலாகவே கதைகளில் தென்படுவதை உணரலாம். 83இன் பின்னரான சிறுகதை எழுத்தாளர்களின் வருகை அபரிமிதமானதாகவே உள்ளது. வாய்ப்பும் அவர்களுக்கு அமைந்திருக்கிறது.

மென்போக்குக் கொண்ட கதையாளர்களாக நாம் நினைத்திருக்கும் இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்திலிங்கம் இவர்களுக்குப் பிற்பாடு கல்வியாளர்களாக முகிழ்த்த பவானி.ஆழ்வாப்பிள்ளை, செம்பியன்.செல்வன், செ.யோகநாதன், நவசோதி, செங்கைஆழியான், யோ.பெனடிக்பாலன், சொக்கன் என்று பலரைப் பட்டியல் இடலாம். பிறகு சாதி, மனித முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்து எழுத முற்பட்ட டானியல் ,என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா, அ.செ.மு, கே.கணேஷ், என்.எஸ்.எம்.ராமையா, தெணியான், அகஸ்தியர், இ.நாகராஜன், மயிலிட்டி.ராஜதுரை, ஞானரதன், நந்தி, சொக்கன், அ.யேசுராஜா, டானியல்.அன்ரனி, மதிவாணன் (ரத்தினசபாபதி) வை.அஹ்மத், நந்தினி.சேவியர், இளையவன், சுதாராஜ், தெளிவத்தை.ஜோசேப், சசி பாரதி, உதயணன், மாத்தளை.சோமு, சிவனு.மனோகரன், மு.சிவலிங்கம், அப்பச்சி.மகாலிங்கம், சு.வே, அன்புமணி, ஆரையம்பதி. நவம், திருமலை.சுந்தா, புத்தொளி, கே.வி.நடராஜன், மு.பொன்னம்பலம், வளவை.வளவன், சு.மகேந்திரன், மதுபாலன், மருதூர் வாணன், சோமகாந்தன், கெக்கிராவை.சஹானா, ந.பாலேஸ்வரி, கனக.செந்திநாதன், ராணி.சீதரன், நகுலன், நீர்கொழும்பூர்.முத்துலிங்கம், முகில்வாணன், மருதூர்க்கொத்தன் த.மலர்ச்செல்வன், ஆரையம்பதி.தங்கராஜா என்று பலரும் அடங்குவர். நல்ல கதைகளைத் தந்த வடகோவை.வரதராஜன், சௌமினி போன்றோர் எழுதாமல் இருப்பதும்,தமது சிறுகதைகளை தொகுப்பாகத் தராமல் இருப்பதும் நமது துரதிஷ்டமே. ஒரு கதை மட்டும் எழுதியவர்களும் உண்டு. கணிசமாதும், காத்திரமானதுமான கதைகளை சண்முகம் சிவலிங்கம் தந்திருந்தாலும் கவிஞராகவே தெரிந்திருக்கிறார். புதியவர்களில் ரிஷான் ஷரிஃப், இப்னுஅஸ்மத் போன்றோர் தமிழுக்கு மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் தந்துள்ளனர்.இன்னும் பலர் விடுபட்டிருக்கலாம்

எஸ்.பொ. தனித்தே நின்றார்.

வடக்கு கிழக்கு மக்களின் அவலத்தை விடவும் அதிகமான சுமைகளை சுமந்த மக்களின் துன்பியலை எழுதியவர்கள் பலர்.

ஈழத்தில் தொகுக்கப்பட்ட தொகுப்புக்களில் கலை ஒளி முத்தையாபிள்ளை ஞாபகார்த்த போட்டிச் சிறுகதைகளின் தொகுப்பு, அகஸ்தியர் நினைவுச் சிறுகதைப் போட்டிச் சிறுகதைகளின் (2001) தொகுப்பு, செல்வகுமார் தொகுத்து மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட இரு தொகுதிகள், செங்கை ஆழியான் தொகுத்த மறுமலர்ச்சி சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், மல்லிகைச் சிறுகதைகள், ஞானம் போட்டிச் சிறுகதைகள் மலையகச் சிறுகதைகளின் தொகுப்பு இப்படிப் பலதை உதாரணம் காட்டலாம்.

இலங்கைக் கலைகழகம் 1998 இல் வெளியிட்ட 'சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள்' நல்லதொரு தொகுப்பு. செங்கைஆழியான் அண்மையில் தொகுத்த 'முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள் (2010) நல்லதொரு தொகுப்பாகும்.

செ.யோகநாதன் தொகுத்த இரண்டு தொகுப்புகள் (வெள்ளிப் பாதரசம், தோட்டக்காட்டினிலே) எஸ்.பொ. தொகுத்த 'பனியும் பனையும் நல்ல தொகுப்பாக இன்றும் பேசப் படுகின்றன.

மு.நித்தியானந்தன் வைகறை வெளியிட்டகத்தின்(1980) மூலம் மலையக எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வெளி யிட்டிருந்தார். மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 80 களில் 'தோட்டக் காட்டினிலே' தொகுப்பையும், ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 89இல் 'தேசம் தாண்டிய நதிகள்' போன்ற தொகுப்புகளும், நெதர்லாந்திலிருந்து வெளிவந்த அ.ஆ.இ தொகுத்த (1993) சிறுகதைகளும், கனடாவிலிருந்த கே.நவம் தொகுத்த 'உள்ளும் புறமும்' தொகுப்பும்(1991) கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளியிட்ட 'அரும்பு' (2000)தொகுப்பும் வன்னியில் கப்டன். வானதி வெளியீடுகளும் வீரகேசரி பவள விழா சிறுகதைக் களஞ்சியம் தொகுப்பும், இரத்தின வேலோன் தொகுத்த புலோலியூர் சொல்லும் கதைகள் (2002) தொகுப்பும், துரைவி வெளியீடுகளும் (1997) எமக்குத் தந்த கதைகளை சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது.( துரைவியின் மறைவு ஈழத்து எழுத்தாளர்களுக்கு பாரிய இழப்பாகும்)

கலைச்செல்வி. சிற்பி தொகுத்த ஈழத்துச் சிறுகதைகள்-(1958) தொகுப்பையும் மறக்க முடியாது. மன உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்த கதைகள் அடங்கிய தொகுதியாகும். ஆங்காங்கே நண்பர்கள் இணைந்தும் தனித்தும் (லெ.முருகபூபதி, ஓ.கே.குணநாதன், புரட்சிபாலன், புண்ணியாமீன் எனப் பலர்) சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவற்றை தொகுத்து நோக்கின் ஈழத்தின் சிறுகதைகளின் தன்மை பற்றி உணர முடியும்.

கதைக்களம், கதைக்கரு, பாத்திரச் சேர்க்கை சிறுகதையைத் தீர்மானிக்கின்றன. அளவில் அல்லது பக்கங்களின் வரையறை இல்லை. எனினும் பொதுவான சிறுகதைப் பண்புகளைக் கொண்டிருப்பின் வாசகரின் கணிப்பைப் பெறும்.

இங்குள்ள பிரச்சனை என்னவெனில் விமர்சகர்களின் பார்வையில் படாதவைகள் தரம் பிரிக்கப் படமாட்டாதா என்பதே பலரின் வருத்தமுமாகும். எமது ஈழத்தின் காட்சி மாற்றம் காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, குமுதம், கணையாழி, ஆனந்தவிகடன், யுகமாயினி, உயிரோசை, வல்லினம், செம்பருத்தி, இனிய நந்தவனம் என நீண்ட வரிசை கொண்ட தமிழக, மலேசிய இதழ்கள் நமது சிறுகதைகளை பிரசுரித்து தமக்கும் நமக்குமான இலக்கியப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றன. ஒரு வழிப் பாதையூடாக தமிழகத்தில் கால் ஊன்ற சிரமப்பட்ட, அடைப்புக் குறி தேவை எனவும் விமர்சிக்கப்பட்ட நம்மவரின் கதைகள் இலகுவாக உலா வருவதும் எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கையை தருவதாகவும் உணர்கிறோம். புதியவர்களை மழுங்கடிக்கும் முயற்சியும் இடம் பெறக்கூடாது.


தற்போது கவிதை போல சிறுகதைகள் எழுதுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம். இழப்புகளை அதிகம் சந்திக்கிறார்கள்(காதல் உட்பட). படித்த மலையக வாலிபர்களின் வருகை அவர்களின் பிரச்சினைகளை லாவகமாக சொல்லி பலரிடம் கொண்டு செல்கிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் பல சிறுகதைகள் வெளி வந்தன. தாமரைச் செல்வி, முல்லைக் கோணேஸ், இணுவையூர். சிதம்பர. திருச்செந்திநாதன், ஆதிலட்சுமி. சிவகுமார், மலைமகள், மலரன்னை எனப் பலர் குறிப்பிடத் தக்கவர்கள்.

வெளிச்சம் சஞ்சிகை கணிசமான பங்களிப்பைச் செய்திருந்தது. வெளிச்சம் சிறுகதைகளின் தொகுப்பு (1996)தமிழ்நாட்டிலும் மீள்பிரசுரம் கண்டது. அதைப் போலவே ஈழத்து இலக்கியத்தின் பால் அதிக அக்கறை கொண்ட கலாச்சார உத்தியோகத்தர்களின் முன்னெடுப்புகளால் மாவட்ட பிரதேச சபைகள், வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், யாழ் இலக்கியவட்டம், தேசிய கலை இலக்கியப் பேரவை, முற்போக்கு கலை இலக்கியப்பேரவை என பல அமைப்புகள் சிறுகதை ஆர்வலர்களின் ஆவலைப் பூர்த்தி செய்து வருகின்றனர். அவுஸ்திரேலியா/விக்டோரியா இலங்கைத் தமிழச் சங்கம் (1996) வெளியிட்ட 'புலம்பெயர்ந்த பூக்கள்' போட்டிச் சிறுகதைகள் அடங்கிய தொகுதியில் பலரும் எழுதியுள்ளனர்.

உதய தாரகையின் ஆசிரியர் ஆர்னோல்ட்.சதாசிவம்பிள்ளையின் (1875) சிறுகதைகளுடன் ஈழத்துச் சிறுகதை முயற்சிகள் ஆரம்பித்தன எனக் கொண்டாலும் இலங்கையர்கோன் போன்றோரே தொடர்ச்சியாக எழுதி பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தனர் என்பர் அறிஞர்கள். அவர்களின் கல்வியும் அக,புற அறிவு ஜீவிகளின் தொடர்புமே எழுத வைத்தது. தற்போது போல எழுத்தில் தீவிரம் இல்லை. நவீன பரிச்சயமும் இல்லாததினால் தங்களை வளர்த்துக் கொள்ளும் வட்டம் சிறியதாகவே இருந்தது.

காவலூர்.ஜெகநாதன், தமிழ்ப்ரியா, தாமரைச் செல்வி, வடகோவை வரதராஜன், ஐ.சாந்தன், செங்கை ஆழியான், செ.யோகநாதன், சோ.இராமேஸ்வரன், தி.ஞானசேகரன், தெளிவத்தை.ஜோசேப் அதிக சிறுகதைகளை எழுதுள்ளனர்.

சோபாஷக்தி, விமல்.குழந்தைவேல், பொ.கருணாகரமூர்த்தி, இராஜேஸ்வரி.பாலசுப்ரமணியம், இரவி.அருணாசலம், குமார்.மூர்த்தி, தேவகாந்தன் புலம்பெயர் வாழ்வியல் பிறழ்வுகள், சமூக சிந்தனை இன்னோரன்ன பிற சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதுபவர்கள். அகில் சில போட்டி கதைகள் எழுதி உள்ளார். லெ.முருகபூபதி, வ.ந.கிரிதரன், களவாஞ்சிகுடி.யோகன் போன்றோர் வாசகர் மனதைத் தொடும் படி எழுதி வருகின்றனர். இப்படி பலரை உதாரணம் காட்டலாம்.

நிறைவாக,

ஈழத்துக் கவிதைகள் போல சிறுகதைகளும் சிறந்த முறையில் வளர்ந்து வருவது கண்கூடு. ஈழத்துச் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து முழுமையான தொகுப்பாக்கும் பட்சத்திலும், அவற்றை பிற மொழிகளில் மொழி பெயர்ப்பதன் ஊடாகவும் புற வெளிச்சங்களையும் உள்வாங்க முடியும். திரு.பத்மநாப ஐயர், பேராசிரியர். செல்வா.கனகநாயகம் போன்றோர் ஆத்மார்த்தமாக சில தொகுப்பு , மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறர்கள். இது வரை இவை தான் ஈழத்து சிறுகதைகள் என சிலரை மட்டுமே குறிப்பிடுகின்ற தமிழக விமர்சகர்களைத் தொடவும் செய்யலாம். தனியே வரப்பெற்றோம் என்று போடுவதற்காக மட்டுமில்லாமல் காத்திரமான விமர்சனங்களுக்ககாவும் இரண்டு பிரதிகளை பெற இனிமேலாவது சஞ்சிகைகள், பத்திரிகைகள் முயலவேண்டும். இவை எதிர்லாலத்தில் நல்ல பயனை நம்மவர்க்குப் பெற்றுத் தரும்

கூடவே,

நமக்கிடையேயான தடைகள் எதுவென உணர்ந்து அவற்றை உடைத்தபடி முன்னேற நமது படைப்பாளர்கள் நகரவேண்டும். அதுவே ஆரோக்கியமான தடத்தை பதிக்கும் என நம்பலாம்.

20.03.2011


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here