பதிவுகள் முகப்பு

அனைத்துலகப் பெண்கள் நாள் - 2025 - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
08 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

   

அனைத்துலக மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.

    இந்த 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் ‘‘ எல்லா பெண்களுக்கும் உரிமைகள், சமுத்துவம், அதிகாரம் அளிப்பதை விரைவில் செயல்படுத்துவதாகும்.’ இது  பாலினச் சமத்துவத்திற்காகச் சேர்ந்து துரிதமாகச் செயற்படலாம் என்பதை உணர்த்துகிறது. ஒருவர் சாதனையாளராக நிலைநிறுத்தி இருப்பதற்கு அதாவது ஒரு பெண்ணின் வெற்றிக்கு யாரோ ஒருவரின் உதவிக் குரல் அவருக்குப் பக்கபலமாக ஒலித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பம் வீட்டில் இருந்துதான் உருவாகியிருக்கிறது. குடும்பத்திலுள்ள தாயாக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம், சகோதரனாக இருக்கலாம், துணைவருடைய உதவியோ அல்லது மகனுடைய உந்துதல்தான் நிட்சயமாக இருந்திருக்கும்.

    அந்தவகையில் ஆண் பெண் சமத்துவத்தை உணந்து நாம் செயற்பட்டு இந்நாளை முன்னெடுப்பது பொருத்தமானது என் நம்புகின்றேன். பெண்களுக்கு ஏற்படும் வன்மங்கள், அநீதிகளுக்கு எதிராக கண்டனத்தை நாம் வழங்கவேண்டும். அது பெண்ணாக மட்டுமன்றி யாராக இருந்தாலும் பரவாயில்லை அதற்குக் குரல் கொடுக்கவேண்டும்.

     பெண்கள் தினத்தைக் கொண்டாடும் இத்தினதில் நாம் பெண்களாகப் பிறந்ததை எண்ணிப் பெருமிதத்தோடு இருக்கின்றோம்.

     ‘மங்கையராயப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
     செய்திடல் வேண்டுமம்மா’

     என்ற கவிமணி சொன்ன கூற்றுக்கு இணங்க நாம் எல்லோரும் பெருமிதமடைய வேண்டும். பெண் என்பவள் பொறுமையின் சிகரம் என்று கூறுவார்கள். ஒரு தாய் எவ்வளவு பொறுமையைக் கடைப்பிடிக்கிறாள் என்பதை நாம் குறிப்பாக அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு பெண்ணும் அந்தத்தாய்மை நிலையை அடையும்போது அது தானாகவே உருவாகி விடுகின்றது. எனவே இளையவர்களுக்கு பொறுமையில்லை என்று கூறவதைவிட அவர்கள் அந்த நிலைக்கு வரும்போது அவர்களிடம் இவை இயல்பாகவே வந்துவிடும். இந்த வேளையில் ஒவ்வொரு பெண்ணுக்கும்; மகளிர்தின வாழ்த்துக்களைக் கூற விரும்புகின்றேன்.

மேலும் படிக்க ...

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
08 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்துக்கூடாக, சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கலாசாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை உலகளாவியரீதியில் கொண்டாடும் ஒரு கொண்டாட்டமாக இது இருப்பதுடன், பாலின சமத்துவத்துவத்துக்கான செயல்பாடுகளுக்குரிய ஓர் அறைகூவலாகவும் அமைந்திருக்கிறது.

முதலாவது மகளிர் தினம், மார்ச் 19, 1911 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிற்சிலாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டிருந்தது. அன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்களும் ஆண்களும் தங்கள் ஆதரவைக் காட்டுவதற்காக பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். பின்னர், மார்ச் 8ம் திகதியைச் சர்வதேச மகளிர் தினமாக, 1975 இல் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. தற்போது கியூபா, உக்ரேயன், ரஷ்யா, போன்ற 20 நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கும் உரிமை, கற்கும் உரிமை என்பன உள்ளடங்கலான பெண்களின் உரிமைகளுக்காக பெண்ணியவாதிகள் பலர் போராடிய போராட்டங்களின் விளைவாகவே பெண்கள் இன்று ஆண்களின் தங்கியிராமல் தங்களின் காலில் நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் பெண்கள் செல்லவேண்டிய தூரமும், கடக்கவேண்டிய தடைகளும் இன்னும் அதிகமாகவே உள்ளன. அதற்கான மாற்றங்களை உலகளாவியரீதியில் தூண்டுவதும், சமத்துவக் கருத்துக்களைப் பரவலாகத் தெரியப்படுத்துவதும், பாலின சமத்துவத்திற்கான அவசரத் தேவையை முன்னிலைப்படுத்துவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதின் இன்னுமொரு முக்கிய நோக்கமாகும்.

இவ்வருடச் சர்வதேச மகளிர் தினத்துக்கான கருப்பொருள் 'Accelerate Action/ செயலைத் துரிதப்படுத்தல்' ஆகும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தலைமைத்துவத்தில் பெண்களின் முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கான உத்திகளில் இது கவனம் செலுத்துகிறது. அமைப்புரீதியான தடைகளை அகற்றல், வகைமாதிரிகளைச் சவாலுக்கு உள்ளாக்கல், பாலின சமத்துவத்தை நோக்கி விரைவாக முன்னேறல் ஆகியவற்றுக்கான அவசரத்தை, ‘செயலைத் துரிதப்படுத்தல்’ வலியுறுத்துகிறது. உலகம்பூராவுமுள்ள பெண்களுக்கு உறுதியான, நீடித்த நல்விளைவுகளை வழங்கக்கூடிய உத்தி முறைகளை விரிவுபடுத்துதல், வளங்களை ஒதுக்குதல் மற்றும் முன்முயற்சிகளை ஆதரித்தல் ஆகியவற்றுக்கான உலகளாவிய அழைப்பாக இது உள்ளது. அதேவேளையில் Strength in every story என்பதே இந்த வருடத்துக்குரிய எங்கள் நாட்டின் கருப்பொருளாகும். இது, ஒவ்வொரு பெண்ணினதும் வாழ்க்கைக் கதையும் மீண்டெழும் தன்மைக்கான, தைரியத்துக்கான, மனவுறுதிக்கான சாட்சியமாக இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது.

மேலும் படிக்க ...

சிறுகதை: பைரவி கதை சொன்னாள் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
சிறுகதை
07 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI

மனதின் சாளரங்கள் திறப்பதற்கு  மாமனிதர்களின்  தத்துவங்கள்  உதவுவது போல,  சில வாசிப்புகளும் உதவுவதை அவள் அறிவாள். இறுகியிருந்த  எண்ணங்கள் சிட்டுக் குருவிகளைப்  போல  சிறகடித்துப் பறக்கவும் ,  இனிய சங்கீதம் எங்கும் நிறைக்க   வல்லதும்  வாசிப்பு என்பதை மறுக்க முடியாது.

அறிதலுக்கும் விவாதத்திற்குமுரிய பல விடயங்களை அலசும் அந்தப் புத்தகத்தை  வாசித்து  முடித்த திருப்தியுடன் அவள் விழிகளை  மூடித்  தன் அகவுலகில் நுழைந்தாள். அங்குதான் அவளது மனக்குதிரைகள் லாயத்தில் கட்டப்பட்டிருக்கும்.

அவள் அங்கு செல்லும் வரை மிக அமைதியாக இருக்கும் அவை , அகவுலகில் நுழைந்ததும் மட்டற்ற வேகம்கொள்ளும். சில சமயங்களில் கட்டுக்கடங்காது.

அவளுடைய மனக் குதிரைகளின் இயல்பு பற்றி முதலில் ஒரு அறிமுகம் தர வேண்டும்.

உறுத்தலான  பல  விடயங்களைக்  கலந்தாலோசிப்பதற்கும் சிக்கலான  உள்ளக விவாதங்களை நடத்துவதற்கும்  அவை மிகமிக  உறுதுணையானவை.   இக்கட்டான சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள பக்கவாட்டுச் சிந்தனைகளைத் தந்து அவளுடன் கூடவே பயணிப்பவை. வேகமான மாற்றுவழிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுப்பதற்கு எப்போதும் துணை நிற்பவை.

மற்றவர்களின் கண்களின் ஊடாக அவர்களது மனதிற்குள் கணநேரத்தில் ஊடுருவும் வல்லமை  கொண்டவையென்பதால் அவர்களின் உள்ளுணர்வை அறிவதற்கு எப்போதும் அவளுக்கு உதவுகின்றன. முரண் கருத்துடையவர்களிடம் வாதிடுவதற்கு உடனடியாகக்   காரணிகளைக் கண்டறிந்தும் தருகின்றன.

ஆனாலும் மிகமிக இறுக்கமான அமசடக்கான மனிதர்களை சில சமயங்களில் அவை எடைபோடத் தவறி  விடுகின்றன.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும்: மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல்  மிகுல்  டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra) எழுதிய் புகழ் பெற்ற ஸ்பானிஸ் மொழி நாவலான 'டொன் கியூடே அல்லது டொன் கியூடி' (Don Quixote) பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இரு பாகங்களை உள்ளடக்கிய நாவல் தமிழில் 'டான் குயிக்ஸாட்' என்னும் பெயரில் நற்றிணைப் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. நாவலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார் பேராசிரியர் சிவ முருகேசன்.

இந்நாவலைப் பற்றிய என் குறிப்பினை வாசிக்கையில் , குறிப்பாக  நீங்கள் இலங்கைத் தமிழராக இருக்கும் பட்சத்தில் , நிச்சயம் உங்களுக்கு ஒருவரின் நினைவு தோன்றலாம். அப்படித்தோன்றினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.

டொன் கியூடே நாவல் இலக்கியத்தில் சுவையான, மறக்க முடியாத கதா நாயகர்களில் ஒருவன். இந்நாவல் அவனது சாகசப்பயண அனுபவங்களை விபரிப்பது.

நாவலின் கதை  இதுதான்: டொன் கியூடே வாசிப்பதில் ஆர்வம் மிகுந்தவன். அவன் வீர தீரச் செயல்கள் மிகுந்த சாகசக் கதைகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவன். அவனது வாசிப்பின் விளைவாக அவன் தன்னை ஒரு சாகச வீரனாகக் கற்பனை செய்து கொள்கின்றான். உலகைக் காக்க வந்த ஒரு வீரனாக எண்ணிக்கொள்கின்றான். அந்த கற்பனை உலகையே அவன் உண்மையான உலகாக எண்ணி, நிசத்துக்கும் , நிழலுகுமிடையில் நிலவும் வேறுபாட்டினை உணராது செயற்படுகின்றான்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (23) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் : ஞாலத்தின் மாணப் பெரிது! - இந்து.லிங்கேஸ்-

விவரங்கள்
- இந்து.லிங்கேஸ்-
இலக்கியம்
06 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                           -  அமரர் ராஜேஸ்வரன் -

ஆழ் மனத்திரைக்குள் பதிந்திருக்கும் பக்கங்களைப்புரட்டிப் புரட்டி மறுபடியும் அப்புத்தகத்தை வாசிப்பதில் அத்தனை சுகம்!அதற்குள்தானே நிரம்பிக்கிடக்கின்றன அத்தனையாயிரம் கதைகள்?ஓடி ஓடி களைத்துப்போகும் வாழ்வெனும் வட்டத்திற்குள் அவற்றைப்பகிர்ந்திட எமக்குத்தான் நேரமில்லையே!எப்போதாவது முதுமைக்கு நரையழகாகும் பருவத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வாழ்வின் புதிய பயணத்தை ஆரம்பிக்கும்போதுதான் கதை சொல்லியாக இது கைகூடும் என்றால் அதுவும் ஆனந்தம்தான்!அதற்கும் அப்பால் ஞாபகங்களை கரைந்துவிடாது காத்திட பக்கங்களைப்புரட்டிப்பார்ப்பதும்கூட மனநலத்திற்கான ஆரோக்கியமும்கூட !

அம்மனத்திரைக்குள் பதிந்திட்ட இன்னொரு கதைதான் இது. எனக்கும்,என் நண்பர் கிரிக்குமான நட்பின் உயிர்ப்பு இது. வாழ்வில் எத்தனை நிகழ்வுகள் எதிர்பாராது வந்து போகின்றன. அதற்குள் எத்தனை தங்கி விடுகின்றன.எத்தனை நிலைத்து நிற்கின்றன? அப்படியென்றால்,எனக்கும் கிரிக்குமான நட்பு 50 வருடங்களையும்தாண்டி நிலைத்து நிற்கின்றது என்பதும் மகிழ்ச்சிதான்.எப்போது இணைந்தோம். இருவருக்குமான அறிமுகமோ அன்றி முதன்முதலாக பரிமாறிக்கொண்ட வார்த்தைகளோ நினைவிலில்லை. எந்த வருடம்,மாதம், நாள்,திகதி எதுவுமே ம்கூம்;ஒன்றுமே தெரியாது.நட்பு ஒன்றுதான் ஆணிவேராகி பலமாய் இன்றும் நிலைத்து நிற்கின்றது.இப்படித்தான் காதலும் சரி,ஆழமான நட்பும் சரி எதிர்பாராமல் உயிருக்குள் கலந்து மானுடத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றது. கிரியும் அப்படித்தான்.இந்த உறவுப்பாலத்தில் ஒன்றுணைந்து பயணித்தவர்கள் பலர்.தவிர,என் தம்பியும் கிரியுடன் இணைந்ததும் இன்னொரு சிறுகதை.

விடியலும் இருளும்போல
வெயிலும் மழையும்போல
வாழ்வில் இன்பம் துன்பம் எதுவாயினும்
வீட்டையும் தாண்டி இவற்றைச்சுமந்து கொண்டு
உயிர்நண்பனிடம் பகிர்ந்துவிட்டால்
அச்சுமைகள் ஏனோ கொஞ்சமாவது குறைந்துவிடும்.
இது நியதி.
அப்படித்தான் என் சுமைகளை என் நண்பன் சுமந்தான்.
அவனின் மைத்துனனான கிரிக்கு அது கடத்தப்பட்டது.
புரிந்துணர்வும்,கெட்டித்தனமும் கொண்ட
கிரியிடமிருந்து நல்லதொரு முடிவு வந்தது.
இதுதான் இச்சிறுகதைக்கான
முன்னுரை என்றும் எழுதலாம்.

மேலும் படிக்க ...

காதலும் இன்னபிறவும்! - ராஜேஷ்வர் (சென்னை) -

விவரங்கள்
- ராஜேஷ்வர் (சென்னை) -
கவிதை
05 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இவர்களால்
சபிக்கப்பட்ட நிலத்திலும்
மலர்கிறது
ஈரம் தோய்ந்த
இரவுகளை உரியும்
இத்யாதிகள்

கசியும்
பின்னிரவின் பனித்துளியில்  
ஆல்கஹால் நிரப்பப்பட்டு
கணையம்
காதல் மொழிந்து தான்
கிடக்கிறது

மேலும் படிக்க ...

ரவி அல்லது கவிதைகள் இரண்டு!

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
05 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.  புத்தாயணப் புரிதல்.

பட்டுத்தான்
தெரிய
வேண்டியதாக
இருக்கிறது.
பறவைகளுக்கு
இலைகளின்
அருமை.
இறகுகளீன் பெருமை.

காலத்திடம்
இருக்கிறது
துளிர்ப்பதெல்லாம்
கவலைகளைக்
கடந்து.

துளிர்விடாத
போதிமரம்
பறவைகளுக்கானது
நம்பிக்கைகள்
வளர்க்க.

துளிர்த்த
போதிமரம்
இலைகளை
உதிர்க்கிறது
மனிதனுக்காக.

மேலும் படிக்க ...

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! - க. நவம் -

விவரங்கள்
- க. நவம் -
ஆய்வு
05 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம் அமைதி பெறுகின்றது. இனிமையான இசையை இரசிப்பதென்பது ஓர் அலாதியான அனுபவம்! இதனால்தான் “இசையில்லாத வாழ்க்கை இனிக்காது” என்று நீட்சேயும் – ”துன்பத்தைத் துடைப்பதற்கே இசை உண்டாக்கப்பட்டது” என்று ஷேக்ஸ்பியரும் சொல்லிச் சென்றார்கள் போலும்!

மேலும், இசையானது சிந்தனையைத் தூண்டவல்ல ஒரு சிறந்த சாதனமாகும். புறவயமான இன்பத்திலும் மேலாக, இசை அறிவின் ஓர் ஊடகமாகவும், ஆன்ம ஈடேற்றத்தின் சாதனமாகவும், அகவயமாகப் பயன் தரவல்லது. தியானம், முறுக்கேறிய உணர்வுகளிலிருந்து தளர்ந்து விடுபடுதல், மனதில் காட்சிப்படுத்தல் - மற்றும் ஞாபகசக்தி, ஒழுங்கு, ஒழுக்கம், உடலாரோக்கியம், கலை-கலாசார விழுமியங்கள் ஆகியவற்றை மேம்படுத்தல் - போன்ற பல்வேறு நன்மைகளையும் இசை தன்னகத்தே கொண்டது.

உலகில் வேறெந்த இனத்திற்குமே இல்லாத இசையுறவு தமிழினத்திற்குள்ளது. தாயின் வயிற்றில் கருக்கொண்டதும் நலங்குப் பாடல், மண்ணில் வந்து பிறந்ததும் தாலாட்டு என்று ஆரம்பித்து - குழந்தைப் பருவத்தில் நிலாப்பாடல், வாலிபப் பருவத்தில் வீரப்பாடல், காதற்பாடல், சற்று முதிர்ந்த பருவத்தில் ஆன்மீகப் பாடல் எனத் தொடர்ந்து, உயிர் பிரிந்த பின்னர் ஒப்பாரிப் பாடல் என்று வாழ்வியலின் அனைத்துப் பருவங்களுக்குமெனத் தமிழ்ப் பாடல்கள் உள்ளன. இது தமிழினத்திற்கு மட்டுமேயுள்ள தனித்துவமான இசை அடையாளம்.

உண்மையில், நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். நாம் நமது தாயின் கருப்பையில் இருந்தபோது, நமது கண்களால் எதையுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால் காதுகளால் அந்த இசையைத் தொடர்ந்து இரசித்துக்கொண்டு இருந்தோம். அது வெறொன்றுமல்ல, நமது தாயின் இதயத்துடிப்புத்தான். எப்போதுமே தாலாட்டுப்போல, அந்த இதயத் துடிப்பின் இசையில நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

மேலும் படிக்க ...

பகுத்தறிவு - சந்திரகெளரி சிவபாலன் -

விவரங்கள்
- சந்திரகெளரி சிவபாலன் -
இலக்கியம்
04 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று கட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் ஐந்து  அறிவு மிருகங்களா? என்று புரியாது போய்விடும். மிருகங்கள், பறவைகள் பலவற்றின் குணநலங்களை எடுத்தாராயும்போது அவையே தம் வாழ்வுக்குத் தேவையான அறிவு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தலையாட்டித் தொடரும் ஆட்டு மந்தைகள் போல் வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கம் என்றோ, ஊரோடு ஒத்தோடாவிட்டால், சமூகம் எம்மை ஒதுக்கிவிடும் என்றோ, ஆச்சரியமானதாக இருக்கின்றது என்றோ, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்றார்களே! அதில் ஏதோ உண்மை இருக்கும் என்றோ எதையும் நம்பிவிடக்கூடாது.

அன்றே உலகப்பொதுமறை தந்து முக்காலத்தையும் ஒன்றே முக்கால் வரிகளால் அளந்த வள்ளுவர் பகுத்தறிவு காடடிவிட்டார்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எவர் சொன்னாலும் அதன் உண்மைப்பொருளைக் காணவேண்டும் அதுவே அறிவு.

“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எந்தப்பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப்பொருளின் உண்மையான இயல்பை அறிவது அறிவு.

“யார் சொன்னார், எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்” என்று சாக்ரடீஸ் சொல்லியிருக்கின்றார்.

மேலும் படிக்க ...

அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முருகபூபதி எழுதிய யாதுமாகி ( பாகம் -02 ) மின்னூல் மெய்நிகரில் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
04 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | ZOOM Meeting ID: 897 1736 5517ss | Passcode: 737853

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ. முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி ( 02 ஆம் பாகம் ) மின்னூல் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் அமேசன் கிண்டிலில் வெளியாகிறது. இதன் வெளியீட்டு அரங்கு மார்ச் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் இடம்பெறும். கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாதுமாகி – முதலாம் பாகத்தின் மின்னூலை வெளியிட்டிருக்கும் முருகபூபதி, இந்த ஆண்டு மீண்டும், அதன் இரண்டாம் பாகத்தினை வெளியிடுகிறார். முதல் பாகத்தில் 28 பெண் ஆளுமைகள் இடம்பெற்றனர். குறிப்பிட்ட நூலை தற்போதும் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: `பறவைகள்’ நூல் அறிமுகம் - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
நூல் அறிமுகம்
04 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில் பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப் பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல், தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணி சஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.

பறவைகள்’ என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் கூடியன. புலம்பெயர் நாடுகளில் வெவ்வேறு இனம், மதம், கலாசாரம் கொண்ட பின்னணியில் வாழும் இருவர், ஒருவருக்கொருவர் துணை தேடும்போது ஏற்படும் சிக்கல் தன்மையை பறவைகள் சிறுகதை பிரதிபலிக்கின்றது. 'எனக்கொரு சினேகிதி’ சிறுகதையானது, காதல் என்பது இதுதான் என்று இலக்கணம் வகுக்கும் கதை. 'புளிமாங்காய்’ என்ற கதை மிகவும் சிறப்பாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. கனடா பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய 'நீங்காத நினைவுகள்’ என்ற தொகுதியில் இடம்பெற்ற கதை இது.

சிறுவர் சிறுகதைகளில் 'கனவு நினைவாக வேண்டும்’ என்ற சிறுவர் கதை ஒரு அறிவியல் கதை ஆகும். வேற்றுக்கிரக வாசிகளின் அன்ரனாக்களை - பூமியிலே இருக்கும் லேடி பேர்ட், நத்தை போன்றவற்றுடன் ஒப்பிடுகின்றது இந்தக் கதை. கதையை ஒரு கனவு என்று சொல்லாமல், இடையில் நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. 'மர்ம மாலை’ என்ற தொடர் சற்றே வித்தியாசமானது. பெயருக்கு ஏற்றவாறு அமேசன் காடுகளில் நடக்கும் தொடர் மர்மமாக இருந்தது.

மேலும் படிக்க ...

மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும்பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (3) - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
02 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒன்று

நான் ஒரு ஏதெனியன் அல்ல;
கிரேக்கனும் அல்ல;
ஆனால் உலகின் குடிமகன்.
- சோக்ரடீஸ்

கிரேக்க நாகரிகமும் தொடக்ககால மெய்யியலின் கருவூலமும் முதல் இயலில் துலக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவும் மேற்காசியாவும் இணையும் இடத்தில் கிரேக்கம் அமைந்துள்ளது. ஆரம்பகாலத்து கிரேக்க அரசியல் போக்குகளை நூலாசிரியர் வரலாற்று, சமூக அடிப்படையில் அலசியுள்ளார். அரசியல், சமூக மாற்றங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல், சமூக நடத்தைக்கோலங்களை எடுத்துரைக்கையில் பின்வருமாறு எழுதிச் செல்கின்றார்:

“நாட்டில் அன்றிருந்த பொருளாதாரச் சூழலில் ஏழைகளும் விவசாயிகளும் பெரும் கடன் சுமைகளுக்காளாகினர். கடனை அடைக்க முடியாதவர்கள் எஜமானர்களுக்குத் தம்மையே அடிமைகளாக விற்பனை செய்துகொண்டனர். இதற்கிடையில் விவசாயிகள், கைவினைஞர்கள், வணிகர்களைக் கொண்ட ஒரு நடுத்ததரப் பண்புகளைக்கொண்ட ஒரு வகுப்பும் உருவாகியிருந்தது. இவை, அசைவற்ற சித்திரங்கள் அல்ல. மக்கள் கிளர்ச்சிகளுக்கு ஆயத்தமாகி வந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வும் அரசியல் ரீதியான வேறுபாடுகளும் சமூகத்தில் ஒரு கொதிநிலையை உருவாக்கியிருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஏதென்சில் ஒரு புதிய அரசியல் மாற்றம் நிகழ்கின்றது. அரசியல் சமத்துவம், அரசியல் உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், நாட்டின் அரசியலில் மக்களின் பங்களிப்பு போன்ற மக்கள் நிலைப்பட்ட அரசியலுக் கான கோரிக்கைகள் வலுவடைகின்றன. இங்கிருந்துதான் ஜனநாயக அரசியல் தோற்றம் பெறுகிறது. அடிமைகளின் அவலம், எழைகளின் துயரம் என்ற கருத்துகளும் இதன் பின்னணியில் இருந்தன. இந்தக் காலத்தில் நடைபெற்ற அரசியல், சட்டச் சீர்திருத்த வரலாறுகளிலிருந்து இந்த உண்மைகளை நாம் பார்க்கிறோம்” (பக். 6),

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் தன்மேம்பாட்டுரை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி , உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி , உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
02 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று தன்மேம்பாட்டுரை அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் தன்மேம்பாட்டுரை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

தன்மேம்பாட்டுரை அணி

தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தன் மேம்பாட்டுரை என்னும் அணியாகும்.

“தான்தற் புகழ்வது தன் மேம் பாட்டுரை”
(தண்டியலங்காரம் 44)

1.வாலி, தாரையிடம் தன்னைத் தானே புகழ்தல்

வாலியை சுக்ரீவன் போருக்கு அறைகூவல் விடுத்தான். வாலியும் போருக்குக் கிளம்புகிறான். அப்போது தாரை, சுக்ரீவனுக்கு உதவியாக இராமன் வந்துள்ளான் என்பதை, நம் அன்புக்குரியவர்கள் கூறியதை வாலியிடம் கூறினாள். அதற்கு பதில் அளிக்கும் போது, வாலி மூன்று என்று அமைந்துள்ள அழிவற்ற பெரிய உலகங்களில் உள்ள உயிர்கள் யாவும் கருத்தால் ஒத்து ஒருங்கு சேர்ந்தவையாகி, எனக்குப் பகையாக வந்து எதிர்த்தாலும் அவை அனைத்தும் தோல்வியடையும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றையெல்லாம் கூறுகிறேன் கேட்பாயாக. மந்திரம் என்னும் பெரிய மலை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பு முடிவில்லாமல் கடையும் கயிறாகவும், திருமால் அந்த மத்தாகிய மந்திர மலை ஆழ்ந்து போகாது தாங்கிக் கொள்ளும் ஆமையான அடைக்கலாகவும், சந்திரன் மத்தாகிய மந்திர மலையை அணைத்து நிற்கும் தூணாகவும் விளங்க, அக்கயிற்றைப் பெருமிதத்துடன் ஒருபுறத்தில் இழுத்துக் கடைபவர் இந்திரன் முதலிய தெய்வங்களும், மறுபுறத்தில் கடைபவர் அத்தேவர்களுக்கு எதிரான அசுரர்களும் ஆவர்.

“ மந்தர நெடு வரை மத்து வாசுகி
அந்தம் இல் கடை கயிறு அடைக் கல் ஆழியான்
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர்”
(வாலி வதைப்படலம் 252)

அந்த மத்தாகிய மந்திர மலையைப் பெயர்த்து சுழலுமாறு இழுத்து வலிமை இல்லாத தன்மையரான தேவர்களும், அசுரர்களும் தளர்ச்சி அடைந்த நிலையைப் பார்த்து நான் அவர்களை எல்லாம் விலக்கி, அதைத் தயிறு கடைவது போலக் கடைந்து அவர்களுக்கு அமிர்தம் கிட்ட செய்தது நீ மறக்க கூடியதாகுமோ. (வாலி வதைப்படலம் 253)

மேலும் படிக்க ...

புற்றுநோய்க்கெதிரான பயணத்தில் - மருத்துவர் சியாமளா நடேசன் - தகவல்: நடேசன் -

விவரங்கள்
- தகவல்: நடேசன் -
நலந்தானா? நலந்தானா?
01 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புற்றுநோய்க்கெதிரான பயணத்தில் ..-  மருத்துவர் சியாமளா நடேசன்

https://www.youtube.com/watch?v=KTMbLXDAvZU

சிறுகதை: வழியறியும் பாதங்கள் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
01 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

வானத்தைக் கருமேகங்கள் முற்றாக ஆக்கிரமித்திருந்தன. மார்கழி மாதத்துக் குளிர் ஊசி துளைப்பதுபோல அவளைத் துளைத்தது. மழை நீர் குட்டைகளாக அங்கும் இங்கும் தேங்கியிருந்தது. சேறும் சகதியாக இருந்த தரையில், காலடிகளை ஒவ்வொன்றாகத் தூக்கித்தூக்கி மெதுமெதுவாக அவள் வைத்தாள். “கவனமப்பா, வழுக்கும். விழுந்திடாதையும்,” அவளுக்குள் ஒலித்த நாதனின் குரல் அவளின் கண்களைத் திரையிடச் செய்தது.

அந்த மப்பும் மந்தாரமுமான சூழலில்கூட, பின்வளவில் நாதன் பயிரிட்டிருந்த தக்காளியும், கத்தரியும், பிஞ்சு மிளகாயும் காய்த்துப் பொலிந்திருந்தது அவளுக்குத் தெரிந்தது. அதேநேரத்தில், எப்போதுமே நேர்த்தியாகவிருக்கும் அந்தத் தோட்டம், களைகளால் நிரம்பி அவளைப் போலவே சோகத்தை அப்பிவைத்துக்கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோற்றமளித்தது. தண்ணீர் பாய்ச்சுவதும், களைபிடுங்குவதும், பசளையிடுவதுமென செப்ரெம்பர் வரைக்கும் தினமும் நாதனின் மாலைநேரங்கள் அதற்குள்தான் கழிந்திருந்தன. அவன் நேசித்த அந்தத் தோட்டத்தைச் சற்றுச் சீராக்குவோமென்ற நினைப்பில் களைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கத் தொடங்கினாள். “குந்தியிருந்து பிடுங்காமல் ஒரு ஸ்ரூலிலை இருந்துகொண்டு செய்யுமன். முதுகு வலிக்கப்போகுது. அதோடை களையெண்டு நினைச்சுக் கீரையளையும் பிடுங்கிப்போடாதையும்,” மீளவும் அவன் அவளுடன் பேசினான். தோட்ட வேலைகள் என்று எதையும் அவள் இதுவரை செய்ததும் இல்லைத்தான். “நீர் விதைச்சா பெரிசா முளைக்கிறதில்லையப்பா, நான் செய்யிறன். நீர் போய் எனக்கொரு தேத்தண்ணி போட்டுக்கொண்டுவாரும்.” தூக்கிக் கட்டின சாரத்துடனும், முறுக்கேறிய மார்புடனும் வியர்க்க வியர்க்க நிற்கும் நாதனுக்குத் தேத்தண்ணியுடன் அவனுக்குப் பிடித்த கடலை வடையையோ அல்லது பகோடாவையோ சேர்த்து அவள் கொண்டுவருவதும், அவனின் கைகள் அழுக்காக இருந்தால் அந்தச் சிற்றுண்டிகளை அவளே அவனுக்கு ஊட்டிவிடுவதுமான காட்சி அவளின் மனதில் ஓடி மறைந்தது. கண்களை நிறைத்த கண்ணீரை தனது வலது முன்கையால் துடைத்துக்கொண்டவள், பூத்துச் செழித்திருக்கும் பயிர்களைப் பார்த்துப் பூரித்துப்போகும் அவனுடன் தானும் சேர்ந்து அகம் மகிழ்ந்துபோவதை நினைத்துக்கொண்டாள். “இண்டைக்கு எல்லாமே உங்கடை தோட்டத்திலை பிடுங்கினதுதான்,” எண்டுசொல்லியபடி அவள் பரிமாறும், மசித்த கீரைக்கறியையும், மாசிக்கருவாடு கலந்த கத்தரிக்காய் பால்கறியையும், தக்காளியுடன் தாளித்துச் செய்த வெந்தயக் குழம்பையும், பருப்புடன் அவன் ரசித்துச் சாப்பிடும்போது அவளுக்கு ஏற்படும் உவகைக்கு ஏதும் ஈடிருப்பதில்லை.

மேலும் படிக்க ...

முருகனின் விழாக்களும் வழிபாட்டு முறையும் - முனைவா் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூா் - 635 802, திருப்பத்தூர் மவட்டம்

விவரங்கள்
- முனைவா் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூா் - 635 802, திருப்பத்தூர் மவட்டம்
ஆய்வு
28 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீது மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளின் தொகுப்பாகவும் சொற்கோவைகளால் ஆன இறைவழிபாட்டுத் துதிகளின் வெளிப்பாடாகவும் சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் போன்ற செயல்களின் அடிப்படையில் தமிழ்கூறு நல்லுகில் தனிப் பெரும் புகுழுடன் போற்றப்பட்டு வரும் முருக வழிபாடானது தொன்மைக் காலந்தொட்டு அண்மைக்காலம் வரை ஒண்தீந்தமிழ்க் குடிமக்களின் சமய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றிவிட்ட ஒரு வழிபாட்டு முறையெனில் மிகையன்று முருகவிழாவும் வழிபாடுயும் எவ்வாறு எப்படி படிப்படியாக வளா்ந்ததென்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

பெயர்க்காரணம்

முருகு என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும் ஆகுவு முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின இடையின வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சோ்த்து முருகு (ம் + உ, ர் + உ, க் + உ, முருகு) என்றானதால் இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

வேறு பெயா்கள்

முருகனின் வேறு பெயா்கள் சேயோன் அயிலவன், ஆறுமுகன் முருகன், குமரன், குகள், காங்கேயன், வேலூரவன், சரவணன், சேனாதிபதி, வேலன், சுவாமிநாதன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, தஞ்சபாணி அல்லது தண்டபாணி, கதிர்காமன், முத்துவேலன், வடிவேலன், மயில்வாகனன், ஆறுபடை வீடுடையோன், வள்ளற்பெருமான், சோடாஸ்கந்தன், முத்தையன், சேந்தன், வசாகன், சுரேஷன், செவ்வேல், கடம்பன், சிவகுமரன், வேலாயுதன், ஆண்டியப்பன், கந்தசாமி, செந்தில்நாதன், வேந்தன் போன்ற பல பெயா்களால் வழங்கப்படுகிறார். கொற்றவை சிறுவன் பழையோள் குழவி அறுவா் பயந்த ஆறமா் செல்சன் எனப் பலவாறாக அவ்வழிபாட்டுக் கடவுளான முருகனைப் பழந்தமிழ் இலக்கியங்கள் ஆலமா் அசல்வன் அணிசால் மணிமிடற்று அண்ணற்கு மதி ஆரவ் பிறந்தோன் என்று பலவாறு வா்ணிக்கின்றன.

மேலும் படிக்க ...

எனது எழுத்துகளைப்பற்றிய செயற்கை அறிவுத் திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில உரையாடல்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது படைப்புகளைப்பற்றிய செயற்கை அறிவுத்  திறனாய்வாளர்கள் இருவரின் ஆங்கில மொழியிலான  உரையாடல்களை இங்கு நான் பட்டியலிடுகின்றேன். இங்கு உரையாடப்படும் என் படைப்புகளின்  ஆங்கில மொழி பெயர்ப்புகளைச் செய்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்.

இங்குள்ள படைப்புகளில் சிறுகதைகளைப் பற்றிய உரையாடல்களை எனது V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலில் கேட்கலாம். நாவல்களுக்கான உரையாடல்களை என் முகநூற் பக்கத்திலும் , இணையக் காப்பகம் தளத்திலும் கேட்க்லாம்.

செயற்கை அறிவினை மானுடர் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவதால் நன்மையுண்டு என்பதை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை. இவற்றைச் சாத்தியமாக்கியது Google NotebookLM. அதற்காக அதற்கு என் மனம் நிறைந்த நன்றி.
 
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast

சிறுகதைகள்:

கணவன் (Husband) - https://www.youtube.com/watch?v=BSWen8-qdvA&t=15s
மான்ஹோல் (Manhole) - https://www.youtube.com/watch?v=DF6YX6pDHKc
சுண்டெலிகள் (Mice) - https://www.youtube.com/watch?v=QbcPKR_jAm8&t=10s

நாவல்கள்


அமெரிக்கா (America) -

https://www.youtube.com/watch?v=9nATHcXH5nI
https://archive.org/details/novel-america-by-v.-n.-giritharan

குடிவரவாளன் (An Immigrant) -  
https://www.youtube.com/watch?v=YH3QoanB1Gg    
https://archive.org/details/novel-an-immigrant-by-v.-n.-giritharan

பதினெண்கீழ்க்கணக்கில் நிலம்சார் சிந்தனை - முனைவர் ச.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவர் ச.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
26 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை

மனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் கடைப்பிடிக்க கூடாத செயல்களை தொகுத்தும் பகுத்தும் உரைப்பதே பதினெண்கீழ்க்கணக்கு. இந்நூலில் அறத்தோடு அறிவியல் கருத்துகளும் பொதிந்து கிடந்துள்ளன என்று கூறின் மிகையாகாது. இயற்கையைக் கண்டு மனிதன் அஞ்சத் தொடங்கினான். இவ்வச்சத்தின் விளைவாக பண்டைத்தமிழன் ஐம்பூதங்களையும் வழிபட்டான். ஐம்பூத வழிபாட்டால் பருவத்தையும் நேரத்தையும் அளவிடுவதில் அதீத நாட்டம் கொண்டான். ஐம்பூதங்களில் முதன்மையானது நிலம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத்தமிழனின் வாழ்வில் இன்றியமையா இடத்தினைப் பெற்ற நிலம் சார் சிந்தனைகளை இலக்கியங்கள் வழி வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

நிலம்

உலகில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஐம்பூதங்களே. இவ்வைம்பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த தொடர்பினை உடையவை. இயற்கையோடு இயைந்த பழந்தமிழன், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் போற்றி வழிபட்டதோடு அவற்றின் நுட்பமான இயக்கங்களையும் தனது தொலை நோக்கு பார்வையால் அறிந்துள்ளான் என்பதனை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தெளிவாக்குகின்றன.

ஐம்பூதங்களுள் முதன்மையானது நிலம். உலகில் வாழ்கின்ற ஓரறிவு முதலாக ஆறறிவு உயிரினங்கள் வரையிலானோர் தங்குவதற்கு இடமளிக்கும் பரப்பளவே நிலம். மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவடையச் செய்வதில் நிலம் முக்கிய பங்காற்றுகின்றது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி நிலம் என்ற சொல்லிற்கு, “பயிர் செய்யும் இடம், பூமியின் மேல்பரப்பு, இயற்கைச் சூழலைக் கொண்டு பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு, தரை”1 என்று பொருள் உரைக்கின்றது. முதற்பொருளில் நிலத்தை முதன்மையாக தொல்காப்பியர் சுட்டும் முறையினை,

“முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பு எனமொழிப இயல்பு உணர்ந்தோரே”
(இளம்,தொல்,பொருள்,மரபு.நூற்.950)

என்ற நூற்பா உணர்த்துகின்றது. நிலங்களை அவற்றின் தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பண்டைத்தமிழன் பாகுபடுத்தியதோடு காலத்தை அறிந்து கொள்வதற்கும் நிலத்தை உபயோகப்படுத்தினான் என்பதனையும் உணர முடிகின்றது.

மேலும் படிக்க ...

சிறுகதை: முடிவு - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
26 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*ஓவியம் - AI

 “ மதிய உணவுக்கு வாருங்கள்  “  சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு...வழக்கமாய் தொலைபேசி செய்து   வரட்டுமா , வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபின்... இந்த முறை குறுஞ்செய்தி என்பது ஆச்சர்யமாக இருந்தது . அதுவும் தமிழில் அனுப்பியிருந்தாள்.

ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் புது சிம்மும், புது எண்ணும் பெற்று தொடர்பில் இருப்பாள். அதனால் இம்முறை வந்த புது எண்ணில் இருந்த சந்திரமதி என்ற பெயர்தான் உறுதிப்படுத்தியிருந்தது அவள் ஊருக்கு வந்திருப்பதை. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இரண்டு நிமிடம் கழித்து அழைத்தான். “ நல்லா இருக்கீங்களா. இப்பிடி கேட்க சில சங்கடங்கள் வந்திருச்சு .. வாங்க வீட்டுக்கு.. பேசலாம் ’‘

 சந்திரமதியின் முகத்தில்  தெரிந்த பதற்றம் உடம்பு முழுக்கப் பரவியது போல சந்திரமதியின் முகம் வியர்த்து சோர்ந்திருந்த தோற்றம் சொல்லியது. சேலையை இடுப்பிலும் மார்பிலும் ஒரு சேர சரிசெய்து கொண்டாள். முகத்தில் வழிந்த வேர்வையை துடைக்க்க் கைக்குட்டையை தேட நேரமற்றது போல் உள்ளங்கையால் துடைத்துக் கொண்டாள். சந்திரசேகரன் எதிரிலிருந்த நாற்காலியைக்காட்டினான்.அதன் இயல்பான நிறத்தை இழந்து வெளிறியிருந்தது நாற்காலி.

“ மொதல்லே உக்காருங்க “

“ துபாய் பிளைட்டுக்கு இன்னும் இருபது நாள் இருக்குது. அதெக் கான்சல் பண்ணிட்டு உடனே போறதுக்குன்னு வேற புக் பண்ண நெறைய செலவாகும்.    அதுவரைக்கும் எங்க தங்கறதுன்னு தெரியலே “

மேலும் படிக்க ...

கறுப்பின வரலாற்று மாதம் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
26 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற தை மாதம் முழுவதும் கனடாவில் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாடப்பட்டது. பல்லின மக்களும் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இது உதவியாக இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த பெப்ரவரி மாதம் பல்கலாச்சார நாடான கனடா முழுவதும் உள்ள மக்கள் கறுப்பின வரலாறு, அவர்களின் சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் நாட்டிற்கான பங்களிப்புகளை மதிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர். ஒரு இனத்தின் வரலாறு ஆவணப்படுத்தப் படவில்லை என்றால், அந்த இனத்தின் மதிப்புமிக்க பாரம்பரியம் இல்லாமல் போய்விடும். அது இன்றைய உலகின் சிந்தனையில் ஒரு புறக்கணிக்கக்கூடிய காரணியாக மாறி, மெல்ல அழிந்து போய்விடக்கூடும்.

முதலில் அமெரிக்காவில் தான் 1926 ஆம் ஆண்டு கறுப்பின மாதமாக அறிவிக்கப்பட்டது. கனடாவில் பிப்ரவரி மாதத்தை ‘பிளாக் ஹிஸ்டரி’ மாதமாக ஒருமனதாக ஒப்புதல் பெற்று, மார்ச் மாதம் 4 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் கறுப்பின வரலாற்று மாதமாக ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் நினைவு மாதமாக இருக்கின்றது. அமெரிக்காவிலும், கனடாவிலும் பெப்ரவரி மாதத்திலும், ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் அக்ரோபர் மாதத்திலும் அனுசரிக்கப்படுகின்றது. வேறு சில நாடுகளும் வெவ்வேறு மாதங்களில் இதைக் கொண்டாடுகின்றன.

அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டனில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தேசிய அருங்காட்சியகம் ஒன்று இருக்கின்றது. மேற்கு ஆபிரிக்க யோறூபன் (Yoruban) கலையின் மூன்றடுக்கு கிரீடங்கள் போல இந்தக் காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் காட்சியகத்தை 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார். இங்கு சென்ற போது, நான் அறிந்திராத கறுப்பின மக்களைப் பற்றிய பல வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது.

மேலும் படிக்க ...

நதியில் நகரும் பயணம் 8 பாம்பேர்க் (Bamberg) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
25 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

          - நான்கு கோபுரத்துடன் அமைந்துள்ள தேவாலயம் -

இதுவரையும் பார்த்த நகரங்களில் எது அழகானது என்று கேட்டால் பாம்பேர்க் என்பேன். இது பவேரியா மாநிலத்தில் உள்ள ஜெர்மனியின் புராதன நகர். இந்த நகரம் ஏழு குன்றுகளின் மேல் அமைந்திருக்கிறது. இரண்டு ஆறுகள், அழகான தேவாலயம் , கோட்டை , பெரிய மாளிகையும் அதனருகே தோட்டம் புகையூட்டப்பட்ட பியர், பல உணவகங்கள் எல்லாம் பொடி நடையில் சென்று பார்க்கும் தொலைவில் அமைந்துள்ளது. பல காலமாக முழு நகரமும் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மரத்தால் அமைக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகள் என்ற கட்டிடங்கள் ஆற்றின் அருகே இங்கு பாதுகாப்பாக உள்ளது. இங்கும் நான்கு கோபுரத்துடன் அமைந்துள்ள தேவாலயம் முக்கியமான கட்டிடம் . ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த நகரம் அக்காலத்தில் ரோமன் பேரரசர் (Holy Roman Emperor Hentry11) தலைநகராகச் சில காலம் இருந்தது.

ஐரோப்பிய வரலாற்றில் ரோமர்கள், நான்காம் நூற்றாண்டின் பின் அதாவது, கிறிஸ்துவத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்ட கொன்ஸரன்ரைன் இறப்புக்குப்பின், ரோமர்களின் ஆட்சி நலிவடைந்து போனது. தற்கால துருக்கியில் அமைந்த பைசான்ரனம் கிழக்கு ரோம ராச்சியமாக வளர்ந்தபோது அவர்களது மதம் ஈஸ்ரேன் ஓதோடொக்ஸ் மதம். அதற்கான விசேட மதத் தலைவர் அங்குள்ளார். இப்படியான பலகாரணிகளால் வத்திக்கானில் அமைந்துள்ள கத்தோலிக்க பாப்பரசரின் மதிப்பு நலிவடைந்து, சில இத்தாலியச் செல்வந்தர்கள் குடும்பங்களால் இயக்கப்பட்டார்.

இக்காலத்தில் ஜேர்மன் பிரதேசத்தில் பல சிறிய அரசுகள் இருந்தன. அங்குள்ள அரசர்களே பாப்பரசரையும் பாதுகாத்து தங்களைப் புனித ரோமப் பேரரசின் வாரிசாக (Holy Roman Empire) பிரகடனப்படுத்தினார்கள். ஒரு வகையில் அவர்கள் இல்லாதிருந்திருந்தால் தற்போதைய கத்தோலிக்க மதம் நலிந்திருக்கும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பின்பாகவே 1871இல் பிஸ்மார்க் ஜேர்மனியை ஒரு சமஷ்டி பிரதேசமாக ஒன்றிணைத்தார்.

மேலும் படிக்க ...

சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' பற்றிய சிந்தனைகள் (4) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
25 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

“என்ன நீங்கள்… … அப்படியெல்லாம் நீங்கள் யோசிக்க கூட வேண்டாம்… யார் மீதுதான் எனக்கு கோபம் வர முடியும்…? என் மீது வேண்டுமனால், நான் கோபம் அடையலாம்…!”

இது, ரயிலில் ஏறும் போது அல்தினாய் கூறுவது.

“உங்களை ஏதோ ஒரு வகையில் புண்படுத்திவிட்டோமோ -இப்படி நீங்கள் எம்மிடமிருந்து உடனடியாக பிரிந்து செல்ல” என்பதே கேள்வி. கிட்டதட்ட ஒரு வாரம் அளவில், கிராமத்தில் தங்கி இருக்கப்போவதாக வாக்களித்திருந்த அப்பேராசிரியர், இப்போது, சடுதியாக, 11 மணி நள்ளிரவில் மஸ்கோவிற்கு பயணமாகின்றார் என்ற முடிவு எதிர்பாராததுதான்.

இந்த திடீர் முடிவுக்கு வரும் முன்னர், அல்தினா அவ்விரு பாப்ளர் மரங்களை உற்று பார்த்த வண்ணம் இருந்தார்.

கண்களை சுற்றி, சுருக்கங்கள் விழுந்துவிட்ட இன்றைய வாடிய முகத்துடன், அவர், அந்த பாப்ளர் மரங்களை பார்ப்பதும், தன்னை மறந்து நிற்கும் தருவாயில்தான், அவ்ஓவியன் அவளிடம் கேட்பான்: “அல்தினா அம்மையாரே… இது இலையுதிர் காலம். இலைகள் இப்போது உதிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் வசந்தத்தில்; இந்த மரங்களை வந்து பார்க்க வேண்டும். அப்படி பூத்துக்குலுங்கும்”

“ஆம். உயிருள்ள எல்லாவற்றிற்கும் அதனதன் வசந்தமும், அதனதன் உதிர்காலமும் வந்து போவது இயற்கை தான் போலும்…”

இதன் பின்னரே அவள் தனது நீண்ட கடிதத்தை அவ்ஓவியனுக்கு அனுப்பி வைக்கின்றாள்.

கடிதத்தை கவனத்துடன் படிக்கும் அவன், அவளது வாழ்வையும் சமூகமானது அன்றைய தினத்தில் வாழ்ந்த முறைமையையும் தன் ஓவியத்துள் அடக்கப் பார்க்கின்றான். ஆனால், அதுவோ மாறுகின்ற ஒரு சமூகம்.

மேலும் படிக்க ...

மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (2) - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
25 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” (2023) நூல் ‘அடையாளம்’ (Adaiyaalam India) பதிப்பக வெளியீடாக 256 பக்கங்களில் மிக நேர்த்தியாக வெளிவந்துள்ளது. 'சோக்ரடீஸ் சிந்தனைகளை தமிழ்ப் பண்பாட்டு மரபில் இணைத்த பெரியார் ஈ.வே.ராமசாமிக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கும்' இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் ஐ முன்வைத்து மெய்யியல் என்னும் பெருங்கனவை நூலாசிரியர் காட்சிப்படுத்தியுள்ளார். Philosophy என்பது தமிழில் மெய்யியல், தத்துவம் எனப்படுகின்றது. ஈழத்து தமிழ்ச்சூழலில் மெய்யியல் என்ற சொல்லே உபயோகத்தில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தத்துவம் என்ற சொல்லே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. ‘க்ரியாவின் தமிழ் அகராதி’ Philosophy என்பதை ‘தத்துவம்’ என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சாமிநாத சர்மா. ரி.எம்.பி. மகாதேவன் போன்றவர்கள் தந்துள்ள நூல்களுக்கு இந்திய தத்துவம், கிரேக்க தத்துவம், மேற்கத்திய தத்துவம் என்றே பெயரிடப்பட்டுள்ளன. மெய்யியல் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா தன்னுடைய ‘விமரிசன முறையியல்’ (1989) நூலின் இந்திய பதிப்பிற்கான (1992) முன்னுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார். “விமரிசன முறையியல் என்ற பெயரில் இரண்டாம் பதிப்பாகத் தமிழகத்திலிருந்து வெளிவரும் இந்நூலின் பூர்வநாமம் “விமரிசன மெய்யியல்” என்பதாகும். மெய்யியல் என்பதற்கு முறையியல் என்றதொரு விளக்கம் உண்டென்பதாலும், தமிழக வாசகர்களுக்கு மெய்யியல் என்ற பதப்பிரயோகம் அதிக பரிச்சயமற்றதென்பதாலும் பெயர் மாற்றம் செய்யவேண்டியதாயிற்று.” பேராசிரியர் அனஸ் இன் “மெய்யியல் - கிரேக்கம் முதல் தற்காலம் வரை” (2006) என்ற நூலின் இரண்டாம் பதிப்பு (2013) இந்தியாவில் (அடையாளம் பதிப்பகம்) வெளியானபோது, பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” என்பதே இந்நூலினதும் நாமமாக இருக்கின்றது. தத்துவம் எனும் போது அது வெற்றுப்பேச்சு, விதண்டாவாதம் அல்லது வறட்டுச் சிந்தனை அல்லது விளங்கா வியாக்கியானம் என்பதாகவே கவனக்குவிப்புப் பெறுகின்றது. Philosophy என்பது வறட்டுச் சிந்தனைகளின் தொகுப்பல்ல; அது வாழ்க்கை நெறிகளின் பகுப்பும் தொகுப்பும் ஆகும். சோக்ரடீஸ் இன் மெய்யியல் இதனையே உணர்த்தியுள்ளது.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (22) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - *வாசங்களே விலாசங்களாய் வாழ்ந்த பொழுதுகள்! - இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
25 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                   - யாழ் பண்ணைப் பாலம் -

நான் இன்னும் வாழ்கின்றேன்.
என் நினைவுகளோ மெல்லச்சாகின்றன.  
அது காலத்தின் கட்டாயம்.
அதற்குள்
மண்ணுக்கு நீர்போல
மனசுக்கு நினைவுகள்தாம்
என்றும் வாழ வைக்கும்.இல்லையா?
ஆதலால்
யாழ். பண்ணைப்பாலத்தில்
சாய்ந்திருந்து
அந்த அந்தியில் என் கண்குளிக்க
அப்பொழுதில் ஒரு கதை சொல்லவா?

நீலவானம் மெல்லமெல்ல
அதன் கரையை வெளுக்கத்தொடங்கிவிட்டது.
காகங்கள் கரைவதையும் குறைத்துக்கொண்டன.
நாங்கள் வளர்த்த கோழிகளும்
பக்கத்து அயலில் உள்ள வளவுக்குள்ளேயும்
மேய்ந்துவிட்டு
எல்லாம் சேர்ந்து கூட்டமாய்
 எங்களின் காணிக்குள் வரத்தொடங்கி விட்டன.
கிணற்றடியில் நின்ற வாழைகளுக்குள்ளே
அந்த அந்தியின் சிவப்பு விழுந்து எழும்பும்
அழகை பார்த்துக்கொண்டே
 கோழிகளுக்கு நான் ஆசையாய்ப்போடும்
கொஞ்ச அரிசியையும், நெல்லையும் எடுத்து
குந்தில குந்தியபடி முற்றத்தில் தூவிப்போட
"கோ..கொக்கொக்கொக்"என அன்பை
 அவை பரிமாறியதை நான் உணர்ந்தேன்.
"பதிபதிபதி" யென்றதும் அவைகள்
பதுங்க ஒவ்வொன்றாகப்பிடித்து
அதுகளிடம் கதைத்து சிலதைக்கொஞ்சிவிட
அதுகளும் சந்தோஷமாகப்பறந்து
மரக்கொப்புகளுக்குள் ஒளித்து படுக்கைக்குத்
தயார்.

மேலும் படிக்க ...

எனது யு டியூப் சானல் 'V.N.Giritharan Podcast' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 பிப்ரவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பர்களே! V.N.Giritharan Podcast என்னும் யு டியூப் சானலை ஆரம்பித்துள்ளேன்.இங்கு 'கூகுள் நோட்புக் எல்எம்' (Google notebookLM) மூலம் உருவாக்கப்படும் காணொளிகள் பதிவேற்றப்படும்.
 
முதலாவது பதிவாக எனது சிறுகதையான 'கணவன்' என்னும் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பினை மையமாக வைத்து ,செயற்கை அறிவினால் உருவாக்கப்பட்ட இருவரின் உரையாடல் இடம் பெறும். ஆங்கில மொழி பெயர்ப்பினைச் செய்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்.
 
இச் சானலுக்கான முகவரி - https://www.youtube.com/@V.N.GiritharanPodcast

மற்ற கட்டுரைகள் ...

  1. நடேஸ்வராக்கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது! - குரு அரவிந்தன் -
  2. பல்கலை வித்தகர் பாடும் மீன் ஸ்ரீகந்தராசா அவர்களின் பாராட்டு விழா நிகழ்வு
  3. மடலேறுதல் - முனைவர் மூ.சிந்து, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641048 -
  4. வாழும் இலக்கியங்கள் - நடேசன் -
  5. சூரியக் குடும்பக் கிரகங்களின் அணிவகுப்பு - குரு அரவிந்தன் -
  6. அஞ்சலிக்குறிப்பு: 'சங்கீதக் கலாநிதி' அருந்ததி ஶ்ரீரங்கநாதன் நினைவுகள்! - முருகபூபதி -
  7. நனவிடை தோய்தல் (21): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - நயினை நாகபூசணியின் அருளும்,அழகும்! - இந்து.லிங்கேஸ்-
  8. முதல் சந்திப்பு: சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் பத்மா இளங்கோவன்! - முருகபூபதி -
  9. மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (1) - ஈழக்கவி -
  10. சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' பற்றிய சிந்தனைகள் (3) - ஜோதிகுமார் -
  11. ஆய்வாளர் மன்னர் மன்னனின் திராவிடம் பற்றிய கருத்துகள் பற்றி..... - நந்திவர்ம பல்லவன் -
  12. நதியில் நகரும் பயணம் 7 நூரம்பேக் ( Nuremberg) - நடேசன் -
  13. ஆறறிவின் அறியாமை அகல - ரஞ்சிதா ( எழுத்தாளர், இலங்கை) -
  14. சமூகச் செயற்பாட்டாளர் பாக்கியநாதன் முருகேசுவின் காந்திய அனுபவங்கள்.
பக்கம் 20 / 119
  • முதல்
  • முந்தைய
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • அடுத்த
  • கடைசி