டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 5 - ஜோதிகுமார் -

1
(27-28 அக்டோபர் 1910 இல், தனது 82வது வயதில் டால்ஸ்டாய் தனது வீட்டை விட்டு (Yasnaya Polyana) மருத்துவருடன் வெளியேறினார் (Flight). 07 நவம்பர் 1910 இல் Astapovo ரயில் நிலையத்தில் இறந்தார்.
இது சம்பந்தமாக பல்வேறு சித்திரங்களை, மனம்போன போக்கில், பல்வேறு எழுத்தாளர்கள் தீட்டியிருந்தாலும், கார்க்கியின் இரு கடிதங்கள் முக்கியமானவை. ஒன்று அவரது அகல்வுக்குப் பின் உடனடியாக எழுதப்பட்டது. மற்றது, அதன் தொடர்ச்சியாக, அவரது மறைவுக்குப் பின் எழுதி முடிக்கப்பட்டது.
டால்ஸ்டாய் பற்றி எழுதிய Tomas Mann, Romain Rolland மற்றும் Stefan Zwigh ஆகிய மூன்று ஐரோப்பிய எழுத்தாளரின் கணிப்பிலும் கார்க்கியின் சித்திரமே விருப்பு வெறுப்பைத் தாண்டி, மிகச் சிறந்ததாய் யதார்த்தபூர்வமாக இருந்தது என்று கணிக்கப்பட்டது. ‘இது ஒரு மேதையின் திட்டமிட்ட தீட்டல்’ எனவும் Romain Rolland கூற நேர்ந்தது (பகுதிகளே இங்கு தரப்பட்டுள்ளன. இதன் மூலத்தை முழுமையாக வாசிப்பது வாசகருக்குப் பயன் தருவது).
புலமை மிகுந்த மேதையர் (Genius) என அழைக்கக் கூடியவர்களில், மிக உயரிய மட்டத்தை அடைந்தவர் டால்ஸ்டாய் என்பதில் ஐயமில்லை. ஆழ்ந்த சிக்கல் வாய்ந்தவரும், தன்னுடனேயே தான் முரண்படும் பண்புகளை எய்தியவருமாக இருப்பது இவரது குணாம்சமாகின்றது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையுமே அற்புதமானது–மிக மிக அழகானது என்பதனைக் கூறியே ஆக வேண்டும். அற்புதம் என்று பொதுவாய்ச் சொல்லும்போது அது குறித்த அவரது நடவடிக்கைக்குப் பொருந்தி வருவது போல, அவரது ஆளுமைக்கும் பொருந்தியே வரும்.
நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அஞ்சல் செய்த பின்னரே, டால்ஸ்டாயின் அகலல் பொறுத்த தந்தியைக் கிடைக்கப் பெற்றேன். எனவே உங்களிடமிருந்த மனத் தொடர்பை அறுக்காமல், தொடர முடிவு செய்து விட்டேன். அதாவது, இக்கடிதத்தை மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளேன். உண்மை. எனது குரல்வளையை யாரோ பிடித்து நசுக்குவது போல் இருக்கின்றது.


மீஜி சின்ரோ ஆலயம் ( Meiji Shrine ) யப்பான் செல்பவர்கள் தவிர்க்க முடியாத இடம். அதாவது இந்தியாவில் புது டெல்கியில் பிர்லா மந்தீர் என பிர்லாவின் பெயரால் கோவில் இருப்பது போல் இங்கு மீஜி என்ற யப்பானிய மன்னரின் பெயரால் இந்த ஆலயம் உள்ளது . இந்த ஆலயம் மன்னரால் கி.பி. 1800 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் இருப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மரங்களால் உருவாக்கப்பட்ட 175 ஏக்கர் காட்டுக்குள்ளே நாம் நடந்து போக வேண்டும். இந்த காடு இருக்கும் நிலம் ஆரம்பத்தில் மன்னருக்கு சொந்தமானது .


தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத்
ஜெயதேவன் என்னும் பெயரில் கவிதை உலகில் இயங்கி வந்த இவரின் இயற்பெயர் மகாதேவன் . முதுகலை தமிழ் பட்டமும் ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி விட்டுப் பணி நிறைவு பெற்றவர். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பண்ணைக்காடு கவிஞரின் சொந்த ஊர் ஆகும். இவரது இலக்கிய செயல்பாடு என்பது சமூக ஊடகத்தில் தொடர்ந்து எழுதி வந்தது ஆகும். அத்தோடு பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர்.,




இலக்கியங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு, வரலாறு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இலக்கியங்கள் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்திச் சென்ற அறநெறிகள் ஏராளம். அதில் சித்தர்களின் பாடல்களில் மக்கள் அறிந்துக் கொள்ளக்கூடிய நிலையாமை கருத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அந்த வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களில் காணப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கரும்புகையோடு கலந்த தூசிகளும் கற்களும் பறந்ததால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து போயிருந்தனர். எந்த நேரமும் விமானப் போக்குவரத்து தடைப்படலாம் என்ற பயத்தில் சில சுற்றுலாப் பயணிகள் சிசிலித் தீவைவிட்டு உடனே கிளம்பினார்கள்.


தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.


சென்னை திருச்சி ஸ்ரீ பாரதகலா குரு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஷ்கலா அவர்களின் பரத நாட்டிய நடனம் கொழும்பு கதிர்காமத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் தேதி கொழும்பிலும் 6 ஆம் தேதி கதிர்காமத்திலும் இடம்பெறவுள்ளது.


ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடுத்து
