இலங்கையின் நகர அமைப்பு நிபுணர்கள் சபையும், இலங்கைப் பசுமைக் கட்டடச் சபையும் இணைந்து பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் 25.1.2014 நடாத்திய 'பசுமையினூடு பெறுமதியை உருவாக்குதல்' என்னும் மாநாட்டில் கட்டடக்கலைஞரும் ,நகர அமைப்பு வல்லுநருமான திரு/. பியால் சில்வா (Piyal Silva) அவர்களின் உரையினைத் தற்செயலாக 'யு டியூப்'பில் கேட்டேன். முதலில் எனக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. காரணம் இவர் என்னுடன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவர்களிலொருவர். இவர் சூழற் பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் (Environmental Sustainability) தலைப்பில் அம்மாநாட்டில் உரையினையாற்றினார். அபிவிருத்தி என்னும் போர்வையில் உலகம் முழுவதும் சூழற் பாதுகாப்பு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வுரை முக்கியமானதென்பதால் அவ்வுரையின் முக்கிய அம்சங்களை இங்கு குறிப்பிடலாமென்று கருதுகின்றேன்.
இவர் தனது உரையினை மேற்படி 'சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல்; என்னும் கோட்பாடு பற்றிய கேள்வியொன்றுடன் ஆரம்பித்தார். நகர்மயமாக்கல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகையில் நாம் அதனால் ஏற்படும் சூழல் விளைவுகளைக் கண்டுகொள்வதில்லை. பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. அவற்றாலேற்பட்ட விளைவுகளை அனுபவிக்கத்தொடங்கி விட்டோம். இப்போது ஒவ்வொருவரும் அதனைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் பல்வேறு இயற்கை விளைவுகளை (சுனாமி, சூறாவளி போன்ற) நாம் அனுபவித்திருக்கின்றோம். இவ்வகையான விளைவுகள் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன. தற்போது சூழலைப்பாதுகாப்பதென்பது ஒருவகை 'ட்ரென்ட்' ஆகிவிட்டது. எல்லோரும் சூழலின் நண்பர்களாகிவிட்டார்கள். பசுமைக் கட்டடம், பசுமை 'மோல்' .என்று பலவற்றைக் கேட்டிருக்கின்றோம். இப்போக்கானது வெறும் ஒப்பனையானதா? அல்லது நாம் உண்மையிலேயே சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்திருக்கின்றோமா? அல்லது இவ்விடயத்துடன் எம்மை அடையாளப்படுத்துவதுடன் நின்று விடுகின்றோமா" குறிப்பாக உலகமயமாக்கல் என்னும் இன்றைய நிலையில் எல்லாமே இறுதியில் பணத்தில்தான் வந்து முடிகின்றன. ஆனால் எவ்வளவு கவனத்தை நாம் இவ்விடயங்களில் காண்பிக்கின்றோம்.
இவ்விதமாகத் தனது உரையினை ஆரம்பித்த பியால் சில்வா அவரகள் தொடர்ந்தும் தனதுரையில் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்களைப் பின்வருமாறு கூறலாம்.
சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்பது பசுமைப்படுத்தல் பெறுமதியை அதிகரித்தால் மட்டுமே சாத்தியமாகும். நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். எல்லோரும் இதுபற்றிக் கூறுகையில் இது சக்தியைச் சேமிக்கின்றது, பணத்தைச் சேமிக்கின்றது, பெறுமதியை அதிகரிக்கின்றது என்று வாதிடுகின்றார்கள். பொருளியல் அடிப்படையில் இத்திட்டமானது விளம்பரப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.
கட்டடக்கலை, நகர்திட்டமிடுதலைப்பொறுத்தவரையில் எங்காவது பசுமைக்கட்டடக்கலை, பசுமை நகர அமைப்பு என்றுள்ளனவா? நான் பல உரைகளை பசுமைக் கட்டடக்கலை, பசுமை நகரங்கள் என்றெல்லாம் கேட்டிருக்கின்றேன். எங்காவது பசுமைக்கட்டடக்கலை, பசுமை நகர அமைப்பு என்றுள்ளனவா? முக்கியமாகக் கட்டடக்கலையைப் பொறுத்தவரையில் அது பசுமையானதுதான். ஏனென்றால் இது சூழலைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் அடிப்படையில் சூழலுக்கேற்ப உருவாக்கப்படுகின்றது. நகர அமைப்பும் இவ்வாறுதானுள்ளது. பசுமைக்கட்டடக்கலை , பசுமை நகரமைப்பு என்றில்லை. நாம் பசுமையை மையப்படுத்திப் பல விடயங்களைப் பேசுகின்றோம். நாம் அவற்றை வெறும் ஒப்பனைக்காகப் பேசுகின்றோமா? அல்லது உண்மையிலேயே இக்கோட்பாடு பற்றிச் சரியாக அறிந்திருக்கின்றோமா?
நாம் இப்பொழுது தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் விடயத்தில் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் மனிதர்களே சூழலுக்குத் தீங்கினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்கள். நாம் புதுமையான தலையீடுகளை மனிதர்களின் இவ்வகையான செயற்பாடுகள் விடயத்தில் செய்து சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் மறுபுறத்தே தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பாவித்து முன்னெடுக்க வேன்டும்.
இன்று இங்கு பேசிய பலர் எவ்விதம் சக்திச் செலவு குறைக்கப்பட முடியும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவ்விதம் இயற்கை வளங்களைச் சேமிக்கப்பயன்படுத்தப்பட முடியும் என்பவை பற்றிப்பேசினார்கள். நான் நினைக்கின்றேன். மானுட நடத்தை சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தும் வகையில் நாம் தாக்கத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் ஏற்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நூறுவீதம் சரியான பெறுபேறுகளைத் தராது.

இந்நூற்றாண்டுக்குள் உலக மக்கள் தொகையானது ஒன்பது பில்லியன் மக்களைக்கொண்டதாக ஆகிவிடப்போகின்றது. 19 நகரங்கள் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினைக் கொண்டவையாக இருக்கப்போகின்றன. இது பயங்கரமானது. தற்போது 29 மெகா நகரங்கள் , ஒவ்வொன்றும் 10 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்டவை. நினைத்துப் பாருங்கள் 20 மில்லியன் மக்களைக்கொண்ட நகரமொன்றில் தொற்றுநோய் ஏற்படுமானால் அதன் விளைவு பேரழிவுதான்.
நாம் பெளதிகச் சூழலை பேணுவதற்காக புதுமையான வடிவமைப்பைக் கையாள வேண்டும். பொருத்தமான கட்டடக் கட்டமைப்பு ஆரோக்கியமான விளைவினை ஏற்படுத்தும். நாங்கள் உயர்மாடிக் கட்டடங்களைப் (SkyScraper) பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். மாலைதீவினை எடுத்துக்கொண்டால் பசுமையான பகுதியே இல்லையென்றாகிவிட்டது. நாமும் அந்நிலையை அண்மித்துக்கொண்டிருக்கின்றோம். ஒருவர் கூறினார் எமது நகரம் பசுமை மிக்க நகரங்களிலொன்று என்று. இதே வீதத்தில் நாமும் சென்றுகொண்டிருந்தால் இங்கும் அந்நிலையே தோன்றும்.
நாம் ஒருவிதமான இருப்பிட அபிவிருத்தியை (Loational Development) கலாச்சார வேறுபாடுகளை, சமூக அடையாளங்களை உள்வாங்கும் வகையில் செய்ய வேண்டும். நாம் இப்போது உலகமயமாகிக்கொண்டொருக்கின்றோம் (Globalized). கட்டடக்கலை சர்வதேசமயமாகிவிட்டது. இந்நிலையில் எமக்கு அந்நியமான கட்டடக்கட்டமைப்புகளை நாடிச் செல்கின்றோம். அவை சக்தியை அதிக அளவில் விரயமாக்குபவை. தற்போது நாம் விரயமாகும் சக்தியைக் குறைப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம்.
எல்லோரும் வளங்களின் மீளுருவாக்கம் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் யாருமே மிகப்பெரிய மீளுருவாக்கப்படக்கூடிய வளம் பற்றிக் கதைப்பதில்லை. அது மக்கள். மக்கள் ஒன்றிணைந்து வளங்களின் பாவனையைக் குறைப்பதற்கு பங்களிக்க வேண்டும். அதன் மூலம் சூழலின் பாதுகாப்பைத் தொடர்ந்து பேணுதலைச் சாத்தியமாக்க வேண்டும். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பாவித்து சூழற்பாதுகாப்பைபேணும் அதே சமயம் மக்கள் மீதான கவனத்தையும் நாம் குவிக்க வேண்டும்.
அதிகரிக்கும் நிலத்தின் விலை மக்கள் , செல்வந்தர்கள் தவிர, நகரங்களில் வசிப்பதற்குத் தடையாக விளங்குகின்றது. மக்களை மாநகரின் எல்லைப்பகுதிகளை நோக்கித் தள்ளுகின்றது. நகரப்பரவல் தடுக்க முடியாததாகின்றது. இந்நிலை கொழும்பிலும் ஏற்பட்டுள்ளதைக் காண்கின்றோம். மாநகர்ப்பிரதேசத்துக்கு அப்பாலும் மக்களைத் தள்ளுகின்றது. இவ்விதம் மக்களை நகரத்திலிருந்து தள்ளாமல் எவ்விதம் நகருக்குரிய மக்கள் அடர்த்தியை நாம் அடைய முடியும்? அதற்காக நான் கூறவில்லை முற்றாக உயர்மாடிக் கட்டடங்களைத் தவிர்க்க வேண்டுமென்று. பொருளாதாரத்துக்கு உரிய வகையில் அவையும் தேவைதான். ஆனால் தற்போது கொழும்பு நிலத்தின் விலையானது அடிப்படையில் இங்கு வாழும் மக்களின் அனுமதிக்கப்பட்ட அடர்த்தியில் தீர்மானிக்கப்படுகின்றது. நாம் இதனை உரியமுறையில் கட்டுப்படுத்தினால் இயற்கையாக மக்கள் மாநகரில் பரந்து வாழும் நிலையேற்படும். நகரமைப்பு நிர்வகிக்கப்படுவது இன்னும் இலகுவாகும். அடர்த்தியை மேலும் அதிகரித்தால் சொத்துகளைப் (Property) பேணுவதற்கும், நிர்வகிப்பதற்குமான வளங்களின் தேவையும் அதிகமாகும்.
மேலும் இன்று சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதென்பது (Envirinmental Sustainability) இன்று பரோபகாரச் சேவைகளிலொன்றாக அல்லது மக்கள்தொடர்பு விடயமாகப் பார்க்கப்படுகின்றது. மக்கள் செய்கின்றார்கள் இது ஒழுங்குமுறைகளிலொன்றாக இருப்பதால். நிறுவனங்கள் இதனையொரு பரோபகாரச் சேவையாகக் கருதிச் செயற்படுகின்றன. இது பரோபகாரச் சேவைகளிலொன்றல்ல. இது அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டியதொன்று என்பதை உணரும் தருணமிது. இல்லாவிட்டால் அனைவரையும் பாதிக்கும்.
இது (Envirinmental Sustainability) ஒரு வர்த்தக வாய்ப்புமல்ல. இது எம்மைப்போன்றவர்களுக்கு வருவாயைத்தந்தாலும், இதனை ஒரு வர்த்தக வாய்ப்பாகக் கருதக்கூடாது. இது நாம் தப்பிப்பிழைத்தலாகும்.
இவ்விதமான கருத்துகளை உள்ளடக்கியதாகப் பியால் சில்வாவின் உரை அமைந்திருந்தது.
மேற்படி உரைக்கான காணொளியைக் கேட்பதற்கு, பார்ப்பதற்கு: https://www.youtube.com/watch?v=XY66eBWhNlo
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems