உழைப்பாளர் தினக்கவிதை

உழைப்பு என்ப துலகின் உயிர்ப்பு
இருப்பும் வாழ்வும் இதற்கே உரித்தாம்
மழைப்பூ இலையேல் மதிக்கும் பூமி
வளங்கள் பயிர்கள் வனப்பே இலையாம்
இழைப்பார் கையில் இருக்கும் பொருட்கள்
எழும்தே சத்து இடாப்பின் வரவே
விளைப்பார் இல்லா விரும்நா டெல்லாம்
வெடுக்காய் மாறுந் தொடரின் துயரே!

வியர்வைப் பூக்கள் இல்லாச் சரிதம்
விழுமி யத்தைத் தொலைக்கும் அறிவாய்
உயர்வுப் பெருமை ஒளிநா ளங்கள்
உழைப்போ ருக்கே உயர்வைத் தருமாம்
அயர்வைப் போக்கி அழிக்கும் தூக்கம்
அணுவில் எரிந்தும் அழியா தெழும்பும்
துயரைக் களைந்து திருநா டென்ற
தினத்தின் முதல்நாள் மேதான் தருமாம்!

போரின் வடிகால் பொய்யா மாந்தர்
பிடிக்கும் கொடியே புதரின் கதிராம்
வேரின் இருப்பே மிதக்கும் விடியல்
விளைப்போ ருக்கே உரிமைக் குரலாம்
பாரின் அழிந்த பலகா டெல்லாம்
பயிராய் முளைக்கும் பணிதான் உழைப்பு
தூரின் அழிப்பும் துயரின் தீயும்
தினமாய் வகுக்கும் துடிப்பின் வரைவே!

அணுவைப் போட்டு அழித்தும் யப்பான்
அகிலத் தெல்லாம் முதல்நா டென்க
கணுவில் இருந்து முளைத்த காளான்
ககனத் தெங்கும் கனத்த தறிவாய்!
துணிவில் உண்டு திரும்பும் தேசம்
துயர்காத் திடுமோர் தெறிப்பின் வரைவாம்
அணியாய்ப் பணியாய் அகழுங் கல்வி
ஆக்கும் முதல்நாள் மேயின் உதிப்பே!


சோர்ந்து போகாத் துடிப்பின் வேதம்
துயர்கா டழிக்கும் விழுமி யங்கள்
நூர்ந்து போகா நொதிப்பின் அழுத்தம்
நுழைத்து வரும்மாப் பலகா ரங்கள்
சார்ந்த உழைப்பும் சங்கின் வார்ப்பும்
சரிதம் உரைக்குஞ் சரமாய் மாறும்!
தூர்ந்த தெல்லாம் துறையாய் மாறுந்
தெரிநாள் ஆகும் மேயின் முதலே!

கருத்து: மே என விழிப்பதெல்லாம் உலக ஆயுலு தினத்தைக் குறிப்பதே ஆகும்
செய்யுளின் மரபு: எட்டு மாச்சீர் கொண்ட ஒரு அடியாக நான்கு அடிகள் கொண்டவை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R