திரைப்பட, குறுந்திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான சுமதி ரூபனுடனான சந்திப்பு - பெண் எழுத்து... பெண் அரங்கு -

திரைப்பட, குறுந்திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான சுமதி ரூபனுடனான சந்திப்பு - பெண் எழுத்து... பெண் அரங்கு -

அவரது குறுந்திரைப்படங்கள் திரையிடலும் அவரது "உறையும் பனிப் பெண்கள்" சிறுகதைத் தொகுதி மற்றும் அவரது குறுந்திரைப்படங்கள் பற்றிய உரைகளும், கலந்துரையாடலும்.......

வழிப்படுத்தல்- மாதவி சிவலீலன் |  உரைகள்- கோகுல ரூபன், பாத்திமா மாஜிதா

காலம்- 20 ஆகஸ்ட் 17 (ஞாயிறு), மாலை 4 .30 மணிக்கு | இடம்: London Tamil Sangam, 369, High Street North, Manor Park, E12 6PG . London, (Nearest underground - Eastham)
more information - 07817262980

சுமதி ரூபன், 1983 புலம்பெயர்ந்து, 1989யிலிருந்து கனடாவில் வசித்து வருகின்றார். யாதுமாகி நின்றாள் (2003, ), உறையும் பனிப் பெண்கள் (2010, ) என்ற இரு சிறுகதைத் தொகுதிகளைத் தந்தவர், மேலும் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட இனி (2002), உஸ் (2004), மனுஸி (2004), யூ ரூ (2005), பிள்ளை (2006), ரு பி கொன்ரினியுட் (2006) போன்ற குறுந்திரைப்படங்களை எழுதியும் இயக்கியும் இருக்கின்றார். 2015ல் இவர் இயக்கிய -நியோகா- என்ற முழு நீள திரைப்படம் என்ரிரிஎப் 2016 மிட்நைற் சன் விருதைப் பெற்றுக் கொண்டது .

அனைவரையும் அழைக்கிறோம்.

- தமிழ்மொழிச்சமூகங்களின் செயற்பாட்டகம் -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R