படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும் பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் ! கூத்தே உன் பன்மை அழகு – கூத்த யாத்திரை ! - முருகபூபதி -

“ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம் பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு மேலும் செழித்து வளர்ந்துள்ளது. தம் முன்னோரின் தோளின் மீது நின்றுதான் அடுத்த நாடக தலைமுறை உலகை பார்க்கிறது. தன்னை தாங்கி நிற்பவரின் பார்வைப் புலத்திற்கு தெரியாத பல காட்சிகள் மேலே நிற்பவரின் கண்களுக்கு தெரிய வாய்ப்புண்டு. கீழே தாங்கி நிற்பவர்கள் அனுபவம் மிகுந்தவர். அவர்களின் அனுபவம் என்ற அத்திவாரத்தில்தான் இளைய தலைமுறை நிமிர்ந்து நிற்கிறது. இவ் இருவர்களும் பிரதான மாணவர்களே. இந்த இருவரிடையேயும் வளரும் 'கொண்டு கொடுத்தல்' உறவு இருவரையும் வளர்க்கும் “ இவ்வாறு ஈழத்து தமிழ் அரங்கத்துறையில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வரும் பா. நிரோஷனின் அரங்க ஆளுமைகள் நால்வர் என்ற நேர்காணல் தொகுப்பு நூலுக்கு வாழ்த்துரை கூறியிருக்கும் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் எழுதியிருக்கும் கூத்த யாத்திரை ( நான் கொண்டதும் கொடுத்ததும் ) கூத்தே உன் பன்மை அழகு ஆகிய இரண்டு நூல்களும், மேற்குறித்த அவரது கருத்தை மேலும் வலுச்சேர்க்கும் வகையில் விரிந்த தளத்தில் பேசுகின்றன. கால ஓட்டத்தினூடே மாறிவந்த கூத்து பற்றிய அவரது கருத்தியலையும் செயற்பாடுகளையும் பற்றிப் பேசுகிறது கூத்தே உன் பன்மை அழகு. அவரது இளமைப்பராயம் முதல் அவர் கூத்துக்கலைக்கு அறிமுகமான பின்னணியையும் கூத்து அனுபவங்களையும் வாழ்வில் கண்டு மகிழ்ந்த கூத்துக்கலைஞர்கள் பற்றியும் தனக்கு கூத்தறிவூட்டிய அண்ணாவிமார்கள், ஆசிரியர்கள் பற்றியும் விளக்குகிறது கூத்த யாத்திரை என்ற நூல்.






இலங்கையின் எதிர்ப்பலைகள், ஒன்று, ஜனநாயக ஏற்பாட்டினை நோக்கி அசையக்கூடும் - அல்லது பாசிசத்தை நோக்கி நகர கூடும் என்பது கலாநிதி அகிலன் கதிர்காமரின் கணிப்பானது. (பௌசர் Zoom Meeting)). இருந்தும் இந்தக்கூற்றானது பிரதமர் ரணில் பதவி ஏற்பதன் முன்னர் வெளிவந்தது, என்பதும் குறிக்கத்தக்கது. இவ் எதிர்ப்பலையானது 1971, 1989இன் எழுச்சிகள் போல் தனித்து இயங்காது, ஒரு சமூக தளத்தை அரவணைப்பதாகவும், ஓர் தேசத்தின் கோபத்தை எதிரொலிப்பதாகவும் இருந்தது-இருக்கின்றது. (இவற்றில், வடக்கு மக்கள் எந்தளவில் இணைய முற்பட்டனர் என்பது தனித்து வாதிடப்பட வேண்டிய விடயமேயாகும்). தமிழ் மக்கள் இதில் இணைய வேண்டும் என்று ஒருபுறத்தில் சுமந்திரன், கலாநிதி அகிலன் போன்றோர் அபிப்பிராயப்பட்டாலும், புலம்பெயர் அரசியலின் நிலைப்பாடு என்பது, துருவமயமாக்கலை தொடர்ந்தும் தக்கவைத்தல், என்ற அரசியலை, மையமாக வைத்தே இயங்குவதாய் அமைந்திருந்தது. இது புலம்பெயர் அரசியலுக்கு மாத்திரமல்லாமல் இலங்கையின் ஆதிக்க சக்திகளுக்கும், கூடவே, மேற்கின் நலன்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டும் விடயம்தான் என்பதில் ஐயமில்லை. வடக்கு மக்களை தனிமைபடுத்தும் இந்நிகழ்ச்சி நிரலானது கடந்த காலங்களிலும், (தேர்தல் உட்பட) நடந்தேறியுள்ளது என்பதும் அவற்றுக்கு பல்வேறு வல்லரசுகளின் பின்னணி உண்டு என்பதெல்லாம் பிறிதான விடயங்களே. ஆனால், எதிர்ப்பலைகளானது மேலே கூறப்பட்டது போல, ராணுவமயமாக்கலுக்கும் அடித்தளம் அமைக்க கூடும் என்பதும், அதற்கான சமிஞ்சைகள் மிக தெளிவான முறையில் இலங்கை அரசியலில் ஏற்கனவே வெளிவரத் தொடங்கி இருந்தன என்பதும் முக்கியமான விடயங்களாகும்.
அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியம் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவை அதிகரித்துள்ளது.

ஜீவாவிற்கு அம்மாவையும் , அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது . மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது . ஆனால் , கிராமத்தைப் போல வருமா ? . பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும் , செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது . சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள் . அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது . இங்கே இல்லை . என்ன தான் பிரச்சனை மனிதர்களிற்கு ? , வடக்கு , கிழக்கில் பொலிஸ் தெரிவையும் ஆள்றதையும் அவர்கள் கையிலேயே கொடுத்து விட்டால்.....அரைவாசி பிரச்சனையே மாயமாகி மறைந்து விடுமே ! . இங்கேயும் மகிழ்ச்சியற்று வாழ வேண்டிய அவசியமும் இல்லையே . அங்கே , போரிற்குப் பின்னரான படை அமைப்புகளையே கலைத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் கிடக்கிறது . செய்வார்கள் எனப் படவில்லை . குற்றவாளிகளைக் கொண்டே ஆண்டு கொண்டு இருக்கப் போறார்கள் . இன்று , பஞ்சம் , பசி என்றால் அனைவருக்குமே தெரிகிறது . மனிதர்களை மனிதர் நம்புறதால் , நம்பினால் தான் சிறந்த வாழ்வு கிடைக்கும் . அல்லா விட்டால் , வட்டிக்கு வாங்கிற கடன்களே ஏறிக் கொண்டே இருக்கப் போகிறது . பொலிஸ் , பயங்கரவாதி என்றே பார்க்கிற பார்வையால் ஒரு நிமிசம் கூட நிம்மதியாக வாழ முடியாத குழப்பம் நிலவினால் எப்படி தமிழரும் விவசாயம் செய்து அவர்களுக்கு உத முடியும் ? விவசாயத்தையும் , பொருளாதாரத்தையும் வளர விடாது ....படையினர் குதறிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் .
“பாற்றா . பாற்றா. கிடக்காடா.கிடக்காடா. பாற்றா. பாற்றா” கைவிரலைச் சுண்டி வாயைக் குவித்து "உய்’ எனச் சீழ்க்கை ஒலி எழுப்பி கையிலிருக்கும் கூர்க்கொட்டனால் பற்றைகளையும் காவோலைகளையும் தட்டி, நாய்க்கு உற்சாகம் கொடுக்கிறார் தம்பர். நாயும் நெருங்கிய. அடர்ந்த.பற்றைக்குள் எல்லாம் அனாயசமாக வளைந்து, நெளிந்து, ஊர்ந்து, பதுங்கி மோப்பம் பிடிக்கின்றது. “வெள்ளையா. உதுக்குள்ளான் கிடக்கு . விட்டி டாதை.எழுப்படா. எழுப்படா..." மீண்டும் மீண்டும் உற்சாகமூட்டுகிறார் தம்பர். நாய் சுறுசுறுப்பாக இயங்குகிறது. தம்பர் ஒரு நிலையில் இல்லை. அவர் வேட்டை யிலேயே லயித்து . "கிடக்கடா . கிடக்கடா .. விட்டி டாதை.விட்டிடாதை.எழுப்பு.எழுப்பு." தம்பரின் உற்சாக ஒலயினால் அந்தப் பற்றைப் பிராந்தியம் அமைதியை இழந்து அல்லோலப்படுகிறது. வெள்ளையன் எதையோ மோப்பம் பிடித்துவிட்டது. தம்பர் உசாராகிறார்.









