அரங்க முகாமைத்துவம் : நாடக தயாரிப்பு திட்டங்கள் அடிப்படையில் மாணவரை நிர்வகித்தல்! - பா.பிரதாரிணி -

அறிமுகம்
மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.
அதாவது, நாடகமானது மனித நேயத்தைப் போல மிக பழைமையானது. நீண்ட கால கலாச்சார மரபு மற்றும் அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்ட அன்றாட நடவடிக்கைகளிலிருந்து அனைத்து நாடக நடவடிக்கைகளும் உருவாகின. கலாச்சாரத்தின் மறுநிகழ்வு கலை என்பதை நாடகம் உணர்த்துகின்றது. அரங்கானது மனித வாழ்வியலை கற்பிக்கும் ஒரு பாடமாகும். அரங்கானது சமூக சிந்தனைக்கும் சமூக ஒருங்கு சேரலுக்கு அமையவும் வளர்ச்சியடைகின்றது. சமூக பண்பாட்டில் இன்றியமையாத நிறுவனங்களில் ஒன்று நடிப்பும் பார்வையும் என்று நோக்கி வந்த முறைமைக்கு மாறாக நாடகம் இன்று புதிய அர்த்தங்களை வேண்டி நிற்கின்றது. நாடகம் மனிதனை, மனித உணர்வுகளை, முரண்பாடுகளை, சிக்கல்களை, போராட்டங்களை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முகாமைத்துவ வகையாகவும் விளங்குகின்றது.

ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.




சிங்கங்கள் தொடர்பான பல்வேறு வர்ணனைகள் உண்டு. ஆபிரிக்க காட்டு சிங்கங்கள் கருத்தை கவருவன. அவற்றின் கண்கள், போத்தல்களின் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டவை போன்றவை. பாவமற்றவை. சிங்கங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அவற்றின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அறிவுரையும் காணப்படுகின்றது. ஆனால், மிருகங்களில் கண்களை கொண்டே, மனிதன், அவற்றின் அடுத்த கட்ட நகர்வுகளைக் கணிக்க சாபம் கொண்டுள்ளான். எனவேதான், சிங்கங்களின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது என்பது முடியாத காரியமாகிறது.



* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் 
மகேந்திரன் இரத்தினசபாபதி என்ற முல்லை அமுதன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், இதழாளர் என பல துறைகளில் கால்பதித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தொடர்ந்து இலண்டனின் காற்றுவெளி இதழை வெளியிட்டு வருகின்றார். இவரது இலக்கியப்பயணம் உலகளாவிய நிலையில் பல படைப்பாளர்களையும் படைப்புகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

செயற்கை நுண்ணறிவின் ஆளுகையில் உலகம் உழலுகின்ற இன்றும் இயற்கைகென்று மாறாத இயல்புண்டு; தரமுண்டு. இதை உயிரிகளால், குறிப்பாக மனிதனால் ஆக்க முடியாது. ஆக்க முயற்சித்தாலும் அதன் தன்மை இயற்கையில் கிளைத்ததுபோல் இராது எனும் கோட்பாடு உயிர்த்திருக்கிறது. இக்கோட்டை நன்னூலாரின் “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்” (நன். சொல். நூ. 404) எனும் சூத்திரத்தோடு ஒப்புநோக்கி மேலும் விளங்கிக்கொள்ளலாம். இயற்கைசார் பயன்பாட்டுநிலையார்ந்து மற்றெல்லா உயிரிகளுக்கு இயற்கையிலேயே விரவியிருந்த சூழலியல் சமநிலைப் பேணலிருந்து பகுத்தறியும் அறிவைக்கொண்ட மனிதன் பெரிதும் விலகியிருந்தான். அவனின் மனமானது விலங்குநிலை மனதிலிருந்து நனவிலிநிலை, நனவுநிலை என்று பரிணாம வளர்ச்சியுற்றது மானுட சமூகத்திற்கு ஏற்றம் தந்தாலும் சூழல்சார்ந்து பெருமளவில் சுயநலத்தையே விளைத்தது எனலாம். ஆனால், தன் வாழ்வியல் தகவமைப்பில் இயற்கையை நன்றாகப் புரிந்துகொண்ட இனக்குழு சமூகங்களிடையே இயற்கை எல்லோருக்குமானது எனும் சூழலியல் சமநிலைக் குறித்த தெளிவும், பிரஞ்ஞையும் மிகுந்திருந்தது. இயற்கையின் துணையின்றி வாழவியலாது எனும் தெளிவிருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டுமென்ற அக்கறையிருந்தது எனலாம்.
மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.




ஒரு கவிதை தனக்குரிய இலக்கணங்களால் மட்டுமே பெறுமதியினைப் பெறுவதில்லை. மொழிச் செழுமை மிகுந்த சொல்லழகு ஓசை நயம் குறியீடு படிமம் எனும் அணிகலன்களை தனதாக்கி சமூகம் அரசியல் வாழ்வியல் என்ற தளங்களின் ஊடாக உண்மைகளைைக் குறிப்பால் உணர்த்தி, எளிமையும் ஆழமும் கொண்டியங்கும் கவிதைகளே இன்று ரசனைக்குரியனவாக விதந்துரைக்கப் படுகின்றன. 
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன்.


