"சின்னமாமியே"  புகழ்  கமலநாதன்! மறைக்கப்பட்ட   பாடலாசிரியரும்  மறைந்தார்! இலங்கை  தமிழ்பொப்பிசைப்பாடல்    பிதாமகருக்கு அஞ்சலிஇலங்கையிலும்  தமிழ்நாட்டிலும்  நகரம்,  கிராமம்  உட்பட பட்டிதொட்டியெங்கும்  பிரசித்தமான  பாடல்தான்  "  சின்ன  மாமியே  உன்  சின்னமகளெங்கே ?  பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச்சென்றாளோ ?   "தமிழ்த்திரைப்படங்கள்  சிலவற்றிலும்  இடம்பெற்றுள்ளது.  இலங்கை வடமராட்சியைச்சேர்ந்த  கலைஞர்  கமலநாதன்  இயற்றிய அந்தப்பாடல்,  தற்பொழுது  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும் பிரபல  பாடகர்  நித்தி கனகரத்தினத்தால்  பிரசித்தி பெற்றது. ஒரு  கால கட்டத்தில்  இளைஞர்களை   பெரிதும்  வசீகரித்த இந்தப்பாடலை  இயற்றிய  கமலநாதன்  நேற்று (26-01-2016)  வடமராட்சி  -  வதிரியில்  அக்கினியுடன்    சங்கமமானார்.

சில   மாதங்களாக  சுகவீனமுற்றிருந்த  கமலநாதன்,  வடமராட்சியில் சிறந்த  கல்விப்பாரம்பரியத்தின்  பின்னணியிலும்  கலை, இலக்கிய ஊடகத்துறை  செயற்பாட்டாளர்களின்   பின்னணியிலும்  வாழ்ந்தவர். சிறந்த   உதைபந்தாட்ட  வீரர்.   பின்னர்  உதைபந்தாட்டப்போட்டிகளுக்கு    மத்தியஸ்தராகவும்  விளங்கியவர். பாடல்   புனையும்  ஆற்றலும்  இவருக்கிருந்தமையால்  சுமார் அரைநூற்றாண்டுக்கு  முன்னர்  எழுதிய  பாடல்தான்  சின்ன  மாமியே.   எனினும்  அதனை  மேடைகள்தோறும்  நித்தி கனகரத்தினம் பாடிக்கொண்டிருந்தமையால்,  கமலநாதனின்  பெயர்  வெளியில் தெரியவில்லை.   எனினும்  இப்பாடலின்  ரிஷிமூலத்தை  காலம் கடந்து  எழுத்தாளர்  வதிரி சி. ரவீந்திரன்  வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தார். இலங்கை   பத்திரிகைகளில்  இச்செய்தி  பகிரங்கமானபொழுது தன்னடக்கம்    பேணியவர்  கமலநாதன்.

ஒரு  காலகட்டத்தில்,  ஏ.ஈ. மனோகரன்,  நித்தி  கனகரத்தினம், இராமச்சந்திரன்,  முத்தழகு, அமுதன் அண்ணாமலை  முதலான  பலரால்  பொப்பிசைப்பாடல்கள்    இலங்கையிலும்  தமிழ்  நாட்டிலும்  பிரபல்யம்   பெற்றன. அவ்வாறே  சிங்கள  மக்கள்  மத்தியில்  எச்.ஆர். ஜோதிபால,  பிரடீ சில்வா,   ஷெல்டன்  பெரேரா,  எம்.எஸ். பெர்னாண்டோ,  மில்டன் மல்லவராச்சி  முதலானோரும்  பிரபல்யம்  பெற்றிருந்தனர்.

சமூக சீர்திருத்தம்  தொடர்பாகவும்   மனிதர்கள்,  மற்றும்   மாறிவரும் உலகத்தின்   நவநாகரீகம்   பற்றிய  அங்கதச் செய்திகளும்  இந்தப்பொப்பிசைப்பாடல்களில்   தொனிக்கும்.    இன்றைய   நவீன கணினி   தொழில்நுட்ப  சாதனங்கள்  இல்லாமலேயே   குறைந்தளவு வசதிகளுடன்   பொப்  பாடல்களின்  ஊடாக அவற்றை    இயற்றியவர்களின்  கருத்துக்களை  நகைச்சுவையுடனும் சோகரசத்துடனும்  நளினமான  ஆடல்கள்  மூலமும்  இந்தப் பாடகர்கள்   மக்கள்  மத்தியில்    எடுத்துச்சென்றனர். ஆனால்,  கேட்டு  ரசித்து  தாமும்  பாடும்  மக்களுக்கோ  இந்தப்பாடல்களை    இயற்றியவர்  யார்  ?  என்பது  தெரியாது.   அவ்வாறே    கமலநாதனும்  கிணற்றுள்  விளக்காக  வாழ்ந்தார்.

கமலநாதன்  இயற்றிய  சின்னமாமியே   இளம்வட்டத்தினரை அக்காலகட்டத்தில்  பெரிதும்  கவர்ந்தது.   வீடுகளிலும்  மக்களால் முணுமுணுக்கப்பட்டது.   இதனை  பல  சிங்களப்பாடகர்களும் பாடியதனாலும்   சிங்களப்படங்களில்  இடம்பெற்றதாலும்  சிங்கள ரசிகர்களிடமும்  சின்னமாமியும்  சின்ன   மகளும்  சென்றனர். தலைமுறைவேறுபாடுகள்   இன்றி  பொப்பாடல்கள்  மக்களிடம் வாழ்ந்த  அக்காலம்  பாடலாசிரியர்களினதும்  பாடகர்களினதும் ரசிகப்பெருமக்களினதும்   வசந்தகாலம்.   ஆனால்,  அந்தக்காலம் படிப்படியாக   மங்கி  மறைந்ததற்கு,   தொலைக்காட்சியின்  வருகை முக்கிய  காரணம்.

இன்றும்  இலங்கையில்  பொது   அரங்குகளில்,  கட்சி  அரசியல் மேடைகளில்   இசைநிகழ்ச்சிகள்  நடக்கின்றன.  அவற்றுக்கு  கணினி சாதனங்கள்   பெரும்    துணையாகியுள்ளன. ஆனால் -   தற்காலப்பாடல்கள்   நினைவில்   தங்குவதில்லை   என்பது அனைத்து   தரப்பு  மூத்ததலைமுறையினரின்  கருத்து. ஆனால் , அவர்கள்  பாடிய பொப்    பாடல்களை  இயற்றியவர்கள்  பற்றிய  செய்தியை  பாடியவர்களும்  சொல்லவில்லை.   ஊடகங்களும்  கண்டுகொள்ளவில்லை.   அதனால்  ரிஷிமூலம்,   நதிமூலம்  தெரியாதிருப்பதுபோன்று  -  கட்டிடங்களின்  அத்திவாரம் வெளித்தெரியாதிருப்பது  போன்று  -  நெடும்  வீதிகளுக்கு  அடியில் மறைந்திருக்கும்  கற்கள் போன்று   -  இந்தப்பாடலாசிரியர்களும் அறியப்படாமல்  மறைந்துவிடுகின்றனர்.   எழுதியவர்களும் உரிமைகோருவதற்கு  முன்வராமல்  அடக்கம்  பேணிவிடுவார்கள்.

தமிழகத்தின்  மூத்த கவிஞர்  ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையா இயற்றிய  அலைபாயுதே  கண்ணா  என்ற  பிரசித்திபெற்ற  பாடலை சிறந்த  இயக்குநர்  எனப்பெயரெடுத்த  மணிரத்தினமும்  தனது அலைபாயுதே  படத்தில்  ஒரு   காட்சியில்   பயன்படுத்தினார்.  ஆனால், தமிழ்மக்களிடம்   சாகாவரம்  பெற்ற  அந்தப்பாடலை   இயற்றியவரின்  பெயரை  அந்தப்படத்தின்  Title  இல்  காணமாட்டீர்கள்.

இலங்கையின் மூவின மக்களிடமும் பிரசித்திபெற்ற சின்னமாமியே பாடலின் ஆசிரியர் கமலநாதன் வதிரியில் நேற்று முன்தினம் 25 ஆம் திகதி மறைந்தார். இவர், தினகரன்  பத்திரிகையின்  முன்னாள்  பிரதம  ஆசிரியரும்  மூத்த இலக்கியவாதியும்    இலக்கிய  மொழிபெயர்ப்பாளரும்  அழகு சுப்பிரமணியத்தின்    ஆங்கிலப்படைப்புகளை    தமிழுக்கு கொண்டு வந்தவருமான    (அமரர்)  ராஜஸ்ரீகாந்தனின்  அண்ணா  உறவு முறையானவர்.  கமலநாதன்,    மற்றும்  ஒரு  ஊடகவியலாளரும்,   வதிரி  தேவரையாளி   இந்துக்கல்லூரியின்  ஸ்தாபகருமான   அமரர் (சூரன்) அவர்களின்   பேரன்    ரவிவர்மாவின்   நெருங்கிய    உறவினருமாவார்.

கமலநாதனும்   குடும்பத்தினரும்  1990    இற்குப்பின்னர்   எங்கள் நீர்கொழும்பில்  - நான்   வசித்த  சூரியா  வீதியில்  வசித்தனர்.   அதனால்   இவரின்  பிள்ளைகள்  எங்கள்  ஊர்  பாடசாலையில்  எனது மனைவியின்   மாணவர்களாகவும்  இருந்தனர்.அங்கு  நடக்கும்  பொது  நிகழ்ச்சிகளிலும்  கலந்துகொள்வதனால் எனக்கும்  ஊரில்  எனது  குடும்பத்தினருக்கும்  நெருங்கியவராகவும் கமலநாதன்    திகழ்ந்தார்.

1997  ஆம்  ஆண்டு  நீர்கொழும்பில்  மல்லிகை  ஜீவாவை   நாம் பாராட்டி   கௌரவித்த  நிகழ்ச்சியிலும்  கலந்து  சிறப்பித்தார்.   அன்று இவருடன்   ராஜஸ்ரீகாந்தன்,   வதிரி சி. ரவீந்திரன்,   மேமன் கவி,  (அமரர்) துரை  விஸ்வநாதன்,   தெளிவத்தை  ஜோசப்,   (அமரர்)  பிரேம்ஜி ஞானசுந்தரன்,   மு. பஷீர்,   திக்குவல்லை கமால்,  (அமரர்)  தங்கவடிவேல்  மாஸ்டர்,   நவமணி  ஆசிரியர்  சிவலிங்கம்,   தினக்குரல் ஆசிரிய   பீடத்திலிருந்து  சிவநேசச்செல்வன்,   தனபாலசிங்கம், வனொலி  ஊடகவியலாளர்  இளையதம்பி  தயானந்தா, ரூபவாஹினியிலிருந்து  சி. வன்னியகுலம்,   வீரகேசரியிலிருந்து சூரியகுமாரி   உட்பட பலர்  கலந்துகொண்டனர்.   இவர்கள் அனைவரதும்    நேசத்துக்குரியவராகவும்  திகழ்ந்தவர்  கமலநாதன்.

அங்கு   எமது  இல்லத்தில்  1998  ஆம்  ஆண்டு   தைப்பொங்கலன்று நடைபெற்ற  இலக்கியச்சந்திப்பிலும்  பங்கேற்றார். இறுதியாக  2013   இல்   வடமராட்சியில்  என்னை   நெல்லியடியில் கண்டுவிட்டு  தமது  வீட்டுக்கு  அழைத்துச்சென்று  உபசரித்தார்.வடமராட்சியில்  முன்னர்   மும்மூர்த்திகள்  எனச்சொல்லப்படும் மூவர்    இலங்கையில்  எந்தப்பாகத்தில்  கலை,   இலக்கிய,  முற்போக்கு   அரசியல்  கூட்டங்கள்  நடந்தாலும்  அதில் காட்சி தருவார்கள்.

அவர்கள்   எழுத்தாளர்  தெணியான்,   தேவரையாளி  இந்துவின் எழுதுவினைஞர்   கிளாக்கர்  இராஜேந்திரம்,  சதானந்தன்  மாஸ்டர். இவர்களில்   சதானந்தனின்  தங்கையைத்தான்  கமலநாதன்  மணந்தார். பெரிய   குடும்பத்தின்  தலைவனாக  விளங்கிய  கமலநாதன்  மறைந்துவிட்ட  செய்தி  எனக்கு  நேற்று  தாமதமாகத்தான் தெரியவந்தது.

தொலைபேசி   ஊடாக  அவரின்  குடும்பத்தினருக்கு  அனுதாபம் தெரிவிக்கின்ற   சமயத்தில்  கமலநாதனின்  பூதவுடலுக்கு இறுதிக்கிரியைகள்  நடந்துகொண்டிருந்தன.

நேற்று  அக்கினியில்  சங்கமமான  இக்கலைஞரின்  பாடல்  வரிகள் இன்றும்  மங்காமல்  ஒலித்துக்கொண்டிருக்கிறது.   பல தலைமுறைகளாக   சின்னமாமியே   ஈழத்தமிழர்   புலம்பெயர்ந்த நாடுகளில்  நடக்கும்  இசை  - களியாட்ட  நிகழ்ச்சிகளில்  மட்டுமன்றி, வீடுகளில்   நடக்கும்   பிறந்தநாள்     விருந்துகளிலும்    இந்தப்பாடல் ஒலிக்கிறது.

கமலநாதனுக்கு   எமது   அஞ்சலி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here