படித்தோம் சொல்கின்றோம்: புகலிடத்து    வாழ்வுக் கோலங்களில் எம்மை   நாம் சுயவிமர்சனம்   செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின்    அனந்தியின்    டயறி.ஒருவர்   மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம்,   ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை   மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது   கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை   என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம்.  காந்தியடிகளின் நாட்குறிப்பு,   நேரு   சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு   எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும்   நிகழும் சம்பவங்களை   குறித்து வைப்பதற்காக அறிமுகமான  Diary ( Daily record of event)   தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும்   அவ்வாறு அழைக்கப்படுகிறது. உலகப்பிரசித்தி  பெற்றவர்களின் டயறிகள் பிற்காலத்தில் அதிக விலையில்    ஏலம்போயிருப்பதையும் நூதன சாலைகளில் இடம்பெற்றிருப்பதையும்  அறிவோம்.

ஏற்கனவே   தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டிருக்கும் பெர்லினில்   வதியும் கருணாகரமூர்த்தியின் மற்றுமொரு வரவு அனந்தியின்  டயறி.  இதனை  அவர் 16  ஆண்டுகளுக்கு  முன்னரே எழுதத்தொடங்கி , அவரது கணினியில் வைரஸ் ஆதிக்கம் செலுத்தி, அந்தக்குறிப்புகளை   இழந்துவிட்ட சோகத்தில் நெடுநாட்கள்   இருந்தபொழுது,   டயறிக்குறிப்புகளின் பாங்கில் வெளியான   சில ஆங்கில தமிழ் நாவல்களைப் படித்ததும் மீண்டும் உற்சாகம்   கரைபுரண்டு ஓடவும் இந்த நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறார்.

காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்நாவலில் காலச்சுவடு ஸ்தாபகர் சுந்தரராமசாமியையும்  தமது என்னுரையில் நினைவுபடுத்தியுள்ளார். சு.ரா.  என இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்ட சுந்தர ராமசாமியின்   ஜே.ஜே. சில குறிப்புகள்   மிகவும்  முக்கியமான படைப்பு.    ஜோசஃப் ஜேம்ஸ் என்ற ஒரு எழுத்தாளனைப்பற்றியது. ஆனால், அவனுடைய எழுத்துக்களை   நாம்   பார்த்திருக்கவில்லை.   "தன்   உள்ளொளியை  காண  எழுத்தை ஆண்டவன்   அவன் " என்றும்  - அற்பாயுளிலேயே   மறைந்துவிட்டான் எனவும்  சொல்லியவாறு   சு.ரா.வே   கற்பனை செய்துகொண்டு எழுதிய புதினம் ஜே.ஜே. சிலகுறிப்புகள்.

 ஜே.ஜே. என்ற பெயரில் மாதவன் நடித்த படத்திலும் இந்த ஜே.ஜே. சில  குறிப்புகள் புதினம் முக்கிய அடையாளமாக வருகிறது,    அவள் ஒரு தொடர்கதையில் ஜெயகாந்தனின் சில நேரங்களில்   சில மனிதர்கள்    வருவது   போன்று.

கருணாகரமூர்த்தி   சிருஷ்டித்துள்ள அனந்தி பதின்மவயது  யுவதி. அவளும் ஜோசஃப் ஜேம்ஸ் போன்று ஒரு கற்பனைப்பாத்திரம். சு.ரா.,  ஜே.ஜே.  என்ற பாத்திரம் ஊடாக சமூகத்தை - கலை,  இலக்கிய உலகை  அங்கதப்  பார்வையுடன் பார்த்தவாறே கருணாகரமூர்த்தியும் எமது புலம்பெயர் தமிழ் சமூகத்தை அங்கதப்பார்வையுடன் எள்ளி நகையாடியவாறே   பார்க்கின்றார். நாமும்   ரசிக்கின்றோம்.  புகலிடத்தில் எம்மவரையும் அவர்களின் வாழ்க்கைக் கோலங்களையும்  அறிகின்றோம்.

தமிழ் இலக்கியத்தில் பாரதி முதல் இன்றைய படைப்பாளிகள் வரையில்   இந்த அங்கதம் சமூகம் குறித்து தொடருகின்றது.

இந்தப்புதினம்   பற்றி கருணாகரமூர்த்தி இரத்தினச்சுருக்கமாக இவ்வாறு  சொல்கிறார்:-

" நான்  வாழும் பெர்லினில் (ஜெர்மனி)  எனது வாழ்க்கைச்சூழல் எனைச்சூழவுள்ள   உறவு வட்டங்கள்,   முகநூல்,  வலைத்தளங்கள், சினிமா,  ஊடகங்கள்,  இலக்கியங்களில் நான் அவதானித்தவற்றின் மனங்கொளக்கூடிய  குறிப்புகளே   இத்தொகுப்பு.

ஒரு  நெடிய பயணத்தில் பசுமைக்காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக்  கண்ணில் விழுவது போன்றே நான் பதிவுசெய்திருக்கும்    இந்நினைவுகளும் இருக்கும்."

இந்நாவல் 2012  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1   ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை    தொடங்கி,  அதே வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம்   திகதி ஞாயிற்றுக்கிழமை முடிகிறது.

முடிகிறது   என்றும் சொல்ல  முடியாது.  வாழ்க்கை தொடரும் - கதைகளும் முற்றுப்பெறாமல் தொடரும்.  ஆனால், அனந்தி  தனது குறிப்புகளை  ஒரு வருடத்தில் வாசகர்களுக்காக முடித்துக்கொள்கிறாள்.

அவள்   மிகவும் புத்திசாலித்தனமான பெண்.   எமக்கும் அப்படி ஒரு பிள்ளை இருக்க வேண்டுமே... என்று வாசகர்கள் மனதிற்குள் கொண்டாடக்கூடியவிதமாக   அனந்தி என்ற பாத்திரம் வார்க்கப்பட்டுள்ளது.

அனந்தியின்   இந்த நாட்குறிப்புகளின் ஊடாக அவளையும் அவளது குடும்பத்தையும்    அவளது சுற்றுச்சூழலையும் தெரிந்துகொள்கின்றோம்.

இந்நாவலுக்கு  "  பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு " என்ற தலைப்பில் சிறந்த அணியுரை   வழங்கியுள்ள மூத்த விமர்சகர்   வெங்கட் சாமிநாதன்,  அனந்தியின்    கதையை   வாசகர்கள் நாவலுக்குள் பிரவேசிக்கும் முன்னரே தெளிவாக பதிவுசெய்துள்ளார்.    அதனைப் படிக்காமல் உள்நுழையும் வாசகர்கள் மேலோட்டமாக " இதென்ன வெறும் நாட்குறிப்புத்தானே "  என்று அலட்சியப்படுத்தவும் சாத்தியமுண்டு.

கருணகரமூர்த்தி  புகலிடம் பெற்ற எம்மவர் சமூகத்தையும் அதேசமயம்   தாயகத்தையும் நாம்  வாழும் புகலிடத்தில் பூர்வீகமாகவே    வேர்பிடித்து வாழும் வெள்ளை   இனத்தவரையும் சித்திரித்து - தான் பெற்ற அனுபவங்கள், தனக்கு கிடைத்த வரலாற்று    ரீதியிலான ஆதாரங்களையெல்லாம் திரட்டிக்கொண்டு  அனந்தி    என்ற பாத்திரத்தின் ஊடாகப் பதிவு செய்திருக்கிறார்.

மனித நேயம்   மனிதர்களிடம் மாத்திரம் காண்பிக்கப்படுவதல்ல , அந்தக்கருணையை    ஜீவராசிகளிடமும் காண்பிக்கலாம் என்பதற்கு ஒரு    சம்பவம். அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் உணவு விடுதிக்குச்சாப்பிடச்செல்லும் தம்பதி,   அங்கு மீன் தொட்டியில் உயிர்வாழும்  17  இறாத்தல்    எடையுள்ள அரியவகை   சிங்கிறாலை   (Lobster) யாரேனும் வந்து அதனை உணவாக்குவதற்கு முன்னர், $360  வெள்ளிகள் கொடுத்து விலைக்கு வாங்கிச்சென்று மீளவும் அதனை  கடலுக்கு விட்டுவிடுகிறார்கள்.  அது   மேலும் 80 ஆண்டுகளாவது வாழும் என்பது அவர்கள் நம்பிக்கை.

அந்தத்தம்பதியரின் ஜீவகாருண்யத்தை பதிவுசெய்யும் அனந்தி - அவர்களில்  அந்த கணவன் போன்ற கனவானை நிபந்தனையின்றியும்    காதலிக்கத்தயார் எனச்சொல்கிறாள்.

அனந்தி  பகுதி நேர வேலையாக   பராமரிக்கச்செல்லும் முதிய பெண்ணுக்கு சமைத்துக்கொடுத்துவிட்டு வருகிறாள். " ஏன்  இவ்வளவு தாமதம்...?" என்று  அம்மா கேட்கிறாள்.  தான் அந்த மூதாட்டிக்கு அன்று தயாரித்துக்கொடுத்த உணவு பற்றி சொல்கிறாள்.

"உடம்புளைஞ்ச   கழுதை உப்பளம் போச்சுதாம்" என்கிறாள்   அம்மா.

ஆனால் - அப்பா, " அடுத்த தடவை   தானும் அனந்திக்கு துணையாக வந்து  ஒத்தாசை புரிவதாகச் சொல்கிறார்.

அனந்தி எழுதுகிறாள்:  அப்பா என்றாலும் அப்பாதான்,  பெண் கஷ்டப்பட்டால் எந்த அப்பாவுக்குத்தான்   தாங்கும்.

இந்த  வரிகளைப் படித்தபொழுது நான் என்னையும் அதில் தேடிக்கொண்டேன்.

பெண்பிள்ளைகள்  தமக்கு வரும் கணவர் தந்தையை  போல இருக்கவேண்டும் என்றும் ஆண் பிள்ளைகள் தமது தாயைப்போன்று   மனைவி அமைய வேண்டும் என்றும் விரும்புவார்களாம்  என்று எங்கள் சமூகத்தில் சொல்வார்கள்.

புராணத்தில்  வரும் பிள்ளையார்கூட தனக்கு தாயைப்போன்ற ஒரு பெண்  மனைவியாக வேண்டும் என்றுதானாம் குளத்தங்கரைகளிலும் அரச   மரங்களின் கீழும் காத்திருக்கிறாராம்.  ஆனால், அவருக்கு இன்னமும்   பெண் கிடைக்கவில்லை.  ஆனால், பெண்கள் அதிகம் வணங்குவதும் பிள்ளையாரைத்தான்.

அனந்தியின் டயறியில் ஆங்காங்கே சில கவிதைகளும் வந்து பரவசமூட்டுகின்றன.   சிந்திக்கத்தூண்டுகின்றன.

அனந்தியின்   குடும்பம் முன்பிருந்த அடுக்ககத்தில் அயலவராக வாழ்ந்த பரணீதரன் என்பவரின் மனைவி ஒரு ஜெர்மனியப்பெண். அவளைச்சந்திக்கும்  சில  தமிழ் ஆடவர்கள் தங்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள   அழைக்கிறார்கள்.  அவர்கள் அவள் கணவன்   பரணீதரனின் நண்பர்கள்.  ஆனால், ஜெர்மன் சமூகத்தில் நண்பர்கள்   வட்டத்தில் அவளுக்கு அப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததில்லை.  அனந்தி கேட்கிறாள்...  பரணீதரனின் மனைவி தமிழச்சியாக   இருந்திருந்தால் இப்படி தமிழ்   ஆடவர்கள் அணுகியிருக்கத்தான்    முடியுமா...?   இந்தக்கேள்வி சாட்டையாக விழுகிறது.

ஒரு  நூல்  10  மனிதர்களுடன் இருப்பதைவிடவும் சந்தோஷத்தையும் அனுபவங்களையும்   கற்றுத்தரும் எனத்தொடங்குகிறது ஏப்ரில் 23  ஆம் திகதி உலக புத்தக தினத்தன்று    எழுதப்பட்ட குறிப்பு.  அந்தத்தினத்தில் வில்லியம் சேக்ஷ்பியரினதும்   Miguel de Cervantes என்ற  ஸ்பானிய எழுத்தாளரினதும் நினைவு தினங்கள் வருவதை குறித்துச்சொல்கிறாள்  அனந்தி.   அன்று மலிவு விற்பனை புத்தகக்கடையில்    புத்தகம் வாங்கிவிட்டு கவிதையும் எழுதுகிறாள்.

அனந்தியின் உயிரிலும் உணர்விலும் கலந்திருக்கிறார் கருணாகரமூர்த்தி.

  இந்தப்புதினத்திற்கு    கருணாகரமூர்த்தியின் டயறி என்று ஏன் அவர்    தலைப்பிடவில்லை   என்றும் வாசகர்கள் கேள்வி எழுப்பலாம்.    பதின்ம வயது அனந்தி தனது வயதையும் மீறிச்சிந்திக்கின்றமையால் அவ்வாறு கேள்வி எழுதல் சாத்தியம்தான்.

சமூகம்    இப்படித்தான் இருக்கும் - ஆனால் சமூகம் எப்படி இருக்கவேண்டும்   என்று   சிந்திப்பவன் படைப்பாளி.   கருணாகரமூர்த்தி   அனந்தியின் ஊடாக சமூகத்திடம் கேள்விக்கணைகளை    தொடுக்கின்றார்.

புகலிடத்தில்    எம்மவர்கள் நாவன்மைப் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகளில்    தமது  குழந்தைகளை   குருவித்தலையில் பனங்காய்வைத்ததுபோன்று துன்புறுத்துவதை   பார்த்திருப்போம். அப்படி  ஒரு நிகழ்ச்சியில்  மாற்றுச்சிந்தனையாளரான இலக்கிய விமர்சகர்    உரையாற்ற அழைக்கப்படுகிறார்.

அவர்  " உங்கள் பிள்ளைகளக்கு உங்கள் அன்பைத் தரலாம்.  ஆனால் உங்கள்   கருத்துக்கள்,  நம்பிக்கைகள்,  எண்ணங்களை   அல்ல. அவர்களிடம் தங்கள் சொந்த எண்ணங்களும் கருத்துக்களும் உள்ளன.    ஏனெனில் இன்று கிடைக்கும் தகவல்களும் அறிவும் எங்களுக்கு    கிடைத்ததைவிடவும் பரந்தவையும் வித்தியாசமானவையுமாகும்.   அந்தப்புரிதல் எல்லாப் பெற்றோருக்கும்    அவசியம்"   என்று    உரை நிகழ்த்தி சபையிலிருக்கும்  எம்மவர்களுக்கு கடுப்பேற்றுகிறார்.  அவர்கள் கூச்சலிட்டு  அந்த சிந்தனையாளரை   மேடையிலிருந்து இறக்கிவிடுகிறார்கள்.

அனந்தி   இவ்வாறு எழுதுகிறாள்: " ரஜனிகாந்த்  செய்யும் சேஷ்டைகளை    ஸ்டைலென ரசிக்கக்கூடிய எம்மக்களிடையே யோசித்துத்தான் யாரும் பேச வேண்டும்,   அவர்கள் புரிதல்கள் அப்படி."

செப்டெம்பர்  22 ஆம்   திகதிய நாட்குறிப்பு புகலிடத்தமிழர்கள் பற்றிய ஒரு   வெட்டு முகத்தோற்றத்தை   காண்பிக்கிறது.  அனந்தியின் நாட்குறிப்புகளில்     இளையோர் பார்வையில் தமிழர்கள் என்ற இந்த அங்கம்தான் சற்று   நீண்டது.

புகலிடத்தில் எம்மவரின் தனித்துவங்கள்,  அடையாளங்கள், யதார்த்தமாகவும்   சுவாரஸ்யமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம்   தலைமுறையினரின் பார்வையில் மூத்த தலைமுறையினர் எப்படி இருக்கின்றனர்...? என்பதை பிங்கலை என்ற   மாணவி குறிப்பிட்டிருக்கும் 21  விடயங்களை அனந்தி எழுதுகிறாள்.

 இன்றைய    கணினி யுகத்தில் சர்வதேசப்பார்வையுடன்   தான் பெற்றதையும் கற்றதையும் உணர்ந்ததையும் புரிந்துகொண்டதையும் அனந்தியின்    ஊடாக காட்சிப்படுத்தியுள்ளார் கருணாகரமூர்த்தி.

அனந்தியின் டயறி தமிழ் நாவலிலக்கியத்தில் புதிய வரவு. கிடைத்தால்    படித்துப்பாருங்கள்.   எம்மை    நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here