முருகபூபதியின் “உள்ளும் புறமும்” நூல் மதிப்பாய்வுஇப்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கை எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் நூல் ஒன்றுவெளிவந்திருக்கின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘உள்ளும் புறமும்’ என்னும் இந்த நூலுக்குச் சூட்டப்பெற்றுள்ள பெயர் ஒருபுனைகதைப் படைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. அதேசமயம் அவ்வாறிருக்க இயலாதென மறுகணம்நினைத்துக் கொண்டேன்.   கனடாவில் வதியும் க.நவம் அவர்களின் ‘உள்ளும் புறமும்’ சிறுகதைத் தொகுதியொன்றுமுன்னர் வெளிவந்திருப்பதனை  நன்றாக அறிந்தவர் முருகபூபதி. எனவே தமது புனைகதைப்படைப்பொன்றுக்கு இந்தப் பெயரைச் சூட்டி இருக்கமாட்டார். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம்,கட்டுரை, நேர்காணல் எனத் தமது ஆளுமையின் வெளிப்பாடாகப் பலதுறை சார்ந்த நூல்களைப்பூபதி ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்த நூல் வித்தியாசமான ஒரு நூலாக இருக்க வேண்டுமென எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டேன். நூலைத்திறந்து உள்ளே நோக்குகையில் நூலின் பெயருக்குக் கீழே ஒரு கோடிட்டு, இந்தக்கோட்டுக்குக் கீழ், “சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான பதிவுகள்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டபின்னர் குழப்பமில்லாத ஒரு தெளிவு உண்டானது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான உள்ளும் புறமுமான விபரங்கள் அடங்கிய பதிவு இந்த நூல் என்பதனைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

 அதேவேளை சில வினாக்கள் இயல்பாகவே எனது உள்ளத்தில் மேலெழுந்து வந்தன. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு -2011 ஜனவரி 06,07,08,09 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக, கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்து முடிந்தது. இந்த நூல் மாநாடு நடந்து முடிந்து ஆறாவது மாதம் ஜூன் 2011இல் வெளிவந்திருக்கின்றது. இவ்வளவு விரைவாக ‘சுடச்சுட’ இந்த நூலை வெளியிட்டு வைக்கவேண்டிய அவசரமும் அவசியமும் பூபதிக்கு ஏன் வந்து நேர்ந்தது? ஒரு  நிகழ்வினை திட்டமிட்டுச் செயற்படுத்த முடிந்தபின்னர், அந்த நிகழ்வு எவ்வாறு நடந்தேறியது என்பது பற்றி ஒரு பதிவு, நூலாக வெளிவரவேண்டுமா? என்பது இன்னொரு வினா.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றியும் இந்த மாநாட்டுக்கு முன்னர் நடந்த ‘சில குழப்பங்கள்’ பற்றியும் ஏற்கனவே சில தகவல்களைப் பலரும் அறிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு அறிந்தவைகள் யாவும் ‘புறமாகவுள்ள’ சில தகவல்கள் மாத்திரந்தான். பூபதியின் இந்த நூலைப் படித்து முடித்தபின்னர் புறத்தை முழுமையாகக் கண்டு கொண்டதுடன், வெளியில் இருந்தவர் அறியாத, அறிந்துகொள்ளமுடியாத அகத்தை (உள்ளும்) முறையாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

இலங்கையில் இதுவரைகாலமும் நடந்து முடிந்த இலக்கிய மாநாடுகளுக்குள் இந்த மாநாடு மிகுந்த பிரபல்யப்படுத்தப்பட்டதுக்கும், சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொண்டதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது இந்த மாநாட்டுக்கு எதிராகச் செய்யப்பட்ட எதிர்ப்பிரசாரம்தான் என்பதனைக் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியம். இந்த வகையில் நோக்கும் பொழுது மாநாட்டை எதிர்த்து நின்று பிரசாரம் செய்தவர்களுக்கு பூபதியும் மாநாட்டுக் குழுவினரும் நன்றி தெரிவிக்க வேண்டுமெனத் தோன்றுகின்றது.
முருகபூபதி மிக விரைவாக எழுதத் தகுந்த ஆற்றல் உள்ளவராக இருந்தபோதிலும், மொத்தம் இருபத்தேழு தலைப்புக்களில் உருவாக்கி இருக்கும் இந்தப் பெரிய நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்அனைத்தும் குறுகிய கால அவகாசத்தில் எழுதப் பெற்றவைகளல்ல. மாநாடு நடைபெறுவதற்கு முன்னரே ‘வக்கிரம் கக்கிய விஷம்’ தணிய பூபதி கொடுத்த ஒளடதம், ‘அவதூறுகளுக்குப் பதில்’, பத்திரிகைகள், சஞ்சிகைகளில், வானொலிகளில் செவ்விகள், வினாக்களுக்கு விடைகள், அறிக்கைகள் என்பன யாவும் உள்ளும் புறமும் விளங்கிக் கொள்ளத் தகுந்த வண்ணம் ஒவ்வொரு தலைப்புக்களில் தரப்பட்டுள்ளன. இவைகள் இந்த நூலின் நடுப்பகுதியில் இடம்பெற, முற்பகுதிக் கட்டுரைகள் அத்தகைய இலக்கிய மாநாடு ஒன்றினை நடத்துவதற்கான எண்ணக் கருவின் உருவாக்கம், முன்னரே பல மாநாடுகளை நடத்தி முடித்த பூபதியின் அனுபவங்கள் பற்றிப்பேசுகின்றன. அத்துடன் கொழும்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள் மாநாட்டு செயற்பாட்டுக்குழுவின் தெரிவு, நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று எடுத்த நடவடிக்கைகள் என்பன பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நூலின்இறுதிக்கட்டுரைகள், மாநாட்டு நிகழ்வுகள், அதன் பிரதான அம்சங்கள் ‘ஒன்றுகூடலின்மனநிறைவு’ என்பவற்றை எடுத்துக் கூறுகின்றன. குமரன் பதிப்பகத்தில் தரமாக உருவாகியிருக்கும் இந்த நூல் ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்’ வெளியீடாக வெளியிடப் பெற்றுள்ளது.

“முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்களித்த அனைவருக்கும் இந்நூல்சமர்ப்பணம்’ என நூலாசிரியர் பூபதி சமர்ப்பித்துள்ளார். யார்யாருக்கு நன்றி தெரிவிக்கவேண்டுமோ, விசேடமாக அவர்கள் பெயர்களை எல்லாம் நூலில் பதிவு செய்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த நூலின் மூலம் கிடைக்கக்கூடிய பணத்தினை மாநாட்டுச் செலவினை ஈடுசெய்வதற்குவழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் பற்றி இலக்கிய உலகில் பொதுவாக மிக உயர்ந்த ஒரு கருத்துண்டு. அவர் யாரோடும் முரண்பட்டுப் பகைத்துக் கொள்ளாத மென்மையான பண்புள்ளவர். மாற்றுக்கருத்துள்ளவர்களையும் விளங்கிக் கொண்டு அதேசமயம் தான் விலை போகாது இணங்கிப்போகின்ற ஒருவர். இலக்கியவாதிகள் பலர் அவருடைய இந்த நல்ல பண்பினை அவரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும்.

பூபதியின் இத்தகைய சிறப்பினை உணர்ந்து, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை அவர் முன்னின்று நடத்த வேண்டுமென அவரை உந்தித் தள்ளிக் கொண்டு வந்தார்கள். இலக்கியகர்த்தாக்களுடன் சர்வதேச மட்டத்தில் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கும் பூபதி, மாநாட்டினை நடத்தி முடிப்பதற்கான செயற்பாட்டில் இறங்கியவேளையில்தான், பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேர்ந்துள்ளது.

தீர்க்கமாகச் சிந்தித்து, திடமாக எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கி ஓடும் பாதையில் பூபதி கடந்த காலத்தில் வளர்ந்துவரவில்லை. துணிச்சலுடன் நின்று மாநாட்டினை நடத்தி முடித்திருக்கின்றார். பூபதி ஒருவர் மாத்திரம் எடுத்து முடித்துள்ள இலக்கிய மாநாடு அல்ல இது. ஆனால் இந்த இலக்கிய மாநாட்டின் மூலமூர்த்தி முருகபூபதி என்பதனை எவரும் மறுத்துரைக்க இயலாது. நடந்து முடிந்த இந்த மாநாடு முதலாவது மாநாடு என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இரண்டாவது, மூன்றாவது மாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுமென்னும் ஊகத்தை இது கொடுக்கின்றது. ஆனால் இந்த நூலில் பூபதி பதிவுசெய்யாத, மாநாடு சம்பந்தப்பட்ட சில காரியங்களும் பின்னர் நடந்தேறி இருக்கின்றன.

அவைகளைநோக்கும் பொழுது பூபதி தமது இலக்கிய வாழ்வில் நம்பிக்கைக்குரியவர்களாக யார்யாரைக்கருதி, மதித்து நடந்து வந்தாரோ, அவர்களினால் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி இருக்கின்றார் என்பதனை அறிய முடிகின்றது. இத்தகைய ஒரு நிலைமை நல்ல தெளிவினைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் வந்து சித்தித்திருக்கின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்ந்து நடைபெறுமோ, என்னவோ!

ஆனால் இந்த இலக்கிய மாநாடு போன்ற மாநாடுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு வழிவகுப்பதாக முதல்மாநாடு அமையும் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. அதன்வெளிப்பாட்டையும் அண்மையில் கண்டுகொள்ள முடிந்ததை எண்ணிப் பூபதி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ‘உள்ளும் புறமும்’ நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். மேலும் பல விபரங்களைஅறிந்து கொள்ளலாம்.

பிரதிகளுக்கு: கொழும்பில் - பூபாலசிங்கம் புத்தகசாலை, குமரன் பதிப்பகம்.
யாழ்ப்பாணத்தில் - பரணி புத்தகக்கூடம் , நெல்லியடி
அவுஸ்திரேலியாவில்: ;: International Tamil Writers Forum
P.O.Box- 350, Craigieburn, Vic-3064

அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here