- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -தாய்மைப் பண்போடு உயிர்கள் தோற்றுவாய்க்குரிய முதன்மை காரணியாய் உடையோர் பெண்களே ஆவர்.  அத்தகு பெண்கள் பல்வேறு வியப்பிற்குரிய செயல்களை இன்று வரையும் செய்து கொண்டே வருவது நாமறிந்ததே.  எனில் அவ்வியப்பான அவர்களின் வாழ்வு மிகுந்த வேதனைக்குரியதாகவும் இருந்ததை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.  சங்க கால சமூகம் வீரயுக சமூகம். சங்க காலப் பெண்கள் மறக்குடி மகளிராகவும் தன்மானம், ஒழுக்க நிலையோடு வாழ்ந்ததையும் மறுக்கவியலாது.  எனில் அன்றைய சமூகத்தில் பெண்கள் பல்வேறு வகை சமூகச் சிக்கலுக்குள்ளும் ஆளாகியதையும் மறுக்க முடியாது.

வியப்பு நிலை
சங்க காலத்தில் பெண்கள் வாழ்வில் காதல் செய்து கணவனைத் தேர்ந்தெடுக்கும் நிலையும், உரிமையும் இருந்தது.  சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இலக்கிய பாடலைப் பாடும் அளவிற்கு பெண்கள் வாழ்வு இருந்துள்ளது.  ஒளவை போன்ற பெண்பாற் புலவர் அதியமானின் அவைக்கள புலவராகவும், முதன்மை அமைச்சராகவும், அறிவுரை சொல்வோராகவும், ‘தூது’ செல்லுதற்குரிய உரிமை பெற்றவராகவும் வாழ்ந்துள்ளதை வழி அறியலாம். ‘கற்பு ஒழுக்கம்’   என்று விதிக்கப்பட்ட வரையறைக்குள் ஓர் ஆடவனையே எண்ணி ஒழுக்கமாகவும், குடும்பத்தை பேணி பாதுகாத்தும் இல்லறத்தை நடத்திய பெண்ணின் எண்ணமும், சிந்தனையும் மிகுந்த சிறப்பிற்குரியதாக இருந்துள்ளது.

பெண்களின் வீரம்
சங்க காலத்து மறக்குடிப் பெண்கள் நிலை மிகவும் வியப்பிற்குரியதாக இருந்ததற்கு சான்றுகள் சில காணப்படுகின்றன.  புறநானூற்று பாடலொன்றில், “தன்னுடைய மகனை போருக்கு அனுப்புகிறாள் தாய்.  போர்க்களத்தில் தன் மகன் இறந்து விடுகிறான்.  அப்போது அவ்வூரில் உள்ள சிலர், உனது மகன் புறப்புண்பட்டு இறந்து போனான் என்று கூறுகின்றனர்.  அப்போது கோபம் கொண்ட தாய், ‘என் மகன் புறப்புண்பட்டு இறந்து கிடந்தாள் அவனுக்கு பால் தந்த என் மார்பை அறுத்துக் கொள்கிறேன்’ என கையில் வாளினை எடுத்துக் கொண்டு, போர்க்களம் நோக்கிச் செல்கிறாள்.  போர்க்களத்தில் பல உடல்கள் வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கிறது.  அங்கே தன் மகனின் உடலும் வெட்டப்பட்டு சிதறுண்டு கிடக்கிறது.  அவன் உடலை ஒன்று சேர்த்து பார்க்கிறாள்.  அவள் மகனோ மார்பில் புண்பட்டு இறந்தான் என்பதை அறிந்து மகிழ்கின்றாள். இக்காட்சியை, சங்கப் புலவர் சிறப்புற விவரிக்கின்றார்.  அத்தகு சிறப்பு மிகுந்த வீரம் கொண்ட பெண்கள் பண்டைய காலத்தில் இருந்தனர்.

மேலும், போரிடும் காலத்தில் பெண்களுள் சிலர் வாளினை ஏந்தி, புண்பட்டு கிடக்கும் மறவர்களின் புண்களுக்கு மருந்திட்ட செய்தியையும் காண முடிகிறது.  போர்க்களத்தில் வெற்றி பெற்ற பின்னர் வெற்றி களிப்பில் கூத்தாடி (வள்ளிக்கூத்து போன்றவை) மகிழ்ந்ததையும் காண முடிகிறது.

பெண்களின் தகுதி
“கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும்
நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும்
சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”
(தொல்காப்பியம் நூ. 150)

என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர்.  “ஈன்று புறந்தருதல் என்தலை கடனே” என்ற புறநானூற்றுப் பாடலின் வழி குழந்தையை பெற்று தருதலும் பெண்ணின் கடமையென கொண்டனர்.
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான”
(தொல்காப்பியம் நூ. 1155)

என்று செறிவு, நிறைவு, செம்மை, ஒழுங்குற செப்புதல், அறிவு, அருமை ஆகிய தகுதிகளும் பெண்ணிற்குரிய தகுதியாக அமைந்திருந்தது.  மேலும் கணவனை எண்ணியிருத்தல், தலைவன் வரும் வரை அவனுக்காக காத்திருத்தல், வந்ததும் மகிழ்தல், இருவருக்குமான இல்லற வாழ்வை எண்ணி மகிழ்தல் என சங்க இலக்கியத்துள் பல பாடல்களும், தொல்காப்பியத்துள் அகம் சார்ந்த பாடல்களும் பெண்ணின் வியக்கத்தக்க செயலை தெளிவுற விளக்குகின்றது.

வேதனை
வியக்கத்தக்க வகையில் அமைந்த பெண்களின் வாழ்வு ஒருபுறமிருக்க, தந்தை வழி ஆணாதிக்கச் சமூகமாகவும் இருந்த பண்டைய சமூகம் பெண்களுக்கு கட்டுப்பாடுகளை மரபுகள் எனும் பெயரில் புகுத்தியிருந்தது என்பது பெரும் வேதனையே!

காதல் நிகழ்வினில் கூட, தலைவனுக்கே தகுதிகள் அதிகமாக இருக்க வேண்டுமென்றும், பெண்ணிற்கு தகுதிகள் குறைந்தே இருக்க வேண்டுமெனவும்
“ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினும் கடிவரை யின்றே” (தொல்காப்பியம் நூ.90)

என்ற பாடலின் வழி மேற்கூறிய கருத்தை வெளிப்படுத்துகிறது.  ஆணுக்குரிய தகுதிகளாக, “பெருமையும் உரனும் ஆடுஉ மேன” (தொல் பொருள் ஐஐ கழகம், நூ. 95) என்று பெருமை, வீரம் என்று கூறிய சூழலில், அச்சம், மடம், நாணம் பெண்ணுக்குரியதாக,

“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய” (தொல்காப்பியம் நூ. 96)

என்று பெருமையையும், வீரத்தையும் பெண்மகளுக்குக் கூறப்படாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.  தூய்மையோடு பெண்கள் வாழ்ந்த நிலையில், திருமணமான ஆண்கள் பரத்தை வைத்து கொள்வதை, “பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே”    (தொல்காப்பியம் நூ. 220) என்று அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் பரத்தை வைத்து கொள்ளும் உரிமையை உடையோராக சமூகத்தில் ஏற்றக் கொள்ளப்பட்டிருக்கிறது.  (அந்தணர் பரத்தை வைத்துக் கொள்வதில்லை என்பது ஆராய்ச்சிக்குரியதே.)

“கற்பு வழிப்பட்டவள் பரத்தை ஏத்தினும்
உள்ளத் தூடல் உண்டென மொழிப”
(தொல்காப்பியம் நூ. 229)

கற்புடைய நங்கை பரத்தையை நாடிய ஆண் மீது கோபம் கொள்வாள்.  எனினும் எதிர் மறுத்து உரைத்தல் கற்புடைய நங்கைக்கு கூடாது என்றும், தவறு செய்த கணவனை ஏற்க வேண்டும் என்று கூறுவது கொடுமையிலும் பெருங்கொடுமையாகும்.

“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலையான” (தொல்காப்பியம் நூ. 1133)

என்ற பாடலுள், பூப்பெய்திய நாளிலிருந்து ஈராறு நாளும் (2 ஒ 6 ஸ்ரீ 12) ஆண்கள் வேறு எங்கும் சென்றும் தங்குவதில்லை.  குறிப்பாக, பரத்தையை விட்டு பிரிந்த காலமெனவும் உரைக்கிறது.  பரத்தை பிரிவு பற்றி மருதத் திணைப் பாடல்கள் பலவும் குறிப்பிடுகிறது.  பரத்தையை நாடுதற்காக உயர்ந்தோராக இருந்தோர் பாணர் போன்றோரை தூதுவர்களாக வைத்திருந்ததையும், அவர்கள் சென்று தலைவன் வருகிறான் என்று பரத்தையிடம் கூறியதையும், கற்பு ஒழுக்கமுடைய மனைவி பாணரை இகழ்ந்த செய்திகளும் பெண்ணினத்திற்கான வேதனையின் உச்சமே யெனலாம்.

தேரேற்றிக் கொண்டு வந்த பரத்தையரை முற்பட நுகர்ந்து பின்னர் சேரி பரத்தையரை நுகர்ந்து விடியலில் மனைவயிற் செல்கின்ற ஊரன் ” (கலி. பா. 74) என்று காமக்கிழத்தியே புலம்புவதாகவும், பாணனுக்கும் பித்து ஏறியது என்று கூறுவதையும் பாடலுள் காணமுடிகிறது.  எட்டுத்தொகை அகநூல்கள் பலவற்றிலும், மருதத்திணைப் பாடலுள்ளும்; இக்கருத்துக்களை காண முடிகிறது.  பெண்ணானவள் வருந்தி நிற்கும் செய்யுள் ஏராளமாக உள்ளது.
“கடிஇலம் புகூஉம் கள்வன் போல” (அகநானூறு பா. 276)

என்று காவல் உள்ள வீட்டில் புகும் கள்வனைப் போல தலைவன் புகுந்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவை யாவும் இல்லற வாழ்வில் இல்லத்தை பேணி நின்ற பெண்ணிற்கு இழைக்கப்பட்ட வேதனையே யன்றி வியப்பல்ல.  அடிப்படையில் பெண்கள் வியப்பானவர்களாக இருந்திடினும், அவர்கள் ஆணாதிக்கத்தால் குரல்வளை நெரிக்கப்பட்டே கிடந்தனர்.

காதல் செய்யும் உரிமை பெற்றவளாயினும், அவள் தன்னை காதல் செய்யும் ஆடவனை மறுத்தால், ‘அவன் மடலேறிச் சென்று தான் எந்த பெண்ணை விரும்பினானோ அந்த பெண்ணை விரும்பினேன் என தாம் துன்பப்பட்டேன் ஆயினும், பெண்ணை இழிவுபடுத்துவேன் என மிரட்டுவதற்கு ஆடவனுக்கு உரிமை உண்டு.  அனால் பெண்ணோ தன்னை ஏமாற்றிய, அல்லது தான் விரும்பிய ஆடவனை ஊராருக்கு கூறும் மடலேறுகிற உரிமை கிடையாது.  இதனை,

“எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான” (தொல்காப்பியம்; நூ.38)
“மடல்மா கூறும் இடனு மாருண்டே” (தொல்காப்பியம்; நூ. 99)

என்ற நூற்பாவின் வழி அறிய முடிகிறது.  இது பெண்ணினத்தை ஆண்கள் எப்படி யெல்லாம் பயமுறுத்தி அடைய முற்பட்டனர் என்பதற்கு சான்றாகிறது.
அதே போல ஆண்கள் கடல் தாண்டி செல்லலாம்.  ஆனால் பெண்களோடு கடல் தாண்டி செல்லுதல் கூடாது என்பதை,

“முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”
(தொல்காப்பியம்; நூ.37)

என்ற நூற்பா விளக்குவதன் மூலம் பெண்கள் கடல்தாண்டி செல்லும் முறை மறுக்கப்பட்டதை அறிகிறோம். மேலும், காப்பிய காலத்தில் (கி.பி. 2-ம் நூற்றாண்டு)

“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ” என்பதை மையமாகக் கொண்டு சிலப்பதிகார காப்பியமே படைக்கப்பட்டிருக்கிறது.  அதில் தன் கணவனுக்காக மதுரையையே எரித்தாள்.  அதனால் பாண்டிய மன்னனே இறந்தான் என்பதும், கணவன் மீது கண்ணகி எத்தகைய அன்பு கொண்டிருந்தாள்; என்பது வியப்பாயினும் கோவலன் வேறு பெண்ணான ‘மாதவி’ யோடு உறவு கொண்டு குழந்தையும் பெற்றுக் கொள்ள அவள் எத்தகைய துன்பத்தில் வாழ்ந்திருப்பாள் என்பதே வேதனைக்குரிய விசயமாகும்.  மாதவியோடு வாழ்ந்த கோவலன், வேறு பெண்ணை எண்ணி யாழிசைக்க, மாதவியோ பொய்யாக வேறு ஒரு ஆடவனை எண்ணி யாழிசைக்கிறாள்.  அதனால் கோபம் கொண்டு கோவலன் செல்கின்றான் என்றால் ஆண்களின் ஆதிக்கம் எத்தகையதாக இருந்திருக்கும்.

சேரன் செங்குட்டுவன் “முலை யறுத்த திருமா வுண்ணி” யான கண்ணகிக்கு சிலை எடுக்கும் அளவிற்கு தன் கணவனைக் கொன்ற மன்னனையே எதிர் வினா தொடுத்து மதுரையை அழித்தாள் என்று கூறும் செய்தி வியப்பிற்குரியது என்றால், தூய்மையான அப்பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு சென்ற நிலை கொடுமையுடையதா?  இல்லையா?

அக்கால மன்னர் சமுதாயத்தில், வள்ளல், குறுநில மன்னர்;, வேந்தர் என சுமார் 322 - பேர் இருந்துள்ளனர்.  அவர்களுள் ஒருவரேனும் பெண்ணுண்டோ?  இலக்கிய பாடல் பாடியவர்களில் 30 பேர் பெண் என்றால் அப்பாடல்கள் கூட, துன்ப நிலையைத் தான் எடுத்துரைக்கின்றன.  ஆண்களுக்குள்ளான போட்டிகளுள் பெண்கள் பெருந்துன்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.  “மகட்பாற் காஞ்சி” என்பதன் வழி பெண்ணை தர மறுத்தவனோடு போரிட்டு பெண்ணை பெற்றால் அப்பெண் எப்படி நிம்மதியான வாழ்வு நடத்தியிருக்க முடியும்.

சேர மன்னன் ஒருவன் வெற்றி பெறுகிறான்.  அவன் எதிர் நாட்டிலுள்ள பெண்களின் கூந்தலை யெல்லாம் அறுத்து கயிறாகத் திரித்து தம் யானைகளை இழுத்து வந்தான் என பதிற்று பத்து பாடல் குறிப்பிடுகிறது.  மன்னர்கள் போரிட பெண்கள் என்ன  பாவம் செய்தார்கள்.  இதனை புலவன் சேரனின் வலிமையை காட்டுவதற்காக பாடினான் எனில், இது போன்ற பாடலை அவனால் எப்படி பாட முடிந்தது?  அதனை ஏற்று மன்னன் எப்படி பரிசில் தர முடிந்தது என்பதெல்லாம் சங்க காலத்தைப் பற்றி முன் வைக்கும் கேள்விகளாகும்.

பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகிய பெண்கள், தம் கணவன் இறந்து போனால் தானும் இறந்து போவதும், மொட்டையடித்து தம் அழகைச் சிதைத்து, ஒழுங்கான உணவை உட்கொள்ளாமலும் சாகும் காலம் வரை கணவனையே எண்ணி கொண்டு வாழ்ந்த வரலாறு வியப்பானதா?  வேதனையானதா?

“மன்னுறு மழித்தலை யானும் தென்நீர் வார
கழி கல மகளிர் போல” (புறநானூறு 280 : 11-14) பாடலில்,

“முடியினை களைந்த தலையினை கழுவுகின்ற போது, மொட்டையடித்த தலையில் தெளிந்த நீரானது வடிய, பெண்ணானவள் தம் இளமைக் காலத்தில் தழைமாலையாக விளங்கிய ஆம்பல் பூவில் உள்ள அல்லி அரிசியை உண்ணும் அணிகலன்கள் களைந்த கைம்பெண்ணைப் போல” கணவன் இறந்து பின்னர் வாழும் பெண் போல என ஒரு புலவன் மேற்கூறிய செய்தியை தருகின்றார்.  மேலும்,

“கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவி” (புறநானூறு பா.250)

என்ற பாடல்களின் வழி கணவன் இறந்து போக, பெண்ணை மொட்டையடித்தலும், அலங்கோலப்படுத்தலும் ஒழுங்கான உணவின்றி வாழ செய்தலும் எத்தனை கொடுமையுடைய செயல் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. பண்டைய காலம் போர்களே மிகுதியும் நிகழ்ந்த காலமானதால்  எத்தனை பெண்கள் இத்தகைய கொடுமைக்கு ஆளாகியிருப்பர் என்று எண்ண வேண்டாமா? இவை வியப்பிற்குரியதா? இ;ல்லை வேதனைக்குரியதா? ஆராய வேண்டாமா?

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை எனும் மன்னனின் மனைவி,         “தௌ;ளழற் பற்றி பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனர் மடந்தை
இன்னும் வாழ்வ லென்னிதன் மார்பே” (புறநானூறு 245: 5-8)

என்று கணவன் இறந்தால் தீயினில் எறிந்து தன் உயிர் மாய்க்கிறாள். பூதப் பாண்டியன் மனைவி கோப்பெருந் தேவியும், உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள் என்ற செய்திகள் காணப்படுகின்றது. கணவன்  இறந்தாலும் மனைவி இறந்து போவது மரபு என ஒரு புறமிருக்க, இறந்த ஆண்மகனை எறிக்க அதில் தீயில் புகுந்து எறிவதும், அல்லது தீமூட்டப்பட்ட இடத்தில் பெண்ணானவள் தானே எறிந்து சாம்பலாகுவதும் எத்தகைய கொடுமை.  இக்கொடுமையையே மரபென  எப்படி அரங்கேற்றினர். பண்டையோரால் இந்நிகழ்வு எப்படி ஏற்க முடிந்தது.  இத்தகைய  வேதனையை விடவும் பெண்ணினத்திற்கு வேறு வேதனைதான் உண்டா?  பெண்கள் வியப்பிற்குரியோராக  இருந்திடினும், ஆணாதிக்கச் சமூகம் அவர்களை பல்வேறு  வகையான வேதனைக்கே ஆளாக்கியது என்பது மட்டுமே நாம் கண்ட உண்மை. பெண்கள் வியப்பிற்குரியவர்கள் தான்! ஆனால்  சமூக கட்டமைப்பும், ஆணாதிக்கமும் அவர்களை, மரபு எனும் பெயரில் எல்லையில்லாத வேதனையையே அனுபவிக்க வைத்திருக்கிறது.

துணை நூல்கள் :   
1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, மு.ப. 1947.
2. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை (அடிகளாசிரியர் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவ10ர். மு.ப. 2008.
3. புறநானூறு, உ.வே. சாமிநாதர் உரை, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை. ஏ.ப: 1971.
4. அகநானூறு, ந.மு. வேங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18, இ.ப. 1957.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ரூ பிற இலக்கிய சமூகவியல் நூல்கள்.


*கட்டுரையாளர்: - பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here