ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒளவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். சங்க காலம், நாயன்மார்காலம், கம்பர்காலம், இக்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. சங்க கால ஒளவையார் இலக்கியப் புலமை, சமயோகித அறிவுமிக்கவர்களுள் அதியமான் அவைக்களப் புலவர்களுள் நட்பாற்றலும், தன்முனைப்பும், பேரன்பும் கொண்டவர். இவர் இன்தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமது பாடல்கள் மூலம் அருந்தொண்டாற்றியவர். பெண்பாற் புலவர்களுள் முதன்மையானவர். தமிழகத்தின் முதல் பெண் தூதுவர் - கிரேக்கப் பெண்பாற்புலவர் சாப்போவுடன் ஒப்பிடத்தக்கவர்.

ஒளவையார் சங்க இலக்கியத்துள் 59 பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் அகப்பாடல்கள் 26. புறப்பாடல்கள் 33. அகப்பாடல்களுள் குறுந்தொகை 15. நற்றிணை 7. அகநானூறு 4. இவற்றுள் 'நல்ல குறுந்தொகை' என்று போற்றப்படும் குறுந்தொகைப் பாடல்களுள் ஒளவையாரின் பாடல்கள் தலைவிக் கூற்றுப் பாடல்களாகவே அமைந்துள்ளன. புறப்பாடல்களுள் அதியமான் மகன் பொகுட்டெழினி குறித்தும் நாஞ்சில் வள்ளுவனைப்; பற்றி ஒரு பாடலும் மூவேந்தர்கள் பற்றி ஒரு பாடலும் பிற பாடல்கள் ஆறு என அப்பாடல்கள் அமைந்துள்ளன.

அகப்பாடல்களில்...
அகமாந்தர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தருணத்தில் உரையாடுகின்றனர். அந்த உரையாடல் தனித்தோ மற்றவர்களுடனோ அமைகிறது. இதனைத் தொல்காப்பியர் களவியலிலும் கற்பியலிலும் பொருளியலிலும் விளக்குகின்றார். அந்தவகையில் தலைவிக் கூற்று நிகழும் சூழல்கள் பலவாகும். குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல்களில் தலைவிக் கூற்றுப் பாடல்கள் இங்குக் களமாக்கப்படுகிறது. குறுந்தொகையின் 15 பாடல்களை 4 வகைப்படுத்தலாம். அவை,

* பிரிவுத் துயரால் வருந்தும் தலைவிக் கூற்று
* தலைவி தன் நெஞ்சுக்கு உரைத்தல்
* தலைவியின் இரங்கல் கூற்று
* ஆற்றியிருக்கும் தலைவியின் கூற்று

சான்றாக...
பிரிவுத் துயரால் வருந்தும் தலைவிக் கூற்றாக மூன்று பாடல்கள் (28,39,43) உள்ளன. தலைவனைப் பிரிந்த தலைவி 'தன் துன்பம் அறியாமல் ஊரார் உறங்குகின்றனரே' என்று வருந்துகின்றாள். தன் துயர நிலையை அறிவிப்பதற்காக 'முட்டுவேனோ? தாக்குவேனோ? ஆ, ஒல் என ஒலியெழுப்பிக் கூப்பிடுவேனோ? எதைச் செய்வேன் என்று அறியேன்’ என்று கூறுகிறாள். இவ்வாறு தலைவி பிரிவாற்றாமையால் புலம்புவதைத் தொல்காப்பியர்,

'கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் ஊர்க்கே
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்'   (தொல்.கற்பு-145)

என்ற கூற்று முறையில் அடக்குவார். தலைவனைப் பிரிந்த தலைவி பிரிவாற்றாமல் புலம்புவதாய் அமைந்த பாடல்,

'முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன், யானும்ளூ ஓர் பெற்றி மேலிட்டு
ஆ அ! ஒல், எனக் கூவுவேன் கொல்?
அலமரல் அசைவளீ அவைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே' (குறுந்.பா-28)

இப்பாடலில் தலைவி தலைவனைப் பிரிந்த துயரின் எல்லை உணர்ந்தவளாய், பிரிவுத் துயர் நீக்கும் வழி அறியாதவளாய்த் தவித்துப் புலம்புகிறாள். தலைவியின் இரங்கல் கூற்றில் தலைவனைப் பிரிந்த தலைவி கார்கால வரவினைக் கண்டு வருந்துபவளாய்க் காட்சியளிக்கிறாள். 'தலைவன் தன்னை மறந்தவன் ஆயினான்' என்று கருதுகிறாள்.

'உள்ளீன் உள்ளம் வேமே உள்ளா
திருப்பினெம் அளவைத்தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே' (குறுந்.பா-102)

காதலரை நினைத்தால், அவர் பிரிவு என்னும் தீயினால் நினைக்கின்ற என் மனம் வேகா நிற்கும். காமநோய் எம்மைச் சாகும்படி வருந்தச் செய்து, அது வானத்திலும் வந்து வருத்தத்தக்கது என்கிறாள். மேலும், இத்தகு வேதனையைத் தந்த தலைவன் சான்றோன் அல்லர் என்று பழிக்கிறாள்.

புறப்பாடல்களில்...
ஒளவையார் தனது அகப்பாடலில் தலைவியின் உள்ளப்போக்கைப் பறைசாற்றுவது போல, தனது புறப்பாடலில் அறக்கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். 'அறம'; என்பதற்குப் பல நூல்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தாலும் கூட, ஒளவையாரின் பாடல்கள் சில கருத்துக்களைப் பகர்கின்றது. ஒளவையாரின் அறக்கருத்துக்களை 6 பிரிவுக்குள் அடக்கலாம். அவை,

* ஒழுக்கம் விழுப்பம் தரும்                
* நட்பறம்
* உயிர்க்கொடை
* ஈகையறம்
* நாஞ்சில் வள்ளுவனின் கொடையறம்
* பகுத்துண்ணல்

சான்றாக...
ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பதற்கு ஒளவையாரின்

'நாடா கொன்றோ காடா கொன்றோ! அவலா கொன்றோ
மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர்! அவ்வழி
நல்லை வாழிய நிலனே'   (புறம்.187)

என்னும் பாடலைக் கூறலாம். 'நிலம்' என்பது மக்கள் இணைந்து வாழும் இடமாகும். நிலத்தின் தன்மை அதில் வாழக்கூடிய மக்களின் நிலையைப் பொறுத்தே அமையும். ஆடவரது ஒழுக்கமே அனைத்திற்கும் அடிப்படை என்கிறார். 'இயற்கையாலும் பெண்ணாலும் சமூகத்திற்கு நன்மையே கிடைக்கும் ஒரு சமூகம் கெடுவது ஆணாலேயே என ஆடவரையே ஒளவையார் நயமாக இடித்துப் பேசுவதாகத் தமிழண்ணல் புதுவிளக்கம் தந்துள்ளார்' (இரா.காஞ்சனா, பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண்ணிய மொழியும். ப.136)

ஈகையறம் என்பது 'செல்வத்துப் பயனே ஈதல்' ( புறம்.189) 'ஈதல் இசைப்பட வாழ்தல்' (குறள்.231) என்று பேசப்படுகிறது. இரவலர்கள், புலவர்கள் மட்டுமின்றிப் பாணர், கூத்தர், பொருநர், விறலியர் போன்ற ஏனைய கலைஞர்களுக்கும் அவர்களது வரிசையறிந்து பொன், பொருள், குதிரைகள், யானைகள் மட்டுமின்றித் தனது ஆட்சிக்குட்பட்ட ஊர்களையும் பரிசாகக் கொடுத்தனர். சங்க கால மன்னர்கள் தன்னை நாடி வந்தோர்க்கு இல்லையெனக் கூறாது அள்ளித்தரும் வள்ளலாம் அதியமானை,

'அலத்தற் காலையாயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தானே'   (புறம்.103:10-11) எனவும்

'பரிசிலர்க்கு அடையா வாயிலோனே' (புறம்.206-5) எனவும் சுட்டுகிறார்.

பரிசில்க்கு எப்போதும் உதவும் ஏழைப் பங்காளன் என்பதை  அவனது அரண்மனை வாயில் எப்போதும் திறந்தே திறக்கும் என்பதன் மூலம் குறிப்பாகயச் சுட்டியுள்ளார். பரிசில்க்கு இனியவனாகவும் அறிவற்றோர்க்கும் மகிழ்வதற்குத் துணையாகவும் அதியமான் விளங்குவதை,

'உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
கடவர் மீதும் இரப்போர்க்கீயும்
மடவர் மகிழ்துணை, நெடுமான் அஞ்சு'     (புறம்.315:1-3)

எனக் கூறியுள்ளார்.

பகுத்துண்ணல் என்பதை ஒளவையார் அதியமான் பாடல்களிலேயே பெரும்பாலும் பாடியுள்ளார். 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்' பண்பாளன் அதியமான் என்பதை,
'சிறியகட் பெறினே, எமக்கு ஈயும் மன்னே! பெரியகட் பெறினே
யாம்பாட தான் மகிழ்ந்துண்;ணும் மன்னே!     (புறம்.235:1-3)

எனப் பாராட்டியுள்ளார். தம்மிடம் உள்ளதைப் பிறருக்குப் பகிர்ந்தளித்து வாழத் தயங்கும் மனிதர்கள் மத்தியில் அதியமான் உணவின் அளவு எப்படி இருப்பினும் அதைப் பகுத்துண்டு வாழ்ந்து வந்தான். மேலும், பிறருக்கு உதவாத செல்வம் பகன்றை மலர் சூடப்பெறாது இருத்தல் போலப் பயனற்றதாகும் என்பதை,

'பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர்தவப் பலவே' (புறம்.235)

என்னும் வரிகளில் சுட்டுகிறார்.

நிறைவாக...
ஒளவையாரின் அகப்பாடல்களில் தலைவிக் கூற்றுப் பாடல்கள் தலைவியின் பிரிவாற்றாமையையே பெரிதும் விளக்கி நிற்கின்றன. தலைவிக் கூற்றுப் பாடலாகத் திகழ்ந்த 8 பாடல்களும் தலைவனைப் பிரிந்து வருந்துவதாயும் புலம்புவதாயும் ஆற்றியிருப்பதாகவும் செய்வதறியாது வருந்துவதாயும் அமைகின்றன.

தலைவியின் கூற்றுகள் மூலம் தலைவன் மீது தலைவி கொண்டுள்ள மாறாக் காதலை ஒளவையார் தலைவியாகவே நின்று பதிவு செய்துள்ளார். புறப்பாடல்களில் ஒளவையார் 'வாழ்வியல் அறம்' முதல் 'விழுப்புண்படுதல்' ஈறாகப் பல்வேறு அறங்களைக் காணமுடிகிறது. அறங்கூறும் போக்கில் புலவரின் தன்முனைப்பு, தன்மானம், தன்னம்பிக்கை முதலாயின புலப்படுகின்றன. நட்பை எண்ணி தூதுவராய் சென்று அதியமான், தொண்டைமான் இளந்திரையன் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற இருந்த போரைத்; தடுத்து நிறுத்திய அருளுள்ளம் ஆகியன தெளிவாகின்றன. மன்னர்களின் மாண்பினை எடுத்துரைக்கும்போது, ஒளவையார் ஓர் அரசியல் அறிவுமிக்க அமைச்சராகவே திகழ்கிறார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here