கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர். கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர்.  சென்னை பாரதீய வித்தியா பவனில் 29.1.2013 அன்று செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழாவின் சிறப்பம்சமாக இவ்வரவேற்புபசாரம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றான பலனை எதிர்பார்க்காமல் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்ய வேண்டும் என்ற வாக்கைத் தன் வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி வரும் செல்வராஜாவுக்கு இந்நிகழ்வு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். நிகழ்ச்சிக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும். பாரதீய வித்தியா பவன் வாயிலில் நூலகவியலாளரின் புகைப்படத்தைத் தாங்கிய பாரிய வண்ணப் பதாதையொன்று “இலண்டன் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வரவேற்பு விழாவுக்கு வருகைதரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்று வரவேற்றது.

நிகழ்வில் தமிழகத்தின் பிரபல அறிவியல் நிறுவனங்களின் முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், தலைவர்கள், பேராசிரியர்கள், தமிழகத்தின் மூத்த நூலகர்கள், சென்னை எழுத்தாளர்கள்; சங்கத் தலைவர் உள்ளிட்ட அங்கத்தினர்கள் என பலரும் வருகை தந்திருந்தார்கள். பிரபல சட்டத்தரணி விஜயகுமார், விருபா டொட் கொம் குமரேசன், சென்னை வள்ளியம்மாள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியை பானுமதி, எழுத்தாளர் சுகுமாரன், இதயகீதம் ராமானுஜம் போன்றோர் அவர்களுள் அடங்குவர்.

மண்டபத்தினுள் நுழைந்த நூலகவியலாளரை ஈழத்தவரான திரு வரதன் அவர்கள் பொன்னாடை அணிவித்தும் மலர்ச்செண்டு வழங்கியும் வரவேற்றார். இவர் திரைப்பட இயக்குநர் குகநாதனின் சகோதரராவார். செல்விகள் வனிதா மதிவாணன், சாலினி ஆகிய இளவல்கள் அவையோரை வாயிலில் நின்று வரவேற்றனர். நூல்தேட்டம் உள்ளிட்ட நூலகவியலாளர் செல்வராஜாவின் நூல்களின் பிரதிகள் மண்டப வரவேற்பறை வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை அவையோர் பார்வையிட வசதி செய்துதரப்பட்டிருந்தது.

தமிழ்த்தாய் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாயிற்று.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தமிழ்த் தேனீ இரா. மதிவாணன் இவ்விழாவினை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தார். அவையோரை வரவேற்று அவர் திரு செல்வராஜாவுவை சிறப்பான முறையில் அறிமுகம் செய்துவைத்ததுடன் அவருக்கும் மேடையில் வீற்றிருந்த பேச்சாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை நித்தியகல்யாணி அவர்கள் முதலில் தனது வரவேற்புரையை நிகழ்த்தினார். நூல்தேட்டம் செல்வராஜாவின் பணிகள் தமிழகம் வரை பரவியுள்ளதை அவர் தமதுரையில் விதந்துரைத்தார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவரும் ஈழத்தமிழர்களின் மிக நெருங்கிய சட்டத்துறை வல்லுநருமான (Senior Advocate) இரா. காந்தி அவர்கள் தலைமையுரையை நிகழ்த்தினார். அண்மையில் பாரதி விழாவுக்குத் தமது அணியினர் கொழும்பு சென்றதையும் தமக்கு விமானநிலையத்திலேயே ஈழத்தமிழர்களால் அளிக்கப்பட்ட சிறந்த வரவேற்பையும் நினைவுகூர்ந்த அவர் புலம்பெயர்ந்தபோதும் ஈழத்தமிழரின் வரலாற்றை எதிர்காலம் அறியும்வகையில் அவர்களது அறிவாக்கங்களை பாதுகாக்கவேண்டும் என்ற ஒரே முனைப்புடன் எவ்வித பட்டம் பதவிகளையும் எதிர்பாராது, தனது சொந்த உழைப்பிலும் நிதிவளத்திலும் கடினமான அப்பாரிய பணியை மேற்கொள்ளும் ஒரு ஈழத்தமிழனை வரவேற்று வாழ்த்துவது பெருமைதருகிறது என்றார். தனது உரையின் முடிவில் நூலகவியலாளருக்குப் பொன்னாடை அணிவித்தும், மலர் மாலை அணிவித்தும் சிறப்புச் செய்ததுடன் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வெளியீடுகளை அன்பளிப்பாக வழங்கினார்.

அடுத்து முன்னிலை உரையாற்றியவர் மருத்துவர் மேஜர் து.இராஜா அவர்கள். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான இவர் தனது உரையில் திரு செல்வராஜாவை வரவேற்று உரையாற்றியதுடன் சுவாமி விவேகானந்தரின் பணிகளை விரிவாகப் போற்றினார்.

மேஜர் து.இராஜாவின் உரையை அடுத்து இன எழுச்சிக் கவிஞரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தின் துணைச்செயலாளருமான நெல்லை இராமச்சந்திரன் அவர்கள் நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் சந்தக் கவிதையில் ஒரு வாழ்த்துப்பாவை அரங்கில் பாடி, அதன் கட்டமிடப்பட்ட பத்திரப்பிரதியை அவரிடம் கையளித்தார்.

அவரைத் தொடர்ந்து விவேகானந்தர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், விஞ்ஞான ஆய்வு நிறுவனமொன்றின்
தற்போதைய இயக்குநருமான வ.வே சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அவர் நூலகவியலாளர் செல்வராஜாவின் பணிகளை விதந்துரைத்தபின்னர், சுவாமி விவேகானந்தர் பற்றிய தனது பேருரையை நிகழ்த்தினார். நிகழ்வின் இறுதியில் அவரும் திரு செல்வராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.

அதன் பின்னர் தலைவர் அவர்கள் அவையோரை, நூலகவியலாளருக்கு வாழ்த்துத் தெரிவிக்க மேடைக்கு அழைத்தார். நூலக அறிஞர் பேராசிரியர் பெருமாள், சென்னை நூலகச் சங்கத் தலைவர் எம்.முத்துசாமி, வள்ளியம்மாள் கல்வி நிதியத் தலைவர் கலாநிதி சா வளவன், தமிழக எழுத்தாளர் சங்கச் செயலாளர் வாசுகி கண்ணப்பன் உள்ளிட்ட பலரும் பொன்னாடைகளால் போர்த்தி ஈழத்துத் தமிழ் நூலகவியலாளர் செல்வராஜாவுக்கு உளமார வாழ்த்துத் தெரிவித்தனர்.

தமிழகத்தின் வாழ்த்துக்களால் திக்குமுக்காடிய செல்வராஜா அடுத்து தனது ஏற்புரையை நிகழ்த்தினார். ஈழத்தமிழரின் வரலாறு ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வந்திருப்பதை வரலாற்றுரீதியில் எடுத்துக்கூறிய அவர். யாழ்ப்பாண நூலக எரிப்புடன் அண்மைக்காலத்தில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தின்போதும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அருங்காட்சிப்பிரிவில் பாதுகாக்கப்பட்ட ஆனைக்கோட்டை முதுமக்கள் தாழி அழிக்கப்பட்டதை உதாரணப்படுத்தி விளக்கினார். எதிர்கால சந்ததியினர் எமது வரலாற்றை சரியாக எழுதவேண்டுமானால் அவர்களுக்குத் தேவையான அறிவியல் மூலாதாரங்கள் பேணப்படவேண்டும். இன்று எந்தவொரு அரசோ, அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டியங்கும் எந்தவொரு அறிவுசார் நிறுவனமோ இப்பணியை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாது. அதனால் தான் தன்னை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்தி தனிமனித நிறுவனமாக மாறி இயங்குவதாகக் குறிப்பிட்டார். தனக்கு தார்மீக ஆதரவினை வெளிப்படையாக வழங்குவதன்மூலம் இப்பணியை தடையின்றி முன்னெடுக்க முடியும் என்றார்.

நிகழ்வின் இறுதியில் தான் இலங்கையிலிருந்து கொண்டுசென்ற நூல்தேட்டம் தொகுதிகளின் முழுமையான தொகுப்புக்கள் அடங்கிய பொதியை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தின் தலைவர் இரா காந்தி அவர்களிடம் கையளித்து தமிழகத்தின் பொருத்தமான நூலகமொன்றில் அதனை பாதுகாக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் முனைவர் எம். நித்தியகல்யாணி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். ஈழத்தமிழரின் வலியையும் மன வலிமையையும் செல்வராஜாவின் உருவில் தான் தரிசிப்பதாக அவர் நெகிழ்ந்து குறிப்பிட்டார். நிகழ்வு இந்திய தேசிய கீதத்துடன் மங்களகரமாக நிறைவெய்தியது. ஈழத்துத் தமிழர் ஒருவருக்கு தமிழகத்தில் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வு ஈழத்தமிழர் பெருமைகொள்ள வேண்டியதொன்றாகும்.

தனியொருவனாக நின்று பாரிய சுமையைத் தாங்கி இயங்கும் இத்தமிழ்மகனின் தோள்களை வலுப்படுத்தும் பணி ஒவ்வொரு ஈழத்தமிழ் அறிவுஜீவிக்கும் உரியது. அவருக்கு அத்தியாவசியமாக வேண்டிய நிதி உதவி உள்ளிட்ட தார்மீக உதவிகளை சிறிதளவேனும் வழங்கவேண்டும் என்று நம்மில் எத்தனைபேர் சிந்திக்கிறோம் என்பது கேள்விக்குரியதாகும். வழமை போலவே யாரோ ஒருவர் செய்கிறார் நாம் பார்வையாளர்களாகவே இருந்துவிட்டுப் போவாம் என்ற நிலையே எம்மிடையே காணப்படுவது வெளிப்படையாக உள்ளது. இந்நிலையை மாற்றவும் ஈழத்தமிழரிடையே ஒரு சிறு சலனத்தையாவது ஏற்படுத்தவும் இந்நிகழ்வு துணைபுரியுமாயின் அது இந்நிகழ்வினை ஒழுங்கு செய்த இரா மதிவாணனுக்கும் அவரது நண்பர்களுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.

நன்றி: http://thesamnet.co.uk/?p=44056


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here