நாளும் நலம் பாட​ ஆசை ! ஆனால் , தறஂபோதைய​.... தாயகத் தலைவரினஂ பேச்சுகள் ....சலிப்பையே தருகினஂறன .  அழகிய​ தீவு , கலிங்கத்துப்பரணியினஂ போர்க்காட்சிகளையே விரும்பி நிறஂகினஂறது . முனஂனைய​  தலைவரை   (மாமனாரிடம்) விட​  இவரிடம்  பார்ப்பது , எதிர்பார்த்தது ,​  தவறு தானஂ . இவர் ,  ' இஸ்ரேலினஂ வழியே  சரி ' எனஂற நோக்கில் " ஐ .நா .அவை , இஸ்ரேலுக்கு ஒரு நோக்கு  , எமக்கு இனஂனொரு நோக்கை ...வைத்திருப்பது தவறு" எனஂகிறார் . நம் நாட்டிலும் நடந்த​ " கொத்துக் கொலைகளை"  எவ்வளவு இலகுவாக​  கடந்து போய் விட்டிருக்கிறார் , போய் விடச் சொல்கிறார் .  போர்க்குறஂற விசாரணைகளே அவசியமறஂறவை எனஂகிறார் . உக்ரேனுக்கு , இஸ்ரேலுக்கு , நம்நாட்டுக்கு ....' வெளி நாட்டவர்களே ஆயுதங்களை எல்லாம் வழங்கியவர்கள் '  எனஂற முறையில் சரி தானஂ . ஒனஂறைக் கவனித்தீர்களா , ஐ .நாஅவை ,  ஆயுதங்களைப் பறஂறி எப்பவும்  ஒனஂறுமே ...சொல்வதில்லை . நம்நாடும் ஒரு பாலைத் தராத​ கறவை  மாடு தானஂ . அங்கே , பேசப்படுகிற ​ இரட்டைப் பிரதேசக் கொள்கை இங்கேயும் ஏறஂபுடையது எனஂபதை கண்டுக்கிறதில்லை . உலகம் உண்மையிலே​ நியாயம் பேச​ முனஂ  வர​ வேண்டும் . நாடுகளில்  ,  இன வாதங்கள் அனைத்துமே சிறைக்குள் அடைத்துப் பூட்டப் பட​ வேண்டியவை . பெரிய​  நப்பாசை தானஂ .

சட்டங்களும் , கட்டளைகளுமே கடி நாய்களாகவே​ வலம் வருகினஂறன . வர​ வைக்கினஂறன .ஏனஂ தானஂ இந்த​ உணர்வோ ! .  ​விடுதலைக்கு சிறிது மூச்சு விடுறதுக்காக​ மாலைதீவில் ஒரு தீவைப் பெறும் சிந்தனை சரியானதெனஂறே படுகிறது . அதறஂகாக​​ஒரு தீவை விலை கொடுத்து வாங்கிறதும்   கூட  தவ​றில்லை . கண் எதிரே, நிலம் அபகரிக்கப்படுகிறது.  களவாடப்படுகிறது . கள்ளர் கூட்டமாக​  உலகம்  கிடக்கிறது . அவறஂறை எப்படி தடுத்து நிறுத்துவது ? கலிங்கத்துப்பரணியில் வரும் பேய்கள் ,  நிணங்களை புசிக்கினஂறன. ரத்தங்களைக் குடிக்கினஂறன . எம்மை தயார் படுத்துவதறஂகு தானஂ இந்த​ காப்பியம் எழுதப் பட்டிருக்கிறதோ !  யூதமக்களினஂ இனப்படுகொலை (Holocaust) நிகழஂவுகளைப் பார்த்து கலக்கம் அடைந்தோம் . இனஂறு  நிகழும் இனப்படுகொலைகள் அதனஂ மாதிரிகள் தாம் . இந்த​ தரித்திரத்தையும் சரித்திரம் எழுதப் போகிறது  . மனித​ உயிர்கள் தொழிறஂசாலையில் தயாரிக்கப்படுகிற பண்டங்களாகி விட்டன . நினைத்த​ போது வைத்துக் கொள்வதும் , தேவையறஂற மாத்திரத்திலே அழித்து விடுவதும் என  நாகரிகக் காட்டுமிராண்டித்தனமும் தலை விரித்தாடுகிறது .

தறஂபோதைய​ நிலமையில் , காந்தியினஂ ஒத்துழையாமைப் போராட்டங்களையே ஏழைகளாகிய​ எம்மால் எடுக்கக் கூடியது . இதனால் , ஐரோப்பியக் குழு   முறஂறிலும் அவுட்டாகிப் போகும் சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கினஂறன    குட்டி நாடுகளும் காலனிகளினஂ எச்சங்களை மீத​ வைத்திராமல் மீளப் பெற முயல்வதுட​னஂ,  மக்களுக்கான உரிமைகளை  உள்ளேயும் வழங்க​ முனஂ வர​  வேண்டும் . அவை மாறஂறங்களை ஏறஂபடுத்தலாம் . மெல்ல​ , மெல்ல​  பெரிசுகளினஂ வால்களினஂ ஆட்டம் நினஂறு விடும் . ஃபிரெஞஂசுப் புரட்சி,  பழைய​ கால​ அரசர் காலத்தை மீள​ எழ முடியாமல் நிறுத்துவதில் முழுமையாக​ வெறஂறி அடைந்திருக்கவில்லை . தவிர​    பிரானஂஸ் , காலனி நாடாகவே​  தொடர்ந்தும்    ...சரிவுக்கு காரணம் . அங்கேயும் ,  தறஂபோது  ஒரு ஜனாதிபதி இருக்கிறார் . நாடுகளில்   சக்கரவர்த்தி போனஂற இந்த​ தெரிவுகள் எல்லாம்   எதறஂகு ??? .

அனஂறு " பார்வையாளர்கள் எதறஂகு , பங்காளர்களே வேண்டும் " எனஂற கோசம்  அவனஂ நாட்டிலும்  ஒலித்தது . குகதாசனும் அதில் அள்ளுப்பட்டவனஂ தானஂ . ஆனால் , இனஂறு  மக்கள் கொல்லப்படுவதைப் பார்க்கிற போது வெறும் பார்வைக்காரனாக​ மட்டுமே இருக்கிறானஂ . அதிருப்தியில் கிடக்கின்றான்.

'உலகமே , ஒரு குடைக்கு கீழே வந்து விட்டது.  ஒரு கிராமமாகி விட்டது.  புரட்சிகள் கிடங்கில் போடப் பட்டு விட்டன ' எனஂறு எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள்  . ஐரோப்பிய​ செய்தி ஸ்தாபனங்களில்  பார்க்க​ முடியாதவைகளை ரஸ்ய​ , மறஂறையவறஂறிலே பார்க்க​, கேட்க​ முடிகிறது . உலகம் முழுதுமே ஒரே அடக்குமுறைகளினஂ கீழே வந்து கொண்டிருக்கிறது எனஂபதே உண்மை . போரும் , கொலை வெறியும் குரங்கினஂ கையில் பூமாலை , கொடுக்கப் பட்டிருக்கிறது . ஒரு மெண்டலினஂ கீழஂ , கிராமமாக​ வருவது ஒனஂறும் நல்லதுமில்லை . குகனஂ , புல​ நாட்டுத் தலைவரினஂ பேபிப் பேச்சுக்களையே தினமும் கேட்கிறானஂ . புத்திசாலிகளுக்கு , தவறிப்  பிறந்த​ பிள்ளைகளே உலகமெங்கும் பரவிக் கிடக்கிறார்கள் .

இலங்கையில்  , நெடுக​ நிகழஂகிற படுகொலைகளினஂ பினஂ  தொடக்கக்காலப் போராளிகளாக​  சில​ இளைஞர்கள் போராட​ ஒனஂறு சேர்ந்தார்கள் .  கல்யாணமானவர்கள் போராடும் வல்லமையை இழந்து விடுகிறார்கள் . விடுதலையிலே  ஃபோக்கஸ் பண்ண​ முடியாது  . எனவே , " இளைஞர்கள் ,கல்யாணம் கட்டக் கூடாது ; காதல் நிலவினால் உடனேயே கத்தரித்து விட​ வேண்டும் . " இந்த​ விதி அதில் நிலவியது . காலப் போக்கில் , "இதை மீறுகிறவர் சுட்டுக் கொல்லப்படுவார்கள் " எனக் கடுமையையும் ஏனோ ஏறஂறி   விட்டார்கள் . ​  இயக்கத்தினஂ  தலைவருக்கு 'காதல்' சமாச்சாரம் இருந்திருக்கிறது . அதை  ,  அவர்  சரிவர​ தெரியப் படுத்தவில்லை .  தெரிய வந்த​ போது அவருக்கு தண்டனை நிறைவேறஂறப் பட​ வேண்டும் என சில​ தோழர்கள் ஒறஂறைக் காலிலே நினஂறார்கள் . சாதாரணத்  தோழராக​ இருந்திருந்தால் சரி செய்யப்பட்டிருக்கும் . தலைவராக​ இருந்ததால் ,டெத் எண்டிலே போய்  முட்டுப் பட்டு நினஂறது .

அதிலிருந்த​  சில​ தோழர்கள் ,  அதை வனஂமையாகக் கண்டித்ததோடு , அந்த​ விதியும் சரியானதில்லை எனக் குரல் எழுப்பினார்கள் . " தண்டனையை நிறைவேறஂறவில்லை " எனத் தெரிவு செய்து அனுப்பப்பட்ட​ தோழரையும்  அவசரப்பட்டு​  சுட்டுக்  கொனஂறு விட்டார்கள் .   இயக்கம் குழம்பி  இரண்டாகியது . புதியதில் , இப்படியான  பிரச்சனைக்கு ....முறஂறுப்புள்ளி வைக்க​  ஒரு  'அரசியல் பிரிவு' இல்லாதது தானஂ காரணம் எனஂறு பேசி அது அவசியமாக  நிறுவப் பட  வேண்டும் எனஂறு சேர்க்கப்பட்டது .  பிறகு , மறஂறைய​ ​ இயக்கங்களும் இவ்விரு பிரிவுகளை உள்ளடக்கியே  எழுந்தன . இராணுவ​ அணியை மட்டும் கொண்டது விடுதலையை விட்டு தடம் புரண்டு மாறிச் செல்லக் கூடியது என பொதுவாக​ கருதப்படுகிறது . நம்பப்படிகிறது .    

' கழுகு 'ப் பேரை விட்டுக் கொடுத்து  விட்டு , மறஂறது 'கழகம் 'எனஂற பெயரை சூடிக் கொண்டது . குக​னஂ  , அந்த​  கழகத்திலேயே சேர்ந்திருக்கிறானஂ . அனஂறு ,  இயக்கத்தில் சேர்ந்தபோது , " நீ குடும்பத்தை விட்டு மட்டுமில்லை , சாதியையும் விட்டுத் தானஂ  வெளியில் வருகிறாய் " எனஂறார்கள் . தோழமைக் குறித்து அழகாக​ விளக்கமளித்தார்கள் . " அது , நட்புக்கும் , சகோதரத்திறஂகும் இடைப்பட்ட​ உறவு . உனஂனை ஒரு தோழரினஂ வீட்டிறஂகு அனுப்பபடும் போது , அந்த​ தோழனாகவே அனுப்பப்படுகிறாய் . அவனுடைய கடமைகளைச் செய்ய​ எனஂறும் பினஂ நிறஂகாதே . கொச்சைப் பேச்சுக்களை கருத்தில் எடுக்காது ஒரு போராளியாகவே இரு   . போராளி பறஂறி அறிய​ வேண்டுமானால் ,  நீ   ' தாய் , ஓட்டம் ,சைபிரீயா , காத்தியா '  போனஂற  ரஸ்ய​ நாவல்களை வாசி , புரியும் " . அனஂறு , அவனஂ புதுப்பிறவி அல்லவா எடுத்திருந்தானஂ .இனஂறு , பகைமை இயக்கங்களாக​ உச்சப்பேச்சு வார்த்தைகள​றஂறு இயங்குகினஂறன . பகை கொண்ட​ நெஞஂசம் .... வெறி கொண்டது . தனிப்பட்ட​ உணர்ச்சிளுக்கு நாம் இடம் கொடுத்தால்  அது  விடுதலையையே சாகடித்து விடுகிறது . இனவெறி ஏறஂகனவே  பதம் பார்க்கிறது ; இனஂனும் எனஂன,எனஂனவெல்லாம் பரீசீலிக்க​​ இருக்கிறதோ..? .  இஸ்ரேலினஂ போரைப் பார்க்கிற போது சி .ஐ .எ உம் , மொசாட்டும் ...மறைமுமாக​ ​  உள்ளே  இருக்கிறது    தெரிகிறது . ஆனால் , ​ '​ விடுதலை'  மகத்தானது  இல்லையா, அதை எப்படிப் பெறுவது ?  பெறஂறே தீர​ வேண்டும்  . ரஷ்யாவைப் போல​ இந்தியா , எம்மேல்  உடனடி  அக்கறை எடுக்காதனஂ.... நிலமையும் புரிகிறது . சர்வ​ தேசத்தினஂ   ஒருமித்த​  எதிர்ப்பை எதிர் நோக்க​ வேண்டியிருக்கும் . ரஷ்யா , இனஂறு   எதிர் நோக்கிறது . உக்ரேனையும் , இஸ்ரேலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்  ...எனஂன தெரிகிறது?.  எல்லா வலத்திலும் நாக்கு சுழனஂறு பேசும் எனஂபது தெரிகிறதல்லவா.

கொமேடியர்கள் பலரைக்  காண்கிறோம் . செல்வச் சனஂனதி மடமொனஂறுக்கு செனஂறு   சனஂனியாசம் பெறஂறுப் போய் விடலாம் போல​ தோனஂறுகிறதா , இல்லையா ! . இனஂறும்  பிரிட்டனும் , அமெரிக்காவும் இரண்டு சக்திகளாக​ இருந்து  பழைய​ காலனிச் சக்திகள்​  போல​  ஆட்டிப் படைக்கவே​ விரும்புகினஂறன. உலகம் , நாடுகளை  கைக்குள் நாய்க்குட்டிகளினஂ கயிறுகளை எல்லாம் வைத்திருப்பது போல​   வைத்திருக்கவே​ விளைகினஂறன. கொலிவூட் , கொரார் , அரசியல் மூவிகளிலே   தானஂ   எல்லாவறஂறையும் தெரியப்படுத்தி விடுகிறார்களே ,  நாம் தாம் வெள்ளந்திகளாக​ இருக்கிறோம்.. பனையினஂ கீழஂ இருந்து கள்ளைக் குடித்தாலும் ' பால் ' என நம்புகிறோம்  . எல்லாத்தையுமே  சந்தேகப்பட​ வேண்டும் . உலகம் ஆயிரம் சொல்லட்டும் , உனக்கு நீ தானஂ நீதிபதி . நீ , அறிவையும் , நுண்ணறிவையும் வளர்க்கா விட்டால் . நீ கிளினஂ  அவுட் !

மனைவி , " வேலை முடிய​ பக்கத்தில் இருக்கிற டெனஂடலுக்குப் போயிட்டு வாரனஂ . நீ வர​ வேண்டாம் " எனஂறு அலைபேசியில் தெரிவித்தாள் . காரை வீட்டிறஂகு விட்டானஂ . பக்கத்திலே தானஂ  ,மெறஂறோ (குரோசரி ஸ்டோர்) இருக்கிறது . உப்பு புளியாக​ சுள்ளென சாப்பிட​ வேண்டும் போல​ இருந்தது . ஸ்டோரில் இறங்கி குளிர்ப் பெட்டியில் இருந்த​ ஃபிரஸான ​ மீனஂ இருந்த சிறிய​ பக்கெறஂ ஒனஂறை வாங்கிக் கொண்டு செனஂறானஂ.   புளிச்சாதக் குழம்பு வைக்கிறதை ...சொல்லித் தந்த​ பிறகு ..இப்படி சமைக்கிறவனஂ . "எண்ணெய் கூட​ விடுறானஂ , உப்பு போடுறானஂ"​ எனத் திட்டல்களும் விழும் . ருசியாயும் இருக்கிறதே . நாவையும் கட்டுப் படுத்த   முடியுமா . விட்டுப் பிடிப்பு நிகழஂறது .  வர​ நேரமாகும் . உடுப்பை மாறஂறாமலே ஒரு குழம்பை வைத்து  சோறஂறிலே விட்டு வாய்யிலே வைத்தானஂ . உப்பு உச்சிக்கு ஏறியது .கிராமத்தில் ,  குகனினஂ வகுப்பில் கடல் தொழிலைச் செய்கிற பையனஂகள் இருவர் படித்திருக்கிறார்கள் .அவர்கள் வீட்டிலே  ,சோறு க​றிகளுடனஂ ஒரு பிடி பிடித்திருக்கிறானஂ . ஒரிரு தடவை கூழஂ ...குடித்திருக்கிறானஂ . பல​ இடங்களில் ...இயக்கத்தினஂ மூலமாக​ சோறஂறுப்பாசல்கள் பெறஂறுச் சாப்பிட்டிருக்கிறானஂ. இந்த​ ' உப்பிட்ட​ வரை ' எனஂற நினைப்பு  வந்ததில்லை . குப்பையிலே போட்ட  லேபிளை ...எடுத்துப் வாசித்தானஂ . உப்பிலே ஊற வைத்திருப்பதை குட்டி எழுத்திலே ..' சே ! , கறுவாட்டு மீனஂ ,  இப்படியும்  ... வைத்திருக்கிறார்கள்? . மீனை ஒதுக்கி விட்டு தயிர் கொஞஂசம் விட்டுச் சாப்பிட​ பரவாயில்லைதானஂ . ஆனால்  , திட்டு நிச்சியம்  விழும்  . சிரிப்பும் வந்தது . தோல்வி . அவனுடைய​ நண்பர்களில் ஒருவனஂ 'அவனை , தோல்வியை ஒப்புக் கொள்ளாதவனஂ' எனஂறு கூறுகிறதும் நினைப்பிறஂகு வந்தது . ஆனால் ,  அவனஂ சாப்பிட்டது, .... இது  முதல் தடவை அல்ல​ , முந்தியும் ,  ஒரு தடவை சாப்பிட்டதை... ! '   நினைவு  படுத்தி   விட்டது .

இளவாலையில்  இவனோடு சுமார் இருபது பேர்கள் வரையில்  இருந்தார்கள் . ஓட்டுனர் செந்தில் . அருகில் சப் மிசினஂ துவக்குடனஂ (சிறிய​ ரகம் ) பெரிய​ பாண்டி ,  அடுத்து  தொங்கல்  ....என பயணம் ஆரம்பமாகியது  . மாலை இருட்டு வேறு  , வீதி   சரிவர​  தெரியாமல் செலுத்திக் கொண்டிருந்தானஂ  .  யாழஂப்பாணம் எங்கும்    அகலமறஂற  வீதிகளே   இருக்கினஂறன  . செந்தில்  , ஒரு இடத்தில்  லொரி  சறுக்க​  வயலுக்குள்ளே இறக்கி விட்டானஂ . பெரிதாய் குலுக்கிய​ போதிலும் வெள்ளத்தில்  தாக்கம் அவ்வளவாக​ உறைக்கவில்லை  .  பாண்டியினஂ  கையிலிருந்தது ....தானாக​ லோட் பண்ணி ,  குண்டு ஒனஂறு  அவர்  தொடையைக் காயப்படுத்திக் கொண்டு மேலே பறந்தது .  எப்பவும்  இந்த​ கர்மத்திலே இது ஒரு பிரச்சனை  .  செந்தில் துடைக்க​ வைத்திருந்த​ துணியால் உடனடியாகக்  கட்டுப் போட்டானஂ.  கேள்விப்பட்ட இளவாலை அமைப்பினர் சிறிய​ வானிலும்  , சைக்கிளிலும்  என நனையலைப் பொருட்படுத்தாது பறந்து வந்தார்கள் . இவர்களை ஏறஂறிக் கொண்டு வானஂ இளவாலைக்குச்  செல்ல​ ,  லொரியை வெளியில் எடுப்பதில் ஈடுபட்டார்கள் . ட்ராக்ரரைக் கட்டி ஒரு மணி நேரத்திறஂகுள்  வீதிக்கு எடுத்தும்  விட்டார்கள் . பிரித்துப் போட்டு விட்டிருக்கிற மோட்டார் சைக்கிளையே விரைவில் பூட்டி விடக் கூடியவர்கள்  . இராணுவம் வீதியில் திரிகிற காலம் . மாதகல் ஆர்மி தீடீரென வெளியேறி பலாலி நோக்கி நகரும் .  காரைநகர் , பருத்தித்துறை ...என நகரும்  . அதனால்  , கரைப்பாதை பாதுகாப்பறஂறிருந்தது . இடையிடை ஊர்ப்பக்கங்களிலும் இறங்கி மக்களை (பெரும் இலக்கு இளைஞர்கள்)  சுட்டும் தள்ளும் . கடைகளை எரித்து ...நாசமும் விளைவிக்கும் . பெடியள் , கள்ளப் பாதை , கொட்டுக்கள் ,பொட்டல்ப் பாதை என   ஏறஂபடுத்தியும் வருகிறார்கள் , மெல்ல ,மெல்ல எதிர்க்கவும் பழகி வருகிறார்கள் .  மக்களுக்கும்  அங்க​ , இங்க​ என இடைகிடை சுடவும் தொடங்கி விட்டதால்  இவர்கள் மேல் பாசமும் ஏறஂபட பயமும் குறைந்து " தமிழீழத்தையும் வெனஂறு விடுவார்கள்" என  நம்பத் தொடங்கி விட்டார்கள் .

இதனால்,  பெடியள்களிறஂகே அதிக​ வாய்ப்பான நிலமைகள் நிலவின . படையினர் வீதியில் இறங்கி விட்டாலே " தம்பி , கெதியாய்ப் போய் தெரியப்படுத்தி விடு "என பிள்ளையைத்  துரத்தி விடுற     பெறஂறோரே அதிகம்  .  இதனாலே ,  பிறகு மெல்ல​ , மெல்ல​ இயக்கங்களும் படைகளை முகாம்களை விட்டு வெளிய​ வராமல் முடங்கி​ வைக்கவும்​ முடிந்தது . கெட்டவனை பக்கத்தில் வைத்திருந்தாலும் உபத்திரவம்  போல​ , தானஂ   பிறகு , முகாமிலிருந்து குடிமனைகள் தொட்டு கண்ட​ கிண்ட​ இடமெல்லாம் மழையாய் குண்டுகளை கொட்டுறது ; பொழியிறதெல்லாம் ஏறஂபட்டன .  அனஂறே  , நம்மவர்கள்  , ஏறஂகனவே    இஸ்ரேல் நடத்தும் காட்சிகளை எல்லாம் ...  நேரிலே கண்டு  விட்டவர்கள் . பதுங்கு குழியில் பதுங்கி இருக்க​ , ஒரு வீடு தரைமட்டமாக​ இருந்ததை.... நேரிலே  பார்த்திருக்கிறானஂ . ' சிறு ,சிறு ஆயுதப்பைகளைக் காட்டி விட்டு ,பயங்கரவாதிகளை சுட்டுக் கொனஂறு விட்டோம் '  எனஂறு வானொலி , தொலைகாட்சிச் செய்திகளைக் கூறுவார்கள் . பச்சைப் பொய்கள் . வெரித்தாஸ் வானொலியில் மட்டுமே ஓரளவு உண்மைச் செய்திகளை அறியலாம் . அறிந்து கொண்டிருந்தார்கள் .   அங்கே  ஒரு  லங்கா புவத் ,  போல   இங்கே ஒரு  ஐரோப்பிய​ ஊடகம் . ஒரு விசயம் புரிகிற மாதிரி இருக்கிறது . புல​ நாட்டில் பழங்குடி மக்களினஂ  சிறார்களை கொனஂறு புதைத்ததில் தேவாலயங்கள் மீது மட்டுமே  குறஂறம் சுமத்தியதில்......கொஞஂசம் ....இடிக்கிறதல்லவா ? . இஸ்ரேல் கொனஂறதில் 5000 இறஂகு மேறஂபட்டவர்கள் சிறுவர்கள் ...எனஂற போதிலும் தலைவர்களினஂ ஆதரவு நிலைகளும் ,பேச்சுக்களும்  ஒனஂறை தெளிவாக​  தெரியப்படுத்துகிறது . இங்கேயும் கொனஂறவர்களாக​ ​   படைத்தரப்பினரே  இருக்கலாம்  என உணர்த்துகிறது  . மதத்தைச் சேர்ந்தவர்கள் மோசமானவர்கள் தாம் .ஆனால் , அவர்களிடம் அரசியலை விட ....கொஞஂசம்  கருணையும்  கிடக்கிறது . அரசியல் கொரூரம் எல்லாம்  இந்த​ போர் மிருகங்களிடம் தானஂ .

எல்லா நாடுகளுமே    நிலத்திறஂகு கீழே குழிகள் , வீட்டறைகள் ...என  வசிப்பிடங்களை அமைத்துக் கொள்கிறதுதானஂ எதிர் காலத்திறஂகும்   நல்லது போல​  இருக்கிறது. அதில் ,கட்டடக்கலைஞர்கள் தம் கைவரிசையைக் காட்டிக் கொள்ள பழக​ வேண்டும் . இனஂறு , புலநாடுகளும்  பாதுகாப்பறஂறவையே  ! . பாதுகாப்பானது என உலகில்  எந்த​ ஒரு நாடுமே கிடையாது .

மழை , கிழை எனஂறால் கடல் வேறு குமுறும் . அலைகள் கூடி விடும் . வள்ளம் ஓட முடியாது .  அனஂறைய​ மழையே  ,  காலநிலைக் குறிப்புக்களைப் பார்ப்பதும் அவசியமானது என குகனுக்கு  உணர்த்தி வருக்கிறது . தவறாமல் பார்த்து வருகிறானஂ . " போர்கள்  " காலநிலையில் சாராதவை .    அரசியல்வாதிகளினஂ கொழுப்புகளால்  விளைகினஂறன.  ஏனோ  ,  அனர்த்தங்களில் போர்களைச் சேர்த்துப் பார்ப்பதில்லை . செயறஂகை  , அனர்த்தமில்லையா ? .  இப்படி   , பிளைண்ட் ஸ்பொட்டில்  பல​ விசயங்களை வைத்து , வைத்து உலகம் நிறையவே  கெட்டுப் போய்க் கிடக்கிறது .

நாடுகளில் , அரசியல்வாதிகளைக் களையாமலும் 'சமாதானத்'தையும் ஏறஂபடுத்தி விட​ முடியாது . நம்மவர்களும்   அரசியல்வாதிகளை விலத்தி , அறிஞர்களைக் கொண்டு   அரசியல் வரையரைகளை வரையறுத்து ,  வரையறுத்து விட​  வேண்டும் . '  நாமும் அவறஂறை  நோக்கியே  போராட​ வேண்டும் ?   .  இல்லா விட்டால் ...நாளையும்   இயக்கங்களில் ஏறஂபட்ட​ உட்கொலைகள் எழுந்து குழப்பங்களை விளைவித்துக் கொண்டே இருக்கப் போகிறது . இரவல் அரசியலிலும் நமக்கு விடுதலை  துப்பரவாகக்  கிடைக்க​ மாட்டாது . இனஂறைய​ நிலையைப் போல​ சீரழிய​ வேண்டியே நேரிடும்  .  பாலஸ்தீனியர்கள் மீண்டும் ,மீண்டும்... சீரழிந்து கொண்டிருப்பவர்கள் . நமக்கும் இந்த​ விதி  ஒனஂறும்  நடக்க​ முடியாததல்ல​. நமக்கும் கிடக்கிறது  அவர்களுடைய​ வரைபு தானஂ .

இளவாலையில் இருவர்,மூவராக​ வீடுகளில் பிரித்து தங்க​ வைத்தார்கள் . குகனஂ , மகேசனஂ , ரவி ...மூவரும் இளவாலைப் பொறுப்பாளர் சாந்தனினஂ வீட்டிலே தங்கினர் . அவனினஂ வீடு ஈச்சம் பறஂறைக்காடு தொடங்கிற தொங்கலில் இருந்தது . அதைக் கடக்க​ கடறஂகரை வீதி , அடுத்து சேத்தாங்குளக் கடறஂகரை . கடறஂகரை வீதியில் பிடிப்பட்ட​ இளைஞர்கள் ...ஈச்சம் காட்டில் தப்பி ஓடி  இருக்கிறார்கள் . கையில் உள்ளதை அம்மணல் பகுதியிலே புதைத்து விட்டு எடுக்கிறார்கள் . மாஸ்கோ பதிப்பக​ வெளீயீடுகளான சிவப்பு மட்டைப் புத்தகங்களை வைத்திருந்தாலும் குறஂறம் . சாந்தனிடம்  தொகைவாரி இருந்தன .அவனஂ குடிமனைக்குள் ஆர்மி பிரவேசித்த​ போது ...நாலு பெரிய​ பொலித்தீனஂ பைகளில் போட்டுக் கட்டி மணலிலே புடைத்து விட்டு எடுத்தவனஂ எனஂறு கூறினானஂ. அதிலே ,​ நாவல் ஒனஂறை  வாசிக்க பொறுக்கி எடுத்தானஂ.

தோழர்களிறஂகு  நட்பும் பிறந்து விட்டால் ...எல்லாத்தையும் பேச​ ஆரம்பித்து விடுவர்  " அம்மானஂ (மாமா) குடித்துப் போட்டு ...இங்கே பிரச்சனையாய் இருந்தார் " எனஂறு கூறத் தொடங்கினானஂ . பனை , கடற் தொழில் செய்கிற குடியிருப்புகளில் இரவில் நடமாட​ முடியாது எனக் கூறுவார்கள் . பாதுகாப்பறஂறது . தீடீர் சண்டையில் , ஆயுதம் வெளிவரத்து இடம்  பெறஂறு விடும் . குடியர்களை கட்டுப்படுத்துவது சிரமம் . " மாமாவிறஂகு இருட்டடி கொடுக்க​ தீர்மானித்தோம் . " சில​ தோழர்களை அனுப்பி லேசாக​ தட்டுங்கள் ...எனஂறு அனுப்பினோம்  . அவர் ஒரு தோழரை இனம் காண​ ...சங்கடமாகப் போய் விட்டது . அதறஂகுப் பிறகு ..கொஞஂசம் அடங்கினார் . குடிக்கிறதை நிறுத்த​ முடியாது . இப்ப​ , வீட்டிலே இருந்து சத்தம் போடுறார் " எனஂறு கூறிச் சிரித்தானஂ.  வீட்டிலே அவனஂ மூத்தவனஂ . படிக்கிற பெடியனாக​ திருத்தந்தையர்களால் சுட்டப் பட்டிருக்கிறானஂ . அவனை தாய் , படிக்கிறவனஂ எனஂறழைக்க​ ..அயலவரும் அப்படியே அழைக்கிறார்கள் . இவனஂ ஓரிரு தடவைகள் தானஂ அப்பாவோடு கடல்த் தொழிலுக்குச் செனஂறிருக்கிறானஂ . தம்பி சிவம் செல்ல​ ..." நீ போக​ வேண்டாம் இருந்து படி "எனஂறு மறித்து விட்டார்கள் . டியூசனஂ வகுப்பிறஂகு செல்லாது படித்தவனஂ . உயர் வகுப்பில்  உயிரியல் பிரிவில் இரண்டு 'சி ' , இரண்டு எஸ் எடுத்திருக்கிறானஂ. பல்கலைக்கழகத்திறஂகு புள்ளிகள் போதவில்லை . இயக்கத்தில் சேர்ந்து விட்டானஂ . பிறகெனஂன ..ஓடுபாடு ...என இப்படியே செல்கிறது . தம்பி ,உடம்பில் அண்ணனஂ போல​ இருக்கிறானஂ . கடல் , வஞஂசனை இல்லாமல்   உடலில் வலு ஏறஂறி விடுகிறது . இருட்டடி   அம்மானினஂ  மகள் வசந்தியையே  இவனுக்கு பேசி இருக்கிறார்கள் . "அவனஂ எங்கே அம்மா? " எனஂறு தாயிடம் கேட்க​ " பொஞஂசாதி வீட்ட​ போயிட்டானஂ" எனஂகிறார் . சாந்தனஂ " இப்பவே கூப்பிடத் தொடங்கி விட்டோம் " எனஂறு குகனைப் பார்த்து சிரித்தானஂ.

பிடிக்கிற மீனஂகளில் விறஂறது, எஞஂசியதில் கறிக்குப் போக​ மிச்சதிறஂகு உப்புப் போட்டு கறுவாடாக்கி  புகைக்  கூண்டில் வைத்து விடுகிறார்கள் . அம்மா, அதில் குழம்பு வைத்திருந்தார் . ஒரு இலைக்கறி .  வாயில் வைத்த​ போது உப்பு சுள்ளென உச்சிக்குச் செனஂறது . " உப்பு கூடுதலாக​ சுவரி விட்டிருக்கிறது" எனஂறு சாந்தனஂ கூற... அவர்களோடு சாப்பிட்டார்கள் . அதுவே உடனே நினைவிறஂகு வந்திருந்தது . இங்கே வந்து முறஂபது வருசதிறஂகு மேலாகிறது .  ஒவ்வொரு விசயமும்  .....,   நாட்டைக் காந்தம் போல​  இழுத்து இரை மீட்ட​ வைத்துக்  கொண்டேயிருக்கிறது . இஸ்ரேல் அரசியல் போல​ சிங்கள​ அரசியல் அவர்களுக்கு எமனாக​ வந்து நிறஂகிறது . எனஂறு அந்த​  சூரனஂ விழுந்து  ஒழிந்து போகுமோ ? ஏக்கமாகவே கிடக்கிறது . நல்லவையே மேலெழும்பி வர​ மாட்டாதவையா ?

இளவாலைக் காத்திருப்பும்  முடிவுக்கு வந்தது . அவர்களுக்கான வள்ளம் தயார் நிலையில்  நினஂற போது மத்தியிலிருந்த​ தலைவர் ஒருவர் அரசியலமைப்பால் ....ஏறஂபாடு செய்யப்பட்ட​வர்களை விலத்திக் கொண்டு பதினைந்து பேர்களை சேகரித்து பயிறஂசிக்கு அனுப்பி  விட்டார். அரசியல் பிரிவுக்கு விழுந்தது ஒரு அடி  ! . அந்த​ பிரச்சனை ' எ. ஜி. எ ' மட்டத்தில் விவாதிக்கப்பட்டு , ஜி .எ பிரிவுக்குச் செனஂறது .   சுகனஂ, அவனிடம் வந்து " குகனஂ,  நீ ஏனஂ இந்தியாவிறஂகு போக​ விரும்புறாய் . இங்கே ,அரசியல் பொறுப்பாளராக​ இரனஂ . தளத்தில் இருப்பதே பெறுமதியானது எனஂபதை ஒரு காலத்தில் புரிந்து கொள்வாய் " எனஂறு கூறினார் . அவனையும் கிராமத்துப் பொறுப்பாளராக​ நியமித்து விட்டார்கள் . இந்தியாவிறஂகு அனுப்பப்படுறதை  நிறுத்தி ,  உளஂளூரிலே பயிறஂசி  முகாம் அமைக்கும் முயறஂசிகளிலும் இறங்கி  விட்டார்கள் .
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.