சக்தி விருது 2025 - தகவல்: சுப்ரபாரதிமணியன் -



கடந்த மார்கழி மாதம் 6ம், 8ம் திகதிகளில் சிலப்பதிகாரம் ஒரு முழு நீள அரங்க அளிக்கையாக மெல்பேண் - டான்டினோங் Drum Theatre இல் அரங்கேறியிருந்தது. தமிழ் நாடக உலகில் நீண்ட காலமாக பாராட்டுப் பெற்ற பல நாடகங்களை எழுதி, இயக்கிய மாவை நித்தியானந்தன் இந்த அரங்கப் பிரதியை எழுதித் தயாரித்திருக்கிறார். நடனக் கலைஞர் திருமதி பகீரதி பார்த்திபன் இதனை இயக்கியிருந்தார்.
சிலப்பதிகாரம் தமிழ் காப்பியங்களுள் மிக பிரசித்தமானது என்பதுடன் நாடகத் தன்மை கொண்ட படைப்பு என்பதால் நாடகக் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால்
பெரும்பாலான காப்பியங்கள் அரசனையோ அல்லது தெய்வம் ஒன்றையோ பிரதானமான பாத்திரமாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம், கோவலன் என்ற குடிமகனையும் மனைவி கண்ணகியையும் பற்றியே சொல்கிறது. இன்னும் குறிப்பாக கண்ணகியின் நீண்ட பயணத்தின் கதை இது.

வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் ஆறாம் நிலத்திணையாக சான்றோர் இதை ஏற்றுக் கொண்டார்கள்.
இக்காலத்தில் பொதுவான இலக்கிய, கலை நிகழ்வுகள் வெளியரங்குகளில் நடப்பதில்லை. சிறியகுன்றுகள் உள்ள இடங்களில் பனிச்சறுக்கல் விளையாட்டுகள் இடம் பெறுவதுண்டு. இதைவிட வெளியிடங்களில் ‘சினோமான்’ போன்ற பனியிலான பொம்மை உருவங்களைப் பெரிதாகச் செய்து காட்சிப் படுத்துவார்கள்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'பிஞ்சு மனம்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வானது தேசத்தின் கண் - தமிழ் மணி மானா மக்கீன், கலைஞர் - கவிஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறவுள்ளது. தொழிலதிபர் சமூக தீபம், அல்ஹாஜ் எம்.சீ. பஹார்தீன் நூலின் முதற் பிரதியையும், கலைஞர் அக்குறணை சஹாப்தீன் கௌரவப் பிரதியையும் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.
வழி: ZOOM | Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

* தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை இரு தடவைகள் அழுத்தவும்.
உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025
போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும்.
தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.
15 பரிசுகள், மொத்தம் 1,50,000 ரூபாய்கள்,
இலங்கை ரூபாயில் வழங்கப்படும்.
முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000.
இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000.
மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 20,000.
நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 15,000.
ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 10,000.
10 பாராட்டுப் பரிசுகள் இலங்கை ரூபாய்கள் தலா – 5000.
குரு அரவிந்தன் அவர்களின் படைப்புகளுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1600 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் (Unicode and Word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவ, மாணவிகளாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாக வெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.

அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும் எழுத்தாளரும் விலங்கு மருத்துவருமான நொயல் நடேசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் படைப்புலகம் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 21 ஆம் திகதி ( 21-12-2024 ) சனிக்கிழமை மெய்நிகரில் (Zoom) நடைபெறும்.
1. வண்ணாத்திக்குளம் (நாவல்) - ஜே.பி. ஜொசப்பின் (தமிழ்நாடு)
2. உனையே மயல் கொண்டு (நாவல்) - டாக்டர் பஞ்சகல்யாணி (இலங்கை)
3. சோகனின் வைத்தியசாலை (நாவல்) - கவிஞர் சல்மா (தமிழ்நாடு)
4. கானல்தேசம் (நாவல்) - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (இங்கிலாந்து)
5. பண்ணையில் ஒரு மிருகம் (நாவல்) - சந்திரிக்கா அரசரட்ணம் (பிரான்ஸ்)
6. தாத்தாவின் வீடு (நாவல்) - கலா. ஶ்ரீரஞ்சன் (இங்கிலாந்து)
7 வாழும் சுவடுகள் (புனைவு சாரா பத்தி) - அசோக் (அவுஸ்திரேலியா)
8. நாலு கால் சுவடுகள் - புதிய வரவு – டாக்டர் கிருபானந்த குமரன் ( இலங்கை )
9. எக்ஸைல் – (கட்டுரைகள்) - நடராஜா சுசீந்திரன் (ஜெர்மனி)
எழுத்தாளர் முருகபூபதியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு எழுத்தாளர் ஓவியர் கிறிஸ்ரி நல்லரெத்தினம்.
மெய்நிகர் இணைப்பு :
Join Zoom Meeting
Meeting ID: 842 7782 0317 | Passcode: 659335
அவுஸ்திரேலியா நேரம் : இரவு 7-00
நியூசிலாந்து நேரம் : இரவு 9-00 மணி
இலங்கை – இந்தியா நேரம் : மதியம் 1-30 மணி
இங்கிலாந்து நேரம்: காலை 8-00 மணி
பிரான்ஸ் – ஜெர்மனி - நேரம் : காலை 9 -00 மணி
கனடா நேரம் : அதிகாலை 3-00 மணி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஓவியப் போட்டி: 'நாளை விடியும்' இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி..
ஓவிய உள்ளடக்கம்:
பெரியார், அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமே, மார்பளவோ, அல்லது முழுமையாகவோ
கருப்பு - வெள்ளைக் கோட்டோவியமாக வரைந்து, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரைந்தவரின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி (postal address) அலைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் 15.01.2025 க்குள் அனுப்புங்கள்.

நாம் வாழும் இந்த அழகான, வளமான பூமிக்கோளை போர்களினால், தவறான அணுகுமுறைகளினால் சீரழித்து வருகின்றோம். இதனைப்பாதுகாப்பது மனித குலம், சக உயிர்கள் தொடர்ந்தும் வாழ்வதற்கு அவசியம். இதற்கு முதற் படி இயற்கை வளங்களைப் பேணுவதாகும். இங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உணவுச்சங்கிலி முறையாகப் பேணப்படுவது அவசியம். இதற்கு முதற்படி காடுகளைப் பேணுவதாகும். அபிவிருத்தி என்னும் பெயரில் காடுகளை அழித்துக்கொண்டே வருகின்றோம். இப்படியே நிலை நீடித்தால், உணவுச்சங்கிலி சீர்குலைந்தால், இந்த நீலவண்ணக் கோளில் உயிரினங்கள் வாழும் நிலையே இல்லாது போய்விடும். இதனால்தான் சூழலியலாளர்கள் சூழலைப்பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றார்கள்.
* படங்களைத் தெளிவாகப் பார்க்க ஒரு தடவை அழுத்தவும்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10--2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு. சின்னையை சிவநேசன், திரு.சி. சிவநாயகமூர்த்தி, பேராசிரியர் திரு.இ. பாலசுந்தரம், திரு.குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு.க. ரவீந்திரநாதன் ஆகியோர் இதுவரை பணியாற்றியிருந்தனர்.
ஒருவர் வாழும்போதே அவரைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சார வளர்ச்சிக்காக ஆற்றிய அரிய சேவைகளைப் பாராட்டி மட்டுமல்ல, புலம்பெயர்ந்த மண்ணிலும் தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வத்தோடு இவர்கள் காட்டும் ஈடுபாட்டைப் பாராட்டியும், இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கும் நிகழ்வு கனடாவில் இடம் பெற்றிருந்தது. கனடாவில் ஒரு இணையத்தால் வழங்கப்படும் உயர் இலக்கிய விருதாக இந்த விருது மதிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. இந்த விருதுகளைப் பெறுவதற்காகக் கனடா தமிழ் சமூகத்தில் இருந்து மதிப்புக்குரிய ஆறு பெரியோர்களை செயற்குழுவினர் இம்முறை தெரிவு செய்திருந்தார்கள்.
மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடாப்பண், தமிழ்தாய் வாழ்த்து ஆகியன செல்வி சோலை இராஜ்குமார், சென்னி இராஜ்குமார், சோழன் இராஜ்குமார், டிலன் கென்றிக் பிளசிடஸ் ஆகியோரால் இசைக்கப்பெற்றன. அடுத்து அகவணக்கம் இடம் பெற்றது. இணையத்தின் துணைத்தலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. இதில் திருமதி வனிதா குகேந்திரனின் கலைக்கோயில் மாணவிகளான செல்வி ஆதுரா கமலராஜன், செல்வி ஆனிரா கமலராஜன், செல்வி வஸ்மிகா ராகுலன் ஆகியோர் பங்கு பற்றினர். இதைத் தொடர்ந்து திரு. க. ரவீந்திரநாதனின் தலைவர் உரை இடம் பெற்றது. அடுத்து செல்வன் தருண் செல்வம், செல்வி வைஸ்ணவி சதானந்தபவன் ஆகியோரது இளையோர் உரையும், காப்பாளர் சிந்தனைப்பூக்கள் திரு. எஸ். பத்மநாதனின் உரையும் இடம் பெற்றன.

- எழுத்தாளர் மாத்தளை சோமு -
ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் இன்று கனடா நேரம் அதிகாலை 4 மணி தொடங்கி ஏழு மணி வரை நடைபெற்றது. சங்கத்தலைவர் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் வரவேற்புரையினை ஆற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியை எழுத்தாளர் நடேசன் சிற்ப்பாக நெறிப்படுத்தினார். நிகழ்வில் எழுத்தாளர் ந.சுசீந்திரன் புகலிட நாவல்கள் பற்றி\யும், எழுத்தாளர் வ.ந..கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (குறிப்பாகக் கனடாச் சிறுகதைகள்), மற்றும் எழுத்தாளர் சிவராசா கருணாகரன் புகலிடக் கவிதைகள் பற்றி உரையாற்றினார்கள்.
நிகழ்வின் பிரதான அம்சம் மூத்த எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களைக் கெளரவித்தலாகும். அவரை பற்றிய கெளரவிப்பு உரையினைப் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள் மிகவும் சிறப்பாக ஆற்றினர். தொடர்ந்து ஏற்புரையினை எழுத்தாளர் மாத்தளை சோமு ஆற்றினார். தொடர்ந்து சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், செயலாளருமான எழுத்தாளர் முருகபூபதி நன்றியுரையினை ஆற்றினார். தொடர்ந்து கலந்துரையாடலுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.
பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு ஸ்கார்பரோ ரீகிரியேசன் சென்டர் மண்டபத்தில் நடைபெற உள்ளது. (Scarborough Recreation Centre, 3600 Kingston Rd, Scarborough, ON M1M 1R9)
நாளை 3ம் திகதி நவம்பர் 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 1600 முதல் 1900 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் தலைமையுரையை பேராசிரியர். இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்குவார். அத்துடன் சிறப்புரையை தமிழர் தகவல் ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் அவர்கள் வழங்குவார்.

- சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் -
இன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023ற்கான இயல்விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. JC'S Banquet மண்டபத்தில் நடந்தது. கவிஞரும், பேராசிரியருமான உ.சேரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த நிகழ்வில் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணனுக்கும், புனைவுக்கான விருது 'சற்றே பெரிய கதைகளின் புத்தகம்' நூலுக்காக எழுத்தாளர் றஷ்மிக்கும், கவிதைக்கான விருது கவிஞர் இளவாலை விஜயேந்திரனுக்கும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது' நூலுக்கும்., அல்புனைவுக்கான விருது 'நினைவு நல்லது' நூலுக்காக வானொலி / தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான ப.விக்னேஸ்வரனுக்கும், மொழியாக்கத்துக்கான விருது ஜெகதீஷ்குமார் கேசவனுக்கும், இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது முனைவர் பார்வதி கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், இலங்கைத் தமிழ் நாடக அரங்க ஆளுமையாளருமான 'ஏ.சீ.தாசீசியஸ்' குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு
இந்தியத் தேசிய விருது பெற்ற ஆவணத் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் கலை விமர்சகருமான திரு. அம்ஷன் குமார் அவர்களின் இயக்கத்தில் உருவான 'ஏ.சீ.தாசீசியஸ்' குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு, 23.10.2024, காலை 9 மணிக்கு, கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது.
Join Zoom Meeting | Meeting ID: 865 5516 7525 |Passcode: 903772

அன்பு உறவுகளுக்கு, இந்த நூல் வெளியீட்டு விழாவில், கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளில் நிறைந்துள்ள, தொன்தமிழின்கலாச்சாரம், பண்பாடு; பெண்ணியம், காதல், வீரம் கூறும் இலக்கியம் என ஒர் ஆய்வு அரங்கேறுகிறது. ஆர்வலர்களுக்கு பகிருங்கள்.அரங்கத்தை மெருகேற்றுங்கள்,
நன்றி.
ஆறு. சிறீகாந்தன்.

திவ்வியராஜனின் நூல்கள் அறிமுகம்!
22-09-2024 ஞாயிறு பகல் 1:30 . Scarborough Civic Centre.

இலண்டன் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளன. பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீடு லண்டன் ஈலிங் அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. (London Ealing Amman temple, 5, Chapel Rd, London W13 9AE, U.K)