வாசிப்பும், யோசிப்பும் 250 : எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் பற்றி....எழுத்தாளர் R.P.ராஜநாயஹத்தின் எழுத்தை ஒருமுறை வாசித்தாலும் , வாசித்தவர் அதற்கு அடிமையாகிவிடுவார். இவர் புகழ் பெற்ற தமிழ் வலைப்பதிவர்களில் முக்கியமானவர்களிலொருவர். சிற்றிதழ், என்று தொடங்கி தமிழ் / உலகக் கலை, இலக்கிய உலகு பற்றி, இலக்கிய ஆளுமைகள் பற்றி, அவர்கள்தம் வாழ்வில் நடைபெற்ற பலருக்குத் தெரியாத சம்பவங்கள் பற்றியெல்லாம் , சுவையாக, நெஞ்சைக்கவரும் வகையில் கூறுவதில் வல்லவர் R.P.ராஜநாயஹம். தன் பெயரை R.P.ராஜநாயஹம் என்றுதான் எழுதுவார். ராஜநாயகம் என்று எழுதுவதில்லை. ஒருமுறை இவரது கட்டுரையைப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியிட்டபோது ராஜநாயகம் என்று எழுதியபோது அதனைத்திருத்தி ராஜநாயஹம் என்று போடுமாறு எழுதி என் தவறினைத்திருத்தினார்.

சினிமாவில் உதவி இயக்குநராக, நிதி நிறுவனம் நடத்தியவராக, நடிகராக.. என இவர் செய்த பல்வேறு வேலைகள் காரணமாக இவரது தமிழகக் கலை, இலக்கிய அனுபவ அறிவு பரந்தபட்டது. ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த புலமை மிக்கவர். இவரது வலைப்பதிவில் வெளியான தமிழ்ச்சினிமா பற்றிய தகவல்களைக் 'குமுதம்' சஞ்சிகை திருடிப்பாவித்திருப்பதை இவரது பதிவுகள் மூலம அறிய முடிகின்றது.

இவரது மாமனார் எம்ஜிஆர் காலத்தில் முக்கிய பிரமுகர்களிலொருவராக விளங்கியவர். அதனால் தமிழக அரசியல் பற்றிய பலருக்குத் தெரியாத தகவல்களெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கின்றது.

எழுத்தாளர் அமரர் அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்.

'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் இவரது கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இவரது எழுத்துகள் இலக்கியச் சிறப்பு மிக்கவை அவை எழுதப்படும் எழுத்து நடையால், வெளிப்படுத்தும் இலக்கிய அறிவினால். இவரது கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய அனுபவப்பதிவுகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்கும் அதே சமயம், கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்கு, கலை, இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக விளங்கும் ஆவணப்பதிவுகளும் கூட.

இவரது எழுத்துகள் இன்னும் நூலுருப்பெற்றதாக , நானறிந்தவரையில், அறியவில்லை. அவ்விதம் நூலுருப்பெற்றிருந்தால், அவை பற்றி யாராவது அறிந்திருந்தால் அறியத்தரவும். அவ்விதம் அவை நூலுருப்பெறாதிருந்தால், அவை நூலுருப்பெற வேண்டியதவசியம். ஒரு காரணம்: கலை, இலக்கிய மற்றும் ஆவணச்சிறப்பு மிக்க அவை ஆவணப்படுத்தப்பட வேண்டும். அடுத்தது இவரது பதிவுகளில் குறிப்பிடப்படும் அரிய தகவல்களை ஊடகங்கள் மற்றும் கலை, இலக்கியத்திருடர்கள் திருடிப்பாவிப்பது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக.

இவரது வலைப்பதிவுகளை ஒருமுறை வாசித்துப்பாருங்கள் நான் இவரைப்பற்றிக்கூறிய எவையும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் அல்ல என்பதைப்புரிந்து கொள்வீர்கள்.

இவரது வலைப்பதிவின் பெயர்: R.P.ராஜநாயஹம் | http://rprajanayahem.blogspot.ca/

மாதிரிக்கு இவரது வலைப்பதிவில் , 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான சில படைப்புகளுக்கான இணையத்தள முகவரிகளைத் தருகின்றேன்:

1. நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் : http://rprajanayahem.blogspot.ca/2012/08/blog-post_20.html
2. கரிச்சான் குஞ்சு என்ற அதிமானிடன்: http://rprajanayahem.blogspot.ca/2012/08/blog-post_5935.html
3. ’காலத்தைக் கடந்த கதாநாயகி’ தேவிகா : http://rprajanayahem.blogspot.ca/2017/01/blog-post_30.html

'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவை:
1. பதிவுகளில் அன்று: HERE IS THE RUB! :http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2137:-here-is-the-rub-&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56
2. தமிழகம்: சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்! : http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2132:2014-06-07-22-16-44&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R