நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)வாழ்த்துகிறோம்: இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து வழங்கும் இரா. உதயணன் இலக்கிய விருது-2016


இலண்டன் எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிய 'காலத்தை வென்ற காவிய மகளிர்' (Women of the Epics who outdated their times)  என்ற ஆய்வு நூலுக்கு 'இலக்கிய விருது-2016' என்ற உயர் விருதை மேற்படி நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது. இதை, உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு. 06 என்ற இடத்திலமைந்த 'கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்' 10-09-2016, சனிக்கிழமையன்று பிற்பகல் 4.30 மணிக்குப் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. மேலும் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிய 'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்' (Ancient Tamils and Social Imbalances)  என்ற நூலுக்கு, ' இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்' (மட்டக்களப்பு)  'தமிழியல் விருது-2011' என்ற இலக்கிய ஆய்வுக்கான விருதையும், தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான 'தமிழியல் விருது–2014' என்ற இரு விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R