மெல்பனில்  நினைவரங்கும்  இலக்கியச்சந்திப்பும்!அண்மையில்  இலங்கையில்  அடுத்தடுத்து  மறைந்தவர்களான  படைப்பாளி செங்கை  ஆழியான்,  நூலியல்  பதிவு  ஆவணக்காப்பாளர்  புன்னியாமீன், ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான  கே. விஜயன்  ஆகியோரின் வாழ்வையும்   பணிகளையும்  நினைவுகூரும்  நிகழ்ச்சியும் இலக்கியச்சந்திப்பும்   அவுஸ்திரேலியாவில்  நடைபெறவுள்ளது.

எதிர்வரும்   மே  மாதம்  14   ஆம் (14-05-2015 )  திகதி  சனிக்கிழமை  மாலை 3 மணிக்கு   மெல்பனில்   VERMONT  SOUTH   COMMUNITY  HOUSE    (1,  Karobran Drive - Vermont   South, Vic - 3133)   மண்டபத்தில்  நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை   அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில்   இலங்கையிலிருந்து  மெல்பனுக்கு  வருகை  தரும்    மூத்த   படைப்பாளிகள்   ஞானம்  ஆசிரியர்  டொக்டர் தி. ஞானசேகரன், யாழ்ப்பாணம்   சாந்திகம்  அமைப்பின்  திட்ட  இணைப்பாளர்  திரு. இர. சந்திரசேகரன்,    கொழும்பு  தமிழ்ச்சங்கத்தின்  இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி  பாலஸ்ரீதரன்  ஆகியோரும்   கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  நடப்பாண்டு தலைவர்    பேராசிரியர் ஆசி. கந்தராஜா   தலைமையில்   இரண்டு அமர்வுகளில்   இந்நிகழ்ச்சி  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. முதல்  அமர்வில்  இடம்பெறும்  நினைவரங்கில்  அமரர்  செங்கை ஆழியான்  நினைவுரையை  எழுத்தாளர்   ஜே,கே. ஜெயக்குமாரன் நிகழ்த்துவார். புன்னியாமீன்   தொடர்பான    நினைவுரையை    யாழ்ப்பாணம்  சாந்திகம்  திட்ட   இணைப்பாளர்  திரு. இர. சந்திரசேகரனும்,    கே. விஜயன்  பற்றிய நினைவுரையை    கொழும்பு   தமிழ்ச்சங்கத்தின்  இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி  பாலஸ்ரீதரனும்  நிகழ்த்துவர். இதனைத்தொடர்ந்து  நடைபெறவுள்ள  இரண்டாவது  அமர்வில்

" கடந்த    கால்நூற்றாண்டுகளில் - ஈழத்  தமிழ்  இலக்கிய  தடங்கள் -  இனிவரும் மாற்றங்கள் "    என்னும்  தலைப்பில்   மூத்த   படைப்பாளியும்   ஞானம்  இதழின்  ஆசிரியருமான  டொக்டர்  தி. ஞானசேகரன்   உரையாற்றுவார்.    அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்  இடம்பெறும்.

கலை   இலக்கிய   ஆர்வலர்கள்  அன்புடன்   அழைக்கப்படுகின்றனர்.                      

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R