டேவிட் ஐயா நினௌவு நூல் மற்றும் திருமாவளவனின் 'சிறு புள் மனம்' கவிதைத்தொகுதி வெளியீடு!நண்பர்களுக்கு! எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை மாலை அண்மையில் மரணமடைந்த டேவிட் ஐயா, கவிஞர் திருமாவளவன் ஆகியோர் பற்றிய நினைவுப் பகிர்வும் நூல்கள் வெளியீடும் இலண்டனில் நடைபெற உள்ளது.

டேவிட் ஐயாவின் வாழ்க்கை, அவரது அரசியல், சமூகப் பங்களிப்பு தொடர்பாக உள்ள பதிவுகள் , எழுத்துக்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை தொகுக்கும் பணியில் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். டேவிட் ஐயா பற்றி எழுதக் கூடியவர்கள் தமது பதிவுகளை இம்மாதம் (ஒக்டோபர்) இறுதிக்குள் அனுப்பித் தருமாறு வேண்டுகிறோம்.

ஏலவே வெளிவந்த குறிப்புகள், கட்டுரைகள் இருப்பின் அவற்றினை தொகுப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்கிறோம். புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், மற்றும் அவரின் கையெழுத்துப் பிரதிகள் இருப்பின் அவற்றின் பிரதிகளையும் எமக்கு அனுப்பித் தருமாறு கேட்கிறோம். டேவிட் ஐயா தொடர்பான நூல் தொகுப்பு பணிக்கு, அவர் தொடர்பான பல்வேறு பார்வைகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வில் கவிஞர் திருமாவளவனின் முழுக் கவிதைகளின் தொகுப்பான "சிறு புள் மனம்" செம்பதிப்புத் தொகுப்பும் வெளியிடப்பட உள்ளதுடன் திருமாவளவனின் படைப்புலகம் பற்றிய உரைகளும் கருத்துப் பகிர்வும் இடம் பெறவுள்ளது. திருமாவளவனின் கவிதைகள் ஆற்றுகை செய்யப்படவுமுள்ளன.

இந்த முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்பு மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., தொடர்பு தொலைபேசி எண் (0044) 7817262980


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R