கலாநிதி க. கைலாசபதியின் பிறந்தநாள் இன்று! நினைவு கூர்வோம்!கலாநிதி கைலாசபதியின் நூல்களை வாசித்திருக்கின்றேன். ஆனால் அவரை ஒருமுறைதான் என் வாழ்நாளில் நேரில் சந்தித்திருக்கின்றேன். 'மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க'த்தின் வருடாந்த வெளியீடான 'நுட்பம்' இதழுக்காக ஆக்கம் வேண்டி, யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை சந்தித்திருக்கின்றேன். இதழுக்குக் கட்டுரை தர ஒப்புக்கொண்ட அவர் குறிப்பிட்ட திகதியில் கட்டுரையைத் தரவும் செய்தார். அது மட்டுமின்றி 'நுட்பம்' மலர் கிடைத்ததும் அது பற்றிய சிறு விமர்சனக்குறிப்படங்கிய கடிதமொன்றினையும் அனுப்பி வைத்தார். அக்கடிதம் இன்னும் என்னிடமுள்ளது. நேரத்தை மதிக்கும், சொன்ன சொல் தவறாத அவரது பண்பு என்னைக்கவர்ந்ததொன்று.

கைலாசபதியவர்கள் தினகரனில் ஆசிரிய பீடத்தை அலங்கரித்த காலகட்டம் தினகரனின் இலக்கியச்சிறப்பு மிக்கதொரு காலம் என்று கூறலாம். ஈழத்துத்தமிழ் முற்போக்கிலக்கியத்துக்கு அதுவொரு பொற்காலம் என்றும் கூறலாம்.

அவரது எழுத்தில் எனக்குப் பிடித்த அம்சம்: தெளிவான நடையில், தர்க்கச்சிறப்பு மிகுந்திருப்பதுதான். கூறிய பொருள் பற்றிய அவரது தர்க்கம் எப்பொழுதும் என்னைக் கவர்ந்தது. வேறு சிலர் ஒரு பொருளைக்கூற வந்து, பலரின் மேற்கோள்களுடன் , வாசிப்பவரைக்குழப்புமொரு மொழி நடையில் எழுதுவார்கள். அவர்கள்தம் கட்டுரைகளை வாசிப்பவர்கள் பிரமித்துப்போவார்கள் அவர்கள் மேற்கோள்களைக்கண்டு, ஆனால் வாசித்து முடித்ததும் தங்களது தலைகளைச்சொறிந்துகொள்வார்கள் கூறும் பொருள் அறியாது. ஆனால் கைலாசிபதியின் எழுத்து இதற்கு நேர்மாறானது. தெளிவான நடையில், ஆழமான மொழியில், தர்க்கம் செய்யும் எழுத்து அவருடையது.

அவர் மார்க்சியக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டவர். அதனால் அழகியலை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்துகளை மக்களுக்குப் பயன்படாத எழுத்துகள் என்று கருதினார். அதனால் அவற்றை அவர் வன்மையாகச் சாடினார். அவர் இருந்திருந்தாலும் ஏனைய சிலர் மாறியதுபோல் தன் கொள்கையிலிருந்தும் அவர் மாறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகளில் கைலாசபதியும் ஒருவர். பேராசிரியரின் நூல்கள் பலவற்றை 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம்:


கலாநிதி க.கைலாசபதி பற்றி விக்கிபீடியாவில்..: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R