காலத்தால் அழியாத கானங்கள்: "ஒரு நாள் யாரோ? என்ன பாடல் சொல்லித் தந்தாரோ? - ஊர்க்குருவி -
நான் விஜய் தொலைக்காட்சியினரின் 'சுப்பர் சிங்கர்' நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பார்த்தவனல்லன். அவ்வப்போது பார்த்து வருபவன். 'சுப்பர் சிங்கர்' அறிமுகப்படுத்திய பாடகர்களில் இளம் பாடகி பிரியங்கா தனித்து ஒளிர்கின்றார். இவருக்குக் கலையுலகில் நீண்டதோர் எதிர்காலமுண்டு. இவரது குரல் தனித்துவமானது; இனிமையானது.
"மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
நில்லடி என்றது நாணம்
விட்டு செல்லடி என்றது ஆசை" - கவிஞர் வாலி.
கவிஞர் வாலியின் சிறந்த பாடல்களிலொன்று. இடம் பெற்றுள்ள திரைப்படம் 'மேஜர் சந்திரகாந்த்'. இத்திரைப்படத்தின் மூலமே நடிகர் சுந்தர்ராஜன் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படத் தொடங்கினார். இத்திரைப்படத்தில் நடிகர் நாகேசும், ஜெயலலிதாவும் சகோதர, சகோதரிகளாக வருவார்கள். மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள். பெண்களைத் தன் வலைக்குள் இழுத்து ஏமாற்றும் ரஜனிகாந்த் என்னும் பாத்திரத்தில் நடிகர் ஏ.வி.எம். ராஜன் நடித்திருப்பார். அவரிடம் ஏமாந்த பெண் விமலாவாக நடித்திருப்பார் ஜெயலலிதா. இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொள்வார். பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் வி.குமார்.