'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்' வண்ணத்தில்.. - ஊர்க்குருவி - -
அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இப்பாடலின் வரிகளைச் சிறப்பாகப் பாடி சமூக ஊடகங்களில் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தினார். அவருக்காக அவர் இரசித்து, மகிழ்ந்து பாடிய இப்பாடலின் முழு வடிவத்தையும் வண்ணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.அறுபதுகள், எழுபதுகளில் கண்ணன், அருணா இசைக்குழுப் பாடகர்கள் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில் பாடிய பாடல்களிலொன்று இந்தப்பாடல். வேதாவின் இசையில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், ஜெய்சங்கர் & எல்.விஜயலட்சுமி நடிப்பில் அனைவரையும் கவர்ந்த இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தின் 'இரு வல்லவர்கள்'.
அக்காலகட்டம் அழகான ஜெய்சங்கர் 'ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்க'ராகக் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்த காலம். இவரும் , விஜயலட்சுமியும் அதிக படங்களில் இணைந்து நடித்த காலகட்டம். - https://www.youtube.com/watch?v=BD8qYBBEf9o