நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல்

- மைக்கல் -- எழுத்தாளரும், விமர்சகருமான மைக்கல் எழுதிய 'ஏழாவது சொர்க்கம்' நாவ்ல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கியது. 'பதிவுகள் இணைய இதழில் ஆகஸ்ட் 2001 (இதழ் 10) தொடக்கம்  ஏப்ரல் 2002 ( இதழ் 28 ) வரை தொடராக வெளிவந்தது. கனடியத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த, சேர்க்கின்ற படைப்பாளிகளில் மைக்கலும் ஒருவர். இந்நாவல் ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -


 [ மைக்கல் சமகால இலக்கிய நடப்புகளை அறிவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இலக்கியத்துறையில் நடமாடும் பலரிற்கு தமது படைப்புகளை வாசிப்பது மட்டுமே இலக்கியத் தேடலாக இருந்து விடுகின்றது. இன்னும் சிலரிற்கோ ஒரு குறிப்பிட்ட அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளின் எழுத்துகளை மட்டும் படிப்பது தான் இலக்கிய உலகில் தங்கள் புலமையைக் காட்டி நிலை நிறுத்திக் கொள்வதற்குரிய வழிகளிலொன்றாக இருந்து விடுகின்றது. இந் நிலையில் விருப்பு வேறுபாடின்றி சகல படைப்புகளையும் ஒரு வித தீவிரமான ஆர்வத்துடன் வாசித்தறிபவர்கள் சிலரே. மைக்கல் அத்தகையவர்களில் ஒருவர். நவீன இலக்கிய முயற்சிகள் பற்றிய இவரது கடிதங்கள், கட்டுரைகள் எல்லாம் இவரது புலமையை வெளிக்காட்டுவன.  ஒரு நல்லதொரு விமர்சகராக விளங்குவதற்குரிய தகைமைகள் பெற்று விளங்கும் வெகு சில கனேடிய இலக்கியவாதிகளில் மைக்கல் குறிப்பிடத் தக்கவர். இவரது 'ஏழாவது சொர்க்கம்' என்னும் இந் நாவலைப் 'பதிவுகளி'ல் பிரசுரிப்பதற்காக அனுப்பியதற்காக எமது நன்றிகள்...ஆசிரியர்]

-இதை எழுதும்போது ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துக் கருத்துச் சொன்ன என் பிரியமான தேவிக்கும் அவளது கர்ப்பத்தில் இருக்கும் யுகபாரதிக்கும் (கருவிலே நீ கேட்டுக்கொண்டு இருந்திருந்தால் பத்மவியூகத்தை உடைப்பாய்..!) இக்குறுநாவலை சமர்ப்பணம் செய்கிறேன்.-- மைக்கல் -


பதிவுகள் ஆகஸ்ட் 2001   இதழ்-20

1

சிறுநகரத்திலிருந்து விலகி மேற்காக இருபதுகிலோமீட்டர்கள் ஆளரவமற்ற சோளவயல்களைக் கடந்து முன்னேற பூமியைப் புடைத்துக் கிளம்பிய வெண்வண்ணக் கொப்புளம் போல விஸ்தீரணம் பரப்பித் தெரிகிறது ஜோயஸ்வில் சிறைச்சாலை.

அரை நிலவின் ஒளி வெண்பனியில் மோதித் தெறித்து வெளுத்துக் கிடக்கிறது இரவு.

சிறைச்சாலைக்கு வெளியே -

கட்டடத்தைச் சுற்றி எழுப்பிய உயரமான கம்பிவேலி. அதன் நான்கு மூலைகளிலிலும் காவற்கோபுரங்கள். இடைக்கிடை காவற்கோபுரத்திலிருந்து உயிர்த்து பனிக்கால இரவை ஊடறுக்கிறது கண்காணிப்பு ஒளிவீச்சு.

சிறைச்சாலைக்கு உள்ளே -

விடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணு¡று கைதிகள். கடமையில் இருக்கும் அவர்களது மேய்ப்பர்கள். கைதிகளை இயக்கும் சூத்திரக்கயிறாக சில சட்டங்கள்.


அந்தச்சிறை அறையொன்றின் ஐன்னலுக்கு எதிரே விரித்திருந்த படுக்கையில்நாடிதாங்கியபடி குந்தி இருக்கும் ராஜாவின் மூளை கொதித்துத் தளம்பிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு இரவும் மெல்ல மெல்ல அறை குறுகி நாளாவட்டத்தில் பக்கச்சுவர்கள் தன்னை நெருக்கிக் கொன்றுவிடும் என்ற அச்சம் நீர்வளையங்களைப்போல பிரிந்து மறைந்து  மீண்டும் தோன்றிக் கொண்டிருக்கிறது அவனது மனத்தில்.

து¡க்கத்தின் இழுப்புக்கு இசைந்து சற்றுக் கண்ணை மூடவும் இருளின் சாதகமான சூழலை வைத்து கிரீச்சிட்டு முன்னேறுகிறது சுவர்.

எதிரிகளின் சதிக்கு உடன்பட்டு அவனைக் கொன்றுவிடத் துடிக்கிறது சுவர்.

புலன்களைக் கூர்மையாக்கி சுவர்களின் திருட்டு நகர்வைக் கவனித்துக் கொண்டிருந்தான். வராந்தா ஊடாக மாரிக்கால தவளையின் தாளலயங்களைப்போல குறட்டையொலிகள் மிதந்து வந்தன.

கொதித்துத் தளம்பிக்கொண்டிருக்கும் அவனது மூளையில் ஒரு எண்ணம் வலுத்தது. எதிரிகள் தன்னைக் கொல்வதற்கு முன்னர்தான் முன்னேறித் தாக்கி எதிரிகளைக் கொன்றுவிடவேண்டும். ஒவ்வொரு எதிரியாக விழுத்தவேண்டும். ஆயுதத்தேர்வு பற்றிய சிக்கல் இல்லை. துவக்குத்தான் அவன் பயிற்சி பெற்ற ஆயுதம். மேலும் துவக்கின் அனுகூலமான எதிரிக்கும் அவனுக்குமான இடைவெளிஇ கொலையின் கோரத்தை மனதில் மட்டுப் படுத்தும். கூடவே கடைசி நேரப் பிராயச்சித்தங்களுக்கும் மன்னிப்புக்கும் துவக்கு தலைவணங்காது. வெடி விழுந்த மறுகணம் கடதாசி மடங்கி விழுவது போல நிலத்தில் விழும் மனிதஉடல் துடித்தடங்குவதைப் பார்க்கத்தேவையில்லை. ஆக எதிரியை ஒழித்துக்கட்ட துவக்குப் போன்ற சிறந்த ஆயுதம் வேறொன்று உலகிலில்லை.

நேரத்தைப் பார்த்தான் இரவு இரண்டுமணி. படுக்கையிலிருந்து எழும்பி சுவரில் ஒரு வட்டம் கீற முயன்றான். வெள்ளைநிற ஒயில் பெயிண்ட் அடித்திருந்த சுவரில் நகத்தால் அழுத்திக் கீற பெருவிரல்நகம் வளைந்தது. நகம் மடங்க அவனுக்கு கோபம் வந்தது. கோபம் கூடக்கூட சுவரில் நிகத்தின் அழுத்தம் கூடியது. சில நெளிவுகள் நடுக்கங்களுடன் அவன் நினைத்த உருவம் வராவிட்டாலும் நீள் வட்டமாக அது பூர்த்தியாயிற்று.

நீள்வட்டமாகி விட்டாலும் பரவாயில்லை. தோராயமாக மனிசக் கண்களும் ஒரு நீள்வட்ட வடிவம்தானே. ஆனால் பெரிய மாமனுக்கு கோழிமுட்டை பருமன் கண்கள். மாமன் போட்டிருக்கும் மொத்தக் கண்ணாடி அவனது கண்களை இன்னும் பெரிதாக்கி திருட்டுமுளியாக்கி காட்டும். மாமன் யாருடைய கண்களையும் பார்த்துக் கதைக்க மாட்டான். எதிரே இருப்பவன் மிக இலகுவாக மாமனது திருட்டுப் பார்வை எங்கெல்லாம் ஓடித்திரிகிறது என்று பார்த்து விடலாம். பெண்களது இருதயம் அடிப்பது அவனுக்கு தெரிகிற மாதிரி அவர்களது நெஞ்சைப் பார்த்துக் கொண்டுதான் கதைப்பான். இதோ அந்தத் திருட்டு முளியை தோட்டா பாய்ந்து சிதறடிக்கப் போகிறது.

சுவரிலிருந்து எட்டுத்தரம் காலடிகள் வைத்தளந்து து¡ரம் கணித்து நிமிர்ந்து நிலையெடுத்து நின்றான். வட்டத்தை நோக்கி வலக்கையை நிமித்தினான். ஆட்காட்டிவிரல்தான் துப்பாக்கிக் குழாய். கூரைச் சுவரை நோக்கி நின்ற பெருவிரலுக்கும் வட்டத்தை குறிவைத்திருந்த ஆட்காட்டி விரலுக்கும் வட்டத்துக்குமான பார்வைக்கோணத்தை நேர்கோட்டில் இணைத்து கவனத்தைக் குவிக்க கொலை செய்ய வேண்டிய முகங்கள் நினைவில் வரிசை கட்டி வந்தன. வரிசையின் மத்தியில் சின்னமாமனின் உயர்ந்த உருவம் தெரிந்தது.

நடுவிலிருந்து சின்னமாமனைத் து¡க்கி வரிசையின் முன்னுக்கு நகர்த்தி வைத்து மாமனது இடக் கண்ணில் துவக்கைக் குறி வைத்தான். பாவம் பயத்தினால் மிரண்டு போன கண்கள் அவனைக் கெஞ்சின. கெஞ்சும் விழிகள் அருவருப்பானவை. அவனால் அந்தக் கோழைத்தன விழிகளைப் பார்க்க முடியாது. தனது கண்களை மாமனின் முகத்திலிருந்து நெஞ்சுக்கு இறக்கினான். தேக்குமரம் போன்ற அகன்ற மார்பு. குறி வைக்கவே தேவையில்லை. துவக்கு வெடிக்கும் போது ஏற்படும் உதைப்புக்கூட இலக்கை தவறவிடாது இதயத்தைத் துளைத்துச் செல்லும். சின்ன மாமனுக்கு இதயம் இருக்கிறதா..? இருந்தால் என்னை ஏமாற்றுவானா..?

நெஞ்சின் இருதயப் பரப்பையும் விட்டு குழாயைக் கீழே இறக்கினான். பானைவயிறு தெரிந்தது. சேட் பட்டன்கள் தெறித்து விடுமாப்போல வீங்கிய வயிறு. முப்பத்தையாயிரம் டொலர்களை விழுங்கிய வயிறு. ஆறு தோட்டாக்களையும் ஒருசேர வயிற்றில் செலுத்தினாலும் வெப்பிசாரம் தணியாது.

நித்தியபாவி..!

வேண்டாம் இவனைக் கொல்லக்கூடாது. முழங்கால்ச்சில்லை வெடிவைத்து சிதைத்து நொண்டியாக்கி விடவேண்டும். இவன் நொண்டித் திரியும்போது நான் பார்த்துப்பாத்து சிரிக்க வேண்டும். இவன் போடும் டெனிம்ஐ£ன்ஸ் முழங்காலுக்குக் கீழே காலில்லாமல் காற்றில் ஆடவேண்டும். வன்மத்துடன் துவக்குக்கையை முழங்காலுக்கு இறக்கி குறிவைத்தான்.

அதோ.. சின்னமாமனின் மகள்மார் யசோதராவும் பிரியங்காவும் தம் தகப்பனின் காலைக் கட்டிக்கொண்டு அவனைக் கெஞ்சல்ப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர். அடச்...சீ.! அதுகளின் கண்களிலிருந்து கண்ணீர் வேறு பொலபொல வென்று விழுந்து கொண்டிருக்கிறது. அவனையறியாமல் அவனது துவக்கு கீழே இறங்கி விட்டது. வலக்கையை முஷ்டிமடக்கிக் கொண்டு ஓடிப்போய் சுவரிலிருந்த வட்டத்திற்கு ஓங்கிக் குத்தினான். "அம்மா" என்ற குரல் வாயிலிருந்து வந்தது. வேதனையில் கையை உதறிவிட்டுக் கொண்டான். கை விறுவிறுத்து வலித்தது. ஆக்ரோசத்துடன் சுவரில் விழுந்த குத்து அவனது மொளிகளை நெரித்து விட்டது. சுவர் உரஞ்சியதால் தோல் வளண்டு இரத்தம் வந்தது. வேதனையில் அழுகை வந்து விட்டது. சுவரில் சாய்ந்து இருந்து கொண்டு முதுகு குலுங்க அழுதான். கடைவாயிலிருந்து வீணீர் வழிந்து ஒழுகியது. "முப்பத்தையாயிரம் டொலர்ஸ் முப்பத்தையாயிரம் டொலர்ஸ்" என்று அவனது வாய் மந்திரமாக உச்சரித்தது.

இல்லை இவனைச் சுட்டுத் துலைக்க வேண்டும் என கறுவிக்கொண்டு திரும்பவும் எழும்பினான். அப்போதுதான் அவனது காரை சின்னமாமன் வைத்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. இவனைக் கொன்றால் காரை தன்னுடைய பெயருக்கு மாற்ற முடியாது. அது அவனது பிரியமான கார். சொன்ன சொல் கேட்கும் கறுத்த நாய்க்குட்டி போன்ற §ளைளய¦ - 300ணுஓ. அது எவ்வளவு நாள் அவனைக் காப்பாற்றி இருக்கிறது. பொலிஸ் கலைத்தாலும், வியாபாரப் போட்டி காரணமாக உருவான எதிரிகள் கலைத்தாலும் இவனைப் பத்திரமாக வீடு சேர்த்து விடும். இவனது ஒவ்வொரு எதிரிகளையும் அதற்கு தெரியும். ஆனாலும் ஏனோ ஐஸிலின் நடிப்பை அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிலவேளை அவனை மறந்து விட்டு ஜிஸிலுடனேயே அது பலநாட்கள் ஒட்டாவா கியூபெக் சிற்றி என்று சுற்றி வந்திருக்கிறது.

கொல்ல வேண்டிய எதிரிகளின் வரிசையில் ஏன் ஜிஸிலின் முகம் வரவில்லை. அவளைக் கொல்ல வேண்டாமா..? என்னுடைய கட்டிலில் எனக்குப் பிடித்த எனக்கே எனக்கான ரோஸ்கலர் பெட்சீட்டைப் போர்த்துக் கொண்டு அந்த பிரெஞ்சுக்காரன் படுத்திருந்தானே. நான் அவளைக் கொல்லத்தானே வேணும் ஏன் அவள் வரிசையில் வரவில்லை. என்றாலும் நான் அப்படி உதைந்திருக்கக்கூடாது. குதிக்கால் இன்னமும் நொந்து கொண்டிருக்கிறது. நடக்கும்போது குதிக்காலை நிலத்தில் பாவமுடியவில்லை. நாளை டொக்டரைப் பார்க்கும்போது கையுக்கும் காலுக்கும் மருந்து போடவேண்டும்.

முந்நு¡று கிலோமீட்டர் கடந்து மொன்றியலிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்தாள். என்மீது அவளுக்கு அன்பிருந்து ஓடிவர வைத்திருக்குது என்றுதான், கண்ணாடிச் சுவருக்கு வெளியே அவளது முகம் தெரிந்தபோது மனம் குளிர்ந்தது. அவளைக் கட்டி அணைத்து பொன்நிறத் தலைமயிரை கோதிவிடவேண்டும் என்று கை துருதுருத்தது. அவளது மடியில் தலைவைத்துப் படுத்து "என்னை இழந்து விட்டதாக கவலைப்பட்டாயா ஐஸில்..!" என்று கேட்க வேண்டுமென நாக்கு துடித்தது. அவள் சற்றுத் தேறி இருந்தாள். போதையில் ஓயாது து¡ங்கிவிழும் கண்கள்கூட வெளிச்சம் விழுந்த பூவைப்போல மினுமினுப்புக் கூடியிருந்தது. இரப்பையில் நிலைத்திருந்த கருமைகூட மறைந்துவிட்டது. து¡ள் அடிப்பதை விட்டுவிட்டாள் போலிருக்கிறது. நான் இங்கிருக்கும்போது அவளுக்கு து¡ள் யார் கொடுப்பார்கள்..?

பாவம். ஜிஸில்..!

அன்பே...! து¡ள் குடிப்பதை நானும் விட்டுவிட்டேன். வெளியே வந்ததும் இருவரும் ஒன்றாக வாழ்வோம். நான் வேலைக்குப் போகிறேன். எனக்குச் சொந்தமென்று இனிமேல் யாருமில்லை. பெரியமாமன் திருடன். சின்னமாமன் ஏமாற்றுக்காரன். நீதான் எனக்கு சொந்தம் நட்பு சுற்றம் எல்லாம்.

அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனைக் கூட்டி வந்த சிறைக்காவலாளி அறையைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டான். இப்போது இருவர் மட்டுமே தனிமையாக. இருவருக்குமிடையே கண்ணாடிச்சட்டம் பெரிய சுவராக பிரித்திருந்தது. மிகவும் நாசூக்கான கண்காணியாக இரண்டு கமெராக்கள் அமைதியாக பார்த்தவாறிருந்தன. ஐஸில்தான் முதலில் சிரித்தாள்.

"எப்படி இருக்கிறாய் நண்பனே" என்ற அவளது குரல் பல பாலைவனங்களைத் தாண்டி வருவதுபோல கண்ணாடிச்சுவரின் சின்ன ஓட்டைக்குள்ளால் அவனை அடைந்தது. பதில் சொல்லாமல் மெளனமாக அவளைப் பார்த்தவாறிருந்தான். போதம் மிகுந்த அவனது பார்வையை கண்ணாடிச்சுவர் வேண்டி அவளிடம் கொடுத்தது.

"ஆந்திரேயும் உன்னுடன் வந்தானா?" என்றான். அவனது கேள்வியில் இருந்த வன்மத்தைப் புரிந்து கொண்டாள் ஜிஸில். நல்லவேளை ஆந்திரே காருக்குள் படுத்திருக்கிறான்.

"நான் அந்தப் பன்றியைப் பார்க்கவே இல்லை. தனியாக வந்தேன். உன்னுடைய மாமாவிடம்தான் விலாசம் வேண்டினேன்."

காதல் தேடவைத்திருக்கிறது. என்னைப் பற்றிய நினைவுகள் அரித்தெடுத்த அவதியில் சின்னமாமனிடம் விசாரித்திருக்கிறாள். ஆனால் இவளுக்கு சின்னமாமனைப் பற்றிச் சொல்லி வைக்கவேண்டும். அவன் சரியான பொம்பிளைக் கள்ளன். ஏமாற்றுப் பேர்வழி. என்னைப்போல இவளையும் ஏமாற்றி விடுவான்.

"ராஜா.. என்னிடம் உனது அப்பாற்மென்ட் திறப்பு இருக்கிறதல்லவா"

"பரவாயில்லை. நான் அந்த அப்பாற்மென்ட்டுக்கு ஒரு வருட வாடகையும் கொடுத்துவிட்டேன். நீ படுத்து உறங்கு."

"நான் ஏற்கனவே அங்குதான் தங்கியிருக்கிறேன். அதல்ல விசயம்..." என்று சொல்லியவாறு அவள் மிச்சத்தைச் சொல்லாமல் தயங்கினாள். சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தவாறிருந்தாள். ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. இந்தப் பெண்களே இப்பிடித்தான் காரணமில்லாமல் தயங்குவதும் யோசிக்காமல் அன்பு வைப்பதும் திடீரென்று கோபிப்பதும், விசித்திர ஜீவன்கள். பெரிய மாமியும் இப்பிடித்தான். நு¡றுகிராம்  து¡ள்விற்று வந்த இலாபத்தில் ஜந்து பவுண் சங்கிலி வேண்டிக் கொடுத்தபோது மருமகனென்றுகூட யோசிக்காமல் நாணிச்சிவந்தாள். அன்று வெள்ளிக்கிழமை என்று தெரிந்தும் இறச்சி பொரித்து சோறு போட்டவள் அடுத்த கிழமையே "வெளியால போடா நாயே" என்று விட்டாள்.

அன்று கஞ்சா அடித்தபிறகு குடித்த விஸ்கி வயிற்றில் இசைகேடாக முறுகி விட்டதால் பெரிய மாமியின் பாத்ரூமுக்குள் சத்தி எடுத்து விட்டான். ஒழுங்காக பாத்ரூமுக்குள் சத்தி எடுத்தது எப்படி நாய்த்தனமாகி விட்டது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெரியமாமன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரைப்போத்தல் §ஐ அண்ட் பி விஸ்கியை விழுங்கிவிட்டு சாரம் விலகினது தெரியாமல் செற்றியில் விழுகிறான். சினிமாப்பாட்டுக் கொப்பியை திரும்பித் திரும்பிப் போட்டுப் பார்த்து என்னத்தையோ உருவேற்றிக் கொள்கிறான். ஏழுவயது வளர்ந்த மகள் வைத்திருப்பவன் சிலுக்குஸ்மிதாவின் அழகை நினைவில் ஏற்றி மாமியை முயங்குவது சாவான பாவமல்லவா..!

எது சரி எது தப்பு ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லையே. இவள் ஐஸில் என்னதான் சொல்ல வருகிறாள்.

"ராஜா¡..! போன கிழமை அப்பாற்மென்ட் துப்பரவு செய்யும்போது நீ மறைத்து வைத்திருந்த தராசு கண்ணில்பட்டது."

"அதைக் குப்பையில் எறிந்துவிடு! அது அங்கு இருப்பது உனக்கு தொந்தரவைக் கொண்டு வந்துவிடும்."

"அதை உன்னுடைய நண்பன் குமாரிடம் கொண்டுபோய்க் குடுத்துவிட்டேன்" என்றாள் ஜிஸில்.

"அவனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதே.. தன்னுடைய வியாபாரத்துக்கு உன்னையும் பாவித்துவிட்டு சக்கையாய் குப்பையில் போட்டுவிடுவான்"

"குமார் எனக்குச் சொன்னான். நீ அந்த அப்பாற்மென்டில் இருநாறு கிராம் து¡ள் ஒழித்து வைத்திருக்கிறாயாம். அதை எடுத்து தனக்குத் தந்தால் தான் காசு தருவதாக."

"கேள் ஜிஸில்..! அது பச்சைப்பொய். என்னிடம் கைவசம் எதுவுமில்லை. நான் இப்போது புதிய மனிதன்."

"ராஜா¡..! அதை என்னிடம் சொல்லு. நான் இப்போது மிகவும் கஸ்ரப்படுகிறேன். அதை எடுத்து குமாரிடம் கொடுத்து காசு வேண்டி விடுகிறேன். பிளீஸ் சொல்லு..! நீதான் இனிமேல் வெளியால் வரவே முடியாதே உனக்கெதற்கு அது..?"

"என்னடி சொன்னாய்.. என்ன சொன்னாய்.. நான் வெளியே வரமாட்டேனா.. கள்ள வே..."

காலால் எட்டி உதைந்தான். கண்ணாடிச்சுவர் அதிர்ந்து மெளனித்தது. எங்கிருந்தோ இரண்டு காவலாளிகள் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கூட்டி வந்துவிட்டார்கள். அவர்களது பிடியிலிருந்து திமிறித் திமிறி விடுபட முயன்று தோற்றுப் போனான்.

சுவரில் சாய்ந்திருந்தபடி அண்ணாந்து கூரையைப் பார்த்தான். மூன்று பக்க சுவர்களையும் பார்வை அளந்து வந்தது. அவன் வெளியே வர முடியாது என்று ஐஸில் சொன்ன வார்த்தைகள் அந்தச் சிறைச்சுவரெங்கும் பரந்திருப்பது போல பிரமை தட்டியது. அந்த நீள்சதுர அறையின் ஒரேயொரு ஐன்னலும் கைக்கெட்டாத து¡ரத்தில் இருந்தது. என்னதான் நடக்கிறது வெளி உலகத்தில். அவனுக்கு இப்போது வெளியே பார்க்க வேண்டுமென்ற வெறி வந்துவிட்டது. எட்டிப் பார்த்தான் ஐன்னலின் விளிம்பைக்கூட அவனது கைகள் எட்டவில்லை. தாவிக்குதித்து ஐன்னல் சட்டத்தைத் தொடமுயன்றான். இப்போதே வெளியே பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் கூடக்கூட தாவிக் குதித்தலின் லயம் கூடிக் கொண்டுபோனது. தரையில் சப்பாத்து அதிர்ந்த சத்தம் இரவின் நிசப்தத்தைக் கிழித்தது.

சத்தத்தின் திசை நோக்கி வந்த இரவுக்காவலாளி கூடைபந்தாட்டத்தைப் பார்க்கும் சுவாரசியத்துடன் அவனது குதிப்பை குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அதட்டினான்.

"ஏ.. மனிதா..! அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். நித்திரைக்குப் போ..!!"

அவன் தன்னுடைய சொல்லுக்கு கீழ்ப்படிகிறானா இல்லையா என்று பார்ப்பதற்கு அங்கேயே நின்றான் காவலாள். ஒழுங்கு முக்கியம். இரவுக்கென விதித்திருக்கும் அமைதிக்குள் இடையூறான அவனது தேடல் பற்றிய முனைப்பை அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை சிறைக் காவலாளி.

கண்காணிப்பின் வீச்சு உறுத்தி படுக்கையில் சாய்ந்தான் ராஜா. அவனது மூளைக்கு உறக்கம் தேவையற்றுவிட்டது. மாத்திரையின் உதவியினால் கிடைத்து வந்த ஓய்வுகூடஇ மாத்திரை உடலில் வீரியமிளந்து வருவதால் பலனற்றுப் போய்விட்டது.

அவனது உடம்பு படுக்கையில் வெறுமனே படுத்திருக்க மனசு நழுவிப் பறந்து ஐன்னல் சட்டத்தில் தொங்கியபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தது ஒரு வெளவால் போல.


பதிவுகள் - செப்டெம்பர் 2001  இதழ் 21

2

நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல் விமானம் தரையிறங்குவதாக அறிவிப்பு செய்தவுடன் அதற்கான முஸ்தீபுகள் ஆரம்பமாகின. பல நாட்களாக வீசிய ஓயாத புயலுக்குப்பின் தரையைக் கண்ட மாலுமியின் மனநிறைவு ஏற்பட்டது. இது அவனது கடைசி நடவடிக்கைக்கான நேரம். பெரியமாமன் சொல்லியிருந்தான். டிரான்ஸ்சிட்டிலிருந்து விமானம் பறக்கத் தொடங்கிய ஆறுமணித்தியாலங்களின் பின்னர்இ லாண்டட் பேப்பரைத் தவிர எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிடு என்று. இப்போது விமானம் பறக்கத்தொடங்கி எட்டுமணித்தியாலமாகி விட்டது. எல்லாம் ஞாபகத்தில் இருந்தும் விதம்விதமான பியர் பிரண்டி வகைகள் சற்று மனதை மயக்கி விட்டன. பேப்பரை ஒழித்து வைக்கவேண்டிய டிரவுசர் பாண்ட் இடுப்புப்பக்கத்தை பிளேடினால் ஏற்கனவே கிழித்துத் தந்திருந்தான் பெரியமாமன். லாண்டட் பேப்பரை மடித்து டிரவுசர் பாண்டிற்குள் செருகி பெல்ட்டை இறுக்கிக் கொண்டு பாஸ்போர்ட் அடையாளஅட்டைகள் கிரடிற்காட்டுகள் எல்லாவற்றையும் கிழித்து பாத்ரூமுக்குள் இருந்த குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு வெளியே வந்து சீட்டில் இருந்தான். சீட்பெல்ட்டைப் பூட்டச் சொல்லி லைற் எரிந்தது. பயணிகள் ஒவ்வொருவரையும் கவனித்துச் சென்றார்கள் பணிப்பெண்கள். விமானம் உயரத்தைக் குறைத்தது. வயிற்றுக்குள்ளிருந்து நெஞ்சுக்கு மேலெழும்பியது இனம்புரியாத உணர்வு.

ஏழாவது சொர்க்கத்தை அடைந்து கொண்டிருக்கிறான் ராஜா. சொர்க்கம் எப்படி இருக்கும் என்று மூன்றுமாதமாக மெட்ராசில் பெரியமாமனுடன் ஆட்டோவில் திரியும் போது சொர்க்கபுரியில் தனது செளகரிய வாழ்வைச் சொல்லிச் சொல்லியே கனவுகளைக் கட்டி எழுப்பி விட்டான் பெரியமாமன். செங்கம்பளம் விரித்து இருபத்தியொரு மரியாதை வெடிபோட்டுஇ ஏழாவது சொ¡க்கத்தின் வாசல் திறக்க இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கின்றபோதும் ஆவலைக் கட்டுப் படுத்த முடியாமல் விமான ஐன்னலால் எட்டிப் பார்த்தான். பரந்த வெள்ளை நிலத்தில்இ இலைகளற்று விரல்விரித்த மரங்களடர்ந்தஇ வனாந்தரப் பகுதிக்குள் விமானம் தலைசாய்த்து இறங்கிக் கொண்டிருந்தது. சடுதியாக மனத்தில்இ தான் பாஸ்போட்டைக் கிழித்தது தப்பாகிவிட்டதோ என்ற பயம் வந்துவிட்டது. சீட்டில் நிலை கொள்ளாது மனம் தவித்தது. பம்பாயிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து தற்சமயம் வரை கணக்குப் போட்டுப் பார்த்தான். பெரியமாமன் குறிப்பிட்ட காலஅளவு மிகச் சரியாக பொருந்தி வருகிறது. அப்போ இழவு விழுந்த பிளேன் எங்கே இறங்குகிறது?

அவனது தயக்கத்தை எல்லாம் அள்ளிக்கூட்டிக் கொண்டு, விமானம் மொன்றியல் மிராபெல் நிலையத்தில் இறங்கியது. மீண்டுமொரு முறை சொல்லவேண்டிய பொய்யை எல்லாம் மீளப் பார்த்துக் கொண்டுஇ இமிக்கிரேசன் வரிசையில் நின்றான். அவன் நின்ற வரிசை வேகமாகக் குறுகுவதை தெரிந்து அடுத்து நீளமாக நின்ற வரிசையில் மாறி நின்றபோது, வெள்ளைச்சேட் அணிந்துஇ கப்பல் கப்டன் மாதிரி தொப்பி போட்ட அதிகாரி அருகே வந்தான். அதிகாரி அவனை நெருங்கவும், "ஜயாம் றெபூஐ¢" என்று,  பெரியமாமன் சொல்லித் தந்ததை கிளிப்பிள்ளை மாதிரி ஒப்புவித்தான். அதன்பின் காரியங்கள் ஒழுங்காக நடந்தன. அவனை ஒரு அறைக்குள் கூட்டி வந்து இருக்கவிட்டனர். அங்கு ஏற்கனவே இரண்டு வெள்ளைத்தோல் ஆண்களும், வங்காளி இளைஞர் மூவரும், கூடவே ஒரு வங்காளிப் பெண்ணும் இருந்தனர். எல்லோருடைய முகங்களிலும் அச்சமும்,  வெறுமையும் பூசியிருந்தது. இவனுக்கு இன்னும் போதை இறங்கவில்லை. கதிரையில் சாய்ந்து இருந்தபடி உறங்கிவிட்டான். ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்களின் பின்னர்தான்,  கைரேகைப் பதிவுகள், கைதிமாதிரி தேதி விபரப்பலகையை நெஞ்சுக்கு நேரே பிடித்தபடிக்கு எடுத்த போட்டோக்கள்இ விசாரணைகள்,  என்று எல்லாம் முடிந்து வெளியே வந்தான். விமானநிலையத்தின் வாசல் கடக்கவும் எங்கோ மறைவாக நின்றுவிட்டு அவனை நோக்கி வந்தான் சின்னமாமன்.

சின்னமாமன் கைகுலுக்கிக் கட்டித் தழுவினான். மாமனது பெரிய உடம்புக்குள் ஒரு கோழிக்குஞ்சைப் போல நெருங்கும் போது அன்பின் வாஞ்சை கண்ணீராக விழுந்தது.

"எங்களுக்கு நீ வந்து சேருவாய் எண்டு தெரியும். சின்னமாமி நீ வருவாய் எண்ட நம்பிக்கையில வடிவாச் சமைச்சு வேற வச்சிருக்கிறா"

கார் பாக்கிங்கு ஒவ்வொரு தளமாக லிப்டில் இறங்கி வரும்போது, பட்டிக்குள் அடைத்த செம்மறி ஆடுகள் படுத்திருப்பது போல, பல வடிவங்களில் ஒய்யாரமாக நின்ற கார்களைப் பார்க்க, ஏழாவது சொர்க்கத்தின் பிரமிப்பு இன்னும் கூடியது.

"நாளைக்கே உனக்கு கட்டில் வேண்டித் தாறன்." என்று தங்குமிடம் பற்றி அன்பாக சின்னமாமன் கூறியதைக் கேட்டு,  அவன் சந்தோசம் அடைந்தான். தமிழ்நாட்டில் எத்தனை நாள் பரதேசியாக அலைந்திருக்கிறான். நேற்று இருந்த வாழ்வை நினைக்க,   மிகவிரைவில் சினோவுக்குள்ள நின்று ஒரு போட்டோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது.

நிலம், வீடு மரம் எங்கும் படிந்திருந்த வெண்பனியைப் பார்த்தவாறு காரில் செல்லும்போது அவன் ஏழாவது சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விட்ட பெரியமாமனை நன்றியுடன் நினைத்துப் பார்த்தான். மாமனை நினைத்தபோதுதான் அவர் திரும்பத்திரும்ப சொல்லிவிட்டது ஞாபகத்தில் வந்தது. "போய்ச் சேர்ந்ததும் ராக்‘¢ பிடித்து நேரே வீட்டுக்குப் போ.! அங்கயிருந்து உன்ரை ரெலிபோன் வரும்வரைக்கும் எனக்கு நிம்மதி இருக்காது. மறக்காம உடன ரெலிபோன் பண்ணு. அடுத்தகிழமையே நான் வந்திடுவன். வந்து எல்லா இமிக்கிரேசன் வேலையையும் பாப்பன். சின்னமாமாவோடை திரிஞ்சு காரியத்தைக் கெடுத்துப் போடாதை. கேஸ் சரியாக் குடுக்காட்டா  திருப்பி அனுப்பிப் போடுவாங்கள்."

அவனது நிலை தர்மசங்கடமாகிவிட்டது. நேரே பெரியமாமியின் வீட்டுக்குப் போவதுதான் நியாயம். டிரான்சிஸ்டில் இருந்து சின்னமாமனுக்கு ரெலிபோன் பண்ணி எயாப்போட்டுக்கு வரச்சொல்லி அலைக்கழித்து விட்டு அவனது சொல்லையும் கேக்காமல் இருக்கமுடியாது.

"அதுசரி எவ்வளவு முடிஞ்சுது? நான்தான் முதல்லை உன்னைக் கூப்பிட வேணுமெண்டு வெளிக்கிட்டனான். உன்ரை மாமிக்கு இடையில சுவமில்லாமப் போச்சு. அண்ணர் கூப்பிட வந்த ஆள் ஏதோ காசுப்பிரச்சனையில சறுக்கிப் போச்சு. அதான் உன்னை அதிலை இழுத்திட்டார். இப்ப என்ன ஒருவரியத்திலை நீ உழைச்சுக் காசைக் குடுத்திட்டா கதை முடிஞ்சுது. உடன ஒரு வேலையில உன்னைக் கொண்டே கொழுவிப் போடவேணும்."

நு¡றுகிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓடிக்கொண்டு இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே வந்தான் சின்னமாமன். கிட்டத்தட்ட ஜம்பது தடவை இந்தியாவிலிருந்து சின்னமாமனுக்கு அவன் ரெலிபோன் எடுத்திருப்பான். கலைக்கோல் எடுத்தால் அக்சப்ற் பண்ணுகிறான் இல்லையென்று நண்பர்களிடம் காசு தண்டிஇ மூன்று நிமிசத்திற்கு புக் பண்ணி பலதடவை எடுத்திருக்கிறான். அப்போதெல்லாம் சின்னமாமா நித்திரையில் இருப்பான். அல்லது வேலைக்குப் போயிருப்பான். வெறுமே மாமியிடம் சுகம் விசாரித்து விட்டு வைக்க வேண்டியிருக்கும். இப்போது அவனைக் கூப்பிட இந்தியா வெளிக்கிட்டதாகச் சொல்கிறான். இனிமேல் எதையும் பேசிப் பிரயோசனம் இல்லை.

"மாமா.. நீங்க ரண்டுபேரும் பக்கத்தில பக்கத்திலதானே இருக்கிறியள்..?"

"ஆரு. உன்ரை பெரியமாமியோடயோ..? அந்தக்கம்பிளிவயிரவரோட ஒரு மனிசன் இருக்கலாமே. போகப்போக உனக்குத் தெரியும்."

"இல்ல... பெரியமாமா தன்ரை வீட்ட போகச் சொன்னவர். முதல்ல அங்க போய்ச் சொல்லீட்டு,  பிறகு உங்கட வீட்டுக்குப் போவம்."

"உனக்கென்ன விசரே.. அதெல்லாம் அண்ணர் வந்தோண்ண போகலாம். உன்னைப் பாக்கோணுமெண்டு சின்னமாமி அங்க காவல் இருக்குது."

இதற்குப் பிறகும் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல என்பதால் வேறு விசயத்திற்கு கதையை மாற்றினான்.

"வரியம் முழுக்க இந்தச் சினோ இப்பிடிக் கிடந்தா புல்லுப் பூண்டே முளைக்காது. பிறகு வெள்ளாமை எப்பிடிச் செய்யிறது?"

காலநிலை பற்றிய மாற்றங்களுக்கும் சின்னமாமனுக்கும் பாதிப்பு இல்லைப் போல இருக்கிறது. நெத்திச்சுழி நாம்பனை மேச்சலுக்கு சின்னமாமன் இழுத்துக்கொண்டு போக, அவனுக்குப் பின்னால கழிசானை வரிஞ்சு கட்டிக் கொண்டு ஓடிய ஞாபகங்களை புரட்டிக் கொண்டிருக்க, பனையடிவளவில் பிறந்தவன் என்ற நினைவே அற்றவனாக சின்னமாமன் மறுமொழி சொன்னான்.

"நாங்கள் இஞ்ச மூண்டு விசயத்தை நம்பிறேல்லை. வெதர் வேலை பெம்பிளையள். நீ இதுக்கேத்தமாதிரி வாழப் பழகோணும்."

சின்னமாமன் வாழப்பழகிக் கொண்டானா? அல்லது இங்கேயே பிறந்தானோ என்ற ஜமிச்சம் அவனுக்கு வந்துவிட்டது. சின்னமாமன் காரை பார்க் பண்ணும் யத்தனத்தில் இருந்தான். வெண்பனி குவிந்திருந்த வீதிக்கரையில்இ கார் மாமனது சொல்லுக்கு கீழ்படியாமல் வழுக்கிக் கொண்டிருந்தது.


சின்னமாமாவின் வீட்டிலிருந்து பெரியமாமிக்கு ரெலிபோன் எடுத்தபோது மாமியின் சுருக்கமான பதில்கள் வழவழா விசாரிப்புகளிலிருந்தே தன் தப்பான தரையிறக்கத்தைப் புரிந்து கொண்டான். இந்தியாவிலிருந்து எடுத்த கலைக்கோல்களுக்கு சம்மதம் தெரிவிக்காத சின்னமாமன் தாராள மனதுடன் இங்கிருந்து இந்தியாவுக்கு ரெலிபோன் எடுத்து வந்த சேர்ந்த விபரம் சொல்ல ரெலிபோனைப் பாவிக்கவிட்டான். ஏக தடல்புடலான வரவேற்பு சின்னமாமியிடமிருந்து கிடைத்தது. இன்னும் கொஞ்சம் நெருங்க விட்டால் கதிரையில் ஏறிநின்றாவது கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் கொஞ்சி விடுவாளோ என்ற மாதிரிக்கு அன்பு சொரிந்தாள்.

அவனது முதல் பார்வைக்கே பிரமிப்பு ஊட்டியது வரவேற்பறையில் இருந்த ரேப்செற். இதைவிட உருவம் சிறுத்த பொக்சுகளும் அம்பிளிபயரும் வைத்துத்தான்  ஸ்பீக்கர் ஆனந்தன் கல்யாணவீடுஇ கோவில்களுக்குப் பாட்டுப் போட்டு பெரிய கல்வீடு கட்டினான். ஆயுபோவன் ரூபவாகினி ஒன்றுகூட இல்லாத கிராமத்தின் கொட்டில் வீட்டுக்குள் வளர்ந்த சின்னமாமனிடம் ஜம்பத்தியிரண்டு சனல்கள் பார்க்கக்கூடிய கலர்ரெலிவிசன் இருந்தது. சுவரை மறைத்து நிப்பாட்டியிருந்த பிரமாண்டமான அலமாரிக்குள் வெள்ளித்தட்டு, வெள்ளிடம்ளர்கள்இ குத்துவிளக்கு,  சின்ன நிறைகுடம்இ கலைவேலைப்பாடு செய்த கண்ணாடிக் கிளாஸ்கள் என இன்னும் பல சாமான்கள் நிறைந்திருந்தன.

சமையலறையிலிருந்து ஒவ்வொரு முறையும் ஹோலுக்கு வந்து,  அலமாரிக்குள் சாப்பாட்டுத் தட்டங்கள் எடுக்க வேண்டியிருப்பதால் போலும் சின்னமாமி,  அலங்காரம் செய்த நிலையிலேயே வீட்டிலும் நின்றார். சந்தோசக்குடி ஒன்றுக்கு மாமன் ஆலாபனை எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. தன் நண்பர்களுக்கு ரெலிபோன் பண்ணி,  மருமகன் வந்த வி‘யம் தெரிவித்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டிருந்தான். "நிக்கிறாரோ..! இறங்கிட்டாரோ..!!" என்ற சொற்பிரயோகம் தமிழாக இருந்தாலும் உண்மையில் அவனுக்கு விளங்கவில்லை. எங்கேயிருந்து எல்லோரும் இறங்கி வருகிறார்கள் என்று அறிந்து கொள்ள அவனுக்கு இரண்டு நாட்களாகின.

மாமனது நண்பர்களின் குடிமுறையில் ஒரு நாசூக்கும்,  நளினமும் இருந்தது. செம்மஞ்சள் தண்ணியை எந்தவித முகச்சேட்டையும் இல்லாமல் உள்ளே வார்த்தார்கள். மிக்சரைக்கூட கரண்டியால் எடுத்து கையில் கொட்டி பின்னர்தான் வாயில் எறிந்தார்கள். இந்தியாவில் வெறும் பச்சைத்தண்ணிபோல இருக்கும் பட்டைச்சாராயத்தைக் குடிக்க எவ்வளவு உபகரணங்கள் தேவை. ஊறுகாய் மிக்சர் ஆம்லெட் என்று பகுதிக்கருவிகள் இல்லாமல் அதை உள்ளே அனுப்புவது பிரம்மயத்தனம்.

நடைமுறை உலகின் கிளித்தட்டு வாழ்க்கையில் தாம் சேகரித்து வைத்திருந்த அனுபவ ஞானங்களை மாமனது நண்பர்கள் ராஜாவுக்கு அள்ளித் தெளித்தார்கள்.

பின்னர் எதிரிப்டைகளை வென்று வந்து பாசறையில் அலுப்புத்தீர மதுவருந்திவிட்டு தாங்கள் விழுத்திய தலைகளும் நடத்திய யுக்திகளும் பற்றி கதைபேசும் போர்வீரர்களைப்போல மாமனது நண்பர்கள் இத்தாலி பிரான்ஸ், ஜேர்மனி என்று தாம் வென்று வந்த நாடுகளில் நடத்திய வீரப்பிரதாபங்களை சொல்லத் தொடங்க அவனுக்கு நேரமாற்றம் காரணமாக நித்திரை து¡க்கி அடித்தது.

சின்னமாமி மாபெரும் தியாகமொன்று செய்தாள். அவனை அவர்களது படுக்கையில் படுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி படுக்கவிட்டாள். அது ராஐகட்டில்! படுத்ததும் உடம்பை அணைத்துக்கொள்ளும் அருமையான கட்டில். முதலில் வேற்றுக்கட்டிலில் படுத்த கூச்சம் இருந்தாலும், அலுப்பும்,  நித்திரையும் எல்லாவற்றையும் துரத்தி அடித்துவிட்டன.

அடுத்த கிழமையே பெரிய மாமன் வந்து சேர்ந்தது சற்று நிம்மதியாக இருந்தது. இமிக்கிரேசன் அலுவல்கள் எல்லாவற்றையும் அவனே முன்னின்று செய்தான். கேஸ் எழுதும் இராமதாஸ் இழுத்த இழுப்புக்கும் அடித்த பெருமைக்கும் சிறிதும் குறையாமல் பெரியமாமனும் வளைந்து கொடுத்து காரியம் ஆக்கினான். வெல்·பெயர் பதிவதற்கு மட்டும் சில சிக்கல்கள் வந்தன. பெரியமாமன் குடும்பமாக வெல்·பெயர் எடுப்பதால்இ அவனது முகவரியை மாமனுடன் பதியமுடியவில்லை. அவர்களுடன் சேர்த்துப் பதிந்தால் பெரியமாமனது வெல்·பெயர் பணத்தில் நு¡று டொலர் வெட்டி விடுவார்கள். சின்னமாமனுக்கும் இதே நிலைமைதான் என்றாலும் அவன் தன்னுடன் பதிய மனமுவந்து சம்மதித்தான்.

பெரியமாமி தன் தம்பியாரை தன்னுடன் வைத்திருப்பதால் தங்குமிடமும் சின்னமாமனுடன் என்றாகிவிட்டது. ஹோலில் விரித்திருந்த வண்ணக்கார்ப்பெட்டின் மீது ஒரு பெட்சீட்டை விரித்து முடங்கிக் கொண்டாலும் அவன் மனச் சாந்தியடைந்தான். கனவுகளை அறுத்துக் கொண்டு காலைகள் வந்தன.

அலுக்காமல் சலிக்காமல் ஒருவாரமாக ஊர்க்காரர், உறவுகாரர் தங்கள் வீடுகளுக்குக் கூப்பிட்டு, சாப்பாடு தந்தனர். சிலபேர் காரில் வந்து ஏற்றிக்கொண்டு போய் சாப்பாடு தந்துஇ காரிலேயே கொண்டுவந்து விட்டிட்டும் போனார்கள். என்ன, தமது கார் மற்றவனது காரைவிட இன்னின்ன வி‘யங்களில் உசத்தி. இவ்வளவு டொலர்ஸ் கொடுத்து இறக்கியிருக்கிறேன். அவன்ரை நுஓஇ இது டுஓ என்பன போன்ற சம்பா‘ணைகளைத் தாங்கவேண்டியிருக்கும். இதைவிட ஓரடி மேலே போய் சிலபேர்இ சம்பா‘ணைக்குள் வலிந்து இழுத்து நுழைத்துக்கொண்ட,  ஆங்கில, பிரெஞ்சு வார்த்தைகளைப் பாவித்துக் கொண்டார்கள். பாங்கில் காசு அடித்தார்கள். வீட்டில் பீசாவுக்கு அடித்தார்கள். சினோவில் சறுக்கி விழுந்துவிட்டு சவா என்றார்கள். நாலுபக்கமும் கண்ணாடி பூட்டிய காருக்குள் இருந்து கொண்டு, முன்னுக்குப் போகும் கார்க்காரனை ஆங்கில து¡சணத்தால் பேசிக்கொண்டு, தங்கள் நடுவிரலை உயர்த்தி வானத்தை ஓட்டையாக்கினார்கள்.

இப்படி மற்றவர்களின் கலாச்சார உயர்வைப் பார்க்கையில்இ சின்னமாமன் தலைகீழான மாற்றத்தில் இருந்தான். காலைக்கும் மதியத்தும் இடையாக, பத்து பதினொருமணிக்கு, படுக்கையை விட்டு எழும்பினான் என்றால், குளிப்பு முடித்து அவனது பெரிய வயிற்றில் துவாயைச் சுற்றிக் கொண்டு, சின்னராக்கையைத் திறந்து, வரிசையில் வைத்திருக்கும் சர்வமத சாமிப் படங்களுக்கும் சாம்பிராணி கொழுத்தி வீடு முழுக்க சாம்பிராணிப்புகையின் சுகந்தத்தைப் பரவவிட்டு சாமி கும்பிட்டு, சாரம் மாத்திஇ அவன் செற்றியில் வந்து இருக்க, கையில் பால்தேத்தண்ணியுடன் சின்னமாமி வருவாள். அப்போது பகல் பன்னிரண்டு மணியாகி இருக்கும்.

அதன்பின், அடுத்தடுத்துக் குடிக்கும் சிகரெட்டின் மணம், சாம்பிராணியின் சுகந்தத்தை து¡க்கி வீசிவிடும். ரெலிபோனை எடுத்து ஒவ்வொரு நண்பர்களையும் பள்ளியெழுப்பிப் பேசத்தொடங்குவான். பேச்சு பெரும்பாலும் இப்படி இருக்கும்:-

"ஒராள் அஞ்சு கேட்டது நாலாவது குடுத்தால் பறவாயில்லை. ச்சீச்சீ... காசுக்கு நான் பொறுப்பு."

"ஓம்..ஓம்.. ரூட்டெல்லாம் இப்ப கிளியர். முதல் கொஞ்சக்காசு குடுக்கோணும். அதுக்குப் பயப்பிடாதை. அவன் தங்கமான பெடியன். ஏன்.. லோகன்ரை பெஞ்சாதியையும் அவன்தானே கொண்டந்தவன்."

"கறுப்போ..! அது இப்ப ஒருத்தரும் கேக்கிறேல்லை. பேப்பரும் புத்தமும் எண்டா நல்லாப் போகுது. தாவன் பாப்பம். ஆரும் கேட்டா குடுத்துத்தாறன். அதுசரி நான் கேட்ட வி‘யம் என்னமாதிரி..? ஒரு நாலாவது குடப்பா. மூண்டு மாசத்தில பிரட்டிக்கிரட்டி திருப்பித்தாறன். ஊருக்கு அவசரமா அனுப்போணும். மருமோள் ஒருத்திக்கு கலியாணம் சரிவந்திட்டுது. அதுக்குத்தான்"

ஊரில் இருந்து எந்தவிதமான கடிதத் தொடர்போஇ ரெலிபோன் தொடர்போஇ சின்னமாமன் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இருந்தும் உறவுகளைச் சாட்டிஇ காசு பிரட்டினான். வட்டிக்குக் கொடுத்தான். மிகமுக்கியமாகஇ நாள்பூராக வேலைக்குப் போகும் சுவடே அற்றுஇ செற்றியில் கல்லுப்பிள்ளையார் மாதிரி வீற்றிருந்த மாமனைத் தேடிவந்த ரெலிபோனுக்குஇ மாமி வடிகட்டிப் பார்த்து பதிலளித்தாள். கடன்காரன் அல்லது தவிர்க்கவேண்டியவன் ரெலிபோனில் கூப்பிட்டால்இ மாமன் ரொரண்டோ போயிருப்பான். ஒட்டாவா போயிருப்பான். இப்பத்தான் இறங்கியிருப்பான். காசு கொடுக்கவேண்டிய ஆட்கள் ரெலிபோனில் கூப்பிட்டால்இ மாமியே சுகம் விசாரித்து விட்டுத்தான் மாமனுக்கு ரெலிபோனை மாற்றுவாள். பேச்சின் ஊடேஇ கண்கள்இ கைச்சைகைகள் மூலம் எதிராளி யாரென்ற விபரம் பரிமாறப்படும். விரலால் ரீல் சுற்றுவதுபோலக் காட்டினாள் என்றால்இ அது புளுகுமூட்டை பென்ஸ் ராஐனாக இருக்கும். பிள்ளைத்தாச்சி மாதிரி வண்டியைத் தடவினால்இ வட்டிக்கார அந்தோனிதாசன். தலையைத் தடவிக்காட்டினால்இ ஏ¦ஐன்சிக்கார கணேசலிங்கம். இப்படியாகஇ ஒரு அற்புதவாழ்வில் நாளை ஓட்டினான் சின்னமாமன்.

பெரியமாமனது வாழ்க்கையோ, வெள்ளைவேட்டி கட்டிய கண்ணியத் திருட்டு வாழ்க்கை. பெரியமாமன் வட்டிக்கெல்லாம் கொடுத்து, முப்பது முப்பதாக சேர்த்து, பெட்டியை நிறைப்பவன் அல்ல. மாறாக, விழுந்து விழுந்து பரோபகாரம் செய்வான். அவன் யாராவது ஒருவனுக்கு பத்தாயிரம் கடன் கொடுக்கிறான் என்றால், எண்ணி மூன்றுமாதங்களுக்குள் மேற்படிநபர் இருபதினாயிரம் டொலர்ஸ் மாமனிடம் இழந்துவிடுவார். ஆனால் அப்படி ஏமாற்றப்பட்டவன்கூட மாமனைக் குறை சொல்லமாட்டான். "அது என்ர தலைவிதி. இல்லாட்டா பாவம் அந்த மனுசன் தன்ரை கைக்காசையும் இழந்துபோகுமே..!." என்று அறிந்தவர் தெரிந்தவர்களிடம் நொம்பலம் சொல்லும்போதே, அவனையறியாமல் மாமனது புகழ் பாடி முடிப்பான்.

ராஐ¡வுக்கு வீட்டிலிருந்து அலுத்துப்போயிற்று. மேற்படி நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் திடீர்திடீரென மாறும்போது, வெளியே இறங்கி சிகரெட் குடித்து ஆசவாசமடைந்த ஒருவாரத்திற்குள்ளும், கைக்காசு செலவழிந்து சிகரெட்டிற்கும் வழியில்லாமல் போய்விட்டது. நடைத்து¡ரத்தில் குடியிருந்த, ஒன்றிரண்டு நண்பர்களும் வேலை வேலை என்று ஓடித்திரிந்தார்கள். அவர்களுக்கும் வட்டி, சீட்டு என்ற தொந்தரவுகள் இருந்தன. பேசுவதற்கு ஒதுக்கும் நேரத்தை வேலையில் செலவழித்தால் இன்னொரு சீட்டுப் போடலாம் என்ற பொருளியல் வெறி பிடித்தாட்டியது.

கனடாவில் தரையிறங்கிய இருபத்தியொரு நாட்களில் மாதம் முடிந்தது. முதலாம்திகதி காலை எட்டுமணி போல பெரியமாமன் ரெலிபோன் பண்ணி வீட்டுக்கு வரச் சொன்னான். அவனும் ஏதோ கேஸ் விசயமாக இருக்கும் என, பைலைத் து¡க்கிக் கொண்டு விழுந்தடித்து ஓடிப்போக, பெரியமாமன் அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு ¦ஐன்தலோன் மார்க்கெட்டுக்குப் போனான். செயிண்ட் லோரண்ட் இறைச்சிக்கடையில் அரைவாசி ஆடு வேண்ட, காசு குறைந்ததில் மிகவும் கவலைப்பட்டு விட்டுஇ இருந்த காசுக்கு அளவாக இறச்சி வேண்டிக்கொண்டு வீடு திரும்பும்போது, காருக்கு பெற்றோல் குறைந்து போவதைக் காட்டும் லைட் எரிந்ததை சுட்டிக்காட்டி, இவனுக்கு விளங்கப்படுத்தினான். அவனுக்கு பெரியமாமனின் நிலையை நினைக்கப் பாவமாக இருந்தது. மத்தியானம் சாப்பிடும்போது, வாடகைக்கு செக் கொடுக்க வேண்டு மென்பதை மாமனுக்கு ஞாபகப்படுத்தினாள் பெரியமாமி. அன்று பெரியமாமன் செற்றியில்கூட சரியாமல் தபால்காரனைப் பார்த்தபடி இருந்தான். நீலஉடுப்புக்காரர் அந்த வீதியைக் கடந்து போகவும், அவனும் மாமனுமாக, சின்னமாமனின் வீட்டுக்கு வந்தார்கள். பெரியமாமன் கீழ்வாசலில் நிற்க, அவன் மேலேபோய் சின்னமாமியிடம் தனது வெல்·பெயர் செக்கை வேண்டி வந்து, கையெழுத்துப் போட்டு மாமனிடம் கொடுத்தான். அன்றுபூராவும் சின்னமாமியின் முகம் கறுத்துக் கனத்துப் போய்க் கிடந்தது. அவன் வழமைபோல சிகரெட்டுக்காக நண்பர்களைத் தேடத்தொடங்கினான்.



பதிவுகள் - அக்டோபர் 2001  இதழ் 22

3

நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல் பத்தொன்பது வயதின் கட்டுறுதிக் கேற்ப காற்றைப்போல இயங்கியது உடம்பு. நாற்பதுகிலோ மாமூட்டைகளை மிக இலாவகமுடன் து¡க்கி மெ‘¢னில் போட்டுக் குழைக்கும்போது நாட்டு விடுதலைக்கென கொல்லிமலையில் எடுத்த இராணுவப் பயிற்சி பத்திரோனின் வீட்டு விடிவுக்கு உபயோகப் படுவதை எண்ணிச் சிரித்துக் கொள்வான்.

சின்னமாமன்  தந்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் பலபேருக்கு ரெலிபோன் அடித்து இவனுக்காக வேலை விசாரித்தான். அவனது சிகரெட்பெட்டியிலிருந்து ஒன்றிரண்டு சிகரெட் காணாமல் போனதும் மூன்றாவது நபரின் இருப்பு தன் தொழில் தகிடுத்தங்களுக்கு இடைஞ்சலாகவும் இருந்ததுதான் மாமனது முன்முயற்சிக்கு காரணமாக இருந்திருக்கும். கடைசியில் அவனை பேக்கரி ஒன்றில் து¡க்கிக் கொழுவி விட்டான் ஒரு பழஞ்சட்டையைப் போல. வெல்·பெயரை நிப்பாட்டாமல் வேலையும் செய்வதற்கு வசதியாக பெரியமாமியின் தம்பியாரிடம் சோசல்நம்பரை வேண்டித் தந்தான் பெரியமாமன்.

ராஐ¡ முதன் முதலாக பேக்கரிக்குள் நுழைந்தபோதுஇ பேக்கரிப்பத்திரோன் மரியோ இவனது கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு தனது அடுத்த கையால் இவனது புஐத்தை அழுத்தி தசைவலிமை பார்த்தான். ஆபிரிக்க அடிமை வியாபாரமோ இறச்சிக்கு வேண்ட கிடாயை எடைபோடுகிறானோ என்று எரிச்சல் வந்தது ராஐ¡வுக்கு. இரண்டு மூன்றுநாளின் பின்பே புரிந்தது அந்த வேலையில் தாக்குப் பிடிக்க மனவலிமை மட்டும் போதாது உடல் வலிமையும் தேவை என்று. காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகும் மாக்குழைத்தல் மாலை ஆறுமணிக்குத்தான் முடியும். அதற்கிடையில் ஏறக்குறைய நு¡ற்றியிருபத்தேழு மூட்டை மா குழைத்துத் தள்ளவேண்டும். குழைத்த மாவை வெட்டி வேறொரு மெ‘¢னில் போட்டுஇ அது உருண்டுவர வேகமாகப் பொறுக்கி அலுமினியத் தட்டில் அடுக்கி அடுக்கிய தட்டுக்களை தள்ளுவண்டியில் ஏற்றி அவற்றை ஸ்ரீமுக்கு அனுப்பிவிட்டுபின்னர் மறுமூட்டை து¡க்கிப் போட்டுக் குழைத்து என கடிகார ஓட்டத்திற்கு இணையான வேலைத் தொடர்ச்சி.

பேக்கரியில் ஆரம்பத்திலிருந்தே வேலை செய்யும் தமிழ்ச் சகோதரர்கள் செய்த சீர்திருத்தத்தால் இந்தப் பதினொரு மணித்தியால வேலைநேரத்தில் பிறேக்கே இல்லை. நின்றநிலையில் சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் சாப்பாட்டுப் பெட்டியை மெ‘¢னில் வைத்துவிட்டு தண்ணீர் குடிக்க பைப்பை நோக்கி ஓடவேண்டும். ஆனால் அப்போதும் மெ‘¢ன் மாவைக் குழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த சங்கடம் பற்றி சீனியர் காந்தனை இவன் கேட்டபோது-

"சீச்சீ... அந்த வழக்கமெல்லாம் இஞ்ச இல்லை. எங்கட திறமைய நாங்க காட்டோணும். இல்லாட்டி பத்திரோன் தமிழாக்களைப் பற்றி என்ன நினைப்பான். முந்தி வேலை செய்த போலந்துக்காரர் நு¡று மூட்டைதான் குழைச்சவங்கள். பிறகு நாங்க இதுக்கை (உ)ந்தபிறகுதான் நு¡த்தி இருபத்தேழு ஆக்கின்னாங்கள்."

"அப்ப போலந்துக்காறரும் பிறேக் எடுக்கிறேல்லையோ..?"

"அவங்கள் எடுக்கிறவங்கள். ஆனா அந்த நாலுபேரையும் நாங்க வந்த அடுத்த கிழமையே பத்திரோன் ·பயர் பண்ணிப்போட்டான்."

அது சாதனைதான். சாதனைஇ துணிகரங்களின் பின்னால் ஓடுவதுதான் வளர்ச்சிக்கும்இ வெற்றிக்கும் நெம்புகோல் போலும். அதுவும் இன்னொருவன் தலையில் மிதித்து உன்னி உயரம் பாய்ந்துஇ தனதிடத்தை தக்க வைத்துக் கொள்வது வெற்றியல்லாமல் வேறென்னவாம்..?

பேச்சுவாக்கில் அந்த சீனியர்மாரே ஒன்றைக் குறிப்பிட்டனர். தாங்கள் வேலைக்கு சேர்ந்தபோது பத்திரோன் வெறும் பீத்தல் அமெரிக்கன் காரை ஓடித்திரிந்தவன் இப்போது. டீ.ஆ.று.வில் திரிகிறான் என்று. இதைச் சொன்ன சீனியர் காந்தன் இவனுடன் வந்து மெட்ரோ எடுத்து வீட்டுக்குப் போகிறார்.

கொல்லிமலையில் அவனும் ஒரு சாதனை செய்திருக்கிறான். யு.மு-47ஜக் கழட்டிப் பூட்ட எடுத்த எட்டு நிமிச நேரஅளவை ஆறு நிமிசத்தில் கழட்டிப் பூட்டியிருக்கிறான். ஒன்பது செக்கனில் வெடிக்கும் கையெறிகுண்டைஇ நாலு செக்கன் தாமதித்து எறிந்து விழுந்தவுடன் அந்த இடத்திலேயே வெடிக்க வைத்திருக்கிறான். ஆனால் மாமூட்டைகளின் தொகையை எடுத்துக் கொண்டால் அவனது சாதனைகள் எல்லாம் நாலுபக்கமும் மலைக்குன்றுகள் சூழ்ந்த பயிற்சிக்களத்தில் மனித அழிவுகள் சம்பந்தமாகக் கிடைத்த வெற்றிகள். ஆகவே அதை எங்குமே பேசமுடியாது.



ஒரு வாரத்திற்கான சம்பளம் இருநாற்றி முப்பத்தியெட்டு டொலருக்கு செக் கொடுத்தார்கள். கனடாவில் முதல் சம்பளம் பெற்ற அன்று சந்தோசம் முக்குளித்தது. பெரியமாமனது கடன் கொடுக்கும் வரைதனது வீட்டுக்கு ஒன்றும் அனுப்பப் போவதில்லை என்றும் பெரியமாமனுக்கு நு¡று டொலசைக் கொடுத்து சின்னமாமனுக்கு சாப்பாட்டுக்காசாக ஜம்பதைக் கொடுத்து மீதியை தான் எடுத்துக் கொள்வது என்ற திட்டத்துடன் ஊத்தை உடுப்புடனேயே வேலையிலிருந்து நேரே பெரியமாமனது வீட்டுக்குச் சென்றான்.

பெரியமாமியின் தம்பி அன்று வீட்டில் இல்லாததால் மாமனிடம் செக்கைக் கொடுத்து மாற்றச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான். அடுத்தநாள் காசைப் பெற்றுக் கொண்டால் ஞாயிறுலீவு மகத்தானதாக இருக்கும் என்ற கனவுடன் அன்று நித்திரை வந்தது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வேலையாக உடுப்புகளை அலம்பிப் போட்டுவிட்டு பெரியமாமனது வீட்டுக்குப் போனான். மாமியின் தம்பியின் அறைக்குப் போய் எட்டிப் பார்க்க குப்புற அடித்துக் கிடந்தான் ஆனந்தன். கிரு–ணனின் கால்மாட்டில் இருந்து தோற்றுப் போன துரியோதனனை நினைத்துக் கொண்டு தலைமாட்டில் இருக்காமல்இ ஆனந்தனைத் தட்டி எழுப்பினான். ஆனந்தன் ரெஸ்ரோரண்ட் வேலைகாரன். ஞாயிறுலீவு அவனுக்கில்லை. தலையைத் து¡க்கி எழுப்பியது யாரென்று பார்த்துவிட்டு-

"விடியத்தான் வந்து படுத்தனான். உங்கட செக் மாத்தி அத்தானிட்டக் காசு குடுத்திட்டன்."

என்று சொல்லிக்கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்து மிச்ச நித்திரையைப் பிடிக்கப் போய்விட்டான். அவனுக்கு சப்பென்று போய்விட்டது. திரும்பி ஹோலுக்கு வந்து செற்றியில் இருந்தபோது கண்ணாடி போடாத பெரியமாமனது முழியைப் பார்க்க வெறுப்பு வந்தது.

"தேத்தண்ணி குடிச்சிட்டியே..? சிவராசா ஒரு சீட்டுத் துடங்குதாம். பத்தாயிரம் டொலர்ஸ். ராத்திரி ரெலிபோன் அடிச்சது. நான் உன்னையும் சேத்துவிட்டிட்டன். கட்டுக்காசு அறுநு¡று. ஞாயித்துக்கிழமை வேலை ஒண்டு இருக்கிது. கையிலகாசாம். போய்ச் செய்யன். மாமி தனக்கு மெட்ரோப்பாஸ் எடுக்கேக்க உனக்கும் எடுத்துத் தருவா."

இப்படியாக.. மாமன் செக் காசைப்பற்றிய எந்தவிதக் கதையும் இல்லாமல் தனக்கு வரவேண்டிய தொகையை விரைவிலேயே கறந்துவிடும் தன் எண்ணங்களைச் சொல்லிக் கொண்டே போனான்.

ஞாயிற்றுக்கிழமை வேலை இருக்கும் ரெஸ்ரோரண்டின் விலாசத்தை பெரியமாமனிடம் வேண்டிக் கொண்டு வெளியே வந்தபோது வீட்டுக்குப் போக மனம் ஒன்றவில்லை. வீட்டுக்குப் போயும் என்ன செய்வது..? சின்னமாமியிடமிருந்து ரீ.வி ரிமோட் கொன்றோலையும் கைப்பற்ற முடியாது. சவப்பெட்டியில்கூட அதை வைத்து மாமியை இறுதி வழியனுப்பினால்தான் அவளது ஆத்மா சாந்தியடையும் போலஇ சமையல் நேரத்தைத் தவிர ரெலிவி‘னே கதி என்று கிடக்கிறாள். அதுவும்இ ஞாயிற்றுக் கிழமைகளில் ரெலிவி‘னைக் குடைந்து குடைந்து மல்யுத்த நிகழ்ச்சி தேடிப் பார்ப்பாள். திரண்டு முறுகிய சதைகளின் பொருதலில் ஏதாவது மனக்கிளர்ச்சி அவளுக்குக் கிடைக்கக்கூடும். அதையேன் என் இருப்பு தடைசெய்ய வேண்டும் என்று நினைத்தபடிஇ நேரே நண்பன் ஒருவனின் வீட்டை நோக்கி நடந்தான்.

பத்துப் பதினைந்து தடவை பெல்லை அமுக்கியும் நண்பன் கதவு திறக்கவில்லை. வட்டிக்கார அந்தோனிதாசனின் தேடுதல் வேட்டையில் நண்பனும் சிக்கியிருப்பது ஞாபகம் வந்ததும் வாசலை விட்டு ரோட்டுக்கு வந்தான். நாக்குக் கசப்படித்து நிகோடினுக்காக மனம் ஏங்கியது. இருபத்தைந்துசதம் இருந்தால் கூட சிகரெட் லு¡சாக விற்கும் கடையில் ஒன்று வேண்டிப் பத்தலாம். பொக்கற்றுக்குள் காசு இல்லை என்று தெரிந்தும் கையை உள்ளே விட்டுத் தேடினான். வெறுப்பு - எல்லாவற்றின்மீதும் ஒரு கொலைகாரனுக்குரிய சினம் மூளையில் கிளம்பியது.

இந்த நாட்டைவிட இந்திய வாழ்க்கையில் ஏதோ ஒரு சுகம் இருந்ததுபோல பட்டது. அதுதான் அக்கரைப்பச்சையோ தெரியவில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாத பொழுதுகளிலும் நண்பர்களின் உறவு வலுத்து உண்மையானதாக இருந்தது. இங்கு எவ்வளவுதான் நேசமாக நட்பாக பேசினாலும் உள்ளுக்குள் ஒரு ஒட்டின்மை நண்பர்களில் ஊடுருவியிருப்பது தெரிகிறது. நல்ல சினிமாவிலிருந்து அல்லதுஇ வடிவான பெட்டையிலிருந்து தொடங்கிய உரையாடல் கூட இவர்களிடம் ஓடிமுடியும்போது காசுப்பிரச்சனையில் முற்றுப்புள்ளி வைக்கிறது. ஓடாத நதியைப் போல ஆகிவிட்டது இவர்களின் மனது. நல்லகாற்று வீசினாலும் அந்த நதியைக் கடக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது.

மனசில் விரிந்த கசப்பு எண்ணங்களுடன் எந்தக் குறிக்கோளுமற்று வீதியில் நடந்தபடி இருந்தான். இந்தியாவில் வேண்டிய லெதர் சப்பாத்து தோணி மாதிரி வளைந்து விட்டது. அதுவும் பம்பாயில் பயணம் வெளிக்கிடும்போது பெரியமாமன் கடைக்குக் கூட்டிச் சென்று இவனது ரப்பர் செருப்பை து¡ரவீசச் சொல்லிவிட்டு இதைப் புதிதாக வேண்டிக் கொடுத்தான். வேலைக்கும் வெளியிடத்திற்கும் அதையே பாவித்துக் கொள்வது சிறிது வெட்கமாக இருந்தாலும் மாற்று இல்லை.

சின்னமாமன் இந்த வயசிலும் அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் சப்பாத்துப் பாவிக்கிறான். வீட்டில் சப்பாத்துகள் வைக்கும் றாக்கையில் மூன்று விதமான ஸ்போர்ட்ஸ் சப்பாத்துச் சோடிகளும் ஒரு சோடி விலையுயர்ந்த லெதர் சப்பாத்தும் அடுக்கி வைத்திருக்கிறான். ஒரு சோடி சப்பாத்துக் கேட்டால் தராமல் இருக்க மாட்டான் ஆனால் சின்னமாமியின் முகம் அஸ்டகோணலாகி விடும். ஆரம்பத்தில் அவள் காட்டிய அன்பான உபசரிப்பை எல்லாம் முதல்மாசம் வந்த வெல்·பெயர் செக் இடம் மாறியதும் வாபஸ் வேண்டி விட்டாள்.

கனடா வந்து சேர்ந்த இரண்டுகிழமையும்தான் பல்லுத்தீட்டாமல் முகம் கழுவாமலேயே அவனுக்கு தேத்தண்ணி போட்டுக் குடுத்தாள். இப்போது அவன் விடிய வேலைக்கு எழும்பிப்போகும் நேரத்தில் மட்டும் நல்ல உறக்கம் அவளுக்கு வந்து விடுகிறது. அவளும் பாவம்..! இரவிரவாக இருந்து தமிழ்ப்படம் பார்த்துவிட்டு நித்திரைக்குப் போகிறவள் எப்படி காலையில் எழும்ப முடியும்..?

சூரியன் சோம்பல் முறித்து எழும்பி விட்டது. கோடைகாலக் காலைகூட புழுக்கம் தந்தது. உலகம் சுறுசுறுப்படையத் தொடங்கிய அறிகுறியாக இசைமுழக்கங்களுடன் ஐன்னல்கண்ணாடி திறந்த வாகனங்கள் வீதியில் சீறிப் பாய்ந்து சென்றன. அவன் ¦‘¡ப்பிங்சென்டருக்குப் போகும் பாதைக்கு நடையை மாற்றினான். றொக்லாண்ட் சென்டருக்குள் நுழைந்தபோது கடைகளைத் திறந்து வைக்க அழைப்பிதழ் அனுப்பியது போல காலைநடைக் கிழவர்களும் கிழவிகளும் அங்ஆக வந்து சேர்ந்திருந்தனர். கோப்பிக்கடை ஏற்கனவே திறந்திருந்தது. மற்றக் கடைகள் திறக்கும் ஆயத்தங்களில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த சீமெந்துபெஞ்சில் போய் இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

தனிமை கொன்றது. மூளையும் சிகரெட்டின் தேவையிலேயே சுற்றிச்சுற்றி அலைந்தது. தனக்குப் பைத்தியம் பிடித்துவிடப் போகிறதோ என்ற பயம் அவனுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமையும் பேக்கரியில் வேலை இருந்திருந்தால் இந்தத் தனிமைச் சித்திரவதை இருந்திருக்காது. பெரியமாமன் தந்த ரெஸ்ரோரண்ட் முகவரியை எடுத்துப் பார்த்தான். அது இருக்கும் ரோட் ரவுண்டவுணில் இருந்தது. மெட்ரோ பிடித்து அங்குபோய் வேலை விசாரிப்பதுதான் நல்லது என்ற முடிவுடன் ¦‘¡ப்பிங் சென்டரை விட்டு வெளியே வந்தான். வரவும் அவனைக் கடந்து ஒரு வெள்ளை இளைஞன் சிகரெட் பிடித்தபடி உள்ளே செல்ல இவனது மூளைக்குள் ஏதோ ஒன்று திடீரென புரண்டு எழுந்தது.

"எக்ஸ்கியூஸ்மி சேர்..!"

வெள்ளை இளைஞன் நின்று திரும்பி முகத்தால் என்ன என்று வினவினான்.

"வண் சிகரெட் பிளீஸ்..!!"

இளைஞன் வேண்டாவெறுப்பாக சிகரெட் ஒன்றை உருவி இவனிடம் நீட்டினான். தானம் பெறும் பவ்யத்துடன் ஓடிப்போய் வேண்டிஇ அவனிடமே பத்தவைத்துக்கொண்டு திரும்பி நடந்தான். தான் நன்றி சொல்ல மறந்துவிட்டதை நினைத்துத் திரும்பிப்பார்க்க வெள்ளை இளைஞன் கடந்து தொலைவில் சென்றுவிட்டது தெரிந்தது. கொஞ்சப் புகையையும் வீணாக்கக் கூடாதென்ற ஐத்தனத்தில் நெஞ்சுக்குள் நிறுத்தி நிறுத்தி ஊதியபடி மெட்ரோவை அடைந்தபோது மனதும் தவிப்பும் சாந்தமாகிவிட்டிருந்தது.

இரண்டு மெட்ரோ மாறிப்போய் ரெஸ்ரோரண்டிற்குள் நுழைந்து விசாரித்தபோது அங்கும் டி–வோசிங் பகுதியை தமிழர்களே கைப்பற்றியிருந்தது புரிந்தது. சீட்டுக்கார சிவராசாதான் தலைமை டி–வோசராக செங்கோல் கிரீடம் என்பன தாங்கியிருந்தார். அவரிடம் பெரியமாமனின் பெயரைச் சொன்னதும் அன்றே வேலை தொடங்கலாம் என்று ஏப்ரனும் தொப்பியும் எடுத்துத் தந்து வேலைவிபரம் எல்லாவற்றையும் ஒரு புரபசருக்குரிய நுணுக்கத்துடன் விபரித்தார். பஸ்போய் கொண்டுவந்து வைக்கும் சாப்பாட்டுப் பிளேற்றுக்களை பிளாஸ்ரிக்கூடையில் அடுக்கி தண்ணீர் ஸ்பிறே பண்ணி மேலோட்டமாக கழுவிவிட்டு மெ‘¢னுக்குள் தள்ளி மூடி சுவிட்சைப் போடுவதுதான் வேலை நுணுக்கம். உலகமொழிகள் சிலவற்றைக் கலந்து வழங்கும் சமையல் பாத்திரங்களின் பெயர்களை மாத்திரம் நினைவில் வைத்திருப்பது கஸ்ரமாக இருந்தது. அதுவும் அடுத்த அடுத்த ஞாயிறுகளில் பழகிவிடும்.

மத்தியானச் சாப்பாட்டு நேரம் பிளேற்றுகள் வேகமாகக் குவிந்தவண்ணம் இருந்தன. கழுவி அடுக்கிய பிளேற்றுகள் உடனுக்குடன் காணாமல் போய்  எச்சில் பிளேற்றுக்களாக திரும்பிவந்து கொண்டிருந்தன. கூட வேலை செய்து கொண்டிருந்த சிவராசா அண்ணர் கிச்சின் ஹெல்ப்பராக பதவி உயர்ந்து கிச்சினுக்குள் சென்று விட அவன் தனியாகக் கழுவித் தள்ளிக் கொண்டிருந்தான். காலையிலிருந்தே வெறுமையாக இருக்கும் வயிறு கிண்டத் தொடங்கியிருந்தது. அத்துடன் சோப்மணமும் ஸ்ரீம்வெக்கையும் சேர்ந்து சுவாசத்துடன் உள்ளேபோய் தலையிடி தொடங்கியிருந்தது.

வேலை முடியும்வரை தலையிடி நிற்கவில்லை. கிச்சினைக்கூட்டி மொப்பண்ணி டி–வோசிங் பகுதியையும் துப்பரவு செய்து மெ‘¢னை நிப்பாட்டி நிமிர்ந்தபோது நாரியும் சேர்ந்து வலித்தது.

சிவராசா அண்ணர் சமநண்பனைப்போல பழகியது சிகரெட் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆரம்பத்தில் அவரே பெட்டியை நீட்டி எடுக்கச் சொன்னார். பின்னர் டி–வோசிங் மெ‘¢னுக்கு அருகேயிருந்த தட்டில் சிகரெட்பெட்டியை வைத்துவிட்டு எடுத்துப் பத்தச் சொல்லிவிட்டார். அதுவும் ஒருவகைக் கடன்போல மனதில் தயக்கம் இருந்தாலும் பழக்கதோசத்துக்கு அடிமைப்பட்ட மூளைக்கு சங்கோசம் பற்றிய எண்ணம் இருக்கவில்லை.

இரவு அவ்வளவாக பிஸி இருக்கவில்லை. இரண்டுபேரும் கதைத்துக் கதைத்து வேலை செய்தார்கள். கடைசி மெட்ரோ பிடித்து பார்க்ஸ்ரேசனில் இறங்கி வீட்டுக்கு நடக்க வேலைக்களைப்பில் அவனது உடம்பு அந்தரத்தில் மிதந்து போவதுபோல இருந்தது.

கதவைத்திறந்து தோணியைக் கழட்டிப் போட்டபோது நாள் முழுக்க ஈரமாகியிருந்த சொக்ஸ் புளித்து நாறியது. ஹோலில் சின்னமாமனும் மாமியும் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"எங்கயடா ராசா சுத்திப்போட்டு வாறாய்..? சாப்பாட்டையும் மறந்து திரியிறது நல்லதுக்கில்லை சொல்லுறன். இஞ்ச வந்த கடனை அடைச்சுட்டு வீட்டைப் பாப்பமெண்டில்லாம இப்பவே சுத்தத்துடங்கினா உவன் சிறியைப் போலத்தான் கடைசியா திரியோணும்."

"மாமா..! நான் ரெஸ்ரோரண்ட் வேலைக்குப் போட்டு வாறன்." அவனது பதிலில் கோபமும் அழுகையும் இணைந்து கிளம்பியது. சின்னமாமன் தன் தவறை உணர்ந்ததும்  பார்த்துக் கொண்டிருந்த படத்தை ஸ்·பவுசில் விட்டுவிட்டு ஆறுதல் வார்த்தை கூறமுயன்றான்.

"ஆ... சரி.. சரி... மாமி மத்தியானம் சாப்பாட்டைப் போட்டிட்டு காவல் இருந்தா. அதுதான் எனக்குக் கோவம் வந்திட்டுது. குளிச்சிட்டுப் போய்ச் சாப்பிடு..!"

"ஆர் வேலை எடுத்துத் தந்தது..? பெரியமாமாவோ..?"

"ஓம். சிவராசா அண்ணரோடை ரெஸ்ரோரண்டிலை வேலை செய்தனான்."

அவன் பதில் சொல்லியபடி துவாயை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். மாமனது இந்தக் கேள்வி முறைப்பாடுகள் அவனது உள்ளத்தில் உடனடியாகக் கோபம் உண்டாக்கினாலும் ஜந்து வருச அனாதை வாழ்க்கை மாறி தன்னைத் தேடிக் கட்டுப்படுத்துவதற்கு உறவுகள் இருப்பதை உணர ஆறுதல் வந்தது.

சாப்பிட்டுவிட்டு தலையிடிக்குளிசையும் போட்டுக் கொண்டு படுக்க ஆயத்தமாகும்போது சின்னமாமன் வந்து அறைவாசல் நிலையை தன் பெருத்த உடம்பால் நிறைத்துக்கொண்டு நின்றான். அவன் என்ன என்பதுபோல நிமிர்ந்து பார்க்க

"ராசா.. பெல்க்கனடா றெட்பில் அனுப்பியிருக்கிறான். நாளைக்குக் கட்டாட்டா லைனை வெட்டிப் போடுவாங்கள். கையில இப்ப காசுவேற இல்ல. ஒரு நு¡றுடொலஸ் தா. நான் பிறகு தாறன்."

"என்னட்டை எங்கால மாமா காசு..? சம்பளச்செக்கைத்தான் பெரியமாமாட்டைக் குடுத்திட்டனே"

"அவன் முழுக்காசையும் எடுத்திட்டானே..?"

"ஓம்"

"கைச்செலவுக்கு கொஞ்சமும் தரேல்லையே அறுவான்."

அவன் இல்லை என்று தலையாட்டினான். சின்னமாமனது முகம் கோபத்தாலோ ஏமாற்றத்தாலோ தெரியவில்லை இறுகி முறுகியது. சற்றுநேரம் அப்படியே நின்றுவிட்டு பதிலேதும் சொல்லாமல் நகர்ந்து போனான்.

அவன் அலாமை ஜந்தேகாலுக்கு ஒன் பண்ணிவிட்டு படுக்கையில் சாய்ந்தான். இடக்கையை து¡க்கி நெற்றியில் அழுத்தி வைத்துக் கொண்டு கண்களை மூட தலையிடி சற்றுக் குறைந்ததுபோல பிரமை தட்டியது. நித்திரையும் மெல்லமெல்ல அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.



பதிவுகள் - நவம்பர்  2001  இதழ் 23 -

4

நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல் காலையில் வேறொரு தலையிடி மாமியின் ரூபத்தில் முளைத்திருந்தது. வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இயங்கும் அத்தனை மாமூலான செயற்பாடுகளையும் அது தடைசெய்தது. அவன் டிபன்பொக்சை கழுவிக்கொண்டு சாப்பாடு போடுவதற்கு சாப்பாட்டைத்தேடினான். அத்தனை உணவுப்பாத்திரங்களும் சமையலறையில் கழுவி அடுக்கப்பட்டிருந்தது. சமையலறையை சல்லடையாக்கியும்இ ஒன்றும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலமாரிகளாக திறந்து மூடினான். ·பிரிக¨ஐத் திறந்து பார்த்தான் அங்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த வாரம் வேண்டி தின்னாமல் காய்ந்து போயிருந்த இரண்டு ஆப்பிள்தான் முளித்துக்கொண்டு கிடந்தது.

ஆரம்பத்தில் அர்த்தம் புரியாமல் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. சின்னமாமியின் மொக்குப்புத்தியை நினைத்து சிரிப்பதா.. அழுவதா..? அவனிடம் காசிருந்தால் கொடுக்காமல் விடுவானா. பதினொரு மணித்தியாலம் பாரம்து¡க்கி வேலைசெய்யும் உடம்பு பசி தாங்குமா..?

அவனையறியாமல் தாயின் நினைவு கிளம்பியது. தனக்கு இல்லாவிட்டாலும் மூத்தவனுக்கு என்று ஒளித்து வைத்துக்கொடுக்கும் அன்பேயுருவான அம்மா. அந்த பிரியமான அம்மாவின் தம்பியான சின்னமாமனது பெண்டாட்டியின் மனசு என்ன சாக்கடையா..? தன் சொந்தப் பிள்ளையாக இருந்தால் இப்படிப் பட்டினி போட்டு பழிவாங்குவாளா. கண்ணிலிருந்து நீர் பனித்து விழ யோசித்துக் கொண்டிருந்தான்.

வேலைக்கு செல்ல நேரம் பிந்திக்கொண்டு இருந்தது. 5.50 மெட்ரோவை விட்டால் சரியான நேரத்திற்கு பேக்கரிக்குச் போய்ச் சேரமுடியாது. ஜந்துபத்து நிமிசம் பிந்திக் காட் பஞ்ச் பண்ணினால்கூட அரைமணித்தியாலம் கழித்து விடுவார்கள். கடன் கொடுத்துத் தொலையவேண்டிய வேளையில் பசியையும் பகையையும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது என்ற அவசியத்தால் அந்த காய்ந்த இரண்டு அப்பிள்களையும் து¡க்கி பையில் வைத்துக் கொண்டு இறங்கி ஓடினான்.

இராணுவத்தில் உடல்ரீதியான கடுமையான பயிற்சிக்காலத்தில் இடையிடை உள்ளத்திற்கும் ஒரு பயிற்சி வைப்பார்கள். தினசரி காலைப்பயிற்சிக்கு எழுப்பும்நேரத்தில் ஒருநாள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஒரு அறிவிப்பு வரும். அன்று முழுக்க கிச்சின் சீல் வைக்கப்பட்டுள்ளது என. எல்லாநாட்களையும் போல அன்றும் அத்தனை மாமூலான பயிற்சிகளும் நடைமுறைகளும் இருக்கும். ஆனால் மூன்றுவேளையும் சாப்பாடு இருக்காது. ஒரு பாண்துண்டுகூட பொறுக்கி எடுக்கமுடியாதபடிக்கு அத்தனை உணவுகளும் காணாமல் போயிருக்கும். பசியில் சுருண்டு விழுபவனுக்கும் கருணை காட்டமாட்டார்கள். தாக்குதலுக்குப் போய் தற்செயலாக முற்றுகையிடப்பட்டால் இந்தப்பயிற்சி உதவும். அந்த பட்டினிப்பயிற்சி நாளைப்போல இன்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டான்.

ராஐ¡ நினைத்துக் கொண்டமாதிரி அவ்வளவு இலேசாக மாமியின் வக்கிரச் செயலை மறந்து விட்டு வேலை செய்யமுடியவில்லை. ஒவ்வொரு மாமூட்டை து¡க்கி மெ‘¢னில் போடும்போதும் மாமியினது பழிவாங்கும் படலத்தை எப்படி நிப்பாட்டலாம் என்ற சிந்தனையே ஓடியது. சின்னமாமனுடன் தங்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரையான சாப்பாட்டுக்காசை எப்படியும் கொடுத்துவிடவேண்டும். ஆனால் எப்படிக் கொடுப்பது..? என்றே வெறுங்கையால் முழம் போட்டபடி வேலை செய்து கொண்டிருந்தான்.

அறுபத்துநாலு மூட்டைமாவு குழைத்து முடியும்போது கை நடுங்கத்தொடங்கியது. நெற்றி குளிர்ந்த வியர்வையால் நனைந்தது. பலதடவைகள் கூடவேலை செய்யும் ரஞ்சனைவேறு சினந்து கோவித்துக் கொண்டான். மாவை வெட்டி உருட்டும் மி‘¢னில் போடும்போது கைதவறி இரண்டு தடவை நிலத்தில் விழுந்து விட்டது. பத்திரோன் பார்த்திருந்தால் இத்தாலிய மொழியில் கெட்ட து¡சணத்தால் பேச்சுக் கொடுத்திருப்பான். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு பதட்டமடைவது தெரிந்தது. பேசாமல் லீவு எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய்விடலாமா என்றுகூட யோசித்தான். வீட்டுக்குப் போனால் மாமியின் முகத்தைப் பார்க்கமுடியாது. திரிசங்கு நிலையில் மனம் கிடந்து ஆடியது.

பைப்பில் தண்ணியை எடுத்துக் குடித்துவிட்டு அடுத்த மூட்டையை து¡க்கி மிஷினில் போட்டுஇ கலவைகளை அளவாக சேர்த்து விட்டுக் கொண்டிருக்கும் போது அவனைக் கடந்து சென்ற சீனியர் காந்தன் முதுகில் லேசாகத் தட்டியதும் கோவம் குதித்துக் கொண்டுவர திரும்பி முறாய்த்துப் பார்த்தான். அவருக்கு சங்கடமாகப் போய்விட்டது. மைளனமாக நின்று அவனைப் பார்த்தார். பின்னர் தனது அடுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

எப்போதும் கலகலப்பாகவும் தன்னில் நேசமாகவும் பழகும் காந்தனைக் கோவித்தது பெரும்பிழை என உணர்ந்ததும் அவருக்குப் பின்னால் சென்று வழிமறித்தான். அவனது முகவாட்டத்தைக் கவனித்த காந்தன்

"என்ன ராசா..! முகமெல்லாம் காய்ஞ்சு போய்க்கிடக்கு சுவமில்லையே"

"இல்லையண்ணை மனசுக்குத்தான் சுவமில்லை" என்று சொன்னான்.

சுடுதண்ணியில் அவித்த பேகிளை வலைக்கரண்டியால் எடுத்து எள்ளுப்பிரட்டி தடியில் அடுக்கியபடிக்கு காந்தன் கேட்டார்.

"ஏதும் சொல்லக்கூடிய பிரச்சனையெண்டா சொல்லும்."

குடும்பத்திலுள்ள சிறுமைக்குணத்தை அவருக்குச் சொல்லி சந்தியில் ஏற்றுவது அவனுக்கு விருப்பமில்லையாதலால் அன்றைக்குள்ள தனது சிக்கலை காந்தனுக்குச் சொன்னான்.

"வேறெயென்ன பிரச்சனை வருமண்ணை. காசுப்பிரச்சனைதான் அவசரமா ஒரு நு¡றுடொலஸ் தேவையா இருக்குது அதான் குளம்பிக் கொண்டிருக்கிறன்."

"மிஷினோடை வேலை செய்யிறனீர் மூளையை எங்காலும் விட்டா கையைக்காலைத்தான் பறிகுடுக்கோணும். இன்சூரன்சும் இந்த அறுந்த பேக்கரியிலை இல்லை. பின்னேரம் வேலை முடிஞ்சு போகேக்கை பாங்கில அடிச்சுத்தாறன் சம்பளம் எடுத்தோண்ணை தாருமன். யோசிக்காமப் போய் வேலையைப் பாரும்."

தலையை ஆட்டிக்கொண்டு மாக்குழைக்கும் மிஷினை நோக்கி திரும்பி நடந்த அவனுக்கு சிறிது மனத்தெளிவு ஏற்பட்டது. ஓணானை மடியில் கட்டிக்கொண்டு நிம்மதியாக இருக்கமுடியாது. மாமியிடம் காசைக் கொடுத்துஇ ஒருவாறு வீட்டுநிலையை ஸ்திரப்படுத்தியே தீரவேண்டும். இதே நாடகம் தொடர்ந்து நடந்தால் பட்டினியைவிடஇ வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த நாட்டிலும் பழைய பரதேசிக் கோலத்தை கொள்ளமுடியாது. அதைவிட பெரியமாமனின் கடனைக் கொடுத்து ஒப்பேற்றாவிட்டால் காலம் முழுக்க அந்தப்பழி தன்னைத் தொடர்ந்து வரும். இப்போது உள்ளுக்குள் முரண்டுபிடித்துக் கொண்டிருக்கும் மாமன்மார் காசை அறவிடுவதற்கு கூட்டுச் சேர்ந்துவிடுவார்கள்.

மிகுதிவேலை கொஞ்சம் உசாராக செய்ய முடிந்தது. கூட வேலைசெய்யும் ரஞ்சனைக் குழைக்க விட்டுவிட்டு அவன் உருட்டும் மிஷினில் வேலை செய்யததால் களைப்புத் தெரியவில்லை. கலவை போடும்போது மட்டும் ரஞ்சனுக்கு கிட்ட நிண்டு காட்டிக் கொடுத்துக் கொண்டான். அப்படியும் அன்று வேலை அரைமணித்தியாலம் லேட்டாகத்தான் முடிந்தது. அதுவரை சீனியர் காந்தன் அவனைக் கூட்டிக் கொண்டுபோக காவல் நின்றார்.

காந்தனுடன் சென்று காசை வேண்டிக்கொண்டு வீட்டுக்கு வர வரவேற்பறை வெறுமையாக இருந்தது. ரெலிவிஷன் ரேப்செட் எல்லாம் பயங்கர அமைதியாக இருந்தது. சின்னமாமன் வெளியில் எங்கோ சென்றிருந்தான். மாமி இந்த வெக்கைநேரத்திலும் இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருக்கிறாள் போலும். முப்பதுடிகிரி அனல் அடித்து உடம்பு வேர்த்துக்கசகசக்கும் போது எப்படி மாமிக்கு நித்திரை வருகிறது என்று தெரியவில்லை. சமையல் முடிந்தபிறகாவது வெளியில் பார்க் கடைதெரு என்று போய்ச் சுற்றி வருவது மாமிக்குப் பிடிக்காத பழக்கம். அப்படிச் சுற்றித்திரியும் பெரியமாமியை ஆட்டக்காறி என்று பேசும் ஒரே காரணத்துக்காக சிலவேளை தான் போகாமல் அடைகாக்கிறாளோ தெரியவில்லை.

அவன் வேலை உடுப்பைக் களைந்து சாரம் மாற்றிக்கொண்டு குளிக்கப்போனான். அவன் வந்த சத்தம் கேட்டதும் மாமி எழும்பிவந்து செற்றியில் இருந்து ரெலிவிசன் பார்க்கத் தொடங்கினாள்.

குளித்துவிட்டு பாத்ரூமுக்குள்ளால் வெளியே வந்ததும் மாமியைக் கூப்பிட்டு காசைக் கொடுத்தான். முகமெல்லாம் பல்லாக பிரகாசமாகிய மாமியைப் பார்க்க வெறுப்பு வந்தது. இப்படியும் ஒருபிறவியா..? தடுக்கி விழுந்து விடுபவள் போல ஓடிவந்து காசை வேண்டிவிட்டு சமையலறைக்குள் குடுகுடுவென்று போய் சாப்பாடு போட்டாள். ஆனால் மத்தியானம் என்ன சாப்பிட்டாய் என்று தவறிக்கூட கேட்கவில்லை. அவன் ஆண்டிக்குக் கிடைத்த கோவில் தளியல்போல அவசரம் அவசரமாகச் சாப்பிட்டு முடித்தான். பெரும்பாலும் சின்னமாமியுடன் அவ்வளவாக கதைத்துக் கொள்ளும் பழக்கமில்லாததால் நேரே தனது கூட்டுக்குள் போய் படுக்கையில் விழுந்தான்.

மாமன் கதவு திறந்து வீட்டுக்குள் வரும் சத்தம் கேட்டது. எதையும் அமைதியாக ஆறுதலாக செய்யும் குணம் மாமனுக்குக் கிடையாது. கதவு திறந்தாலும் பூட்டினாலும்இ குளிக்கப் போனாலும்  சண்டைக்குப் போகும் கதியில் களேபரப்படுத்தித்தான்  காரியம் முடிப்பான்.

அறைக்குள் உடுப்பு மாத்தப்போன மாமனை "இஞ்சருங்கோ" என்று சின்னமாமி கூப்பிடும் சத்தம் ராஐ¡வுக்குக் கேட்டது. பின்னர் ஒலியின் உருத்தெரியாமல் குசுகுசுவென அவர்கள் பேசுவது காதில் விழுந்தது. சற்றைக்கெல்லாம் சடாரென று¡ம் கதவைத் திறந்து கொண்டு சின்னமாமன் பிரசன்னமானான். சின்னமாமனின் தோற்றத்திலிருந்தே ஆள் நன்றாகக் குடித்திருப்பது தெரிந்தது.

"டேய் எங்கை இந்த சுத்துமாத்துப் பழகின்னி.. ராத்திரி காசு இல்லையெண்டாய். இண்டைக்கு எப்பிடிக் காசு வந்துது..? என்னை என்ன மடையனெண்டு நீயும் உன்ரை பெரியமாமாவும் நினைச்சியளோ..?"

ராஐ¡வுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தோன்றவில்லை. சிக்கலே வேண்டாம் என்று வெளியானிடம் தண்டிக் கொண்டு வந்த காசாலையே சிக்கல் பிறந்துவிட்டதே என நொந்து கொண்டான்.

"மாமா ஏன் இப்பிடிக் கத்திறியள். நான் வேலை செய்யிற இடத்திலை கடன் வேண்டிக் கொண்டு வந்துதானே காசு குடுத்தன்."

"ஓமடா ஓமடா எனக்குத் தெரியாதே உன்னைப்பற்றி. ஊத்தை மக்கிக்கிடங்கான்ரை மேன்தானே நீ..!"

"இதென்ன பிரளயம். குடிச்சுட்டு வந்து இப்ப என்னத்துக்கு செத்துப்போன அப்பாவை இழுக்கிறியள்."

"ஆரடா வடுவா குடிச்சிட்டு நிக்கிறது. இப்ப இந்த நிமிசமே உன்ரை கொம்மான் வீட்டுக்கு போய்த் துலைஞ்சிடு. எல்லாம் கள்ள வடுவாக்கள்."

"இஞ்சரப்பா..! பேசாமல் இஞ்சாலை வாங்கோ. மரியாதை தெரியாததுகளோடை என்ன கதை உங்களுக்கு."

என்று சின்னமாமி மாமனை அடக்கிக் கூட்டிக் கொண்டு போனாள். ராஐ¡வுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. மாமியும் குடிச்சிருக்கிறாளோ என்ற சந்தேகம் வந்தது. என்னவானாலும் இனிமேல் இங்கு இருக்கக் கூடாது என்ற முடிவுடன் உடுதுணிகளை எடுத்து பாக்கிற்குள் அடசிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். சும்மா சமாதானத்துக்குக் கூட போகவேண்டாம் என்று சொல்லாத மாமியிடம் திறப்பைக் கொடுத்துவிட்டு கதவைச் சாத்தி இறங்கிப் போனான்.

நேரே பெரியமாமனது வீட்டுக்குப் போய் அழுகை முட்ட முட்ட நடந்ததைச் சொன்னான்.

எவ்வித ரியாக்சனும் காட்டாமல் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நின்று பின் சிறிது மெளனமாகிப் போன பெரியமாமன் வரவேற்பானா இல்லை அவனும் வெளியேற்றிவிடுவானா என்று புரியாமல் முளித்தான் ராஐ¡.

ராஐ¡வைக் கனடா கூப்பிடுவதற்கு செலவு செய்த காசை வட்டியும் முதலுமாக அறவிடுமுன்னர் அவனை வெளியேற்ற மாமன் என்ன அவ்வளவு கல்நெஞ்சக்காரனா..?

"சரியடா ராசா.! அவன்ரை குணந்தான் எங்களுக்கு முதல்லயே தெரியுமே. அதுவும் உன்னால வெல்·பெயரிலை நு¡றுடொலர்ஸ் வெட்டிப் போட்டாங்கள் எண்டு ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரியுறான். நீதானே அவனோடை ஒட்டிக் கொண்டு போனனீ இப்ப அழுது என்ன பிரயோசனம். பாக்கைத் து¡க்கிக் கொண்டுபோய் ஆனந்தன்ரை று¡மிலை வை."

பெரியமாமன் அத்துடன் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.


பதிவுகள் - டிசம்பர் 2001  இதழ் 24 -

5

நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல் பத்துமாதமாக நிலைத்திருந்த பேக்கரி வேலையை துரதிருஷ்ட்டவசமாக ஏற்பட்ட ஒரு சிறுசண்டையில் இழந்துபோனான். தனது பொஸிசனைக் கைப்பற்றும் நோக்கம் ரஞ்சனுக்கு இருப்பதை அறிந்து முதலில் அவனுடன் சிறுசிறு உரசல்கள் வந்தன. பத்திரோனின் அடிப்பாதம் தாங்கி ரஞ்சன் நடக்க வெளிக்கிட்டபோது அவனை நோக்கி அடிக்கடி நக்கலை எறியத் தொடங்கினான் ராஐ¡. அவனது நக்கல்கள் நகையாடல்களையெல்லாம் பொருட்படுத்தாது ஒவ்வொரு படியாக ரஞ்சன் முன்னேறத் தொடங்கிய பிறகுதான் வேலை இழந்து போவதற்கான அபாயம் தன் காலைக் கடிப்பதை உணர்ந்தான்.

இவனைவிட இளமையும் துடிப்பும் நேரே விவசாயம் செய்து கொண்டிருந்த வயலிலிருந்து சேற்றுக்காலுடன் கனடா வந்திறங்கியது போல இருந்த ரஞ்சனின் கிராமப்புறத் தோற்றமும் பத்திரோனின் கவனிப்பில் நம்பிக்கையாக விழத் தொடங்கியது. விசயம் தெரிந்த வேலைகாரன் ஒரு எசமானனுக்கு எப்போதுமே வில்லங்கங்களைக் கொண்டு வரக்கூடியவன். ரஞ்சனைப்போன்ற வெகுளியும் மாடுமாதிரி வேலை செய்பவனும் பத்திரோனின் பணப்பெட்டியை நிறைப்பதற்கு உபயோகமானவர்கள். பத்திரோன் ரஞ்சனில் நம்பிக்கையும் அக்கறையும் வைப்பதன் அறிகுறிகள் தோற்றம் காட்டத் தொடங்கிய இரண்டு மாதங்களின் பின்னர்தான் அந்த விபத்து நடந்தது.

வாரத்திற்குத் தேவையான மா சீனி மோல்ட் போன்ற பொருட்களுக்கு ஓடர் கொடுப்பதற்கு அவனிடமே எவ்வளவு கொள்வனவு செய்ய வேண்டுமென்று கேட்பான் பத்திரோன். இவன் கைவசமுள்ள இருப்பைக் கணக்கெடுத்து மறுவாரத்திற்குத் தேவையான மாமூட்டைகள் மற்றும் இதர பொருட்களின் அளவு குறித்துக் கொடுப்பான். இது ஒன்றுதான் மாக்குழைக்கும் பகுதிக்கு அப்போது யார் தலைமை என்று காட்டும் குறிப்பு. மற்றும்படி எல்லோருமே உழவுமாடு மாதிரி வேலை செய்யவேண்டியதில் எந்த மாற்றமும் இருக்காது. அத்துடன் தலைவனுக்கும்இ கையாளுக்கும் ஒரே சம்பளம்தான் கொடுக்கப்படும்.

அரசாங்கவிடுமுறை நாட்களில் நு¡ற்றுஇருபத்தேழு மூட்டையிலிருந்து பத்திருபது மூட்டைகள் குறைத்துக் குழைக்கவேண்டியதிருக்கும். அப்படியான நாட்களில் ஒருசில மணித்தியாலங்கள் முன்னர் வேலை முடிந்தால் பேக்கரி முழுவதும் கூட்டிக் கழுவப் பணிப்பான் பத்திரோன். ஆனால் மாக்குழைக்கும் தலைமைப்பிரகிருதி மட்டும் விரும்பினால் வீட்டுக்கு செல்லலாம். இந்த ஒரேயொரு சலுகையை ராஐ¡ எடுத்துக் கொள்வதில்லை. வீடு என்பது உடல் உள ஆறுதலுக்காக ஒதுங்கிக்கொள்ளும் மகத்தான தரிப்பு. அவனுக்கு இதற்கு நேர்மாறாக சிங்கத்தின் குகை மாதிரி அமைதிகாட்டி பத்தைச் சொரியும் பிரதேசம் அது. பெரியமாமா பெரியமாமி என்ற கண்ணிவெடிப் பிரதேசங்களைக் கடந்துபோய் ஆறுதல்ப் படமுடியுமா? ஆகவே அவனும் சகவேலைகாரர்களுடன் சேர்ந்து கூட்டிக் கழுவி

வழமையான நேரத்திற்கு வேலையை முடிப்பான்.

அன்று பேக்கரியில் மிகவும் கலகலப்பாக இருந்தது. பத்திரோன் தானே வீட்டில் வடிக்கும் புதிய வைன் கொண்டு வந்திருந்தான். பெரியசாடியில் கொண்டுவந்திருந்த வை¨ன் பாண் பணுஸ் உருட்டும் பாரிய மேசையில் வைத்து அதற்கருகே பிளாஸ்ரிக் கப்புகளும் வைத்து எல்லோரையும் எடுத்துக் குடிக்கச் சொல்லி தானும் நிறைவெறியில் நின்றான். அடுத்தநாள் கிறிஸ்தவர்களின் அதுவும்இ இத்தாலிக் கத்தோலிக்கர்கள் சிறப்பாகக் கொண்டாடும் பாஸ்காப் பண்டிகை நாள். இந்தப் பேக்கரியில் பாண் பணுஸ் அயிட்டங்கள் கொள்வனவு செய்யும் கணிசமான சுப்பர்மார்க்கெட்டுகள் பாஸ்காவுக்கு மூடப்பட்டிருக்கும் ஆதலால் எல்லோருக்குமே வேலை குறைந்திருந்து வைனைக் குடித்து கலகலப்பாக இருந்தார்கள்.

மெ'¢ன் மூலம் மாக்குழைக்கும் இவனது பகுதிக்குஇ மத்தியானம் இரண்டுமணிக்கே வேலை முடிந்துவிட்டது. ஒருகப் வைன் ஊத்திக்கொண்டு வந்து குடித்துக் குடித்து மாக்குழைக்கும் மெ'¢னை துப்பரவு செய்து கொண்டிருந்தான். வாரத்தில் ஒருதடவை மெ'¢னை மிகவும் வடிவாகத் துப்பரவு செய்து அதன் உட்பகுதிக்கு எண்ணெய் பூசி ¦ஐ¡லிக்கவிடுவது வழமை. அன்று வாரக்கடைசி இல்லாவிட்டாலும் நாளை விடுமுறை ஆதலால் எண்ணெய் பூசிவிடும் எண்ணத்துடன் மெ'¢னைத் துப்பரவாக்கிக் கொண்டிருந்தான். பத்திரோன் வடித்தது நல்ல காரம் கூடிய வைன்இ இரண்டாவது கப் குடித்தபிறகு அது தன் வேலையைத் தொடங்கிவிட்டது. கடந்த காலங்களை போதையில் இருக்கும்போது மீட்டிப் பார்ப்பதில் உள்ள சுகமே தனி. எவ்வளவுதான் அந்தக் காலங்களில் துன்பச்சுமை தாளாது தவண்டு திரிந்து பரதேசியாய் அலைந்து கடின வாழ்க்கையைக் கழித்திருந்தாலும் இப்போது சிவனின் கழுத்தைச் சுத்திக்கொண்டு பாதுகாப்பான இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கும் போது புகார்படர்ந்த அந்த வாழ்வு நிறைய சேதிகள் சொன்னது. சந்தோசம் தந்தது.

இந்தியாவில் இயக்கத்தில் இருந்தபோது குடிபழகிய அந்த வெள்ளோட்டநாள் ஒரு துணிகரம் செய்ததுபோல மனதில் ஊறிப்போய்க் கிடந்தது. நானு¡றுபேர்களுக்கு சமையல் செய்யும் பெரிய சமையல்க் கொட்டகைக்குள் ரொட்டிக்கு மாக்குழைத்துக் கொண்டிருந்தபோது தினேஸ் சொன்னான் தனக்குப் பாண் போடத்தெரியும் என்று. அன்றிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை தினேசின் தலைமையில் முகாமிலுள்ள போராளிகள் எல்லோரினதும் காலைச் சாப்பாட்டிற்கு பாண் போடத் தொடங்கினார்கள். மாக்குழைத்து போறணையில் சுட்டு பாணாகி வெந்துவர விடிகாலை நாலுமணியாகி விடும். வேர்க்க விறுவிறுக்க பாண் பேக்பண்ணி எடுத்து அடுக்கிக் கொண்டிருக்கும்போதுதான் ஒருநாள் கிராமத்துக் கசிப்பு வேண்டிவந்து இரகசியமாகக் குடித்தார்கள். அதுவும் நீண்டநேரம் போதை நிலைக்கவேண்டும் என்பதற்காக சுடச்சுட பாணும் தின்று கசிப்பும் குடித்த நாளன்று பயிற்சியை கனவில் செய்ததுபோல செய்தான். பாணில் ஊறிப்போய் வெகுநேரமாக நிலைத்திருந்த வெறியில் ஓடுவதும் சாடுவதும்இ நிலத்தில் ஊர்ந்து தப்பிப் போவதற்கான பயிற்சி செய்த போதும் உடல்நோவோ சிரமமோ தெரியவில்லை. அடுத்தநாள் எழும்பி நடக்கக்கூட முடியாதவாறு உடம்பு வேதனை கண்டது.

பழைய நினைவின் போதையுடன் மெ'¢னைத் துப்பரவாக்கிவிட்டு அளவுமக்கில் எண்ணெய் எடுத்துவந்து மெ'¢னுக்குப் பூசிக் கொண்டிருந்தபோது பத்திரோன் "ரஞ்சா..! ரஞ்சா..!!" எனக் கூப்பிட்டுக் கொண்டுவரும் சத்தம் கேட்டது.

ராஐ¡ வேலை செய்துகொண்டே திரும்பிப் பார்த்தான். பாண் அடுக்கும் தள்ளு வண்டிலை மல்லாக்காகப் புரட்டி தண்ணி அடித்துக் கழுவிக் கொண்டிருந்த ரஞ்சன் பத்திரோன் கூப்பிடும் சத்தத்தைக் கேட்டதும் செய்த வேலையை விட்டுவிட்டு நாய்க்குட்டி போல ஓடிவந்தான்.

"ரஞ்சா உனக்கு என்ன வேண்டும்.. எத்தனை மூடைமா? எத்தனை மூடைசீனி வேண்டும் சொல்" என்று பத்திரோன் ரஞ்சனிடம் மிகப்பலமாக அதுவும் ராஐ¡வுக்கு கேட்கவேண்டும் என்ற குறிப்புடன் கேட்டான்.

மா 140பாக்இ சீனி 8பாக்இ மோல்ட் 3பாக் என்று ஒருவித பெருமிதத் தோரணையுடன் கூறிக்கொண்டிருந்தான் ரஞ்சன். இவனுக்கு ரஞ்சன் சொல்லிக் கொணடிருக்கும் சாமான்களின் அளவுதொகை ஏற்கனவே மாமூலான நாட்களில் தான் குறிப்பிடும் தொகைதான் என விளங்கியது. நாளைக்கு விடுமுறை என்பதும் இன்று இருபத்தேழு மூட்டை குறைத்துக் குழைத்ததும் ஞாபகத்திற்கு வந்தது. அதைவிட குடித்த வைன் வயிற்றிற்குள் போய் மூளைக்கு ஏறி சில வில்லங்கங்களைத் தோற்றுவித்திருந்தது.

"டேய்..! ....... நாளைக்கு லீவெல்லே.. என்ன மயிருக்கு இவ்வளவு கூடச் சொல்லுறாய்". என்றான் ராஐ¡.

ராஐ¡ தன்னைத் து¡சணத்தால் பேசியதும் ரஞ்சனும் வைன் குடித்து ஏற்கனவே உருவேறி இருந்ததும் அவனுக்கு சுள்ளென்று ஏறியது. ராஐ¡ அப்படிக் கூப்பிட்டது இவனது மர்மஸ்தானத்தில் படீரென்று குத்துவிட்டது போல வலித்தது. ஏற்கனவே ரஞ்சன் எதிர்பார்த்திருந்ததும் இப்போது பத்திரோனே ஏற்படுத்தித் தந்த அருமையான சூழ்நிலையை அவன் கோட்டைவிடத் தயாராக இருக்கவில்லை. அவனும் சூடாகப் பதில் கொடுத்தான்.

"பத்திரோன் என்னட்டைக் கேக்கிறான் நான் பதில் சொல்லுறன். இடையில உமக்கென்ன விசர்ப்.....ஞாயம். வாயப் பொத்திக்கொண்டு நீர் உம்மட வேலையைப் பாரும்." என்றான் ராஐ¡வை நோக்கி.

தான் வேலை பழக்கின சின்னப் பெடியன் அதுவும் நேற்று முளைத்த பயல் தன்னை மிஞ்சிவிட்டதைக் கண்ட மனிசப் பழிவாங்கும் குணம் ரஞ்சனது பதிலால் சூடேறஇ கையிலிருந்த எண்ணெய் மக்குடன் ஓடிப்போய் ரஞ்சனின் தலையில் முளுக வார்த்துவிட்டு அவனைப் பிடித்து குபோசாகத் தள்ளிவிட்டான் ராஐ¡.

பிடரி அடிபட விழுந்த ரஞ்சன் சுதாகரித்துக் கொண்டு எழும்பி மேசையில் இருந்த கத்தியைத் து¡க்கினான். நடுவிலே நின்ற பத்திரோனுக்கு முதலில் என்ன நடக்கிறதென்று விளங்காமலேயே பயத்தில் வெறி முறிந்துவிட்டது. பைத்தியக்காரனைப் போல "பாலா.. பாலா.. காந்தன் காந்தன்" என்று கூவியபடி §ஐசுநாதர் மாதிரி கையை விரித்து நின்று இருவருக்குமிடையில் சதிராடிக் கொண்டிருந்தான். போறணையில் நின்று மும்முரமாக பேக் செய்துகொண்டிருந்த பாலனும் காந்தனும் தடியைத் து¡க்கி வீசியெறிந்துவிட்டு இவர்களை நோக்கி ஓடிவந்து இரண்டு பேரையும் பிடித்துக் கொண்டார்கள்.

ராஐ¡வை கட்டிப்பிடித்து இழுத்துக் கொண்டு பேக்கரிக்கு வெளியே கொண்டு வந்தான் பாலன். பாலனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது ராஐ¡வுக்கும் ரஞ்சனுக்குமிடையே தலைமைப் போட்டி உருவாகியிருக்கிறதும்இ பத்திரோன் ரஞ்சன் பக்கம் சாய்ந்திருப்பதும். இப்படியான போட்டிகள் கடைசியில் யாராவது ஒருவருடைய வேலை இழப்புடன் முடிவு பெறும். "தன் பின்னர் பேக்கரி ஒருவரையும் ஞாபகம் வைத்திருக்காது மாமூலான வேலையில் மூழ்கிவிடும்.

"ஏன் ராசா பைத்தியக்கார வேலை செய்தனீர் அவன்தான் முட்டாளெண்டா உமக்கும் என்ன புத்தி மாறிப்போச்சே"

"கொஞ்சநாளாப் பாத்துக்கொண்டு வாறனண்ணை அவன்ரை செருக்கு ஏறிப்போச்சு"

"உங்களுக்கை அடிச்சுக்குத்தினா பத்திரோன் எல்லாத் தமிழாக்களையும் கழுத்தைப்பிடிச்சு வெளியால விட்டிடுவான். உங்களுக்கென்னஇ நீங்கள் ரண்டுபெரும் வெறுங்குண்டி. நாங்கள்தான் குடும்பங்குட்டி எண்டு வேலையில்லாமல் கஸ்ரப்படோணும்."

"இல்லையண்ணை.. இவன்ரை பல்லைத் தட்டிக் கையில குடுத்தாத்தான் என்ரை கோவம் ஆறும்."

"கேசும் முடியேல்லை ஒரு மயிரும் முடியேல்லை பல்லைத் தட்டப் போறாராம்."

என்று புறுபுறுத்தபடி பாலன் இழுத்துக்கொண்டு வீதிக்கு வந்து ராஐ¡வுக்கு நிறையப் புத்திமதிகள் சொன்னார். அவன் கோபத்திலும் வெறியிலும் பாலனை திரும்ப இழுத்துக் கொண்டு பேக்கரிக்குள் பாய முயல சீனியர் காந்தன் ராஐ¡வின் 'சோல்டர்பாக்'கைத் து¡க்கிக்கொண்டு இவர்களை நோக்கி வந்தார்.

"பாலா போறணையில பாண் கருகப்போகுது போய்ப் பாருங்கோ நான் இப்ப வாறன்" என்று சொல்லி பாலனை பேக்கரிக்குள் அனுப்பிவிட்டு இவனிடம் பாக்கைக் கொடுத்தார்.

"ராசா நேர வீட்டுக்கு உடன போம். உம்மட அவசரப் புத்தியால அருமந்த வேலைக்கு உலை வைச்சுப் போட்டீர். நான் மெல்லப் பத்திரோனிட்டக் கதைச்சுப் பாத்திட்டுப் பிறகு உமக்கு ரெலிபோன் எடுக்கிறன்."

சீனியர் காந்தனில் எப்போதுமே இவனுக்கு மரியாதை இருந்து வந்திருக்கிறது. லீவுநாட்களில் சிலபோழுதுகளில் ரெலிபோன் பண்ணி ராஐ¡வை தன் வீட்டுக்குக் கூப்பிட்டு பியர் குடித்து நல்ல சாப்பாடும் போட்டு உபசரித்திருக்கிறார். இவனும் சீனியர் காந்தனின் குட்டிமகளுக்கு அவ்வப்போது விளையாட்டுச் சாமான்கள் வேண்டிக்கொடுத்து அது "மாமா..! மாமா..!!" என்று மழலையில் கூப்பிடும்போது சொந்தக் குடும்பத்தின் நெருக்கத்தை உணருவான். இருவரும் பரஸ்பரம் அண்ணன் தம்பிமாதிரி பழகிக் கொண்டார்கள். அவர் போகச் சொன்னதுமே இவன் செம்மறியாடு தலையைக் குத்திக்கொண்டு நடப்பது போல விறுவிறுவென்று மெட்ரோவை நோக்கி நடந்து சென்றான்.

தனிமையில் யோசிக்கும் போதுதான் அவனுக்கு வேலைபற்றிய பயம் வந்தது. இப்படி நாள்முழுதும் கஸ்ரப்பட்டு வேலைசெய்தும் எடுக்கும் சம்பளம் சீட்டுக்கட்டி பெரியமாமனுக்கு மாதாமாதம் நானு¡று டொலர்ஸ் கொடுத்துஇ மேலதிகமாக சாப்பாட்டுக்காசு கொடுத்துஇ மெட்ரோப்பாஸ் வேண்டி அவ்வப்போது பெரியமாமன் திருப்பித்தருகிறேன் என்று ஏமாற்றிவேண்டும் தொகைகள் என்று கையும் கணக்கும் சரியாக இருக்கிறது. இதில் சீட்டு முடிய இன்னமும் றுமாதங்கள் இருக்கிறது. சீட்டைப் பெரியமாமன் முழுவதும் எடுத்துவிட்டான் என்ற றுதல் இருந்தும் கட்டிமுடிக்க காசு வேண்டுமே. சிவராசா வேறு இவனது நண்பராகிவிட்டார். அவருடன் வேலை செய்யும் ஒருநாள் சம்பளக்காசுதான் சிகரெட்டுக்கும் பியருக்கும் அவ்வப்போது நண்பர்களுடன் சென்று பார்க்கும் படத்திற்கும் உபயோகமாகிறது. அதுவும் இவனது இரண்டே இரண்டு நண்பர்களும் தொழுநோய் வந்து விரல் அழுகிப்போனவர்கள். படத்திற்கு ரிக்கெற் எடுக்கும்போது பியர் வேண்டிவிட்டு காசு கொடுக்க வரிசையில் நிற்கும்போது நண்பர்கள் இருவரது கைகளும் அவர்களது ஐ£ன்ஸ்பொக்கட்டுக்குள் மறைந்துவிடும் எவ்வளவுதான் பகீரதப்பிரயத்தனம் செய்தாலும் காஸ்கவுண்டரைக் கடக்கும்வரை அவர்களது கைகளை வெளியில் இழுத்துவிடமுடியாது. கடையைவிட்டு வெளியே வந்ததும் பியர்க்கேசைத் து¡க்குவதற்கு மட்டும் ஆளாளுக்கு உதவிக்கு வருவார்கள். என்ன செய்வது இந்த இயந்திரவாழ்க்கையை இனிமையானதாக்க வரும் ஒரு சின்னப்பொழுதை அவர்களுடன்தான் கழிக்க வேண்டியிருக்கிறது.

மெட்ரோ ஸ்ரேசனுக்குக் கிட்ட வரத்தான் அவனுக்கு இப்போது எங்கே போவதென்ற சிக்கல் வந்தது. இவ்வளவு வெள்ளெண வீட்டுக்குப் போய் என்ன செய்வது..? பெரியமாமன் வீட்டில் இருந்தால் நாய்போல மோப்பம் பிடித்துக் குடித்ததை அறிந்துவிடுவான். குடிப்பதைப் பற்றி பெரியமாமனுக்கு பெரிதாக ஏதும் வருத்தம் இருக்கா என்றாலும் வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு வருகிறான் என்ற தப்பெண்ணத்தில்இ கேள்விக்குமேல் கேள்வி கேட்பான்.

பெரியமாமி வேறு கர்ப்பமாக இருக்கிறாள். பெரியமாமி சத்தி எடுக்கத் தொடங்கியதிலிருந்து வேலையால் வந்தபிறகு இரவுச்சமையல் இவன்தான் செய்கிறான். இவனது சமையலிலுள்ள து¡க்கலான உறைப்பும் ருசியும் பெரியமாமனுக்குப் பிடித்துவிட்டது. பெரும்பாலும் இப்போது இரவுச்சாப்பாட்டிற்கு முன்னர் இரண்டுகிளாஸ் விஸ்கி குடித்தபிறகுதான் பெரியமாமன் சாப்பிடவே உட்காருகிறான்.

ராஐ¡ இப்போது வீட்டிற்கு போகும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு மெட்ரோ எடுத்து ¦ஐறிபார்க்குக்கு வந்தான். வரும்வழியில் ஒரு கடையில் 350"ட பியர்ரின் வேண்டி கடதாசி பாக்கிற்குள் போட்டு. தன் சோல்டர் பாக்குக்குள் வைத்துக் கொண்டான்.

பார்க்கில் இன்னமும் ஆட்கள் நிறையவில்லை. உதிரியாக ஓரிருவர் மரநிழலில் இருந்தார்கள். அடர்த்தியான பற்றைக்குள் ஒன்றிரண்டு காதலர்களின் அசைவுகளும் தெரிந்தன. அவன் ஓரிடத்தில் ஒதுக்கமாக இருந்த கதிரையில் இருந்துஇ சோல்டர் பாக்கை திறந்து மடியில் வைத்துக்கொண்டு பியரை உடைத்து குடிக்கத் தொடங்கினான்.

பியர் உள்ளே இறங்க இறங்க ரஞ்சனின் மூக்கை உடைத்து ரத்தம் பார்க்க வேண்டுமென்ற வெறி பிறந்தது.


பேக்கரி வேலையை இழந்து ஆறுமாங்களாகி விட்டது. அவ்வப்போது கிடைக்கும் முகவரிகளைப் பொறுக்கிக் கொண்டு வேலை தேடி அலைந்ததுதான் மிச்சம். ஞாயிறுவேலை தொடர்ந்தபோதும்இ வெல்·பெயரும் ஞாயிறு வேலைக்காசுமாகச் சேர்த்துத்தான் சிவராசாவிற்கு சீட்டுக்காசு கட்டிவந்தான். இந்த ஆறுமாதங்களும் வாடகையும் சாப்பாட்டுக்காசும் கொடுக்காமல் பெரியமாமனுடன் இருப்பதில் உள்ள இடர்கள் மெல்ல மெல்ல அவனைத் தாக்கத் தொடங்கின.

பெரியமாமிக்கு சத்தி நின்று மாதங்கள் கடந்து இதோ பேறுகாலமும் வரப்போகிறது. நாள் நெருங்கநெருங்க பெரியமாமனின் முகம் சந்தோசத்தை வெளிவிடுவதற்கு பதில் ராஐ¡ மீது உ-ணத்தை வாரித் தெளிக்கத் தொடங்கியது. எதெற்கெடுத்தாலும் மாமன் சீறிவிழத் தொடங்கினான். ராஐ¡ உடைப்பதெல்லாம் பொன்குடமாக பெரியமாமனுக்கும் பெரியமாமிக்கும் தெரிந்தது.

"டேய்..! வேலை வெட்டியில்லை... வீட்டுவேலைகூட செய்யாம எங்க சுத்தித்திரியிறாய்..?"

"மாமிக்கு கொஞ்சம் பால் காய்ச்சிக்குடு..!"

"·ப்ரிட்ஐ¥க்கை எல்லாத்தையும் வழிச்சுத் துடைச்சுப் போட்டாய். மார்க்கெட்டுக்குப் போய் மரக்கறி வேண்டிவா..!"

பெரியமாமன் ஏவும் எல்லா வேலைகளையும் மூச்சுக்காட்டாமல் செய்தான் ராஐ¡. இரண்டுவேளைச் சமையலையும் அவனே செய்துமுடித்தான். எல்லா சிரமங்களையும் அவனது தோளில் ஏற்றிவிட்டு ஆனந்தனுக்கு மட்டும் மாமா ராசமரியாதை செய்தார். அவன்தானே சுளையாக வாடகை கொடுப்பவன்.

சீட்டின் கடைசி மாதக்காசு கட்டிமுடித்தபோதுஇ சற்று நிம்மதியாக இருந்தது. னாலும் அடுத்த மாசம் முதலாம்திகதி வெல்·பெயர் செக் வந்தபோது பழக்கதோசத்தால் பெரியமாமனது கை நீண்டது. அந்தமாதம் மாமிக்கு பிரசவநேரம் தலால் வெல்·பெயரை மாற்றி அப்படியே பெரியமாமனிடம் கொடுத்தான். காசை முழுவதும் வேண்டிவிட்டுத்தான் மாமன் பெரிய குண்டொன்றைத் து¡க்கி ராஐ¡வின் தலையில்ப் போட்டான்.

"ராசா..! பிள்ளை பிறந்தால் வீட்டிலை இடம் பத்தாதுபோகும். நீ இந்த மாசத்தோட வேறெ எங்காவது இடம் பார்..!"

"நான் எங்க மாமா உடன வீடு எடுக்கிறது. கையில காசும் இல்லாம..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் ராஐ¡.

"அதுக்கு நான் என்ன செய்யிறது இவ்வளவுநாளும் சாப்பாடும் போட்டுட்டு காசும் தந்து உனக்கு வீடு எடுத்துத் தாறதுக்கு நான் என்ன பெரிய இலச்சாதிபதியே..!"

மேலே கதைப்பதற்கு எந்தச் சந்தர்ப்பமும் தராமல் மாமன் இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான்.

மாமி வயிற்றைத் தள்ளிக்கொண்டு பார்வையால் பிரியாவிடை தந்தாள்.

மாமனது வேண்டாத பேச்சுஇ ராஐ¡வின் மனதில் வைராக்கியத்தைப் பாச்சியது. அந்தக் கிழமையே வீட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தீர்மானித்தான். அன்று பின்னேரம் சிவராசா வேலை செய்யும் ரெஸ்ரோரண்டிற்குப் போய் அவரிடம் நான்குவீத வட்டிக்கு ஆயிரம் டொலர்ஸ் வேண்டினான். வேலை இல்லாத ஒருவனுக்கு வட்டிக்கு காசு கொடுப்பதற்கு அவர் தயங்கினாலும் அவனது நிலமையை முழுவதும் கேட்டறிந்துவிட்டு வட்டிக்கு ஈந்தார்.

சொந்த பந்தங்களின் பக்கமே தலைகாட்டக் கூடாதென்ற வன்ம உணர்வில் மொன்றியல்நோர்த் பகுதியில் ஒருசிறு அறையுடன் கூடிய அப்பார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து அடுத்தகிழமையே குடிபோனான்.

ராஐ¡ வெளியேறிய ஆறாவதுநாள்இ மாமனுக்கு பெண்குழந்தை பிறந்தது. ஒன்றுமில்லாத ண்டிக்கு அந்த சந்தோசச் செய்தியை அவர்கள் தெரிவிக்கவில்லை.



பதிவுகள் - ஜனவரி 2002 இதழ் 25-

6

நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல் திசைகளைச் சுருட்டி தன் கக்கத்தில் அடக்கிக் கொண்டு பிரளயம் காணவீசும் புயற்காற்றுக்குள் ஒரு சின்ன இறகுத்து¡வல் போல பெரியமாமன் வீட்டிலிருந்தும் து¡க்கி எறியப்பட்டான் ராஐ¡.

இரண்டு வருடங்களாக மர்மப்பகையும் மாமா மாமியின் வக்கிரநடத்தையும் அவனது மனதில் கிடந்து ஊறிப்போய் நாறத்தொடங்கி விட்டது. மாமனையும் மாமியையும் பொறுத்தவரை குரைக்கத் தெரியாத சவலைநாய்க்குட்டிக்கு சோறு வைப்பதுமாதிரித்தான் அவனை இந்த இரண்டு வருடங்களும் பேணிக் கொண்டனர்.

வேலைக்கென்று போன இடங்களிலெல்லாம் சண்டையும் சள்ளையும் வலைபோல அமுக்கியதே தவிர ராஐ¡வுக்கு எங்கேயும் நிம்மதி கிடைக்கவில்லை. வெல்·பெயர் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது. வெல்·பெயர் கிடைத்த மாதத்தொடக்கத்திலிருந்து பதினைந்து நாட்கள் அவனுக்கு மழை சொரிந்து வயல்நிறையும். பியரும் அலைதலுமாக காசு கரையும்வரை கட்டாக்காலி. மாதக்கடைசி வாரம்மட்டும் கையில் காசில்லாமலாகஇ வீட்டோடு கிடந்து சொந்தங்களைக் கறுவிக் கொட்டுவான்.

ஓடும் நதியில் கிளிஞ்சல்களின் பயணம். ஒவ்வொரு துறைக்கும் புதிய புதிய கஞ்சல்கள் சேர்ந்து இணைந்து ஓடுவது போல இந்த வெற்றுவாழ்க்கையில் நிறைய சினேகிதங்கள் பிடிபட்டன. அப்படி வந்தவன்தான் குமார். ராஐ¡வைப் பொறுத்தவரை குமார் சினேகிதனல்ல துரியோதனனுக்கு தோள் கொடுத்த கர்ணன்மாதிரி.

ஆரம்பத்தில் குமாரின் பின்னால் அலைந்து அவனது நிழலில் எல்லாவற்றையும் பழகிக் கொண்டான். கசினோ நிர்வாணநடனம் லெதர்ஐ¡க்கெட் என்று வெல்·பெயர்க்காசு கரைந்து போனது. காசில்லாத நாட்களில் எங்கும் போகாமல் வீட்டில் அடைந்து கிடக்கும்போது தெருவில் குமாரின் கார் கோர்ண் அடித்து இவனை குமாருடன் தொற்றவைத்துவிடும்.

ஆரம்பத்தில் ராஐ¡வை தனது காருக்குள் இருக்கவிட்டு குமார் இறங்கிப்போய் தனது வாடிக்கைக்காரர்களுடன் கதைத்து அவர்களுக்குத் தேவையான ஹெரோயின் பொட்டலங்களை விநியோகித்து வருவான். அப்படி அவன் தனியனாக வந்து வியாபாரம் செய்வதிலுள்ள அபாயத்தைக் கருதித்தான் தன்னை இணைசேர்த்து கங்காரு மாதிரி காவித்திரிகிறான் என்று அறியாமலே ராஐ¡ நாட்கள் பல இருந்தான்.

பதினாறு து¡ள்ப் பொட்டலம் விற்ற ஒரு சந்தோசநாளில் குமார் ராஐ¡வுக்கு "பார்" ஒன்றில் விஸ்கி வேண்டிக் கொடுத்தான். சந்தோசமாக விஸ்கி அடித்து மிதபோதையின் வீச்சில் நெகிழ்ந்துபோன குமார் ராஐ¡வின் தோளில் கையைப் போட்டு அணைத்தபடி:-

"ராசா நீ மட்டும் என்னோட சேந்து நிண்டா உன்னை எண்ணிப் பத்து மாசத்தில பணக்காரனாக்கிக் காட்டுவன். உன்ரை மாமாமார் எல்லாம் பாத்து பொறாமைப்பட வைப்பன்."

என்று சொல்லி மிக நுணுக்கமாக ராஐ¡வின் பலவீனமான பகுதியில் தட்டி அதிர்வேற்படுத்தினான்.

யாருக்குத்தான் பணக்காரனாகும் ஆசை இல்லை. அதுவும் மாமன்மாரின் பந்தாட்டத்தில் சிக்கி மனம் நைந்துபோன ராஐ¡ வெகு சீக்கிரத்தில் குமாரின் வலையில் விழுந்து போனான். ஆனாலும் எடுத்த எடுப்பிலேயே அவன் ராஐ¡வை நம்பத் தயாரில்லை. மாசக் கணக்காக காரில் கொண்டு சுற்றுவதும்இ நம்பகமான வாடிக்கைக்காரரை அறிமுகப் படுத்துவதுமாக துருப்பை நகர்த்தினான்.

இறுதியில் குமாருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ராஐ¡வில் நம்பிக்கை வரவும் சிறு சிறு ஹெரோயின் பொட்டலங்களைக் கொடுத்து தனது வாடிக்ககையாளரிடம் விற்றுவர அனுப்பினான். நாளடைவில் ஒரு திறமையான விநியோகி என்று தெளிவாகியதும் வியாபாரத்தில் அவனை முழுமையாக ஈடுபடுத்தி இலாபத்தில் சிறுபங்கு கொடுத்தான்.

ஒரு இரவு நித்திரை முழித்து ஒரு மாத வெல்·பெயர்க் காசை உழைத்து விடமுடிந்ததைத் தெரிந்ததும் மெல்ல அந்தப் பக்கம் சாயத் தொடங்கினான் ராஐ¡.

சோவெனப் பெய்யும் மழைதான் இந்தத் து¡ள்க்காசு. து¡ள் அடிப்பவர்களின் தலை போதையேறித் தொங்கித் துவள வியாபாரிகளின் பொக்கட் நிரம்பி வழியும். மாதத் தொடக்கத்தில் வெல்·பெயர்க்காசு வரும் நாளிலும் அதைத் தொடர்ந்த ஒரு வாரமும் அழைப்புக்கு மேல் அழைப்பு பேஐரில் வரும். ஒரு வாடிக்கையாளனே இரண்டு மூன்று தரம் கூப்பிடுவான். போதையேறி அவன் முக்தி பெறும் வரை ராஐ¡வின் பேஐர் நம்பரே அவன் நினைவுகளில் எழுந்த வண்ணம் இருக்கும்.

வாடிக்கையாளர்களின் வட்டத்தில் குமாரின் முகம் மறைந்து போக நீரிலிருந்து கிளம்பும் புதிய அலைபோல ராஐ¡வின் முகமும் இளமை வேகமும் ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்த தந்திர முறைகளும் வெளியே வந்தது. குமாரிடம் சிறு பொட்டலங்கள் வேண்டுவதைத் தவிர்த்துவிட்டு நு¡றுகிராம் இருநாறுகிராம் ஹெரோயினை ஒரு விலைபேசி வேண்டி தானே பொட்டலமடித்து விக்கத் தொடங்கினான்.

புதிய கார் வந்தது.

கோவித்துக் கொண்டு விலத்திய சின்னமாமன் அடிக்கடி ரெலிபோன் அடித்து சாப்பிடக் கூப்பிட்டான். பெரியமாமி மதுவந்தியின் முதலாவது பிறந்தநாளுக்கு அழைப்புத் தந்தாள். தம்பதி சகிதம் வீடுதேடி வந்து அவனைக் கண்டிப்பாக வரவேண்டும் என்று அன்புமழை பொழிந்து விடைபெறும்போது கைமாற்றாக ஆயிரம் டொலர்ஸ் வேண்டிச் சென்றான் பெரியமாமன்.

திரும்பவும் உறவுகள் தன்னில் அக்கறையெடுத்து ஒட்டிக்கொள்ள அவனது மனத்தில் ஒரு வன்மம் புரண்டு நிமிர்ந்து வளர்ந்தது. இன்னுமின்னும் காசு வேண்டும்.கனடாவில் வீடு வேண்டும்.

பல வசதிகள் வேண்டும். இவர்களின் முன்னால் நான் ஒரு கோபுரத்தில் உட்கார்ந்து குனிந்து பார்க்க வேண்டும்.

நித்திரையைத் துறந்த இரவுகளில் அபாயங்களுக்குள் சுழியோடி அள்ளிச் சேர்த்த பணம் நிறைந்து வர நிறைவும் கூடியது. அவன் தனது கிளைகளைப் பரப்பி வேரூன்றியபோது குனிந்து பார்க்க முடிந்தது. தான் வேரூன்றிக் கொண்ட மண்ணின் குணம் அறியாத வகையில் ஐ¢ஸில் அவனுடன் இணைந்து கொண்டாள்.

மிதமிஞ்சிய மேலைத்தேச நளினமும் நீலக்கண்களும் சிறுகூடுவாகான மேனியும் தாங்கிய பிரெஞ்சுப் பெண்ணான ஐ¢ஸில் ராஐ¡வின் அன்புக்குப் பதில் அவனிடமுள்ள ஹெரோயினுக்கு ஏங்கினாள். ஒரு கொம்பனியில் நல்ல வேலையொன்றில் இருந்து து¡ளுக்குப் பழக்கப்பட்டு பின்னர் அந்த வேலையை இழந்து தனது காதலனை இழந்து எல்லாவற்றையும் இழந்து போனாலும் இந்தத்து¡ள் தரும் கனவுப்போதை அவளுக்கு எப்போதுமே தேவையாக இருந்தது. கையில் காசில்லாத நேரத்தில் கடனுக்குத் து¡ள் கொடுத்த ராஐ¡வின் தயாளகுணம் அவளது நெஞ்சில் காதலாக மாற ஒரு ஷோல்டர் பாக்கிற்குள் அடசிய அவளது உடுதுணிகளுடன் வீடுமாறி ராஐ¡விடம் வந்து சேர்ந்தாள்.

வியாபாரக்காசு முழுவதையும் வீட்டில் வைத்துக் காக்க முடியாத சிக்கல் வந்தபோது சின்னமாமன் வீட்டில் கொண்டு போய்க் கொடுத்தான். நு¡று நு¡று டொலர்ஸ் கட்டுக்களைக் கண்டதும் சின்னமாமி அந்தரத்தில் மிதந்தாள். அடிக்கடி கூப்பிட்டு விருந்து வைத்தாள். அடுத்த மாதமே சின்னமாமன் ஒரு நகைக்கடை திறந்தான். திறப்புவிழாவுக்கு மிக எச்சரிக்கையாக ராஐ¡வைத் தவிர்த்து விட்டான்.

பகல் உறக்கமும் இரவு வியாபாரமுமாக தொடர்ந்த நாளில் சிறுகச் சிறுக ராஐ¡வும் து¡ளுக்கு அடிமையாகி விட்டான். போதையுடன் காதல் புரிவதில் உள்ள கவர்ச்சியை ஐ¢ஸில் அறிமுகப்படுத்திய நாளில் இருந்து து¡ள்போதை இல்லாத காதலும் ஐ¢ஸிலும் இல்லை என்று ராஐ¡வின் மூளையில் பதிவாகிவிட்டது.

சீனியர் காந்தன் தனது மகனின் பிறந்தநாளுக்கு அழைப்புக் கொடுத்தார். வரும் பரிசுகளிலேயே தனதுதான் பெறுமதியான பரிசாக இருக்கவேண்டும் என்ற மிதப்பில் மூன்றுபவுண் சங்கிலியும் கைச்செயினும் குழந்தைக்குப் பரிசாக வேண்டிச் சென்றான்.

தலையாட்டும் நாய்க்குட்டிப் பொம்மையுடன் வந்திருந்த தனது பழைய எதிரி ரஞ்சனை அன்றுதான் சந்திக்க முடிந்தது. ரஞ்சன் இருந்த மேசையில் தனது அலாம் பூட்டிய புதுக்காரின் சாவியை ஸ்ரைலாக எறிந்து விட்டுஇ ரஞ்சனுக்கு அருகே இருந்து "ஹலோ" என்றான்.

அவனது மனத்தில் இன்னும் பழைய கோபம் மிச்சமிருந்தது. இருவரையும் அருகருகே பார்த்ததும்இ சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த சீனியர் காந்தன் உடனடியாக ஒரு விஸ்கிப்போத்தலையும் இரண்டு கிளாஸ்களையும் எடுத்து வந்து அந்த மேசையில் வைத்தார்.

பிறந்தநாள் விருந்து முடிந்து ஆட்கள் விடைபெற்றுக் கொண்டிருக்கும்போது முக்கால்வாசி முடிந்த விஸ்கிப்போத்தல் மேசையில் இருந்த மட்டன்ரோலை எடுத்துஇ ரஞ்சனுக்கு அன்பாக ஊட்டிக் கொண்டிருந்தான் ராஐ¡. அந்த உறவு பின்பு எந்த விரிசலுமற்று பல வருடங்களாகத் தொடர்ந்தது. நட்பின் எல்லைக்குள் என்றும் தனது வியாபாரலீலையை உள்நுழைத்து விடாமல் மிகக் கவனமாக காப்பாற்றினான் ராஐ¡.

கத்தியில் நடப்பது போன்ற கவனம் வேண்டிய இந்த நிழல்வியாபாரத்தில் ஹெரோயின் போதையால் சரியான நேரத்திற்கு உடனுக்குடன் வினியோகம் செய்யப் போகமுடியாமல் போய் வாடிக்கையாளர்களிடம் தொந்தரவு ஏற்பட்டு சில சரிவுகளை அடைந்தான் ராஐ¡. வியாபாரத்தைவிட தானும் ஐ¢ஸிலும் து¡ள் அடித்து போதையில் மிதப்பதே வழமையாகி விட்டதில் வரவு குறைந்தது.

இடைக்கிடை அவனது விளிப்பு எச்சரிக்கை தந்தும்இ சறுக்கல்களே சில நாட்களில் சம்பாதிப்பாக இருந்தது. ஓரிரு மாதங்கள் வியாபாரத்தை இடைநிறுத்திவிட்டு பின்னர் தொடருவோமென்று முடிவெடுத்தபோது வாடிக்கையாளர்கள் கைமாறிப்போய் விடுவார்களே என்ற அச்சம் வெருட்டியது.

ஏற்கனவே கொள்முதல் செய்த ஹெரோயின் வேறு அப்பார்ட்மெண்டில் ஒளித்து வைத்திருந்து காரம் குறைந்து போய்க்கொண்டிருந்தது.

வியாபாரத்தை அடியோடு விடுவதா? தொடருவதா? ஏன்று புலிவாலைப் பிடித்தவன் நிலையில் இருந்த ராஐ¡வுக்கு திரும்பத் திரும்பத் து¡ள் அடித்து ஏறும் போதையே நிம்மதியைத் தந்து கொண்டிருந்தது.


பதிவுகள் - பெப்ருவரி 2002 இதழ் 26-

7

நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல் அச்சம் தருகிற அமைதி சூழ்ந்த பிரதேசம் அவனது தொழிலுக்கு வசதியும் பாதுகாப்பும் கொண்டது. பகலில் நிறைந்திருந்த ஐனசந்தடியின் பாரத்தை அகற்றி விச்ராந்தியான தவத்தில் தனித்து ஓடும் செயிண்ட் லோரண்ட் வீதியின் பஸ்தரிப்பு ஒன்றில் குமாரின் வரவுக்காக காவல் நிற்கிறான் ராஐ¡.

கசினோவுக்கு எதிரே இருக்கும் இந்த பஸ்தரிப்பில் விடிகாலை இரண்டு மணிக்கு வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லி குமாரின் ஏற்பாடு.

மைனஸ் இருபதுடிகிரி குளிரையும் பாராது பஸ்தரிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துசேர்ந்து மேலதிகமாக அரைமணித்தியாலம் கழிந்து விட்டது. குமார் இன்னமும் வந்துசேரவில்லை. குமாரினது கார் எங்காவது பார்க் செய்யப்பட்டிருக்கிறதா எனத் தேடிக் கண்கள் அலுத்துவிட்டது. எதிரே கும்மாளம் போட்ட கசினோவும் அலுத்துச் சலித்த குழந்தை போல உறங்கி வழிகிறது. வாழ்வின் சுகங்களை உறிஞ்சிக் குடித்த களைப்பில் கசினோவை விட்டு மெல்ல மெல்ல அகல்கின்றனர் மனிதர்கள். விடிகாலை மூன்றுமணிக்கு கசினோவைப் பூட்டிவிடுவார்கள். அதன் பிறகு தனியனாக பஸ்தரிப்பில் நிற்பது ஆபத்தை விலைக்கு வேண்டுவதாகிவிடும்.

ராஐ¡விடம் இருக்கும் கடைசிக் கையிருப்பான ஜம்பதுகிராம் து¡ளையும் ஒரு பார்ட்டியிடம் ரொக்கமாக விற்றுத் தருவதற்காக குமார் ஒழுங்கு செய்திருந்தான். அவனது அப்பார்ட்மெண்டில் ஒளித்து வைக்கும் கண்ணுக்குத் தெரியாத இடுக்குகளையெல்லாம் மோப்பம் பிடித்து ஐ¢ஸில் து¡ளை எடுத்து புகைத்துவிட்டு ஒன்றுமே அறியாத பூனை மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு போதையில் து¡ங்கி வழிகிறாள். காதலின் அந்நியோன்னியம் காரணமாக அவளைக் கடிந்து கொள்ளவும் முடிவதில்லை.

து¡ளை கையில் வைத்திருக்க வைத்திருக்க நிறை கரைந்து போகிறது. அதைவிட கடந்த மாதம் பொலிசில் பிடிபட்டு மீண்டதிலிருந்து எப்போது வீட்டுக்குப் பாய்வார்களோ என்ற பயம் அலைக்கிறது. தற்செயலாக வீட்டில் பாய்ந்து மொத்தமாக து¡ளைக் கைப்பற்றிவிட்டார்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு எட்டுவருடம் தீட்டி விடுவார்கள். சிறைக்குள் கம்பி எண்ணுவதைக்கூட தாங்கிவிடலாம். இந்த ஒரு விசயத்தை வைத்தே மாமன்மார் ஊரில் உறவுகள் அயலவர்களிடம் அவனைப்பற்றி எள்ளி நகையாடி நாறடித்து விடுவார்கள். அதுதான் ராஐ¡வை குறைந்த விலைக்காவது இதை விற்றுவிடத் து¡ண்டியது. அதுவும் நாலில் ஒரு பங்கு இலாபத்தை குமாருக்கு கொமிசனாக வேறு கொடுக்க வேண்டும். ஏற்கனவே காசுப்பிரச்சனையில் இரண்டுபேரும் துவக்குத் து¡க்குமளவுக்கு சண்டை பிடித்தார்கள். ஆனாலும் மொன்றியல்நோர்த் பகுதி நிழல்வியாபாரத்தை தனது கையில் வைத்திருக்கும் குமாரைப் பகைத்துக் கொண்டு ராஐ¡வால் சில்லறை வியாபாரம் செய்யமுடியாது. இப்போதுள்ள ராஐ¡வின் கஸ்ரமர்கள் பெரும்பாலோரும் குமார் மூலமே ராஐ¡வுக்கு பழக்கமானவர்கள். குமாருடன் மனக்கசப்பு ஏற்பட்டால் எந்த நிமிசமும் கஸ்ரமர்களை திசைதிருப்பி விடுவான் என்பதால் திரும்பவும் அவனுடன் சமாதானம் செய்து கொண்டான்.

என்றாலும் முற்றுமுழுதாக குமாரை நம்பமுடியாது என்று ராஐ¡வின் மனம் ஓயாது முறையிட்டது. இந்த நிழல் வியாபாரத்தில் யாரிடமும் தொடர்ந்து நம்பிக்கையும் நம்பாமையும் வைத்திருக்க முடியாது என்பதால் வெற்று கொக்கோக்கோலா ரின்னுக்குள் து¡ள்பார்சலை அடசி கண்ணுக்குப் படக்கூடிய இடத்தில் து¡ரமாக ஒரு குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டுத்தான் பஸ்தரிப்பில் வந்து குமாருக்காக காவல் இருந்தான்.

கடந்தமாதம் பொலிஸ் தன்னை அச்சொட்டாகப் பிடித்ததுகூட குமாரின் சதிவேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இன்னமும் ராஐ¡வின் மனதில் இருக்கிறது. அன்றும் இப்படியொரு சாமவேளை வழமையாக கிழமைக்கு இரண்டுமூன்று தடவையாவது து¡ள் வேண்டும் 94 இரண்டு தடவை ராஐ¡வின் பேஐரில் தொடர்பு கொண்டான். வாடிக்கைக்காரன் என்பதால் ராஐ¡வும் நித்திரைத்து¡க்கத்தையும் பார்க்காது ஒரு பார்சல்து¡ளை எடுத்து தனது சொக்ஸ¥க்குள் வைத்துக்கொண்டு 94 தந்த சங்கேதக் குறிப்பின்படி அவனது இடத்திற்கு டிலிவரி செய்ய போகும்போது பொலிஸ்காரன் இடையில் வைத்து ராஐ¡வின் காரை மறித்து தானே ஒழித்து வைத்ததை எடுப்பது மாதிரி ராஐ¡வின் சொக்ஸ் மடிப்புக்குள்ளிருந்து து¡ளை எடுத்து அவனைக் கைதும் செய்து கொண்டான். தான் பாவிக்கவென வேண்டியது என்று ராஐ¡ சொல்லி அதேபடிக்கு பொலிஸில் கேஸ் பதிவாகியதால் ஒருவாறு வெளியேவர முடிந்தது. அப்படி இருந்தும் மூன்று நாட்கள் வைத்திருந்து உருட்டி விசாரித்துவிட்டுத்தான் வெளியே விட்டார்கள்.

அவனது கார் அடுத்த வீதியில் பார்க் செய்யப்பட்டிருந்தது. எப்போதும் கைகாவலுக்காக வைத்திருக்கும் கிரீஸ்கத்திகூட காருக்குள் இருந்தது. அடுத்தடுத்து நிறைய சிகரெட்களை புகைத்து தொண்டை கட்டிவிட்டது. ஒரேநிலையில் நின்று லெதர்ஐ¡க்கெட்டுக்குள்ளால் குளிர் ஊடுருவிவிட்டது. இனியும் தாமதிக்கமுடியாதவாறு பல்லுக்கிட்டி நடுங்கியது. கையில் து¡ள்ப்பார்சல் இருந்திருந்தால் ஒருசிட்டிகை எடுத்து உறிஞ்சியிருப்பான். நாசிக்குள் குப்பென ஹெரோயின் காரத்துடன் படர்ந்திருந்தால் காத்திருப்பும் இந்தக்கடுங்குளிரும் தோற்றாது கனவில் மிதந்திருப்பான். தொடர்ந்து இரண்டுநாட்களாக விஸ்கி குடித்ததால் வாய் கசப்பேறி துப்பல் ஊறியபடி இருக்கிறது. தலைவேறு அம்மிக்கல்லாக பாரிக்கிறது. இந்த அவஸ்தை தந்த அரியண்டத்தால் இன்று து¡ளை புகைக்க வெறுப்பு வருகிறது அதைவிட கையிருப்பில் இருந்த எழுபதுகிராம் து¡ளில் இன்று நிறுத்துப்பார்க்க ஜம்பதுகிராம்தான் இருந்தது. ஐ¢ஸிலும் அவனும் ஆள்மாறி ஒருத்தர் கிள்ளி எடுத்து இருபதுகிராமைக் காலி செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட எழுபதுகிராம் து¡ளையும் விற்றால் வரும் இலாபக்காசு கரைந்து விட்டிருந்தது.

பொலிசின் கவனத்துக்கு தனது கார் நோண்டியாகிவிட்டது என்பதால் நேற்றுத்தான் சின்னமாமனின் பெயருக்கு காரின் உரிமையை மாத்தி விட்டிருந்தான். கொஞ்ச நாளைக்கு இந்தக்காரை மாமனது உபயோகத்திற்கு விட்டுவிட்டு தான் ஒரு ரொ§ஐ¡ற்றா வாகன் வேண்டி ஓடும் எண்ணத்தில் இந்தத் து¡ள்க்காசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இரவுபஸ் வந்து தரிப்பில் நின்று கதவுகளைத் திறந்தபடி டிரைவர் இவனுக்காக காத்திருக்க ராஐ¡ டிரைவரை நோக்கி தான் ஏறவில்லை என கையைக்காட்டினான். டிரைவர் கதவை மூடிக்கொண்டு வேகமாக இழுத்துச் சென்றான் குளிர் தந்த வெறுப்பில்.

நேரம் செல்லச் செல்ல ராஐ¡வுக்கு சலிப்பு மீது¡றி குமாரைக் கண்டபடி து¡சணத்தால் பேசியபடிக்கு பஸ்தரிப்பின் கண்ணாடிச்சுவருக்கு பூட்ஸ் காலால் உதைந்து தன் வெறுப்பை வெளிவிடவும்இ கறுப்புநிற சவலெட்கார் ஒன்று வேகமாக வந்து கிரீச்சிட்டு நின்றது. காருக்குள் இருக்கும் ஆட்களை ராஐ¡ யாரென்று அனுமானிக்கும் முன்னரேஇ சடுதியாக மூன்று தடியர்கள் குதித்து இறங்கினர். அவர்களில் இரண்டுபேர் அவனுக்குக் கிட்டவர மூன்றாமவன் பஸ்தரிப்பு வாசலை மறைத்துக்கொண்டு நின்றான்.

ராஐ¡வை நெருங்கி வந்த இருவரில் ஒருவனது கையில் துவக்கு இருந்தது. துவக்கைப் பிடித்திருந்தவன் "எடு ஹெரோயினை" என்று கத்தினான். மற்றவன் வாகாக நின்றுகொண்டு ராஐ¡வின் முகத்தில் ஓங்கிக் குத்தினான். சொண்டு கிழிந்து இரத்தம் வழிந்தது. அடித்தவன் நெருங்கி வந்து ஐ¡க்கெட்டைத் தட்டி சோதித்தான். ராஐ¡ திமிறி அவனைத் தள்ளிவிட அவன் தடுமாறி கண்ணாடிச்சுவருடன் சாய்ந்து பின் நிதானித்துக் கொண்டு காலால் எட்டி ராஐ¡வின் வயிற்றில் உதைந்தான் . ராஐ¡வுக்கு உயிர்த்தலத்தில் இருந்து சிவ்வென்று வேதனை கிளம்பியது. மூச்சு விட முடியாதவாறு நெஞ்சு அடைத்து அந்தரமாக அப்படியே குனிந்து நிலத்தில் இருந்து விட்டான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ராஐ¡வின் ஐ¡க்கெட் தடியனின் கையில் இருந்தது. ஐ¡க்கெட்டை தலைகீழாகப் பிடித்து உதறிப்பார்த்துவிட்டு து¡ர எறிந்தான்.

"ஹெரோயின் எங்க மான் ஹெரோயின்..?"

என்று தலைமயிரில் பிடித்து இழுத்தான். தலைமயிர் பிடுங்கப் பட்டுவிடும் போல வலித்தது. தலையை விடுவிக்கும் நோக்கத்துடன் பலமெல்லாவற்றையும் திரட்டி தடியனைத் தள்ளிவிட்டான் ராஐ¡. அதேநேரம் காரிலிருந்த மூன்றாவது ஆள் சகாக்களை "சீக்கிரம் வா.. வா..!" என கத்தினான். வீதியில் வாகனம் ஒன்றின் வெளிச்சம் தெரிந்ததும் தலலைமயிர்ப் பிடியை மெல்ல விட்டான் தடியன். ராஐ¡ எழும்புவதற்கு முயற்சிக்கஇ வேகத்துடன் வந்து தலையைத் தாக்கியது சுத்தியல் அடி. அதன்பின் வானத்து நட்சத்திரமும்இ வீதி லைட்களும் ராஐ¡வின் மூளைக்குள் வந்து குதிக்கஇ பஸ்தரிப்புக்குள் நினைவற்று விழுந்தான்.



¦ஐன்தலோன் ஆஸ்பத்திரி அவசரப்பிரிவில் படுத்திருந்தான் ராஐ¡. தலையில் அம்மியைத் து¡க்கி வைத்திருப்பது மாதிரி பாரித்தது. வலக்கையை அசைக்க முடியவில்லை சேலைன் ஏறிக்கொண்டிருந்தது.

"பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. நீ நிறைய இரத்தத்தை இழந்திருக்கிறாய். பலவீனம் மட்டும்தான்." என்று நர்ஸ் கூறிவிட்டுச் சென்றிருந்தாள். ஆனாலும் ராஐ¡ பயந்தபடிதான் இருந்தான். தான் எப்படி ஆஸ்பத்திரிக்கு வந்தேன் என்ற ஞாபகத்தைத் தேடி அலைந்தான்..

விடிகாலையும் கறுப்புச் சவலெட்காரும் மூன்று எதிரிகளும் ஞாபகத்தில் எழும்பினர். அதை நினைத்த மறுவிநாடியேஇ இதயத்துடிப்பு உச்சத்துக்கு ஏறியது. சடாரென எழும்பி பெட்டை விட்டு இறங்க முயன்றான். தொலைவில் இருந்து அதைப் பார்த்துவிட்ட நர்ஸ் அவனை நோக்கி விரைந்து வந்தாள்.

"ஏதாவது அசைகரிகமாக இருக்கிறதா?" கேட்டாள் நர்ஸ்.

இல்லை என்குமாப்போல தலையை ஆட்டினான்.

"வோ–ரூம் போகப் போகிறாயா..?"

அதற்கும் இல்லை என்று தலையாட்டினான்.

"மிஸ்டர்..! இதோ இந்த சேலைன் ஏறிமுடிந்ததும் டொக்டர் வந்து இன்னொருமுறை காயத்தைப் பரிசோதித்துவிட்டுஇ உன்னை வீட்டிற்கு அனுப்பிவிடுவார் அவசரப்படாதே..!"

என அவனுக்கு ஆறுதல் சொல்லிஇ திரும்பவும் அவனை பெட்டில் படுக்க விட்டு அகன்றாள்.

அடித்தது யாரென்று தெரியவில்லை. அவன் தனது வாடிக்கைக்காரர்கள் அனைவரது முகங்களையும் ஒவ்வொன்றாக மீட்டிப்பார்க்க முயன்றான். அவற்றில் ஒன்றும் அடித்தவர்களில் இல்லை. அப்போது யார் அடித்தார்கள்? ஏன் அடித்தார்கள்..? அடித்து து¡ளைப் பறிப்பது மட்டும் அவர்கள் குறிக்கோள் அல்ல. தன்னைக் கொல்ல முனைந்திருக்கிறார்கள். தலையில் ஒட்டியிருந்த பிளாஸ்ரரை தடவிப்பார்த்தான். நெற்றிக்கு மேலே முன்மண்டை முழுவதையும் மறைத்தபடி வியாபித்திருந்தது பிளாஸ்ரர். அப்போ கொல்லத்தான் முனைந்திருக்கிறார்கள். தன்னைக் கொல்வதுதான் அவர்களது திட்டம் என்றால் இங்கு ஆஸ்பத்திரிக்குகூட தேடிவந்து விடுவார்களே என்ற பயம் பீடித்தது. அவனால் பெட்டில் படுத்திருக்க முடியவில்லை. எழும்பி இருப்பதும் சுற்றுமுற்றும் மிரட்சியுடன் பார்ப்பதுமாக இருந்தான்.

அது காலை நேரம். தாதிகள் வேலை முடிப்பதிலும் பகல் ஷிப்ட்காரர் வேலை ஆரம்பிப்பதிலும் பிஸியாக இருந்தனர். அத்துடன் இவன் ஒன்றும் அவசரப்பிரிவுக்கு ஏற்ற நோயாளியும் அல்லவே!

சேலைனைப் பிடுங்கி எறிந்துவிட்டு மெல்ல ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிடுவோமா என்று யோசித்தான். ஓடிவிடலாம்  ஆனால் தனியாக வெளியில் போகமுடியாது. அவர்கள் ஆஸ்பத்திரி வெளிவாசலில் காவல் இருப்பார்கள். அதில் வைத்தே தனது கதையை முடித்துவிடுவார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் பதகளித்தபடி இருக்க புதிய தாதி ஒருத்தி அவனிடம் வந்தாள்.

"காலைவணக்கம் இன்று எப்படி இருக்கிறாய்?" என்று தொடர்ச்சியாக ஒப்புவித்துக்கொண்டு விசயத்திற்கு வந்தாள்.

"டாக்டர் உன்னைப் போகச் சொல்லிவிட்டார். உன்னை அழைத்துப்போவதற்கு உறவினர் வரமுடியுமா? நீ மிகவும் பலவீனமாக இருக்கிறாய்." என்றாள்.

ஆக எனக்கு ஆபத்து என்று அவளுக்கே தெரிந்திருக்கிறது. வெளியில் எதிரிகளின் கறுப்புக்காரை இவளும் பார்த்திருக்கிறாள் போலும். எதிரிகள் எத்தனைபேர் வந்திருக்கிறார்கள் என்று கேட்போமா என ராஐ¡வின் மனதில் கேள்வி ஓடியது.

"எத்தனைபேர்..?" என்று அரைகுறையாக நர்சைப் பார்த்துக் கேட்டான்.

"யாராவது ஒருவர். உனது உறவினர் அல்லது நண்பர்கள் வந்தால் நல்லது. யாரும் வரஇயலாவிட்டால் சொல்

நான் உன்னை அம்புலன்சில் அனுப்பிவைக்கிறேன். ஆனால் நீ அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்." என்று சொன்னாள் தாதி.

ராஐ¡வுக்கு கோபம் வந்தது. தான் ஏதோ கேட்க இவள் ஏதோ மறுமொழி சொல்லுகிறாள் விசரி..!

தான் அடிவேண்டியது மாமன்மாருக்கோ குமாருக்கோ தெரியக்கூடாது என்ற முடிவில் இருந்தான் ராஐ¡. ரஞ்சனுக்கு விசயத்தைத் தெரிவித்து அவனை இங்கே கூப்பிடுவதுதான் நல்லது. ஆனால் தான் தனியாக ரெலிபோன் பண்ணப் போகமுடியாது. ஆகவே ரஞ்சனது தொலைபேசி இலக்கத்தைச் சொல்லி அவனை அழைக்கும்படி நர்ஸிடம் சொன்னான்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலத்திற்குப் பிறகு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிவந்தான் ரஞ்சன். வேலை உடுப்பில் எண்ணெய்க் கறையும் மாவுமாக இருந்தது. அவனது வேலை இடத்திலிருந்து நேராக இங்கு வருகிறான் என்று ஊகிக்க முடிந்தது.

"என்ன நடந்தது ராஐ¡..! வேலைத்தலத்துக்கு மனுசி போன் பண்ணிச்சுது. அங்க ஒருத்தருக்கும் சொல்லாமக் கொள்ளாம போட்டது போட்டபடி ஓடி வாறன். என்ன அக்சிடெண்டே..?"

"இல்ல கொல்லப் போறாங்கள்."

"ஆர் கொல்லப் போறாங்கள் என்ன ராஐ¡ சொல்லுறியள்..?"

"கறுப்புக்கார் கள்ள யோகலிங்கம் கள்ள சபாலிங்கம் கள்ளக் குமார் என்னைக் கொல்லப் போறாங்கள்."

என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் ராஐ¡.

தலையில்பட்ட காயத்தில் மூளை தடுமாறிவிட்டது பயந்து போயிருக்கிறான் என்று ரஞ்சனுக்கு உடனே விளங்கிவிட்டது. இரண்டொரு நாள் போனதும் சரியாகி விடுவான் என்று ஆறுதல் பட்டான்.

நர்ஸிடம் சென்று எல்லாவற்றையும் அறிந்து கொண்டபின்தான் ரஞ்சனுக்கு விசயம் விளங்கியது. இது வியாபாரப்போட்டி காரணமாக நிகழ்ந்திருக்கிறது. பொலீசில் கேஸ் பதிவாகியுள்ளது. ஆகவே சிக்கல்தான். எதுவாக இருந்தாலும் ராஐ¡வுக்காக முன்னின்று செய்யவேண்டும் என்று அவனது நன்றியுணர்வு சொன்னது.

ராஐ¡ சொல்லிக் கொண்டிருந்த தேவையில்லாத பயக்கதை எல்லாவற்றையும் மெல்ல மாற்ற முயற்சித்தும் கீறல் விழுந்த ரெக்கோட் பாடுவது போல அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்த ராஐ¡வை கையைப் பிடித்து அழைத்து வந்து காரில் ஏற்றினான் ரஞ்சன்.

சீட்பெல்ட்டைப் போடுவதற்கு முன்பே காரின் நான்கு கதவுகளையும் லொக் பண்ணச் சொல்லிக் கட்டளையிட்டான் ராஐ¡.

எவ்வளவோ ஆறுதல்ப்படுத்தியும் ரஞ்சனை அப்பார்ட்மெண்டை விட்டுப் போகச் சம்மதிக்கவில்லை ராஐ¡. வேலை அரைகுறையில் கிடக்கிறது. தான் போனபின்தான் அரைவாசி வெலையே ஒப்பேற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்லியும்இ குழந்தைப்பிள்ளை மாதிரி கையைப் பிடித்து இழுத்தபடி இருந்தான் ராஐ¡.

"ராஐ¡ இப்ப போட்டு விடியக்காலமை ஓடியாறன். லீவும் போடேல்லை. எங்கட பத்திரோனைப் பற்றி உங்களுக்குத் தெரியுந்தானே பிறகு நிப்பாட்டித் துலைச்சுப் போடுவான்"

"சரி போட்டு உடன வா..!"

"ஓ.. காலமை வருவன்"

"போட்டு வா.. கவனம்..! கறுப்புக்காரை பாத்தால் வெளியால போகாதை..!"

என்று பத்துத்தடவைக்கு மேல் ரஞ்சனுக்கு கவனம் சொல்லி வழியனுப்பனான் ராஐ¡.

ரஞ்சன் அறையைவிட்டு வெளியேறியதும் கதவை அடிச்சுப்பூட்டி மூன்று பூட்டுகளையும் லொக் பண்ணி செற்றியை நகர்த்தி கதவுக்கு முண்டு கொடுத்து விட்டு வந்து இருந்தான் ராஐ¡.

பேக்கரிக்குள் நுழைந்ததும் உடனே ராஐ¡வின் சினேகிதி ஐ¢ஸிலுக்கு பேஐரில் தொடர்பு கொண்டான் ரஞ்சன். அரைமணித்தியாலத்தின் பின்னர் ரெலிபோன் எடுத்த ஐ¢ஸிலுக்கு ராஐ¡வுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக்கூறி நாளைவரை அவனுடன் கூடத்தங்கும் படியும்இ சாப்பாட்டு வசதிகளை ஒழுங்கு செய்யும்படியும் கேட்டுக் கொண்டான்.

இவ்வளவையும் கேட்டு மிகப் பொறுப்புடன் சம்மதித்த ஐ¢ஸில் ரெலிபோனை வைத்ததும் ராஐ¡வின் இருப்பிடத்திற்கு இனிமேல் போகக்கூடாதென்று முடிவெடுத்துக் கொண்டாள்.



பதிவுகள் - மார்ச் 2002 இதழ் 27-


8

நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல் அவனது பார்வை வெறித்திருந்த இருண்ட ஐன்னலில் இருந்து வானம் வெளுத்தது. மின்சாரக்கம்பியில் இரவைக் கழித்த மாக்பைப்பறவை சிறகைக் கோதி நெட்டிமுறித்துஇ அந்தப்புதிய நாளை எதிர்கொண்டு தீனி தேடி எழும்பிப் பறந்தது. நரைத்த வானத்தை கிளித்துக் கோடு போட்டிருந்த மின்சாரவயர்களை காற்று அதட்டியது. உலகம் மெல்ல மெல்ல விடிந்து வர அவனது மனம் மேலும் இருட்டுப் பூசியது.

அடுகிடை படுகிடையாக ராஐ¡வுடன் ஒட்டிக்கொண்டு திரிந்த ஐ¢ஸிலை நான்கு நாட்களாக இந்தப் பக்கமே காணவில்லை. செற்றிமூலையில் குந்தி இருந்த ராஐ¡வின் வயிறு பசியில் பற்றி எரிகிறது. இடத்தை விட்டு எழும்பி தேத்தண்ணி போட்டுக் குடிக்கவும் அவனுக்குப் பயமாக இருக்கிறது. எந்த நேரமும் எதிரிகள் தாக்க வரக்கூடும் என்ற அச்சம் சிலந்திவலை போல பின்னிப் படர்கிறது. அவனுக்கு இரவும் பகலும்கூட பேதமற்றுப் போய்விட்டது. சிறுசிறு சத்தம் கேட்டாலும் உடல்சிலிர்த்து பயத்தால் நடுங்குகிறது. விடிந்ததிலிருந்து ரெலிபோன் ஓயாது ஒலித்தபடி இருக்கிற ஆனால் அதனருகே போவதற்கு இந்த இடத்தைவிட்டு எழும்பமுடியாது. அவனை இந்த இடத்தை விட்டு நகரச்செய்து அடித்து கொன்றுவிடத் துடிக்கும் எதிரிகள்தான் ரெலிபோன் மூலம் சதிசெய்கிறார்கள் என்று பூரணமாக நம்புகிறான்.

இறச்சிவெட்டும்கத்தி சுத்தியல் குறடு இன்னும் அந்த அப்பார்ட்மெண்டுக்குள் இருந்த இரும்பு உபகரணங்கள் எல்லாவற்றையும் சேகரித்து கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத்துவிட்டாயிற்று. ·ப்ரிகஐ¥க்குள் ஒளித்திருந்து எதிரிகள் தன்னைத் தாக்கி விடக்கூடும் என்பதால் அதன் கதவைத் திறந்து விட்டிருந்தான். ·ப்ரிகஐ¢லிருந்து தண்ணீர் வடிந்து கார்ப்பெட் நனைந்து விட்டது. செற்றிக்கவரை உருவி தன்னை முழுமையாகப் போர்த்திக் கொண்டு குறங்கி செற்றிமூலையில் இருந்த ராஐ¡வுக் தன் அப்பார்ட்மெண்ட் ஆளோடியில் யாரோ நடக்கும் காலடிஓசை கேட்டது. காலடிச்சத்தம் வரவர தனது அப்பார்ட்மெண்ட் கதவை நெருங்கி வருவதுபோல பிரமை உண்டானது. காதைத் தீட்டி மனதை ஒருமைப்படுத்த முயன்றான். உடம்பு நடுங்கியது. எதிரிகள்தான் வருகிறார்கள் என்ற எண்ணம் உச்சநிலையை அடைய அவனையறியாமல் சாரத்துடன் சிறுநீர் கழிந்துவிட்டது. சூடான மூத்திரம் காலை நனைத்துக் கொண்டு செற்றியில் ஊறியது.

இப்போது அவனது அப்பார்ட்மெண்ட் கதவு தடதடவென தட்டுப்பட்டது. தட்டும் கதி கூடக்கூட அவனது நெஞ்சில் எதிரிகள் மாய்ந்து மாய்ந்து தாக்குவது போல இருந்தது. உடனே செற்றிக்கவரால் தலையையும் இழுத்து மூடிக்கொண்டு நடுங்கினான்.

"ராஐ¡..! ராஐ¡..!" என்று கூப்பிடும் சத்தம் அவனுக்கு கேட்டது. அவனுக்கு வெளியிலிருந்து வந்த குரலை இனங்காண முடிந்தது. வந்திருப்பது ரஞ்சன். இருந்தும் கதவைத்திறக்க முடியாது. எதிரிகள்கூட குரலை மாற்றிக் கூப்பிடக்கூடும் ஆகையால் சிறுஅசைவுமற்று உறைந்து போய் இருந்தான்.

"ராஐ¡.. ராஐ¡..! கதவைத்திறவுங்கோ நான் ரஞ்சன் வந்திருக்கிறன்."

பத்துத்தடவைக்கு மேல் ரஞ்சன் கூப்பிட்டதற்குப் பிறகுதான் ராஐ¡ பதில் எழுப்பினான்.

"நான் திறக்கமாட்டன். நீ அடிக்க வந்திருக்கிறாய்."

"ராஐ¡. நான் உன்ரை பிரெண்ட் ரஞ்சன் வந்திருக்கிறன் கதவைத்திற பிளீஸ்..! உனக்கு சாப்பாடும் கொண்டு வந்திருக்கிறன்."

"நீ.. சாப்பாட்டுக்கை விசம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். நான் திறக்க மாட்டன்."

"ராசாண்ணை.. நான் உன்ரை தம்பியல்லே.. பிளஸ் கதவைத் திற..!"

ராஐ¡வுக்கோ அகோரப்பசி. ரஞ்சன் சாப்பாடு என்று சொன்ன சொல் திரும்பத் திரும்ப மூளையில் எதிரொலித்தபடி இருக்க மெல்ல செற்றியை விட்டு எழும்பினான். ஒரு பூனையைப் போல மெத்தடி வைத்து கதவருகே வந்து திறந்து விட்டதும் சடாரென ஓடி பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டான்.

கதவைத்திறந்து அறைக்குள் நுழைந்த ரஞ்சனுக்கு குப்பெனத் தாக்கியது மூத்திரமணம். ஹோல் முழுக்க கஞ்சலும் குப்பையும் நிறைந்து வீடே அழுக்கில் துர்நாற்றமடித்தது. சுற்றுமுற்றும் ராஐ¡வைத் தேடினான். பாத்ரூமுக்குள்ளால் அச்சத்தில் இருண்ட ராஐ¡வின் முகமும் தலையில் ஒட்டியிருந்த வெள்ளைப் பிளாஸ்ரரும் தெரிந்தது.

சிறுகுழந்தையைப் போல ஒளித்துப் பார்க்கும் ராஐ¡வைக் கண்டதும் ரஞ்சனின் நெஞ்சிலிருந்து வேதனை கிளம்பி மூச்சை அடைத்தது.

யாருக்கும் அஞ்சாத ராஐ¡வின் கம்பீரமும் வேலைத்தலத்தில் அவனது திறமையும் வேகமும் எங்கே போய்விட்டது..? அதைவிட ரஞ்சனின் மனைவியைக் கூப்பிட காசில்லாமல் அலைந்தபோது கத்தையாக பத்தாயிரம் டொலசைத் து¡க்கிக் கொண்டு வந்து தந்த மனிதாபிமானமும் எங்கே மறைந்தது..? மனிதனை ஆசைகாட்டி ஆடவிட்டு அட்டூளியம் புரியவைத்து இறுதியில் அவனது கழுத்தை நெரித்து முடமாக்கிவிடும் விதியின் கையை யார் தடுப்பார்..?

எண்ணச்சுமையுடன் ராஐ¡வைக் கையைப் பிடித்து பாத்ரூமுக்குள்ளால் அழைத்து வந்து செற்றியில் இருத்தினான் ரஞ்சன். அப்போதும் செற்றி மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டு ரஞ்சனை மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஐ¡.

"ராஐ¡ தேத்தண்ணி போட்டுத் தரட்டே..?"

"எனக்குப் பசிக்குது" என்றான் ஒரு சின்னக் குழந்தையைப் போல ராஐ¡.

ரஞ்சன் தான் கொண்டுவந்த டிபன்பொக்சைத் திறந்து ராஐ¡வின் கையில் கொடுத்தான். அதீத நடுக்கத்துடன் டிபன்பொக்சை வேண்டிய ராஐ¡ கை கழுவக்கூட முயலாமல் இடியப்பத்தைக் குழைத்து பெரிய பெரிய கவளமாக அள்ளிச் சாப்பிடத் தொடங்கினான். கிளாசில் தண்ணி கொண்டு வந்து வைத்துவிட்டு வீட்டை ஒழுங்கு படுத்த முயன்றான் ரஞ்சன்.

அடுப்படிக்குள் இருந்த நனைந்த கார்ப்பெட்டை து¡க்கி பல்கனியில் போடுவதற்குஇ ஹோல் ஐன்னலைத் திறப்பதற்கு ரஞ்சன் முயல சாப்பாட்டைத் தரையில் வைத்துவிட்டு எழும்பி உள்ளே ஓடமுயன்றான் ராஐ¡.

"திறக்காதை திறக்காதை அவங்கள் வந்து அடிச்சுப் போடுவாங்கள்". என்று பரிதாபமாக முறையிட்டான் ரஞ்சனிடம்.

"ராஐ¡ ஆரும் உன்னை அடிக்க மாட்டாங்கள். நீ இருந்து சாப்பிடு. நான் இருக்கிறன் இஞ்ச ஆர் வருவாங்கள் வடுவாக்கள்..! பாப்பம் ஒரு கை. நீயும் நானும் சேந்து கும்மித் துலைச்சுப் போடமாட்டமே..!"

ரஞ்சன் கூறியதைக் கேட்டதும் உற்சாகம் வந்தது ராஐ¡வுக்கு. ஈ..ஈ.. எனச் சிரித்தபடிக்கு திரும்பவும் சாப்பிடத் தொடங்கினான்.

"நீ அவங்களை கட்டிப்பிடி..! நான் சுத்தியலால அடிக்கிறன் என்ன"

என்று வாய்க்குள் இடியப்பத்தை அடக்கிக் கொண்டு வீரம் பேசினான் ராஐ¡.

இந்த உற்சாக மனநிலையைக் கண்டதும் ரஞ்சனும் சந்தோசமடைந்தான். அவனுக்கு ராஐ¡விடம் பேசுவதற்கு விடயமொன்று இருந்தது. இவனை இங்கிருந்து மெல்லக் கிளப்பிக் கொண்டுபோய் பெரியமாமனது வீட்டில் சேர்த்துவிடும் ஆயத்தத்துடன் ராஐ¡வின் பெரியமாமன் யோகலிங்கத்திடம் வாதாடி ஒப்புக் கொள்ள வைத்திருந்தான்.

"ராஐ¡..! சாப்பிட்டபிறகு வெளிக்கிட்டுக் கொண்டு நாங்கள் வெளியால போவம் என்ன?"

வெளியால போகவேண்டும் என்றதும் சந்தோச மனநிலை மாறி திரும்பவும் மிரட்சி அவனது முகத்தில் குடியேறிவிட்டது. சாப்பிட்ட இடியப்பக்குழையல் வாய்க்குள் தெரிய வாயை ஆவென்று திறந்தபடி நினைவில் மூழ்கிப் போனான்.

"ராஐ¡.. ராஐ¡.. முதல்லை சாப்பிடுங்கோ..! என்னோடை வெளியில வரேக்கை ஒரு துரும்பு உங்களில படேலுமே அதுவும் நாங்கள் யோகலிங்கமண்ணர் வீட்டைதானே போகப்போறம்."

"நான் மாட்டன்.. நான்மாட்டன்... கள்ளப்பெரியமாமன் வீட்டை நான் வரமாட்டன். அவன்தான் ஆளை வைச்சு எனக்கு அடிப்பிச்சவன்."

"இல்லை ராசாண்ணை நடந்ததைக் கேள்விப்பட்டதும் அந்தாள் கலங்கிப் போச்சு பாவம்..! உங்களை உடன பாக்கோணும் எண்டு சொன்னது"

"அப்ப போவம் ஆனா மதுவந்திக்கு சொக்கிலேட் வேண்டிக்கொண்டு போகோணும்"

ராஐ¡ இந்தமட்டுக்கு வர இசைந்ததே ரஞ்சனுக்கு பெரிய வெற்றியாக இருந்தது. இருந்தும் யோகலிங்கம் வீட்டில் ராஐ¡வைத் தங்க வைப்பதற்கு சம்மதம் பெற நேற்றிரவு தான் பட்ட கஸ்ட்டத்தை நினைத்துப்பார்த்தான். எவ்வளவு எடுத்துக் கூறியும் சம்மதிக்க மறுத்துவிட்டான் யோகலிங்கம். முதலில் தனது மனைவி குழந்தைகளுக்கு விருப்பமில்லை என்று சாட்டுச் சொல்லி தட்டிக்கழிக்கப் பார்த்தான். சாம பேத தானங்கள் என்ற வரிசையில் முயன்று முடியாமல்ப் போக இறுதியில் தண்டத்தை பாவித்துத்தான் அவனை இணங்க வைக்க முடிந்தது.

"இப்ப மூளை கலங்கிப் போய் இருக்கிறான் து¡ள் வித்த காசை உங்களிட்டைத்தான் தந்து வைச்சிருக்கிறன் எண்டு பொலிசுக்குக் கிலிசுக்கு சொல்லித் துலைச்சான் எண்டா உங்களுக்குப் பெரிய தலையிடியாப் போடும். அதைவிட அவன் சுகப்படுற வரைக்கும் கூடவைச்சுப் பாத்திட்டு வெளியால விட்டா நல்லது. எனக்கென்ன உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன்."

என்று ஒரு கூரிய அம்பை விட்டதும் மெல்ல சம்மதம் தந்து விட்டான் யோகலிங்கம். ஆனாலும் நிறைய சட்டதிட்டங்கள் போட்டுவிட்டுத்தான் இன்று காலை கூட்டிவரச் சொன்னான்.

ராஐ¡ பேசாமல் வீட்டில் இருப்பான் ஆனால் வைத்திருப்பதாகவும் கத்திக் குளறி லு¡ட்டி அடித்தால் வெளியால விரட்டி விடுவேன் எனவும் ரஞ்சனிடம் கூறினான் யோகலிங்கம்.

ஏதோ ரஞ்சன்தான் ராஐ¡வுக்கு உறவினன் மாதிரியும் ரஞ்சனது முகத்துக்காக தன் மருமகனை வீட்டில் வைத்திருக்க இசைந்திருப்பது போலவும் பட்டது.

மனிதர்களின் மனதுகளில் இருந்த நேசம் அன்பு தயவுதாட்சணியங்கள் எல்லாவற்றையும் சுயநலம் என்ற மகாராட்‘சன் விழுங்கி ஏப்பமிட்டுவிட்டான். இதில் உறவுகள் பந்தங்களுக்குள் கூட அவன் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் வளித்துத் துடைத்துவிட்டான். அதுவும் நாடு கடந்து இங்கு வாழும் அந்நியதேசத்தில் அரவணைத்து வாழவேண்டிய பந்தங்கள் காசு பணத்தால் முகத்தை மூடிமறைத்து பார்வை இழந்து விட்டன.

தோய்த்து நாளாகிவிட்ட இரண்டு ஐ£ன்சுகளையும் ஒன்றிரண்டு ரீசேட் சாரம் ஐட்டி என்பவற்றை §‘¡ல்டர் பாக்கில் எடுத்து வைத்து ஆயத்தப்படுத்தினான் ரஞ்சன்.

"மதுவந்தியைப் பாத்திட்டு உடன திரும்பி வாறதுக்கு என்னத்துக்கு உடுப்பு பாக்?" என்று ஐமிச்சப்பட்டுக் கேட்டான் ராஐ¡.

"ராசாண்ணை..! அப்பிடியே இரண்டுநாள் என்ர வீட்டில இருந்திட்டு வாங்கோ. இஞ்ச தனிய இருந்து உங்களுக்கு போரடிச்சிருக்கும்."

"அப்ப சரி உன்னோடை இருந்தா ஒருத்தரும் வரேலாது..! போவம்."

"உப்பிடியே வரப்போறியளே போய் கால்முகம் கழுவிட்டு வெளிக்கிடுங்கோ"

என்று ராஐ¡வை பாத்ரூமுக்கு அனுப்பினான் ரஞ்சன்.

ராஐ¡ பாத்ரூம் போனதும் அறைக்குள் இருந்த ரெலிபோன் கனெக்சனைக் கழட்டிவிட்டு ·பிரிகஐ¥க்குள் இருந்த குறைச்சாப்பாடுகளை குப்பைத் தொட்டியில் கொட்டி அதை எடுத்து வெளியால் எறிந்து வீட்டைத் தயாராக்கினான். இப்போதைக்கு இந்த அப்பாட்மெண்டுக்கு ராஐ¡ திரும்பி வரமுடியாது அவனது மாறாட்டமும் பயமும் இடம்மாறி இருப்பதால் நாளாவட்டத்தில்தான் சுகப்படும். அதுவரை தான்கூட இங்கு வருவதைத் தவிர்த்து விடவேண்டும். இப்போதுகூட ராஐ¡ இந்த அப்பார்ட்மெண்டுக்குள் எங்காவது து¡ள் பார்சல்களை ஒளித்து வைத்திருக்கக்கூடும். அவனில்லாத நேரம் தான் இங்கு வந்து ஆபத்தைவிலைக்கு வேண்டமுடியாது.

???

வேண்டா வெறுப்பாக "வாங்கோ" என்று வரவேற்றான் யோகலிங்கம். செற்றியில் இருந்து பலநிமிசமாயும் மெளனம் நீடித்தது. யாரும் சம்பாசனையைத் தொடங்கவில்லை. சும்மா வந்து தலையைக் காட்டிவிட்டு சமையலறைக்குள் மறைந்து விட்டார் தவமணி மாமி.

புதிதாகக் கனடா வந்த பிரகிருதி மாதிரி ரெலிவி‘னையும் ரேப்செற்றையும்இ சுவர் அலுமாரியையும் பேந்தப் பேந்த பார்த்தபடி இருந்தான் ராஐ¡. அவனது மனத்தில் லேசாக ஒரு வெட்கம் ஓடிப் படர்ந்தது. தலைக் காயத்தை மறைத்துக் கொள்ள முடிந்திருந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும். தான் அடிவேண்டி விட்டேன் என்று பெரியமாமன் ஊர் பூராகச் சொல்ல போகிறானே என்று கூச்சமாக இருந்தது.

"அப்ப யோகலிங்கண்ணை..! நான் வரப்போறன். இரண்டொருநாள் தள்ளி வாறன்."

என்று எழும்பினான் ரஞ்சன். அவன் எழும்பியதும் ராஐ¡வும் உடனே செற்றியை விட்டு எழும்பினான்.

"இரு தம்பி! அக்கா தேத்தண்ணி போர்றா. குடிச்சிட்டுப் போகலாம்."

எனக்கூறியபடி லேசாக ராஐ¡வைக் குறித்துக் கண்ணைக் காட்டினான் யோகலிங்கம்.

திரும்பவும் செற்றியில் குந்திய ரஞ்சன் ராஐ¡விடம் சொன்னான்.

"பெரியமாமா தன்னோடை ரண்டு நாள் உங்களைத் தங்கச் சொல்லுறார். இருங்கோவன் இரண்டு நாள் கழிச்சு வந்து கூட்டிக் கொண்டு போறன்."

ட்ரேயில் தேத்தண்ணி கொண்டு தவமணி மாமி வந்தார். ரஞ்சனுக்கு தேத்தண்ணியை எடுத்துக் கொடுத்துக் கொண்டு ராஐ¡வைப் பார்த்து சுகம் விசாரித்தார்.

மதுவந்தியைப் பற்றிக் கேட்டபடி பெரியமாமியுடன் கதையைத் துவக்கினான் ராஐ¡. ரஞ்சனுக்கு வேலை சுலபமாகி விட்டது. அவன் மெதுவாக எழும்பி வாசலுக்கு வந்தான்.

யோகலிங்கம் ரஞ்சனுடன் வெளிவாசல் வரை வந்து திரும்பவும் ஒருமுறை தனது குடும்பக் கஸ்ட்டங்களை சொல்லத் தொடங்கினார்.



பதிவுகள் - ஏப்ரல் 2002 இதழ் 28


9

நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல் வெளிக்காற்று அடங்கிப்போக குளிரின் வீச்சு சற்றுக் குறைந்துவிட்டது. ஆனால் வீட்டுக்குள் ஹீட்டரின் வெப்பம் தணியாமல் அமுக்கமாக இருந்தது. அறைக்குள் ஒரே புழுக்கமாகி  ஆனந்தனின் உடம்பு சூடேறத் தொடங்கிவிட்டது. அவன் அச்சத்தை எவ்வளவுதான் இழுத்து து¡ர எறிந்தும் அது அடங்கமாட்டேன் என்று நழுவி ஓடிவந்து கொண்டிருந்தது.

அசம்பாவிதம் எதுவும் நடந்தால் சடாரென எழும்பி வெளியே ஓடிவிடுமளவுக்கு தயாராக அறைவாசல் பக்கமாகத்தான் படுத்திருந்தான். அன்றுபகல் பூராகவும் இடுப்புமுறிய செய்த வேலைக்களைப்பிற்கு இவ்வளவுநேரம் அடித்துப் போட்டதுமாதிரி உறங்கியிருக்க வேண்டும். எனினும் உறக்கச் சடைவில் கண்ணைமூட முயன்றால் படுக்கையில் சதா குந்திக்கொண்டிருக்கும் ராஐ¡தான் நினைவில் வந்தான். இப்போது என்ன செய்கிறான் என்று கவனிக்க தலையைத் து¡க்கிப்பார்த்தால் எங்கே தன்னில் கோபப்பட்டு அடித்து நொறுக்கி விடுவானோ என்று பயமாக இருந்தது. பைத்தியங்கள் அடிக்கும் என்று காலங்காலமாக நிலைத்துவிட்ட பிம்பத்தை ஆனந்தனால் ஒதுக்கித் தள்ளிவிட்டு சுகமாக நித்திரை கொள்ளமுடியவில்லை.

எதற்கும் விடிய அக்காவுடன் கதைத்து இதற்கு ஒரு முடிவுகட்டிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். ராஐ¡ இந்தவீட்டுக்கு இருப்பதற்கு வந்த அன்றே கனடியன்ரைர் கடைக்குப் போய் பூட்டு வாங்கிவந்து தனது பெட்று¡ம் கதவுக்குப் போட்டுப்பூட்டி தன்னையும் மகளையும் காபந்து பண்ணிவிட்டாள் அக்கா. தனக்கு மட்டும்தான் இந்த நித்திரை இல்லாத இரவும் பயமும் தொல்லையும் என்று நொந்து கொண்டான்.

வெக்கையும் புழுக்கமும் வேறு உடம்பை நசநசக்க வைத்து வெறுப்பேத்துகிறது. ஐன்னலை சிறிது நீக்கிவிட்டு குளிர்காற்று வரச்செய்யக்கூட ஐன்னலைத் திறக்கவிடாப்பிடியாக ராஐ¡ மறுத்துவிட்டான். நன்றாகப் பூட்டியிருக்கும் கதவையும் ஐன்னலையும்கூட இரவுமுழுக்க கண்காணித்துக் கொண்டு ஆந்தைமாதிரி குந்தி இருக்கிறான்.

எப்போதும் வெறித்துப்போன பார்வையும்இ வெருண்ட முகத்தையும் பார்க்கவே ராஐ¡வின் அசாதாரண மனதை ஆனந்தனால் புரிந்து கொள்ளமுடிகிறது. இருந்தும் அமைதியாக இருந்துவிட்டு புயலடிப்பது மாதிரி ஏதாவது தண்டாமுண்டா செய்துவிடுவானோ என்றுதான் அவனுக்கு பயமாக இருந்தது.

விடிந்து நிலம் வெளுத்தபிறகு ராஐ¡வுக்கு நிம்மதி வந்தது. ஓயாது உசார்நிலையில் இருந்த மூளையும் ஓய்வு கொண்டது கூடவே நித்திரையும் வந்தது. இரவு பூராகவும் தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிவிட்டதில் மனநிறைவு வேறு ஏற்பட்டிருந்தது. பகலில் தன்னை யாரும் வந்து தாக்க முடியாது ஆகையால் தலையணையில் மெல்ல தலைவைத்துக் கொண்டான்.

ஆனந்தன் எவ்வளவு நல்லவன். தன்னுடன் சேர்ந்து துணையாக அவனும் இரவு முழுக்க நித்திரை கொள்ளாமல் காவல் காத்து முளித்துக் கிடந்தான். இன்றிரவு அவனை நிம்மதியாக படுக்கச் சொல்லிவிட்டு தான் தனியக் காவல் இருக்கவேண்டும். பாவம் அவன் வேலைக்கு போய்விட்டு வருபவன் ஏன் நித்திரை முளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். யோசனையின் ஊடே ராஐ¡வுக்கு நித்திரை வந்தது.

தண்ணியை எத்தி முகத்தைக் கழுவ மிளகாய்த்து¡ள் பட்டதுமாதிரி கண்கள் எரிந்தது ஆனந்தனுக்கு. நேற்றிரவு என்றில்லை நான்கு இரவுகளாக போதிய நித்திரை இல்லை. நித்திரை இழுக்கும் போதெல்லாம் பைத்தியம் முற்றி ராஐ¡ தன் கழுத்தை நெரித்துவிடுவானோ என்ற பயத்தில் வந்த நித்திரையும் பறந்து போய்விடுகிறது.

அக்காவிற்கு தெரியாமலே நேற்று அவன் ஏற்பாடொன்று செய்துவிட்டான். இன்றிலிருந்து தனது நண்பனொருவன் வீட்டில் இரவில் தங்குவதென்று. இந்த விசயம் தெரிந்தால் அக்கா துள்ளிக் குதிப்பாள்  என்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. அத்தான்காரனுடன் இதுவரை எதுவும் பெரிதாகப் பேசிய பழக்கம் கிடையாது. அவனுக்கு தனது அத்தான் யோகலிங்கம் மீது பல வெறுப்புகள் இரண்டு வருடங்களாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. தன்னைக் கனடா கூப்பிட்டதற்கு செலவு மட்டுந்தான் வேண்டினேன் என்று ஊருக்குச் சொல்லிக் கொண்டு இரண்டு மடங்கு காசை ஏமாற்றி வேண்டிய போக்கி என்னும் கோபம் தணியமாட்டாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது. இப்போதுகூட இங்கு தங்கியிருப்பதற்கு சாப்பாட்டுக்காசு வேண்டாம். வாடகை மட்டும் தந்தால் போதும் என்று சொல்லிவிட்டு வாடகையிலேயே சாப்பாட்டுக்காசையும் சேர்த்து கறந்து கொள்கிறார். வெளியாட்களுக்கு அத்தானது சுயரூபம் தெரியவராது. மாறாக அவரது உதவிமனப்பான்மைதான் தெரியும்.

குளித்துவிட்டு அறைக்கு வந்த ஆனந்தனை வரவேற்றது ராஐ¡வின் குறட்டைச் சத்தம். மல்லாந்து விறைத்தது மாதிரி படுத்திருந்த ராஐ¡வின் இரண்டு கைகளும் தாக்குவதற்கு தயாராகியது போலஇ மு–டி இறுகியபடி இருப்பதைப் பார்க்க ஆனந்தனுக்கு விநோதமாக இருந்தது. அரவம் காட்டாமல் உடுப்பு மாற்றிக் கொண்டு சமையலறைக்கு வந்தான். தேத்தண்ணி வைத்துக் கொண்டிருந்த அக்கா தவமணி ஆனந்தனைக் கண்டதும் குரலைத் தாழ்த்தி குசுகுசுத்தபடிக்கு கேட்டாள்.

”பைத்தியம் எங்க.. நித்திரையோ முழிப்போ..?”

ஆனந்தனுக்கு அக்காவைப் பார்க்க எரிச்சல் வந்தது. நன்றாக நித்திரை கொண்ட மலர்ச்சி அவளது முகத்தில் தெரிந்தது. கூடவே சற்று வேடிக்கையாகவும் அவள் கேட்டபோது அடக்கியிருந்த ஆத்திரத்தை அவிட்டு விட்டான்.

”இனிமேயும் ஒருநிமிசம் என்னால இந்த வீட்டில இருக்கேலாது. நாலுநாளா நித்திரை இல்லாம ஒருமனிசன் என்னெண்டு வேலை செய்யிறதெண்டு யோசிச்சுப்பார்..!” எனக் கோபப்பட்டான் ஆனந்தன்.

”உதைப்போய் அத்தானிட்ட சொல்லுறதுக்கு என்னோடை ஏன் எரிஞ்சு விழுறாய். ஏன் நானே இந்த வீட்டில பைத்தியத்தை கூட்டியந்து கட்டி அழுதுகொண்டிருக்கிறது” என்று பதிலளித்தாள் தவமணி.

”விசரி.. பைத்தியம் பைத்தியம் எண்டாதை அவனுக்குக் கேட்டா முதல்லை உனக்குத்தான் மொத்து விழும்.”

ஆனந்தன் சொன்னதைக் கேட்டதும் தவமணிக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போன்ற குரலில் மிகப் பரிதாபமாகச் சொன்னாள்.

”நான் என்னடா ஆனந்தா செய்யிறது.. நான் ஏதும் சொல்லப்போக தன்ரை ஆக்களைப்பற்றி குறை சொல்லுறன் எண்டு என்னோடை ஏறிவிழுவார். உனக்குத் தெரியுந்தானே உவள் மதுவந்தியைப் பார்..! எந்தநேரமும் வெருண்டு கொண்டு கிடக்கிறாள்.”

கேற்றில் விசிலடித்து தான் சூடாகிவிட்டதைத் தெரியப்படுத்த அக்கா மூக்கை உறிஞ்சியபடி தேத்தண்ணி கலந்தாள்.
ஆனந்தனுக்கு இப்போது அக்காமீது பரிதாபம் வந்துவிட்டது.

”சரி.. சரி காலங்காத்தால ஏன் அழுகிறாய்”
என்று அக்காவை சமாதானப் படுத்தியபடிக்கு பாணை எடுத்து ரோஸ்ரரில் நுழைத்து தனக்கான சாண்ட்விச்சை தயார்ப்படுத்த தொடங்கினான்.

மத்தியானச் சமையல் எல்லாவற்றையும் ஒப்பேற்றிவிட்டு சிறிது செற்றியில் ஆற அமர்ந்தபோதுதான் தவமணிக்கு தன் தனிமை பகீரென்று நெஞ்சைத் தாக்கியது. மதுவந்தி ஸ்கூலுக்கு சென்றுவிட்டாள். ஆனந்தனும் யோகலிங்கமும் இல்லாத இந்த நேரம் ராஐ¡ ஏதாவது கோபதாபத்தில் தன்னைத் தாக்கிவிடக்கூடும் என்ற  பயம் தொற்றிக்கொள்ள அவளுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இவ்வளவு நேரமும் இதைப்பற்றி தான் நினைத்துக்கூடப் பார்க்காமல் தனிய நின்றிருக்கிறேனே.! ஆண்டவா..!! அவன்பாவிக்கு பெரியமாமனைவிட என்னிலைதானே சரியான கோபம் இருக்கும். என்று அஞ்சல் ஓட்டத்தில் ஒன்றையொன்றைத் துரத்தியபடி ஓடியது தவமணிக்கு இதுவரை தான் ராஐ¡வுக்கு செய்த திருகுதாளங்கள்.

சாப்பிடக்கூட முனையாமல் மளமளவென்று உடுப்பு மாற்றினாள். எங்காவது வெளியில் சுற்றிவிட்டு கணவனும் மகளும் வந்தபிறகு வரலாமென்று கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே கால்வைத்தாள். அதன்பிறகுதான் படக் படக்கென்று அடித்த அவளது இதயம் சாந்தமாகியது.

நல்லாக வெறியைப் போட்டுவிட்டு மல்லாந்துவிடும் தனது புரு‘னுக்கு அவளது கஸ்ரங்கள் தெரியவராது. தனக்கும் மகளுக்கும்தான் எங்கே எதுவும் நடந்துவிடுமோவென்ற பயம் இருபத்திநாலு மணித்தியாலமும் கிடந்து ஆட்டுகிறது. காசு பணம் இருந்தும் இப்படி நிம்மதி இல்லாமல் வாழுறது என்ன வாழ்க்கை என்று வெறுப்பு வந்தது அவளுக்கு.

“கள்ளச் சபாலிங்கம் பெண்டிலுக்கு ஒரு கஸ்ரமும் இல்லை. அவன்ரை காசையும் காரையும் ஏமாத்திப் புடுங்கிப் போட்டு நிம்மதியா நித்திரை வேற கொள்ளுறாள்“ என்று வீதியில் புறுபுறுத்தபடி சொப்பிங் சென்டரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் தவமணி.

சாயங்காலம் நாலுமணிக்கு முழிப்பு வந்தது ராஐ¡வுக்கு. முழிப்புக்கண்டதும் வயிறு பசியில் காந்துவதை உணர்ந்தான். வீட்டில் எந்த அரவத்தையும் காணவில்லை. தன்னைத் தனியே விட்டுவிட்டு ஒரு பொறுப்பில்லாமல் எல்லோரும் வெளியே போய்விட்டார்களே யாராவது எதிரிகள் வந்து என்னை அடித்துக்கொன்று விட்டால் என்ன செய்வது என்ற பதகளிப்பு உடனே அவனிடம் தொற்றிக்கொண்டது. சட்டென்று எழும்பி சமையலறைக்குள் நுழைந்து கத்தியைத் தேடி எடுத்து கையில் வைத்துக் கொண்டான்.

எதிரிகள் உள்நுழையக்கூடிய வழிகள் எல்லாவற்றையும் முதலில் அடைத்துவிடவேண்டும். சமையலறை ஐன்னல் நன்றாகப் பூட்டியிருந்தது. உடுதுணிகள் வைக்கும் குளோசற் பாத்ரூம் எல்லாவற்றையும் சோதித்துவிட்டான். ஆனால் பெரியமாமனது பெட்ரூம் கதவு பூட்டியிருந்ததால் அந்த அறை ஐன்னல் சாத்தி இருக்கிறதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் யாராவது எதிரிகள் நிற்கிறார்களோ என்ற சந்தேகமும் வந்தது. கதவைத் தள்ளித் திறந்து பார்த்தான். திறக்கமுடியவில்லை. சிறிது நேரம் கத்தியை ஓங்கிபிடித்தபடி ஆடாமல் அசையாமல் நின்றுஇ உள்ளே யாராவது நடமாடுகிறார்களா என்று அரவங்கேட்டான். அறைக்குள் எவ்வித சத்தமும் இன்றி அமைதியாக இருந்தது. ஆனாலும் நம்பமுடியாது தான் போவதற்கு திரும்பும்போது சடாரெனக் கதவைத்திறந்து தலையில் தாக்கிவிடக்கூடும். ஆகையால் கத்தியைத் தயாராகப் பிடித்தபடி ரிவர்சில் நடந்து சமையலறைக்குள் வந்தான்.

ராஐ¡வுக்குப் பசித்தது. சமையலறையில் சாப்பாடு எல்லாம் தயாராக இருந்தது. சாப்பிடும்போதுகூட தனக்கு ஏதாவது தாக்குதல் நடந்துவிடலாம் என்று அவனது உள்ளுணர்வு சொன்னது. உடனே திரும்பவும் பெட்ரூம் கதவுக்கருகே வந்தான். உறுதியாக நிலையெடுத்து நின்றுகொண்டுஇ காலால் ஓங்கிக் கதவை உதைந்தான். கதவுப்பலகை கிழிந்து கொண்டு பூட்டு விலகியது. இப்போது உள்ளே நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளே யாரும் இல்லை என்று தெளிவாகியதும் நிம்மதியாக இருந்தது.

கோழிஇறச்சிக் குழம்பும் கத்தரிக்காய் பால்க்கறியும் பெரியமாமி சமைத்து வைத்திருந்தாள். தானே சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிட்டான். வயிறு நிறைந்தது. தண்ணிக்குப் பதில் ·ப்ரிகஐ¥க்குள் இருந்த பாலை எடுத்துக் குடித்தான். பால்தான் உடம்புக்கு நல்ல பலம் தரும். உடம்பு பலமேறினால் யாரும் தன்னை அசைக்க முடியாது. இரண்டுகிளாஸ் நிறையப் பாலைக் குடித்து சத்தமாக ஏவறைவிட்டு தானே “சொறி“ சொல்லிக் கொண்டான். கத்தியை எடுத்துக் கொண்டு அறைக்கு வர மீண்டும் நித்திரை வந்தது. வீட்டுக்கு ஆட்கள் வரும்வரை நித்திரை கொள்ளமுடியாது.  ஆகவே படுக்கையில் இருந்து கொண்டு கத்தியை அருகே வைத்துக் கொண்டான்.

அதே காவல்நிலையில் இரண்டு மணித்தியாலமாக இருந்தபிறகு¡தன் வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உடனே உசாராகி கத்தியை கையில் எடுத்துக் கொண்டான். உடுப்புக்கள் தொங்கவிடும் குளோசற்றுக்குள் ஒளித்துக்கொண்டுஇ காதைத்தீட்டி யார் உள்ளே நுழைவது எனக் கவனித்துக் கேட்டான். மதுவந்தியின் குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து பெரியமாமனது குரலும் கேட்டது. நிம்மதியாகத் திரும்பிவந்து படுக்கையில் சாய்ந்து மறக்காமல் கத்தியை எடுத்து தலையணைக்குள் ஒளித்து வைத்தான்.

”டாடி.. டாடி.. கதவு உடைஞ்சுபோச்சு”

என்ற மதுவந்தியின் குரலைக்கேட்டு யோகலிங்கம் ஓடிவந்து பார்த்தான். பெட்ரூம் கதவு கிழிந்துபோய் ஓவென்று கிடந்தது. அவனுக்கு உடனே விர்ரென்று ஏறியது ராஐ¡வின் மீது அடக்கமுடியாத கோபம். ராஐ¡வை தனியாக வீட்டில் விட்டுவிட்டுஇ சதிராடப் போய்விட்ட தவமணியிலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ”நட்டுக்களண்டவனை வீட்டை நாசமாக்க விட்டிட்டு கொம்மா எங்க போனவள்” என்று மதுவந்தியைப் பார்த்துத் திட்டிக் கொண்டு ராஐ¡ இருந்த அறைக்குள் போனான்.

”டேய் மடையா அருமந்த கதவை உடைச்செறிஞ்சிருக்கிறியே... உனக்கென்ன விசரே பிடிச்சிருக்குது. போயும் போயும் உன்னைப் பிடிச்சு கனடா கூப்பிட்டதுக்கு என்னைச் செருப்பால அடிக்கோணும். பசாசு..!”

யோகலிங்கம் ராஐ¡வைத் திட்டிநொறுக்கிக் கொண்டு அடிப்பதற்கு கையை ஓங்கினான். உடனே பயத்தில் வெருண்டு போய் தலையை இரண்டு கைகளாலும் பொத்திக்கொண்டு ”அடிக்காதை பெரியமாமா.. அடிக்காதை பெரியமாமா..!” என்று குனிந்து கொண்டு முனகினான்.

”ஏன்ரா நாயே கதவை உடைச்சனி.. நீயே பூட்டு வேண்டிப் போட்டனி படவா..!”

”இல்லைப் பெரியமாமா அது பூட்டிக்கிடந்துது உள்ளை ஆராவது ஒளிச்சிருப்பாங்கள் எண்டு திறந்து பாத்தனான்.”

”டேய் மடையா.! பூட்டின வீட்டுக்கை எவன் வருவான். உப்பிடி அட்டூளியம் செய்தியெண்டா விசராஸ்பத்திரியில கொண்டேப் போட்டிடுடுவன். கவனம்..!”

”இல்லைப் பெரியமாமா.. இனிமே உடைக்கமாட்டன்” என்று வேகம்வேகமாக தலையை ஆட்டிக் கொண்டு பதில் சொன்னான் ராஐ¡.

யோகலிங்கத்திற்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. இவனை இப்படியே விட்டால் பெரிய தொந்தரவுகளைத் தந்துவிடுவானோ என்ற பயமும் வந்தது. அதைவிட மகள் மதுவந்தி அச்சத்தில் உறைந்து போய் பேச்சுமூச்சற்று செற்றியில்  இருப்பதைப் பார்க்க இன்றே இவனுக்கு எங்காவது வேறொரு இடம் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

மருமகனின் இந்த நிலையை நினைக்க பெரும் கவலை வந்தாலும் யோகலிங்கத்தின் சுயநலமூளை இந்தப் பாரத்தை தாங்கவிரும்பவில்லை.

செற்றியில் தனது மகளுக்கு அருகே இருந்து நாடிதாங்கி பலநிமிசமாக யோசித்தான். ஒருவழியுமே பிடிபட மாட்டேன் என்றது. எதற்கும் தம்பி சபாலிங்கத்துடன் கலந்தாலோசிப்பதுதான் நல்லது என்று எண்ணினான். இருவருக்குள்ளும் கதைபேச்சு போக்குவரத்து நின்றுபோய் பலவரு‘ங்களாகி விட்டது. இப்போது தானே வலியப்போய் தம்பியுடன் கதைப்பதா என்று சங்கைப் பட்டது அவனது மனது. ஆனாலும் ரெலிபோனை எடுத்து நம்பரை டயல் பண்ணினான்.

சபாலிங்கத்தின் முடிவுதான் சரியென்று தெரிந்தது. தாங்கள் இரண்டுபேரும் குடும்பஸ்தர்கள். அத்துடன் நாளைக்கு குமராகிவிடும் பிள்ளைகள் வேறு வீட்டில் இருக்கிறார்கள். பேசாமல் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் ராஐ¡வை அட்மிட் ஆக்கிவிடுவதுதான் நல்லது. அதற்குப் பிறகு அவங்கள்ஆச்சு இவனாச்சு அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் விட்டால் கதை முடிஞ்சுது.

தவமணி வீடுதிரும்பும்வரை செற்றியிலேயே குந்தி இருந்தான் யோகலிங்கம். தவமணி வந்ததும் நடந்ததைக் கேட்டு நெஞ்சைப் பொத்திக் கொண்டு செற்றியில் இருந்துவிட்டாள். கதவுக்கு விழுந்த உதை தனக்கு விழுந்திருக்க வேண்டியது ஆனால் தனது சாமர்த்தியத்தால் தப்பிவிட்டேன் என்பது அவளது வாதம்.

சித்தப்பா வீட்டுக்கு வரச்சொல்லியதற்கு பிறகு மதுவந்தி அங்கு போவதற்கு தகப்பனிடம் நச்சரித்தபடி இருந்தாள் அவளுக்கு யசோதராவுடனும் பிரியங்காவுடனும் விளையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட விருப்பமில்லை. மகளின் ஆய்க்கினையாலும் இன்னும் திருப்திகரமாக திட்டம் போடுவதற்காகவும் யோகலிங்கம் தவமணியையும் இழுத்துக் கொண்டு சபாலிங்கம் வீட்டுக்குப் போனான்.

பெரியமாமன் நடத்திய ரெலிபோன் உரையாடலை மிகத் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்த ராஐ¡வுக்குஇ தன்னை முழுப்பைத்தியம் ஆக்கி விட்டார்களே என்று ஆத்திரம் முட்டியது. வெறும் சப்புப்பலகைக் கதவு உடைஞ்சதுக்கு இந்தத் துள்ளுத் துள்ளுற கள்ளப் பெரியமாமன் இந்த வீட்டிலை நிறைஞ்சு கிடக்கிற தளபாடங்களும் ரெலிவி‘னும்இ ரேப்செற்றும் தான்தானே வேண்டிக் குடுத்தது என்பதை மறந்து விட்டா§ன் என்ற ஆக்ரோசம் வந்தது.

அறையை விட்டு வெளியே வந்து எல்லாவற்றையும் ஒருமுறை வடிவாகப் பார்த்தான். இத்தாலியமொடல் பெட்ரூம்செற் இரண்டாயிரத்து எழுநு¡று டொலர்ஸ்  ரெக்னிக்ஸ் ரேப்செற் ஆயிரத்து ஜந்நு¡று டொலர்ஸ் ஹோலில் கிடந்த பீத்தல் ரெலிவி‘னை து¡க்கி எறிஞ்சு போட்டு நான் வாங்கிக்குடுத்த சொனிரெலிவி‘ன் தொள்ளாயிரம் டொலர்ஸ் இந்தச் செற்றிவேற ஆயிரம் டொலர்ஸ் அதுவும் அரச சிம்மாசனம் போல வேணுமெண்டு தேடி எடுத்துக் குடுத்தது. இவ்வளவுக்கும் பிறகு நான் பைத்தியமோ ராஸ்கல்..!

”என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பப் போறியளோ அப்ப உங்களுக்கு என்னத்துக்கு நான் வேண்டித் தந்த சாமான்கள்”

தனக்குள்ளே கறுவிக்கொண்டு ஓடிப்போய் சாமிபடத்துக்கு சாம்பிராணி கொழுத்த வைத்திருந்த நெருப்புப்பெட்டியை எடுத்து வந்து உரசி உரசி செற்றியில் எறிந்தான். பல யத்தனங்களுக்குப் பிறகுதான் செற்றியில் ஒழுங்காக நெருப்புப் பிடித்தது.

அவன் இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. செற்றி புகார்ப்பத்தி எரிந்தது. வீட்டுக்குள் சுவாசிக்க முடியாமல் புகை சூழ்ந்து மூச்சு முட்டியது. ஹோலுக்கு விரித்திருந்த சின்னக் கார்ப்பெட்டை உருவி செற்றியில் போட்டு நெருப்பை அணைக்க முயன்றான். மனித முயற்சியை நெருப்பு தோற்கடித்து பொசுக்கியது. அலையலையாக நாக்கை நீட்டி அது கோரநடனம் ஆடத் தொடங்கியது.

அங்குமிங்குமாக ஓடித்திரிந்தான்இ எப்படி நெருப்பை அணைப்பது என்று தெரியாமல் கண்ணுக்குப்பட்ட பொருட்களை எல்லாம் து¡க்கி தீயின்மீது எறிந்தான். ·பயர் அலாம் கீச்சிடத் தொடங்கியதும் பயத்தினால் அவனது உடம்பு பதறியது. இனிமேலும் நிற்கமுடியாது ஆட்கள் வரப்போகிறார்கள் என்ற ஐ¡க்கிரதை உணர்வு உந்தஇ எமர்¦ஐன்ஸிக்கதவைத் திறந்து கொண்டு கராஐ¥க்குள் ஒடினான்.

அந்த அப்பார்ட்மெண்டில் வசித்த சகலரையும் வெளியேற்றி உடனுக்குடன் தீயணைப்புப் பிரிவின் பஸ்ஸில் ஏற்றினார்கள். ராஐ¡வை மட்டும் கைவிலங்கிட்டு ஒரு பொலிஸ்காரில் ஏற்றினார்கள்.



10

நெற்றிப்பொட்டில் துளையிட்டு நுழைந்து பிடரிக்கு ஊர்கிறது நாக்குளிப்புழு. அதன் அசிங்கமான வளவள உடல் மூளைதோறும் நெளிந்து புரண்டு பிடரிக்குச் செல்லும் பயணத்து¡ரம் பூராவும் அடக்கமுடியாத ஆவேசமும் மனஉதறலும் மாறி மாறித் தாக்குகிறது ராஐ¡வுக்கு.

ஒருவிநாடி நேரம்கூட இருக்கமுடியவில்லை. அந்த எட்டுக்குப் பத்துச் சதுரம் முழுவதும் நடை.. நடை.. ஓயாதநடை. தேகம் அயர்ச்சியில் ஒத்துழைக்க மறுக்கும் ஒவ்வொருகணமும்இ நாக்குளிப்புழு புரண்டு நெளிந்து அவனை நடக்க வைத்துவிடுகிறது.

வயலில் விழுந்த படைக்குருவிகள் வெருளியைக் கண்டு விர்ரென எழும்பி பறந்து மறைவது போல மூளையிலிருந்த அத்தனை நினைவுகள் முகங்கள் எல்லாம் பறந்து மூளை வெறுமையாகிவிட நாக்குளிப்புழு மட்டும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு ஆட்சி செய்கிறது.

அவனால் உறங்கவோ உட்காரவோ முடியாது. ஓயாது நடக்கவேண்டும். நாள் பூராக நடந்தபடி இருந்தால் சின்னச் சதுர அறை எந்தமட்டுக்குக் காணும்..? ஆகவே அவனுக்கு இந்தச்சிறையை விட்டு வெளியேறி நடந்து விடவேண்டும். ஆதியிலிருந்து அந்தம் வரை இந்தப்பூமியின் விசாலம் கண்டு அதுவும் போதாமல் போக வானத்தின் மேலே எங்கோ ஒரு தொலைவில் வல்லு¡றும் தகைவிலான்குருவியும் புலியும் முயலும் சிங்கமும் மனிதனும் ஒன்று சேர்ந்து உணவுண்டு உறவாடி மகிழும் தேவலோகமான ஏழாவது சொர்க்கம் நோக்கிச் செல்ல வேண்டும். பின்னர் அதுவும் அவனது நடைக்குப் போதாமல் போகும்போது வேறொரு இடம் நோக்கி யாத்திரை செல்ல வேண்டும். யாத்திரைக்கு இறுதி இல்லை.

நடைச்சுவடுகளை காற்றும் மழையும் அழித்துவிட அவன் பிறந்து தவழ்ந்து வளர்ந்து மண்ணைவிட்டு போராளியாக வெளியேறி பின்னர் அகதியாக கரைசேர்ந்து உழைத்து ஏமாற்றி வளமாகி இழந்து வெறுமையாகிய வரலாறு நாளைக்கு இதேமாதிரி நடப்பவனுக்குத் தெரியக்கூடாது.

தெரியாதது இருக்கும் வரைக்கும் பின்னால் வருபவன் சுயமான பாதையை தெரிந்து கொள்வான். யாரும் யாரையும் பின்பற்றி நடக்க இந்த ஐன்மத்தில் ராஐ¡விடமிருந்து சுவடுகள் அறிவித்தல்கள் தத்துவங்கள் கிடையாது. அவன் நேற்றும் நடந்தான். இன்றும் நடக்கிறான். நாளைக்கும் இந்தச் சிறைச்சதுரமும் நடக்கக் கூடியமாதிரி கால்களும் ஒத்துழைத்தால் நடந்து முன்னேறுவான். எங்கே எப்போது எப்படிப் போகவேண்டும் என்ற தீர்மானங்கள் கிடையாது.  என்றாவது ஒரு நாள் மூளைக்குள்ளிருந்து ஓயாது உபத்திரவப் படுத்தும் நாக்குளிப்புழு தனது கடைசி நெளிதலை முடிக்கும். பிடரியில் துளையிட்டு வெளியேறியதும் வெளிக்காற்றின் விசம் தாக்கி இறந்து போய் அவனது முதுகில் பொத்தென்று விழும்.

அதை அடக்கம் பண்ணவும் அவனை வெளியேற்றி விடவும் சிறைக்கதவுகள் ஒரு நாள் திறக்கும்.

அன்று சிறையை விட்டு வெளியேறி அவன் கால் பதிக்கும்  போது மண்ணில் பசும் புல் படர்ந்திருக்கலாம். புல்லுக்கு அடியில் மேலும் கூரான கற்கள் நெரிபடலாம். ஆனால் வெளியில் இருப்பவனுக்கு உலகம் விசாலமானது. எங்கும் திசைகள் அற்று அது பரந்து விரிந்திருக்கிறது.

முற்றும்