கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

தீபத் திரு நாளில்

தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்.......

தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீயவை அனைத்துக்கும்  தீயை மூட்டுவோம்.
தீண்டாமைக்கும் தீயூட்டுவோம்.

தீபாவளி அன்று
தீனி இல்லாதோருக்குத்
தீனி இடுவோம்.
தீபத்தை ஏற்றும்போது
ஒளிரட்டும் அகம்.

இனிமையான
இன்பமான
இனிய தீபாவளி வாழ்த்துகள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.