கவிதை படிப்போமா?தேர்ந்தெடுத்த மீட்பரும் மீட்கும்
தொழில் நம்முடையதென மறந்து போனார்.
எந்திர எச்சில் பெற
எறும்புகள் வரிசையில் நகர்கின்றன.
எச்சிலை வாங்கியபடி வியர்வையைத் துடைத்தபடி
எறும்புகள் வீட்டுக்கு திரும்புகின்றன நிம்மதியாக.
தடாலடியாக தேசம் இமாலயத்தைக் கத்தியென சுருட்டித்
தன்னைத்தானே கழுத்தறுத்துக் கொண்டது.
தவறி விழுந்த தலையில் பறக்கும்
சின்ன மலைத் தொடர்கள் இரத்தத்தில் நனைகின்றன.
ஒரு முதலாளி நீதிமன்றத்தை நொறுக்கி வீசி விளையாடுகிறார்
மீட்பர் பாராட்டிப் பிழைத்திருந்தார்.
துண்டுதுண்டாய் தேசத்தை எடுத்து பெட்டியில்
மூடி வைத்துக் கொள்கிறார்கள் முதலாளிகள்.
அண்டை தேசத்தில் மீட்பருக்கு ஒரு சிலை வான் தொடுகிறது
மீட்பர் பிணந்தின்னி கழுகுகள் மீதேறியபடி அண்டை தேசமெங்கும்
சுற்றி திரிந்து முதலாளிகளின் கையொப்பங்களை வேட்டையாடுகிறார்.
வீட்டிலிருந்த எறும்புகள் உரிமைக்காக விடுதலையைப் பரிமாறிக் கொள்கின்றன.
புரட்சியென்றவுடன் எறும்புகள் தம் வயிறு குலுங்க நகைக்கின்றன.
எதிர்ப்பின் மியுசியம் மூங்கில் மரம் போல் துரித பிரம்மாண்டம் கொள்கிறது

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.