தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!ஒக்தோபர் 08,2013
மாண்புமிகு  சி.வி விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வட மாகாண சபை.

மதிப்புக்குரிய முதலமைச்சருக்கு எழுதிக் கொள்வது. முதலில் நீங்கள் வட மாகாண சபையின் முதலமைச்சராககப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்குக் கிடைத்திருப்பது பதவி அல்ல, மக்களால்  பாரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது அறிக்கையில் குறிப்பிட்டது போல  தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி மக்கள் உங்களுக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

1) இடம்பெயர்ந்த மக்களில் எஞ்சியுள்ள 93,000 பேரை அவர்களது சொந்த வீடுவாசல்களில் குடியிருத்த வேண்டும். அவர்கள் இப்போது தறப்பாள் அல்லது தகரக் கொட்டில்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

2) வட கிழக்கில் உள்ள 89,000 கைம்பெண்களுக்கு வாழ்வாதாரம் சமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களது காலில் நிற்குமாறு தொழில் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

3) வலிகாமம் வடக்கிலும் கிழக்கிலும்  மட்டும்  தமிழ் மக்களுக்குச் சொந்தமான 6,382 ஏக்கர் (102,112 பரப்பு)  உறுதிக் காணிகளை  இராணுவம் அபகரித்துள்ளது.  இது  25.8 சதுர கி.மீ நிலப்பரப்புக்கு  அல்லது  கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பானது.   மீள் குடியேறலாம் என 23 ஆண்டு காலம்  காத்திருந்த  வலிகாமம் வடக்கை சேர்ந்த 7,060 குடும்பங்களை சேர்ந்த 25,328 பேர்களது (27) கிராம சேவைப் பிரிவுகள்) நம்பிக்கை நொருக்கப்பட்டுள்ளது. இராணுவம் பறித்த காணிகள் இந்த  மக்களுக்கு மீளக் கையளிக்கப் படவேண்டும்.

தமிழ்மக்கள் ஒத்துரிமையோடு வாழ வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல்  சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்களமக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் தமிழ் மக்ககளுக்கு  முக்கியம் ஆகும். மீண்டும் எமது வாழ்த்துக்கள்.  எங்கள் ஆதரவும் அன்பும் உங்களுக்கும் தமிழ்மக்களுக்கும்  என்றும் இருக்கும்.
 
மிக்க அன்புடன்
வே. தங்கவேலு
தலைவர்
ததேகூ (கனடா) 


தொலைபேசி : 416-877-8409     Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.