பத்மநாபருக்கு இன்று பவள விழா
பவள விழாக்கொண்டாடும் பத்மநாபர் அவர்களை வாழ்த்துகிறோம்.  தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆவணப்படுத்துவதில் நூலகம் தளத்துடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருபவர். ஈழத்தமிழ்ப்படைப்புகளைத் தமிழகத்துக்கும், தமிழகப்படைப்புகளை ஈழத்துக்கும் அறிமுகப்படுத்துவதில் இலக்கியப்பாலமாக விளங்கி வருபவர் இவர்.  இவரைப்பற்றி நூலகம் கோபிநாத் அவர்கள் 'வாழ்நாள் பணிகளுக்காக இயல்விருது பெற்ற இவரின் இலக்கிய, பதிப்புப் பணிகள் நன்கறியப்பட்ட அளவுக்கு அவரது ஆவணப்படுத்தற் பணிகள் கவனிக்கப் படவில்லை. ஈழத்து நூல்களை இணையத்துக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னோடியும் இவரே. 1998 இல் மதுரைத் திட்டத்தில் சமகால ஈழத்து நூல்களை இணைத்ததன் மூலம் ஈழத்தின் எண்ணிம ஆவணவாக்கத்தை தொடக்கியிருந்தார்.' என்று கூறுவார்.

தனிமனிதர்கள் தோப்பாவதில்லை என்பார்கள். ஆனால் தோப்புகள் ஆகும் தனி மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமானவர்களில் ஒருவர் இவர். இவரது இலக்கியப்பணிகளுக்காக  இன்று பவள விழா எடுக்கும் இவரை வாழ்த்துகிறோம்.