- வெங்கட் சாமிநாதன் -தொடர்ந்து அதிர்ச்சியான இழப்புச் செய்திகளாகவே வருகின்றன. தமிழ்க்கலை, இலக்கிய உலகில் முக்கிய ஆளுமைகளிலொருவரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்தாரென்ற செய்தியினை முகநூலில் முகநூல் நண்பர்களிலொருவரும், எழுத்தாளருமான அண்ணா கண்ணன் அவர்கள் பகிர்ந்திருந்தார்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். எதையும் வெளிப்படையாக, தர்க்கரீதியாக வெளிப்படுத்தி எழுதும் தன்மை வாய்ந்தது அவர்தம் எழுத்து. அவரது கருத்துகளுடன் முரண்பட்டவர்கள் கூட அவரது பங்களிப்பினை, ஆளுமையினை மதிப்பார்கள்.

அவரது மறைவு பற்றிய செய்தி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மிகுந்த பேரிழப்பே. கடந்த பல வருடங்களாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் ஆக்கங்களைத் தொடர்ச்சியாக 'வெங்கட் சாமிநாதன் பக்கம்' என்னும் பகுதிக்கு அனுப்பி வந்தவர் வெ.சா. அவர்கள். படைப்புகள் வெளிவரத்தாமதமானால் சிறு பிள்ளைபோல் தாமதத்துக்குக் காரணம் கேட்டு மின்னஞ்சல்களை அனுப்புவார். எப்பொழுதும் படைப்புகளைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பும்போது 'நண்பரும் , ஆசிரியருமான கிரிதரனுக்கு' என்றுதான் விளித்திருப்பார். அவர் என்னைத்தன் நண்பர்களிலொருவராகக் கருதியது அவரது நல்ல மனதினைக்காட்டுகிறது.

ஒரு சமயம் அவர் அனுப்பிய படைப்புகள் சிலவற்றை மின்னஞ்சல் 'ஸ்பாம் ஃபோல்ட'ருக்குள் போட்டு விட்டது. நானும் கவனிக்கவில்லை. அதுபற்றி அவர் எழுதிய மின்னஞ்சல் எவ்வளவுதூரம் அவர் 'பதிவுகள்' இணைய இதழ் மீது அக்கறை வைத்திருக்கின்றார் என்பதைக் காட்டும்.

திரு. வெ.சா. அவர்கள் அண்மையில் மறைந்த கவிஞர் திருமாவளவன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். திருமாவளவனின் உடல் நிலை பற்றி அவர் எழுதிய மின்னஞ்சல்கள் சிலவற்றையும், பதிவுகள் இதழுக்கு அனுப்பிய படைப்புகள் பற்றிய அவரது மின்னஞ்சல்கள் சிலவற்றையும் ஒரு பதிவுக்காக இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.

திரு.வெ.சா அவர்கள் கனடா வந்திருந்தபொழுது நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அது பற்றி அவர் அடிக்கடி மின்னஞ்சல்களில் குறிப்பிட்டு வருந்தியிருப்பார். அவ்விதமானதொரு மின்னஞ்சலில் அவர் "மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை" என்று எழுதியிருந்தார். இப்பொழுது அதனை நினைத்தால் சிறிது வருத்தமாகவுள்ளது. பொதுவாகக் கனடாவுக்கு வரும் பல இலக்கிய ஆளுமைகளை அழைத்திருக்கும் அமைப்புகளுடன் செலவழிப்பதிற்கே அவர்களது நேரம் சரியாகவிருக்கும். இவ்விதமான சூழ்நிலையில் நானும் அவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பதில்லை. உண்மையில் நான் கனடா வந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலரைத்தான் தனிப்பட்டரீதியில் சந்தித்து , நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் சோமகாந்தன், எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிக்குமார் , கலை, இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் மற்றும் 'உயிர்நிழல்' கலைச்செல்வன். வேறு பலரை அவர்களுடனான சந்திப்புகளில் கூட்டத்திலொருவனாகக் கலந்து, அவர்தம் உரைகளைச் செவிமடுத்திருக்கின்றேன். ஆனால் தனிப்படச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் சுந்தர ராமசாமி வந்திருந்தபொழுது அவருடன் நடைபெற்ற கலந்துரையாலின் இடைவேளையொன்றில் அவருடன் சிறிது நேரம் உரையாடியிருக்கின்றேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்தாளர்கள் பலருடன் நான் நேரில் சந்தித்திருக்காவிட்டாலும் இணையத்தினூடு தொடர்புகளைப்பேணி வருகிறேன்.

திரு வெ.சா. அவர்களை நேரில் சந்தித்திருக்காவிட்டாலும், இணையத்தின் வாயிலாக, அவரது படைப்புகள் வாயிலாக அவருடன் தொடர்புகளைப் பேணி வந்திருக்கின்றேன். அவரது ஐம்பதாண்டு கலை, இலக்கியப்பணியினைக்கெளரவிக்கும் பொருட்டு தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது. 'வெங்கட் சாமிநாதன்': வாதங்களும் விவாதங்களும்' என்ற அந்தத் தொகுப்பு நூலினை எழுத்தாளர்கள் பா.அகிலன், திலீப்குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தியா பதிப்பகம் வாயிலாக 2010இல் வெளியிட்டுள்ளார்கள். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில், தடித்த மட்டையுடன் வெளியான அந்த நூலில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எனது கட்டுரையான 'அறிவுத்தாகமெடுத்து அலையும் வெங்கட்சாமிநாதனும் அவரது கலை ,மற்றும் தத்துவியற் பார்வைகளும்' என்றொரு நீண்டதொரு கட்டுரையினை என் பங்களிப்பாக அதில் எழுதியிருந்தேன். அதன் மூலமும், பதிவுகளுக்கு அவர் அனுப்பும் மின்னஞ்சல்கள் மூலமும் அவரை நேரில் சந்தித்தது போன்றதொரு திருப்தி எனக்குண்டு.

இறுதியாக அவர் அக்டோபர் 18, 2015 அன்று கூட ஒரு நேர்காணலை மூன்று பகுதிகளாக அனுப்பியிருந்தார். அந்த மூன்று பகுதிகளும் ஒழுங்காக வராததால், இன்றுதான் அவரிடம் நேர்காணலை வழக்கம் போல் பகுதி, பகுதியாக அனுப்புமாறு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவரிடமிருந்து பதிலை எதிர்பார்த்திருந்த சமயத்தில் அவரது மறைவு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

திரு. வெங்கட் சாமிநாதனின் இழப்பு தமிழ்க் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் மாபெரும் பேரிழப்பு. 'பதிவுகள்' இணைய இதழினைப்பொறுத்தவரையில் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாகத் தன் படைப்புகள் மூலம் பங்களித்து வந்தவர் அவரென்பதால் தனிப்பட்டரீதியிலும் மிகுந்த பேரிழப்பே. தன் படைப்புகள் மூலம் அவர் தமிழ்க்கலை, இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமைகளிலொருவராகத் தடம் பதித்துச்சென்றிருக்கும் வெ.சா. அவர்களின் மறைவினையொட்டிய இத்துயரகரமான தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், நண்பர்கள் உறவினர்கள் மற்றும் கலை, இலக்கிய உலகினைச்சேர்ந்த அனைவருக்கும் 'பதிவுகள்' தன் ஆழ்ந்த அஞ்சலியினைச் செலுத்திக்கொள்கின்றது.

மறைந்த திரு வெங்கட் சாமிநாதன் நினைவாக அவர் எழுதிய மின்னஞ்சல்கள் சில:

- வெங்கட் சாமிநாதன் -1.  மறைந்த திரு வெங்கட் சாமிநாதன் கடைசியாகப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பிய கட்டுரை:

Sunday, October 18, 2015 12:45 AM
From:  "Swaminathan Venkat" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:  "Navaratnam Giritharan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

அன்புள்ள ஆசிரியருக்கு, இத்துடன் ஒரு நீண்ட பேட்டியை முன்று பகுதிகளாக்கி அதனை மீண்டும்  உங்கள் சௌகரியத்திற்காக முன்று அங்கங்களாக்கி,. உங்களுக்கு அனுப்பும் சௌகரியத்திற்காக மூன்றாக அனுப்பியிருக்கிறேன் . நீ​​ங்கள் இந்த மூன்றையும்  இணைத்து ஒன்றாக்கிக்கிக் கொள்ளுங்கள்.

அன்புடன்
வெசா


2.
Tuesday, June 2, 2015 5:43 AM
From:     "Swaminathan Venkat" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:     "Navaratnam Giritharan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> "Bala Devakanthan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, இதோ நீங்கள் முன்னர் கொடுத்த முகவரிக்கு அனுப்பினேன். அது டெலிவரி ஆகாமல் திரும்பி விட்டது. நான் அனுப்பியதன் நகல் இதோ:

நான் சென்னையிலிருந்து பஙகளூரு வந்துவிட்டேன். சென்னையிலிருந்த பொழுது படுக்கையிலிருந்து கீழே இரவு தூக்ககத்தில் விழுந்து விட்ட காரணமாக, மறுபடியும்  இடுப்பு எலும்பில் ஒரு பிளவு.  வாக்கர் வைத்துக்கொண்டு நடக்கிறேன். செனனை டாக்டர் சர்ஜரி தேவை என்றார்.  பங்களூர் டாகடர் அதெல்லாம் தேவையில்லை. it is only a slight hairline crack. it will unite by it self in due course.என்று சொன்னது நிம்மதியாக இருந்தது.
உங்கள் புதிய இ/மெயில் முகவரிக்கே அனுப்புகிறேன். வந்த சேர்ந்தது பற்றி எழுதினால், மறுபடியும் spam-ல் அகப்பட்டுக்கொண்டதோ இல்லை உங்களுக்குக் கிடைத்ததோ என்பது நிச்சயமாகும்.உடன் பதில் வந்தால் சேர்ந்துவிட்டது உங்களை என்றும், பதில் வராவிட்டால் spam -ல் போய் சிக்கிக்கொண்டுவிட்டது மறுபடியும் அனுப்பவேண்டும் என்றும் புரிந்து கொள்வேன்.

தங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் என் நன்றி.
அன்புடன்,
வெ.சா.

அது  திரும்பி விட்டதால், பழைய முகவரிக்கும் தேவகாந்தனுக்குமாக அனுப்புகிறேன்.  மறுபடியும் ஸ்பாமில் போய் விழுந்தால், தேவகாந்தனாவது  உங்களிடம் இதைச் சேர்ப்பார் அல்லவா. இந்த வினையான விளையாட்டு எவ்வளவு தரம் திரும்பத் திரும்ப நடக்குமோ, தெரியவில்லை.

அன்புடன்,
வெசா.


3.
Wednesday, July 15, 2015 2:38 AM
From:     "Swaminathan Venkat" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:     "NAVARATMAM GIRITHRAN" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்களுக்கு, தஙகள் அக்கறைக்கும் கவலைகளுக்கும், எங்கிருந்தோ பல வேலைகளுக்கும் இடையே என் சிரமங்களுக்கு தீர்வு காண முனையும் அன்புக்கும் எப்படி நன்றி சொல்வது?

வலது கை விரல்கள் சரிவர ஒத்துழைப்பதில்லை. பாரலிஸிஸின் தொடக்கமோ என்னவோ தெரியவில்லை. இதற்கிடையில் லாப் டாப்பில் சில பாகங்கள் வேலை செய்ய மறுக்கவோ, சரி செய்யக் கூப்பிட்ட ஆள் என்னன்னவோ புதிய சௌகரிங்களையும், புதிய சிரமங்களையும் உருவாக்கிக் கொடுத்துச் சென்றுவிட்டான்.நான் வெளியே நடமாட முடியாத் மூட்டு வலி. எப்படியோ மறுமகளின் உதவியோடு சமாளித்து வருகிறேன்.  கொஞ்சம் அதிகம் தொந்திரவு செய்ய வேண்டுமென்றால், பங்களூரிலேயே இருக்கும் அன்பர் டெலிகாமில் வேலை செய்து இப்போது ஒய்வில் இருப்பவர், கொஞ்சம் தூரத்தில் இருப்பவர், எப்போதும் அலைந்து கொண்டிருப்பவர் கூப்பிட்டல் சிரமம் பாராது வருவார், உதவி செய்வார். ஆகவே நீங்கள் கவலைப் படவேண்டாம்.  மேலும் இதில் நான் எதிர் கொள்ளும் எல்லாவற்றையும் எப்படி அதன் தொழில் நுட்ப பாஷையில் சொல்வது. நண்பர் வந்தால் பார்த்துப் புரிந்து கொண்டு ஆவன செய்வார்.

தெருக்கூத்து தொடரின் கடைசிப் பகுதி ஏன் பிரசுரமாகவில்லை. மேலே பார்த்தால் அந்த அட்டாச்மெண்ட் சரியாகத் தானே வந்திருக்கிறது.  சரி மறுபடியும் பழைய தகராரோறோ என்று நினைத்தேன். தங்கள் மெயில் இதோ வந்ததும் அந்த கவலை தீர்ந்தது.

மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.

2015-07-15 9:29 GMT+05:30 NAVARATMAM GIRITHRAN <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>:

மதிப்புக்குரிய திரு. வெ.சா. அவர்களுக்கு,
இணைய இதழ்களில் உங்கள் ஆக்கங்கள் பல இருப்பதால் அவற்றை எப்பொழுதும் நீங்கள் பாவித்துக்கொள்ள முடியும். எ-கலப்பை மென்பொருளினைக் கணினியில் பதிவிறக்கம் செய்தால் பின்னர் விண்டோஸ் அப்ளிகேசன்கள் மூலம் (Note Pad, MS Word போன்ற) இலகுவாகத் தட்டச்சு செய்ய முடியும்.

மேலும் உங்கள் கணினிக்கு எவ்வகையான பிழை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் 'மதர் போர்ட்' பழுதாகலாம். ஆனால் 'ஹார்ட் ட்ரைவ்' நல்ல நிலையிலிருக்கும். அவ்விதமான சமயங்களில் பழைய ஹார்ட் ட்ரைவினை வேறொரு கணினியில் இணைத்து, அல்லது 'மதர் போர்டு' பழுதாகிய கணினிக்குப் புதிய 'மதர் போர்'டினைப் பொருத்திப் பாவிக்கலாம்.

உங்கள் கணினிக்கு ஏற்பட்ட நிலை பற்றிச் சிறிது விரிவாக விளக்கிக்கூறினால் நிலைமையினைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இலகுவாகவிருக்கும்.

அன்புடன்,
கிரிதரன்


4.

On Sun, 7/12/15, Swaminathan Venkat <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> wrote:
Subject: பத்வுகள் இதழுக்காக
To: "Navaratnam Giritharan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Date: Sunday, July 12, 2015, 10:17 AM

அன்புள்ள ஆசிரியரும், நண்பருமான கிரிதரன் அவர்களுக்கு, கணிணியில் சில தேய்ந்து சரிவர வேலை செய்யவில்லை. சரி செய்யக் கொடுத்தால் நான் எங்கே எதை  வைத்திருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எதுவும் தொலைந்ததா என்பதும் தெரியவிலலை. சிரமம் தான் இத்துடன் தெருக்கூத்து கட்டுரையின் கடைசிப்பகுதியை அனுப்பியிருக்கிறேன். இடையில் திரும்ப கற்றுப் பழ்கிக்கொளள வேண்டும். என் மகனுக்கும் தமிழ் தெரியாது. மருமகளுக்கும் அவ்வளவாகத் தெரியாது. கஷ்டம் தான்.

அன்புடன்,
வெ.சா.


5.
திருமாவளவனின் உடல்நிலை
Friday, October 2, 2015 2:08 AM
From: "Swaminathan Venkat" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:      "APPADURAI MUTTULINGAM" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். "Navaratnam Giritharan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

அன்புள்ள நண்பர்களுக்கு,
இப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, அவரால் யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அன்பர் அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை எழுதியிருந்தார்.  இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிரார்.

மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகி மிக நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும் எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று.  இப்போது ;பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது.

எப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும். தேவகாந்தன் e/mail  இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜி ,மெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை.

உங்களில் யாருக்கும் அவரது  இப்போதைய உடல் நிலை தெரியுமா? யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா?  சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா? அவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர்  சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

அன்புடன்,
வெ.சா.


6.

On Fri, 10/2/15, Swaminathan Venkat <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> wrote:
Subject: திருமாவளவனின் உடல்நிலை
To: "APPADURAI MUTTULINGAM" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., "Navaratnam Giritharan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Date: Friday, October 2, 2015, 2:08 AM

அன்புள்ள நண்பர்களுக்கு, இப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின்  உடல்நிலை மிக மோசமாக  இருப்பதாக, அவரால்  யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அன்பர்  அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை எழுதியிருந்தார்.  இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகி மிக நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும்  எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று.  இப்போது பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது. எப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும்.

தேவகாந்தன் e/mail  இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜிமெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது
அவ்வளவு சுலபமாக இல்லை. உங்களில் யாருக்கும் அவரது இப்போதைய உடல் நிலை தெரியுமா? யாரும் மருத்துவ நிலையத்தில்
பார்த்தீர்களா?  சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா? அவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர்  சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

அன்புடன்,
வெ.சா.--

2015-10-03 10:33 GMT+05:30 NAVARATMAM GIRITHRAN <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>:
வணக்கம் திரு. வெ.சா. அவர்களுக்கு, தற்போது கவிஞர் திருமாவளவனின் நிலை மிகவும் மோசமாகவுள்ளதாக நண்பர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் கூறினார். கடந்த வார இறுதியிலிருந்து திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, உடல் நிலை மோசமாகக் கடந்த ஞாயிறிலிருந்து கோமாவில் இருக்கின்றார். வைத்தியர்கள் கையை விரித்து விட்டதாகக் குடும்பத்தவர்கள் கூறியதாக விக்கினேஸ்வரன் கூறினார்.  அவரது நிலையிலேதும் மாற்றமேற்பட்டால் அறியத்தருகின்றேன்.

அன்புடன்,
கிரிதரன்


7.

Re: திருமாவளவனின் உடல்நிலை
Sunday, October 4, 2015 3:23 AM
From:   "Swaminathan Venkat" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:  "NAVARATMAM GIRITHRAN" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

நன்றி, கிரிதரன். என்ன செய்வதென்று தெரியவில்லை. இம்மாதிரி செய்தி வரும் என்று யார் கண்டார்? பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன் செய்ய முடியும்? தெய்வத்திடம் நம்பிக்கை வைப்போம். மனம் செய்வதறியாது அலையாடுகிறது. அவர் மடிப்பாக்கம் வந்து சந்தித்த கணங்கள்........ அதிர்ச்சியும் வேதனையும் தான்...