- முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான "முல்லை நிலமும் நந்திக்கடலும்" எனும் நூல் வெளியீடு! | இடம்: செல்லமுத்து பதிப்பகம் | காலம்: மார்ச் 25, 2018 பிற்பகம் 3 மணி -

நூல்வெளியீட்டு அறிமுகம் : முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான "முல்லை நிலமும் நந்திக்கடலும்"

முல்லை மண் பெற்றெடுத்த முத்துக்களில் ஒன்றாக அண்ணன் முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான "முல்லை நிலமும் நந்திக்கடலும்" எனும் நூலானது 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலை கொஞ்சும் வல்லை கரையோரம் செல்லமுத்து வெளியீட்டகத்தின் குழந்தையாக பிரசவிக்க இருக்கிறது. கவிக்காதலர்களை அழைப்பதில் செல்லமுத்து வெளியீட்டகத்துடன் அண்ணனுடன் தம்பியாக பெருமைகொள்கிறேன். - நாவலூரான் குட்டி ஜசி (வ.ஜசிந்தன்) -