நூல் அறிமுகம்: சங்ககாலத் தமிழர் வாழ்வியல் (Living Codes of Sangam Era Tamils.)

இலக்கிய ஆய்வு நூலுக்கான 'எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்' வழங்கிய 'தமிழியல் விருது - 2011', தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான ' தமிழியல் விருது - 2014', இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து வழங்கும் ' இரா. உதயணன் இலக்கிய விருது - 2016' என்ற மூன்று விருதுகளையும் பெற்றவர் ஆவார்.

தமிழன் தாயகமாம் ஈழத் திருநாட்டின் வடமாகாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் புகழ் பூத்த நகரான சாவகச்சேரி மண்ணில் நுணாவிலூர் என்னும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட 'சங்ககாலத் தமிழர் வாழ்வியல்' என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில் அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியர் சூத்திரங்கள், சங்ககால மடலேறும் தலைவன், பண்டைத் தமிழர் திருமணங்கள், பிரிவொழுக்க முறைகள், தலைவன் தலைவியர் உடன்போக்கு, வாழ்வியல், களவழி நாற்பதின் மறமேம்பாடு, அறிவுச் சுரங்கமான புறநானூறு, கதை கண்ட காப்பியங்கள், சீவகசிந்தாமணி வாழ்வியல், களவியல் கொணரும் அம்பலும் அலரும் ஆகிய விடயங்கள் பற்றி ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன.

இந்நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்.

K. Wijeyaratnam,
35, Southborough – Road, Bickley, Bromley, Kent. U.K. BR1 2EA.
Edition : First Edition, 2016
Publishers: Wijey Publication.
Telephone No: 020 3489 6569.
E-Mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Price per copy: £2.99 + postage charges.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.