Letchumanan Murugapoopathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Sat., Apr. 25 at 6:21 p.m.
 நண்பர் கிரிதரனுக்கு காலை வணக்கம். அந்தச்சகோதரிகள் எனது ஆசான்கள் சுப்பிரமணியம் தம்பதியரின் புதல்விகளா! வாழ்க. கலைஞர் இ.சி. சோதிநாதனும் சுப்பிரமணியம் தம்பதியர் பணியாற்றிய எங்கள் விஜயரத்தினம் கல்லூரியில் (விவேகானந்தா வித்தியாலயம் என்ற பெயருடன் இயங்கிய காலத்தில்) அதிபராக பணியாற்றியவர்தான். சோதிநாதனும் கனடாவில் மறைந்தார். தணியாத தாகம் மிகச்சிறந்த வானொலி நாடகம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Last Updated on Sunday, 26 April 2020 23:38
Read more...

Letchumanan Murugapoopathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> To:Navaratnam Giritharan Jan. 7 at 11:23 p.m.
அன்புள்ள நண்பர் கிரிதரன் வணக்கம். உங்களது வீடற்றவன் கதை பிறந்த கதை படித்தேன். சுவாரசியமாக இருந்தது. உண்மைக்கும் புனைவுக்குமிடையே வீடற்றவர்கள் குறித்து எழுதும்போது அதன் வலியையும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். அவுஸ்திரேலியா மெல்பனிலும் நாம் மாநகர ரயில் நிலையங்களுக்கு அருகில் வீடற்றவர்களை தினம் தினம் பார்க்கின்றோம்.
Last Updated on Sunday, 12 January 2020 03:03
Read more...

1. Puthiyavan Siva <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Oct. 28 at 1:14 p.m.
வணக்கம் சான்றீர், எனது ஆய்வு மற்றும் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு பதிவுகள் இணைய இதழ் அங்கீகாரம் வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன். தங்கள் அங்கீகாரத்தால் கிட்டும் ஊக்கத்தைப் பயன்படுத்தி இலக்கியத்தின் சமூகவிஞ்ஞான இலட்சியங்களுக்கு எனது பங்களிப்பை செலுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நன்றி சான்றீர்.
என்றும் அறிவன்புடன்
புதியவன்
2. Letchumanan Murugapoopathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Oct. 29 at 6:02 p.m.
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு குழந்தை சுர்ஜித்துக்காக நீங்கள் வரைந்த கண்ணீர் ஓவியம் படித்து உருகிப்போனேன். பெற்றோரின் கவன ஈனம் அரசினதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருக்கும் மெத்தனங்களும்தான் இத்தகைய இழப்புகளுக்கு அடிப்படை! ஆழ்துணை கிணறுகளை சுற்றி வேலி அமைத்து - அல்லது அவற்றை நிரந்தரமாக மூடியாவது உயிரிழப்புகளை தடுக்கமுடியும். மேலே இருக்கும் இணைப்பையும் பார்க்கவும். அறம் என்ற திரைப்படத்தையும் நீங்கள் பார்த்திருக்கலாம். நன்றி.
அன்புடன் முருகபூபதி
3. Rajalingam Velauthar <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Oct. 29 at 5:17 p.m.
ஈரம் வற்;றிவிட்ட நிலையில் இதயத்தைத் தொடும் குரல். நெஞ்சைத் தொடுகிறது.
- தீவகம் வே.இராசலிங்கம்
4.
1. Sunil Joghee <suniljogTo:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Oct. 23 at 1:29 p.m. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். முனைவர் கோ. சுனில்ஜோகி ஆகிய நான் கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். நீலகிரி மலைவாழ் மக்களான படகர் இன மக்களை பற்றியும் தோடர், குறும்பர் போன்ற இதர பழங்குடி மக்களைப் பற்றியும் 13 ஆண்டுகள் ஆய்வு அனுபம் பெற்றுள்ளேன். இது சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். மேலும் கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புத் திறன்களையும் நான் பெற்றுள்ளதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். என் ஆய்வு சார்ந்த தகவல்களை, என் படைப்புகளை உலகம் முழுவதற்கும் பகிர விழைகிறேன். நன்றி....
[ நன்றி. உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். 'பதிவுகள்' அவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஆவலாகவுள்ளது. எழுத்தாளர் பிலோ இருதயநாத் பல வருடங்களுக்கு முன்னர் இந்தியப் பழங்குடி மக்களைப்பற்றி எழுதிய சஞ்சிகைக் கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன. மானுடவியற் துறையில் இவை போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. உங்கள் பணி பாராட்டுக்குரியது. - ஆசிரியர், பதிவுகள்.]
Last Updated on Monday, 16 December 2019 07:52
Read more...
Letchumanan Murugapoopathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Jun. 18 at 1:23 a.m.
அப்பா நினைவாக......
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்கட்கு வணக்கம். தந்தையர் தினத்தில் -- உங்கள் அப்பா நினைவாக நீங்கள் எழுதியிருந்த பதிவு சிறப்பானது. உங்கள் அப்பா ஒரு முழுமையான மனிதராக வாழ்ந்திருப்பது தெரிகிறது. பொதுவாக பல எழுத்தாளர்களுக்கும் அவர்களின் தந்தைமாருக்கும் இடையே முரண்பாடுகள்தான் பெருகியிருந்துள்ளன!?
பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், பாலகுமாரன், ஜெயமோகன்... முதலான எழுத்தாளர்கள் தங்கள் தந்தைமாருடன் எங்கெங்கே முரண்பட்டார்கள் என்பதை எழுதியிருக்கிறார்கள்.
ஜெயகாந்தன் , மரணப்படுக்கையிலிருந்த தந்தையை புறக்கணித்துவிட்டு வந்தவர். இந்த எழுத்தாளர்களின் சுயவரலாறு தெரிந்தால் அதிர்ச்சியடைவோம். இந்நிலையில் உங்கள் தந்தையார் உங்களது நல்ல தோழராகவே விளங்கியிருப்பது தெரிகிறது.
வருடாந்தம் தந்தையர், அன்னையர் தினங்களில் எமது எழுத்தாளர்கள் இதுபோன்ற பதிவுகளை எழுதி, அவர்களின் நினைவுகளைக் கொண்டாட முடியும். அதற்கு உங்கள் நினைவுப்பதிவு முன்னுதாரணமாக இருக்கும். உங்கள் தந்தையார் பற்றிய பல செய்திகளை அறிந்து அவர் மீது எமக்கும் மதிப்புண்டாகிறது. தந்தைமார் பிள்ளைகளுக்கு நண்பர்களாக இருப்பது அபூர்வம்! உங்கள் நினைவுப் பதிவு எனது தந்தையார் பற்றி எழுதவும் என்னைத்தூண்டுகிறது.
நன்றி.
அன்புடன்
முருகபூபதி - அவுஸ்திரேலியா
Last Updated on Sunday, 26 April 2020 19:38
Read more...

Kuru Aravinthan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> May 14 at 9:01 p.m. அன்பின் கிரிதரன், வணக்கம்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப் போட்டி முடிவுகளைத் தங்கள் இணையத்தளத்தில் சிறப்பாக வெளியிட்டமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன் குரு அரவிந்தன்
Letchumanan Murugapoopathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Jan. 28 at 12:25 a.m. அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நேற்று பாரிஸில் பண்டிதர் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடந்தது. இலங்கையிலிருந்து தகைமைசார் பேராசிரியர் சிவலிங்கராஜாவும் லண்டனிலிருந்து பேராசிரியர் பாலசுகுமாரும் வந்திருந்தார்கள். நீங்கள் உங்கள் "பதிவுகளில் " நூற்றாண்டு பற்றிய எனது கட்டுரையும் செய்தியும் வெளியிட்டமை குறித்து தங்கள் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இங்கு சில இலக்கியவாதிகளையும் மற்றும் சமூகப்பணியாளர்களையும் சந்தித்தேன். எனது புதிய நூல் வெளியீடு எதிர்வரும் 3 ஆம் திகதி நடு இணைய இதழின் ஏற்பாட்டில் நடக்கிறது. அச்செய்தியை நீங்களும் பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி. அன்புடன் முருகபூபதி
Last Updated on Friday, 24 May 2019 06:46
Read more...
Jeyaraman <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Dec. 30 at 8:01 p.m.
திரு கிரிதரன் அவர்களுக்கு
பதிவுகள் ஆசிரியர்
அன்பு வணக்கம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது இன்பமாக அமையட்டும். உங்களின் படைப்புலகப் பணிகள் உன்னதம் அடைந்திடட்டும். நலமும் வளமும் பெருக குடும்பம் சிறக்க வாழ்க வாழ்க வாழ்கவென்று புதுவருட வாழ்த்துகளை வழங்கி மகிழ்கின்றேன்.
வாழ்கவளமுடன்
அன்புடன்
ஜெயராமசர்மா
Last Updated on Monday, 31 December 2018 20:39
Read more...
rajamanickam manickam <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
To:Navaratnam Giritharan
வணக்கம், தகவலுக்காக..., சொல் தேடுதல் தொடர் தீக்கதிரில் எழுதிவருகிறேன். இந்த வாரம் வகிபாகம் - அக்கினிக்குஞ்சு இதழ் மற்றும் பதிவுகள் இணைய இதழிலிருந்து எடுத்தாண்டேன்...
புதிய சொல் , பழைய தேடல் - 15 வகிபாகம் - அண்டனூர் சுரா 'தமிழகத்தில் புரத வண்ணார்கள்' - த.தனஞ்செயன் எழுதிய ஒர் ஆய்வு நூல். திருநெல்வேலி , தாமிரபரணி பகுதிகளில் வண்ணார் குடும்பங்கள் ஓர் ஊராக வாழும் நிலையைக் கொண்டிருக்க சோழர் ஆட்சிப் பகுதிகளான திருச்சி, தஞ்சை பகுதிகளில் ஊருக்கு ஒரு குடும்பம் என்கிற அளவில் தனித்த குடும்பமாக வசித்து வருகிறார்கள். பிற்கால சோழர் ஆட்சிக் (கி.பி 6 - 12 ) காலத்திற்கு முன்பு வரை எந்தவொரு குடித்தொழிலையும் குலத்தொழிலாக பார்க்கும் போக்கு இருந்திருக்கவில்லை. இவர்களே, மநு தர்மத்தையும் வருணாசிரமத்தையும் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புப்படுத்தி ; செய்யும் தொழிலைக் கொண்டு சாதி, சாதிக்குள் சாதி ; சாதி சார்ந்த குடிகளை வளர்த்தெடுக்கச் செய்தார்கள் என்கிறது இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர் பேரா.வீ.அரசு. ' தமிழ்ச்சமூக வரலாறு எழுதியலில் ' குடித்தொழில் பெறும் வகிபாகம் ' . அக்கினிக்குஞ்சு இதழில் ஜெயராமசர்மா ' ஔவையார் தொடக்கம் அன்னை தெரசா வரை ' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இப்படியாக ஓரிடம் " சமூகத்தில் ஆணின் வகிபாகமும் பெண்ணின் வகிபாகமும் காலத்துக்குக்காலம் மாறுபட்டு வருகிறது ". இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய நாளிதழ் 'வீரகேசரி'. சமீபத்தில் அந்நாளிதழ் 89 ஆவது வயதைத் தொட்டிருந்தது. இதை நினைவு கூறும் பொருட்டு லெ.முருகபூபதி பதிவுகள் என்கிற இணைய பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினார் ' கலை இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் '. இப்படியாக ஈழத்தமிழ் சார்ந்த எழுத்தாளர்களிடமும் புலம்பெயர் பத்திரிகைகளிலும் இச்சொல் அதிகமாக புழக்கத்திலிருந்து வருவதைக் கவனிக்க முடிகிறது. அது என்னதாம் 'வகிபாகம்' ?
Last Updated on Sunday, 11 November 2018 03:13
Read more...
Siva Ananthan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Today at 9:59 AM
அன்புள்ள கிரிதரன், உங்கள் பதிலுக்கு நன்றி. எனது மடலில் என் எண்ண ஓட்டத்தை நான் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்று உணர்கிறேன். கலவரம் என்ற சொல்லுள் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம், சமூகக் கலவரம், இனக்கலவரம் இப்படிப் பல்வேறு வகைகள் அடக்கம். இனக்கலவரம் என்ற சொல்லுள் இருசமூகத்தவர் ஒருவரையொருவர் தாக்குதலும் (உ+ம்: சிலவருடங்களுக்குமுன் பாக்கிஸ்தானியரும் இந்தியரும் இங்கிலாந்தில் சண்டையிட்டுக்கொண்டனர்),ஒரு சமூகத்தவரை இன்னொரு சமூகத்தவர் தாக்குதலும் ஆகிய இரு வகைகளும் அடக்கம். எமக்கு நடந்தது இரண்டாவது வகையானது என்பது தெளிவு. அதிலும் 'கலவரம்' என்ற சொல் அதன் கொடூரத்தை, 1000 க்கு மேற்ற்பட்ட கொலைகளைப் புலப்படுத்தவில்லை.
எனது ஆதங்கம் என்னவெனில், எவ்வாறு கலவரம் என்ற சொல் எமக்கு நடந்த அவலத்தைக் குறிக்கப் போதாத வார்த்தையோ, அதுபோலவே 'இனக்கலவரம்' என்ற சொல்லும் போதாது என்பதே. தவறானது அல்ல. போதாது. ஏனெனில், அச்சொல், இன்னொரு கருத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படக்கூடியது. அதாவது - இரு சமூகங்கள் ஒருவரையொருவர் தாக்குதல். அதனால், 'தமிழினப் படுகொலை' அல்லது 'தமிழர் படுகொலை' என்பது போன்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது என்ன நடந்தது என்பது விள்ங்கப்படுத்தத் தேவையில்லாமல் புரிகின்றது. குறிப்பாக, இது பற்றி அவ்வளவாக அறியாதவர்களுக்கு. அ-து, இது சிங்களவ்ர்களுக்கும் தமிழருக்கும் இடையே நடந்த 'க்லவரம்' அல்ல. சிங்களக் காடையகர்களால் தமிழர்கள் கொலையும் கொள்ளையும் செய்யப்பட்ட நிகழ்வு.
Last Updated on Wednesday, 25 July 2018 12:10
Read more...
From: Siva Ananthan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> To: "
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
" <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Sent: Tuesday, July 24, 2018 2:14 PM Subject: 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.....
ஐயா, தங்களுடைய மேற்படி கட்டுரை வாசித்தேன். அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பின்னூட்டங்களுக்கு அங்கே இடமில்லை. காரணம் என்ன?
ஆயினும் ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
1983 இல் நடந்தது இனக்கலவரம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். அது தவறென்பது என் கருத்து. கலவரம் அல்லது Riot என்றால் இரு பகுதியினர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது. 83 இல் நடந்தது தமிழரைச் சிங்களக் காடையர் கொலை செய்து கொள்ளையடித்தமை. அது இனக்கலவரம் அல்ல. இனப் படுகொலை அல்லது தமிழரின் படுகொலை. அதை அவ்வாறு கூற நாமே ஏன் தயங்குகின்றோம் என்று புரியவில்லை.
நன்றி.
அன்புடன்,
ஆனந்தன்.
வணக்கம் ஆனந்தன்,கலவரம் என்பது சமூகச்சீர்குலைவு அல்லது சீரழிவு. இதனை ஒரு குழு வன்முறையின் மூலம் அதிகாரிகளுக்கு எதிராக, உடமைகளுக்கு எதிராக மற்றும் மக்களுக்கு எதிராகப் புரியும் சீரழிவுச் செயல் என்றும் கூறலாம். 1983, 1977 மற்றும் 1958 போன்ற ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள இனத்துவேசிகளால் புரியப்பட்ட படுகொலைகள், உடமை அழிப்புகள், பாலியல் வன்முறைகள் எல்லாவற்றையும் எவ்விதம் அழைப்பது?
சிங்களக் காடையர்களின் குழுக்கள் மூலம் தமிழ் மக்கள் மீதும், அவர்கள்தம் உடமைகள் மீதும் புரியப்பட்ட வன்முறை. இதனை இனவன்முறை , இனக்கலவரம் என்று அழைப்பதில் எவ்விதத்தவறுமில்லை. இனக்கலவரம் என்பது பொதுவான சொல். இனக்கலவரத்தின் இன்னுமோர் வடிவமே இனப்படுகொலை (Genocide) . இனக்கலவரம் என்னும்போது சம்பந்தப்பட்ட இனங்கள் ஒருவருடன் ஒருவர் மோதினால் மட்டுமே இனக்கலவரம் என்பதில்லை. ஓரினக் குழு இன்னுமொரு குழுவின் மீது வன்முறையினைப் பாவித்து அழிவு நடவடிக்கைகளைச் செய்தாலும் அதுவும் இனக்கலவரமே.
Last Updated on Tuesday, 24 July 2018 21:13
Read more...

அன்புடன் சகோதரர்க்கு வணக்கம்! நலமாக இருப்பீhகள் என நம்புகிறேன். இத்துடன் மகளிர் தினத்துக்குக்கான கட்டுரை அனுப்புகிறேன்.
அ.ந. கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள் தொடாச்சியாகபடித்துவருகின்றேன். நான் சிறுமியாக இருந்தவேளை என்தந்தை அகஸ்தியர் அவரதுநூல் அடுக்குகளில் அதனை எடுத்துப் படிக்கும்படி கூறுவார். அ.ந.வில் அவர் கொண்டிருந்த இலக்கிய - கொள்கைப் பாசம் அளப்பரியது. என் தந்தை பாதுகாத்த நூல்கள் அத்தனையும் 83 இல் ராணுவத்தால் தீக்கிரையானதும் அதன் தாக்கத்துள்; என்தந்தையை 69 வயதில் இழந்ததும் ஒரு சோக வரலாறு. இப்போ உங்கள் பதிவுகளில் பார்க்கும்போது இதயம் குளிர்கிறது. நன்றி நன்றி. எனது எழுத்துக்களுக்கு களம் அமைத்துத்தரும் உங்களுக்கு மேலும் நன்றி கூறி விடைபெறும் சகோதரி
நவஜோதி.
Last Updated on Thursday, 08 March 2018 18:29
Wednesday, 18 October 2017 18:29
- ஜானகி கார்த்திகேசன் பாலக்கிருஷ்ணன் -
வாசகர் கடிதங்கள்
2017 ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தாரணி அகில் அவர்கள் பகிர்ந்த ஐரோப்பியப் பயணத்தொடர் (1)-(5) அனுபவம் பற்றிய கட்டுரைகளைச் சார்ந்த கருத்துக்களை பகிர முன்வந்துள்ளேன். அவரது கட்டுரைகள் கிரிதரன் அவர்கள் ஜூன் 19ம் திகதி பகிர்விற்கு அளித்த முகவுரையில் கூறியது போல் வேறு சிலர் எழுதும் பட்டும்படாத பாணியில் அல்லாமல் இவர் மிகவும் ஈடுபாடகவும், அதை அணுஅணுவாக அனுபவித்தும், மிகுந்த நகைச்சுவை கலந்தும் எழுதியது என்னைக் கவர்ந்தன. கட்டுரைகளை வாசித்த போது எவ்வாறு சுற்றுலாப் பயணத்தை அனுபவிக்க வேண்டுமெனக் கூறுவதுடன், ஒரு சுற்றுலாப் பயணக் கட்டுரையை எவ்வாறு சுவாரசியமாக எழுத வேண்டுமென ஒரு பாடம் நடாத்தியது போல் இருந்தது. அவரிடமிருந்து நான் கற்றது பல.
அதைப் பகிர்வதற்கு முன்பாக தாரணி அகில் அவர்களை எவ்வாறு சந்தித்தேன் என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். எனது கட்டுரையை ‘லைக்’ பண்ணியவர்களில் அவரும் ஒருவர். முன்பு அறிமுகம் அல்லாதவர் ‘லைக்’ பண்ணுவதானால் அவரது ஆர்வம் என்னவாக இருக்குமென அவாக் கொண்டு அவரது முகநூலில் நுழைந்;தேன். அவர் ஒரு துணைப் பேராசிரியர் என அறிந்து மனமிகு மகிழ்ந்தேன். அத்துடன் அவருக்கு நல்ல நகைச்சுவை ஆர்வம் இருப்பதை அவர் பகிர்ந்திருந்த பலவகையான சுண்டல் பற்றிய கவிதையிலிருந்து அறிந்து கொண்டேன்.
முகநூலில் பலவிடயங்களையும் பார்த்தும் வாசித்தும் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜூன் 19ம் திகதி தாரணி அகில் அவர்கள் ஐரோப்பியப் பயணத்தொடர் (5): ஒளிரும் மாய நகரம் - பாரிஸ் கண்ணில் பட்டது. நான்தான் நீண்ட கட்டுரையை எழுதிவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் நீளத்தில் அவர் என்னை மடக்கிவிட்டார். இருப்பினும் வேறெதிலும் கவனம் செலுத்தாமல் என்னை வைத்திருந்த அவரது கட்டுரையை வாய் விட்டுச் சிரித்தும், சிரிப்பில் கண்ணீர் விட்டும் வாசித்து முடித்தேன். அவரது எழுத்தாற்றல் வியக்கத்தக்கது. அந்த எழுத்து நாமும் அவருடன் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
Last Updated on Wednesday, 18 October 2017 18:42
Read more...
அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணனின் 'நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு!' என்னும் கட்டுரையினை வெளியிட்டிருந்தோம். அதனை முகநூலிலும் பதிவு செய்திருந்தோம். அது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதை அறிய முடிகின்றது. அது பற்றித் தனக்கு வந்த கடிதங்கள் சிலவற்றை ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் அவர்கள் எமக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு பதிவுக்காக அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம். இக்கடிதங்கள் யாவும் அக்டோபர் 15 அன்று அவருக்குக் கிடைத்தவையாகும்.
1.. ஜானகி, கட்டுரையை வாசிக்க எனக்கு நீண்ட நேரம் எடுத்தது. இக்கட்டுரையை எழுத உங்களுக்கு எவ்வளவு நாட்கள் எடுத்திருக்குமென என்னால் ஊகிக்க முடிகிறது. முதலில், உங்களது அபார ஞாபகசக்தி, வண்ணார்பண்ணை சூழல் சார்ந்த உங்களது ஈடுபாடு, பாடசாலை சார்ந்த திடமான உதாரணங்கள் ஆகியவற்றிற்கு எனது பாராட்டுதல்கள் (salute). இது நன்கு ஆராயப்பட்ட கட்டுரை. எதுவும் தவறு எனக் கூறத் தோற்றவில்லை. சில விடயங்களும் கதைகளும் எனது பாடசாலை நினைவுகளை முன்கொணர்ந்தன. முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வு மறக்க முடியாத சம்பவமும், நாம் தமிழர் அதையிட்டு வெட்கப்பட வேண்டியதுமான ஒரு நிகழ்வாகும். எங்கள் வகுப்பில் பல முஸ்லிம் மாணவியர் - சதக்கத்துல்லா குடும்பத்தினர் உட்பட - கல்வி கற்றனர். அவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் வல்லுனர்கள். ஆதலால் பாடசாலை வருடாந்த இதழ் அவர்களுடைய கட்டுரைகள் பலவற்றுடன் பிரசுரிக்கப்படும்.
எமது ஐந்து முச்சந்தி ஒரு பல்கலாச்சாரத்தின் உறைவிடம் என்பது எனது மனதிற்குத் தட்டவில்ல. நான் இப்போதான் உணர்கிறேன் எங்கள் வீட்டிற்கும் வயது முதிர்ந்த, தொள தொளவென பஜாமாவும், மேலங்கியும் அணிந்த வாடிக்கையான வியாபாரி ஒருவர், மைசூர் பாகும் மஸ்கெட்டும் கொண்டு வருவார். பழைய பேப்பர், உபயோகித்த போத்தல்கள் வாங்குபவர்கள் பலர் முஸ்லிம்கள். எங்கள் குடும்பம் பெரிது. ஆகவே ஆண்டு இறுதியில் எங்கள் நோட்டு புத்தகங்களை விற்று நிறையப் பணம் பெற்றோம். எனது நினைவில் ஒரு சில முஸ்லிம்களே செல்வந்தர். கைவிட்டு எண்ணக்கூடியவர்களே சமூகத்தில் அந்தஸ்த்தைப் பெற்றிருந்தனர். எப்படியான பிரமிக்கத்தக்க கவலையற்ற வாழ்க்கை எமக்கிருந்தது. நாமெல்லோரும் ஒரு குடும்பம் போல வாழ்ந்திருந்தோம்.
Last Updated on Tuesday, 17 October 2017 17:34
Read more...
Anbu Sivaram <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Sep 9 at 5:44 AM அன்புடையீர் வணக்கம். பதிவுகள் இணைய இதழில் பல நண்பர்களின் படைப்புகள் வெளிவந்திருப்பதை, கேள்வியுற்று சமீபத்தில் நான் இவ்விதழில் இடம்பெற்றுள்ள பல விஷயங்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் நான் தேடி அலைந்துக்கொண்டிருக்கும் வீதி நாடகங்கள் குறித்த சில கட்டுரைகளும், பதிவுகளும் கிடைத்தன. மிக்க நன்றி. நான் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில், அமைந்துள்ள அனக்காவூர், விஸ்டம் மகளீர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறேன். எனது நண்பர் பூ.பெரியசாமி அவர்களின் கட்டுரையைப் படிக்க தேடியே நான் தங்கள் இணைய இதழுக்குள் வந்தவன். ஆனால் இப்பதிவில் இருக்கும் பல விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. பல நல்ல பயனுள்ள தகவல்களும் கிடைக்கப்பெற்றன.
sathya devi <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Sep 8 at 2:50 PM
வணக்கம். என் பெயர் சத்யா தேவி தமிழ் இலக்கியம் மீது பற்று உடையவள். உங்கள் பதிவுகள் குறித்த அறிமுகம் ஒரு தோழர் மூலம் கிடைத்தது அதை படித்து மகிழ்ந்தேன். நன்றி
Last Updated on Sunday, 10 September 2017 18:02
Read more...
'தமிழ்க்கவி பற்றிய சர்ச்சை சம்பந்தமாக நான் 'பதிவுகள்' இணைய இதழில் பதிவு செய்திருந்தேன். அதற்கு எழுத்தாளர் ஆற்றிய எதிர்வினை இது. நன்றி முருகபூபதி.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தமிழ்க்கவி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நீங்கள் நல்லதொரு விளக்கம் தந்துள்ளீர்கள். அதற்காக உங்களைப்பாராட்டுகின்றேன். தமிழ்க்கவியின் கட்டுரைக்காக எதிர்வினையாற்றியவர்கள் இவ்வளவுதூரம் அமர்க்களம் செய்திருக்கத்தேவையில்லை. மலையகத்தமிழர்களின் அவலம் முடிவுறாதது. செ. கதிர்காமநாதனின்" வெறும் சோற்றுக்கே வந்தது " (அஞ்சலியில் வெளியான கதை) டானியலின் சில படைப்புகள். இவ்வாறு நீங்கள் சொல்வதுபோன்று பல தகவல்கள் ஆதாரம். எனினும் நீங்கள் உரியநேரத்தில் முன்வந்து சரியான விளக்கம் தந்துள்ளீர்கள். வாழ்த்துகின்றேன். நன்றி.
Last Updated on Friday, 21 April 2017 07:09
எழுத்தாளர் கமலாதேவியின் நேர்காணலைப் பதிவுகள் இணையத் தளத்தில் வாசிக்க முடிந்தது. சிறந்ததொரு எழுத்தாளரின் திறமைகளை புலம்பெயர்ந்த இலக்கிய உலகத்திற்கு அறியத் தந்ததையிட்டு எழுத்தாளரும் நண்பருமான அகில் அவர்களையும், இதைப் பலரும் அறியத்தந்த பதிவுகள் ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரன் அவர்களையும் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். இதற்கெல்லாம் காரணமான சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் ‘தமிழவேள் விருது’ கிடைக்கப் பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனுக்கு எனதும், எனது குடும்பத்தினரதும் இனிய பாராட்டுக்கள்.
பதிவுகள் இணையத்ததளத்தின் மூலம்தான் எனக்குச் சகோதரி கமலாதேவியின் அறிமுகம் முதலில் கிடைத்தது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எனது கனடிய 25 வருட இலக்கிய சேவையைப் பாராட்டிச் சென்ற வருடம் விழா எடுத்த போது சிறப்பான வாழ்த்துச் செய்தி ஒன்றைச் சகோதரி கமலாதேவி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். ‘கனடாத் தமிழர் இலக்கியம் - குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற ஆவண நூலில் சமகால எழுத்தாளர்களின் வாழ்த்துச் செய்தியுடன் இவரது வாழ்த்துச் செய்தியும் இடம் பெற்றிருக்கின்றது.
சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட திருமதி. கமலாதேவி அரவிந்தன் அவர்கள் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் எழுதும் ஆற்றல் கொண்டவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம், மலாய், எனப் பல மொழிகள் சரளமாகப் பேச, எழுதத் தெரிந்தவர். சங்க இலக்கியத்திலும் இவருக்கு ஈடபாடு அதிகம். இவரைப் பாராட்டி எழுதுவதானால் நிறையவே எழுத முடியம். இச்சந்தர்ப்பத்தில் 'தமிழ்வேள் விருது' பெற்ற பண்பான எழுத்தாளரான கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Wednesday, 27 April 2016 19:02
அன்ப! தங்களது 12-03-2016 திகதியிட்ட வாசிப்பும்யோசிப்பும் பகுதியிலே, ‘அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது’ எனக்குறிப்பிட்டதோடு அவ்வாறான செயற்பாடுகளுக்குச்சான்றுகளாக என்னுடையதும் மற்றும் நண்பர் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்களுடையதுமான ஆய்வுச்செயற்பாடுகளைச்சுட்டி, எம்மிருவருக்கும் கௌரவமளித்திருந்தீர்கள். அதற்காக முதற்கண் எனது மனநிறைவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தொடர்பிலே மேலும் ஒரு நன்றிக்கடப்பாட்டை உங்களுக்கும் நீங்கள் சுட்டியுள்ள ஏனைய இணைய இதழ்ச்செயற்பாடாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் என்போன்ற ஆய்வளர்களுக்கும் உளது என்பதையும் இங்கு குறிப்பிட விழைகிறேன். இது இணைய இதழ்களின் ஆய்வுநிலைப் பயன்பாடு தொடர்பானதாகும். இத்தொடர்பிலான சிறு விளக்கமொன்றை இங்கு முன்வைக்கவேண்டியது எனது கடமையாகிறது..
ஆய்வு அல்லது ஆராய்ச்சி எனப்படும் செயன்முறையானது பல படிநிலைகளைக் கொண்டதுஎன்பதை அறிவீர்கள். அவ்வாறான படிநிலைகளைக் கல்வியாளர்கள்முக்கியமான மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.
முதலாவது கட்டம் :ஆய்வுகளுக்கான தரவுகளைத் தேடித்திரட்டல். இரண்டாவது கட்டம்:திரட்டப்பட்டவற்றைத்தொகை வகைசெய்து விளக்கியுரைத்தல் மற்றும் விமர்சித்தல் . மூன்றாவதுகட்டம்:குறித்த ஆய்வுப்பொருண்மை சார்ந்த புதிய எண்ணக்கருக்கள், புதிய கருதுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கி அவ்வாய்வுப்பரப்பைப் புதிய கட்டத்துக்கு வளர்த்துச்செல்லுதல் .
Last Updated on Saturday, 19 March 2016 18:29
Read more...
அன்ப! அண்மையில் வெளிவந்த தமிழர் தகவல் மலரில் நான் எழுதிய. 'கனடாவில் தமிழ் இலக்கியம்! வரலாறு மற்றும் வளர்ச்சிநிலைகள் தொடர்பான சில அவதானிப்புகள்' என்ற தலைப்பிலான கட்டுரை தொடர்பான தங்களது 22 மற்றும் 26 திகதியிட்ட பதிவுகளை வாசித்தேன்.
எனது அக்கட்டுரை . ஆய்வுச்சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது எனவும் எதிர்காலத்தில் இத்துறை பற்றிய ஆய்வுகளுக்கு உசாத்துணையாக விளங்கக்கூடிய முக்கியத்துவமுடையது எனவும் மதிப்பிட்டிருந்தீர்கள். தங்களது அம்மதிப்பீடு எனக்கு மன நிறைவைத்தருவதாக அமைந்தது என்பதை முதலில் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அக்கட்டுரையிலுள்ள முக்கிய குறைபாடுகள் எனதாங்கள் கருதுவனவற்றையும் நீங்கள் எடுத்துக்காட்டியிருந்தீர்கள். விடுபட்டமுக்கிய தகவல்களையும் பொறுப்புணர்வுடன் சுட்டியிருந்தீர்கள். அவ்வாறாக நீங்கள் கருதக்கூடிய குறைபாடுகள் மற்றும் விடுபாடுகள் என்பவற்றுக்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்பதையும் நான் மட்டுமே பொறுப்பாவேன் என்பதையும் உங்களுக்கும் இவ்விணையதள வாசகர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது எனது உடனடியான கடமையாகிறது. ’ கனடாவில் எழும் தழிலக்கியமானது புலம்பெயர் இலக்கியம் என்பதான பொது அடையாளத்திலிருந்து கனடியத்தமிழிலக்கியம் என்பதான தனி அடையாளத்தை நோக்கி மாற்றமெய்தத் தொடங்கியுள்ளது’ என்பதை உணர்த்தும் வகையில் ஒரு கட்டுரை எழுதுவதே எனது பிரதான நோக்கம். அவ்வாறான வரலாற்றுப்போக்கினை அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கான முக்கிய அம்சங்களை மையப்படுத்தியே அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
Last Updated on Monday, 29 February 2016 00:14
Read more...
Dear Mr. Giritharan, Good day, We read your Pathivugal when ever we get time. You are publishing really valuable information and we spare time to read,even we are so busy in our regular job. Recently i read research articles of Dr. C. Ravisankar., M.A. Phd, Professor of Madurai Kamarajar University, Madurai, India. Really awesome researches. I felt along with my friends who are here in Kingdom of Bahrain that really you are doing great job for our great, ancient Tamil language. I wish you all the best your team and all the writers. Keep rocking...
Your sincerely, Engineer.C.KARUPPIAH, Al - Manama, Kingdom of Bahrain
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Monday, 26 October 2015 06:18
Read more...
[ பதிவுகளில் வ.ந.கிரிதரனின் பக்கத்தில் 'சிலோன் விஜயேந்திரன்' பற்றி வெளியான குறிப்பு பற்றிய குரு அரவிந்தனின் எதிர்வினை இது. இங்கு 'சிலோன்' விஜயேந்திரன் பற்றிய மேலதிகத்தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார். அவருக்கு நன்றி. - பதிவுகள்-]
''பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும். ஓடையிலே என்சாம்பர் கரையும் போதும் ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும்.'' - கவிஞர் ராஜபாரதியின் கவிதை வரிகள் -
கல்லூரி நாட்களிலே இராஜேஸ்வரன் மனப்பாடம் செய்து வைத்திருந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் என்பதால் இவரிடம் இயற்கையாகவே விகடம் குடியிருந்தது. இலக்கிய ஆர்வத்தால் தனது கல்வியைத் தொலைத்தவர். தனது சகோதரியின் அகால மரணத்தைத் தொடர்ந்து மகிழ்ச்சியைத் தொலைத்திருந்தார். சகோதரியின் பெயரான விஜயா என்பதையும், அவரது நெருங்கிய நண்பனான மகேந்திரன் என்பவரின் பெயரையும் இணைத்து விஜயேந்திரன் என்ற புனைப் பெயரை சூடிக் கொண்டார். படிக்கும் காலத்திலேயே துவிச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் சென்று படம் பார்த்து விட்டு வருவார். பேச்சு வன்மை மிக்கவரான இவர் பைலட் பிரேமநாத் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்ததால் சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்பட்டார். நடேஸ்வராக் கல்லூரி தமிழ் மன்றத்தில் இலக்கிய ஆர்வம் உள்ள சிலர் ஒன்றாக இணைந்து கையெழுத்துப் பிரதி நடத்தினோம்.உயர் வகுப்பில் இருந்த இவரே இதற்குப் பொறுப்பாகவும் இருந்தார். மாவை ஆனந்தனும் இவரும் இணைந்து தமிழ் இலக்கிய வட்டம் ஒன்றை நடத்தினார்கள். ஆண்டு விழாவிற்காகச் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தினார்கள். என்னிடம் வீடு தேடி வந்து சிறுகதை ஒன்றைப் போட்டிக்காகப் பெற்றுச் சென்றார்கள். முதற்பரிசு அந்தக் கதைக்குக் கிடைத்ததால் அதற்குப் பரிசாகப் பாரதி பாடலும், பாரதிதாசன் பாடலும் அடங்கிய புத்தகங்களைப் பரிசளிப்பு விழாவில் பரிசாகத் தந்தார்கள். அதுவே நான் இலக்கியத்திற்காகப் பெற்ற முதற் பரிசாகும் என்பதால் இன்றும் நினைவில் வைத்திருக்கின்றேன். தீவிபத்து ஒன்றில் அவர் இறந்ததாகக் கேள்விப்பட்டேன். நல்லதொரு கவிஞரை இழந்துவிட்டோம்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Sunday, 30 August 2015 21:11
Kuru Aravinthan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> wrote: Subject: RE: நஸ்ரியா Date: Sunday, June 21, 2015, 10:37 AM
நீண்ட நாட்களின் பின் நல்லதொரு கவிதை படித்ததில் துயரம் கலந்த மகிழ்ச்சி. முகநூலில் இருந்து தேடி எடுத்து தந்த முத்துக்காகக் கண்கள் பனிக்கின்றன.
நீரடித்து நீர் விலகாதெனில் உன்னையும் என்னையும் எப்படி விலக்கலாம்?
தமிழினி ஜெயகுமாரனுக்கும், கவிதையைப் பதிவு செய்த தங்களுக்கும் எனது நன்றி.
அன்புடன் குரு அரவிந்தன்
Last Updated on Monday, 22 June 2015 18:28
Read more...
From: Kalaiarasy To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Sunday, September 29, 2013 11:29 AM Subject: தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கட்டுரைகள்!
வணக்கம், நீங்கள் உங்கள் தளத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தீர்கள். தமிழ் விக்கிப்பிடியர்களில் ஒருவர் என்ற முறையில் மகிழ்ச்சியும், உங்களுக்கு எமது நன்றிகளும்.
கலையரசி
From: subramaniam kuneswaran To: Navaratnam Giritharan Sent: Friday, September 06, 2013 2:20 PM Subject: new kaddurai - kuneswaran
அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, எனது கட்டுரைகளை 'குணேஸ்வரன் பக்கம் ' என்ற புதிய பக்கத்தில் தாங்கள் இணைத்திருந்தது கண்டேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
அன்புடன் சு. குணேஸ்வரன்
From: Nadarajah Selvarajah Sent: Sunday, September 08, 2013 2:12 PM Subject: Eelanadu: History of a Regional Newspaper
அன்புடையீர், ஈழநாடு பத்திரிகையின் வரலாற்று ஆவணமொன்றின் தொகுப்பு முயற்சியில் கடந்த சிலகாலமாக ஈடுபட்டு வருகின்றேன். அதற்கு உலகெங்கிலுமுள்ள ஈழநாடு வளர்த்தெடுத்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளைக் கோரியிருக்கிறேன். இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையின் இறுதியில் அச்செய்தி உள்ளது. தயவுசெய்த இக்கட்டுரையை பிரசுரித்து எனது தேடலை எளிதாக்கி உதவவும்
அன்புடன் என்.செல்வராஜா
N.Selvarajah Bibliographer Compiler, Noolthettam: Bibliography of Sri Lankan Tamils Worldwide Postal Address: 48 Hallwicks Road, Luton, LU2 9BH, United Kingdom Telephone: (0044) 7817402704 E-Mail:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
website: Noolthettam.com
From: THENDRAL MELLISAI To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Sunday, September 08, 2013 9:24 AM Subject: சிறுகதை
அன்புள்ள பதிவுகள் பொறுப்பாளர்களுக்கு, மின் இதழ்களில் இதுவரை பிறரின் படைப்புகளை வாசித்த அனுபவம் மட்டுமே உண்டு. இன்று என் படைப்பையும் அனுப்ப ஆசையும் ஆவலும் மேலிட்டதில் ஒரு சிறுகதையை அனுப்பியுள்ளேன்.
நன்றி, வணக்கம். சிதனா
மலேசியா
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Wednesday, 02 October 2013 23:34
Last Updated on Wednesday, 02 October 2013 23:38
Read more...
[பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]
From: thiyagarajan solai To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Tuesday, January 08, 2013 4:42 AM Subject: மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா
ஆசிரியர்-பதிவுகள் அனபுடையீர், வணக்கம் எங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன் வாய்ப்பாக அமையுமானால் மியன்மா நாட்டிற்கு பயணம் வரலாமே! உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். என்றும் தமிழுடன், சோலை.தியாகராஜன் Yangon,Myanmar 0095 943042105.
[நண்பர் சோலை தியாகராஜனுக்கு, தகவலுக்கு நன்றி. இது பற்றிப் பதிவுகளிலும் அறிவிப்போம். தங்களது அழைப்புக்கும் நன்றி. மியனமாவிலிருந்து தொடர்பு கொண்டிருக்கின்றீர்கள். மகிழ்ச்சியாகவிருக்கிறது. அங்கு உங்களது பணி தொடர வாழ்த்துகள். மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரையொன்றினை பதிவுகளுக்கு அனுப்பி வையுங்கள். தற்போது பதிவுகளில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் கலை/இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும் அறிய ஆவலாகவுள்ளோம். - ஆசிரியர், பதிவுகள்-]
Last Updated on Wednesday, 23 January 2013 05:09
Read more...

From: appadurai muttulingam To: Giritharan Navaratnam Sent: Thursday, July 19, 2012 9:00 AM Subject: vanakam
Dear Giri, The Tamil Literary Garden Iyal Virudhu nomination form is attached. I shall be grateful if you will please please carry this in PATHIVUKAL website. Many thanks for your usual cooperation. best regards. anbudan a.muttulingam
Last Updated on Friday, 20 July 2012 22:38
Read more...

From: Muralidharan Parthasarathy To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Monday, May 21, 2012 3:05 AM Subject: Sathyanandhan's blog id
அன்பு வ.ந.கிரிதன் அவர்கட்கு வணக்கம். என்னுடைய படைப்புக்களை tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைத் தளத்தில் வாசிக்க வரிசைப்படுத்தியிருக்கிறேன். அன்பு சத்யானந்தன்.sathyanandhan,
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
[உங்கள் வலைப்பதிவு பற்றிய விபரத்தை அறியத் தந்ததற்கு நன்றி. பதிவுகள் இணைய இதழில் உங்கள் வலைப்பதிவினை அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இது போல் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டும், ஆய்வுகளுக்கு, திறனாய்வுகளுக்கு மற்றும் படைப்புகளை வாசித்துப் பயனுறுவதற்கு இத்தகைய பதிவுகள் அவசியம். - ஆசிரியர், பதிவுகள்-]
Last Updated on Friday, 01 June 2012 23:05
Read more...

From: thilaga bama To: pathivukal Sent: Thursday, December 22, 2011 3:19 PM Subject: அணையைக் கட்டினார்கள், அடிவயிற்றில் அடித்தார்கள்
வணக்கம், இந்தக் கட்டுரையை தங்கள் இதழ்களீல் மீள்பிரசுரம் செய்திடவேண்டும் . அணைகள் பிரச்சனைகளாக இருக்கின்ற இந்த நேரத்தில் இக்கட்டுரை அவசியம் எனக் கருதுகின்றேஎன். இக்கட்டுரையுடன் கட்டுரைஆசிரியரின் புகைப் படமும், கட்டுரையையும் அனுப்பியுள்ளேன். கட்டுரையை எழுதியவர் எனது பாட்டனார். அவரது அனுமதியுடன் அனுப்பியுள்ளேன்
Last Updated on Sunday, 20 May 2012 12:48
Read more...
பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை tscu_inaimathi எழுத்தினை அல்லது முரசு அஞ்சலினைப் பாவித்து எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]
Thu, March 24, 2011 2:49:57 PM From: வதிலை பிரபா <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Add to Contacts To: vathilaipraba <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
'மகாகவி' மார்ச் 2011 இதழ் படியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள். படைப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள். http://issuu.com/vathilaipraba/docs/pdf_feb-mar_11
கவிஞர். வதிலைபிரபா தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் ஆசிரியர், மகாகவி மாத இதழ் ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202. தமிழ்நாடு, இந்தியா. phone: 04543 -26 26 86 cell: 96 2 96 52 6 52, 88 70 70 99 63 email:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
,
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
blog: vathilaipraba.blogspot.com
Thu, March 24, 2011 1:00:08 AM subramaniamneela neelakantan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
To: pathivugal 02 <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அவர்களுக்கு வணக்கங்களுடன் நீலகண்டன். பதிவுகள் இதழை நெடுங்காலமாகவே படித்து வருகிறேன். வளமான உலகளாவிய படைப்புக்களுடன்... செய்திகளுடன்... உலகளாவிய தகவல்களையும் அளிக்கின்றது. நெடுங்காலங்களுக்கு முன்பு நான் அனுப்பி இருந்த அகங்காரப் பலி, நியூட்டனின் மூன்றாம் விதி ஆகிய கவிதைகளை பதிவுகளில் தற்போது கண்ட போது மகிழ்ச்சி அளித்தது.
மிக்க நன்றி.. அன்புடன் குமரி எஸ். நீலகண்டன்
Mon, March 14, 2011 1:26:54 AMRe: document in amudam font From: sandhya giridhar <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> I am very much thankful for publishing the article in esteemed magazine and it is really pleasure to be one of the contributors to pathivukal.The current look of pathivukal is wonderful and with this new outlook it gives boost to readers to read more and more of the articles. I have been in touch with Pathivukal since I started my writing career. Actually I started my wiriting career from pathivukal..... But this time in the article most of the paragraphs are missing and the opinions are not correlating with each other. Some parts of the articles are missing ...... and if it is corrected I would be highly obliged........ Once again I thank you for giving space for the article in the esteemed Pathivukal magazine. Anbudan, sandhya giridhar [Thanks for pointing out the errors. - editor]
Fri, March 11, 2011 1:25:37 PMhi From: bavananthan santhiralingam <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> உங்களது இணையத்தினை பார்த்து மகிழ்ந்தேன். உண்மையான உணர்வுகள நிறைந்த படைப்புகளோடு உங்கள் சேவை இருக்கின்றது. தங்கள் சேவை இன்னும் சிறக்க எனது வாழ்த்துக்களும் வேண்டுகோளும் உரியதாகட்டும். உங்களது அனுமதி கிடைக்கும் பட்சத்தில எனது கருத்து பதிவுகளையும் உங்களுக்கு அனுப்பி வைப்பதில் ஆவலாக உள்ளேன். [உங்கள் கனிவான கருத்துகளுக்கு நன்றி. உங்கள் கருத்துகளை எம்முடன் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். - ஆசிரியர்-]
Dr Nadesan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Looks very nice and clear; Warm regards Noel Nadesan
From: Muralidharan parthasarathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Subject: இரு கவிதைகள் To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Date: Wednesday, January 5, 2011, 8:01 PM அன்பு பதிவுகள் ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சிறு பத்திரிக்கைகளில் தீவீரமாக எழுதி வரும் நான் யூனி கோட் பரிச்சயமானதால் இணைய இதழ்களிலும் எழுதுகிறேன். தங்கள் இத்ழுக்கு இரு கவிதைகளை இணைத்துள்ளேன். நன்றி. சத்யானந்தன் [கவிதைகளுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். -- ஆசிரியர் -]
Wed, March 9, 2011 7:53:52 AMArignar Anna From: Anna Peravai <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> அண்ணாவைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் அறிய www.arignaranna.info
Sun, March 6, 2011 3:49:59 AMwelcome From: maya sundaram <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> இந்த பிறவி எதனால் பெறப்பட்டது? நான் என்பது என்ன? இந்த வாழ்க்கைக்கு விளக்கம் என்ன? இந்தவித அடிப்படைக்கேள்விகளுக்கு விடை காண
முயலும் வலைத்தளம் இது. தங்கள் மின்னிதழில் அறிமுகப்படுத்துங்கள். நன்றி, வணக்கம். அன்புடன், சுந்தரம். http://vaalkaivilakkam.blogspot.com/ [உங்கள் வலைத்தளம் சிந்தனையைத் தூண்டுவது. விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் உள்வாங்கி வெளிப்படும் கருத்துகள் தர்க்கச் சிறப்புடன் சிந்தனையையும் தூண்டுவன. நிச்சயம் 'பதிவுகள்' இணைய இதழில் அறிமுகப்படுத்துவோம் [ - ஆசிரியர்]
Wed, March 2, 2011 9:45:36 AM From: வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> அன்புள்ள நண்பருக்கு, வடக்கு வாசல் பிப்ரவரி 2011 இதழை வலையேற்றம் செய்திருக்கிறோம். http://www.vadakkuvaasal.com முகவரிக்கு சென்று எங்கள் பிப்ரவரி இதழை நீங்கள் வாசிக்கலாம். அன்புடன் பென்னேஸ்வரன்
Sun, February 20, 2011 5:36:53 AM From: na vin <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> தோழர்களுக்கு என் வலைப்பக்கம் உங்கள் பார்வைக்கும் வாசிப்புக்கும் http://navin.vallinam.com.my/
Ahil Sambasivam <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Mon, February 21, 2011 10:01:24 AM வணக்கம்,கதைப் பிரியர்களுக்கு இதோ புதிய விருந்து. ஈழத்து விருந்து. படித்துச் சுவையுங்கள். கதைகளை சுவைத்துவிட்டு உங்கள் ரசனைக்கு விருந்தாக அமைந்த கதைகளின் தரம் பற்றிய விமர்சனங்களை பகிர்ந்துகொள்ள மறந்துவிடாதீர்கள். http://eelaththusirukathaikal.blogspot.com
பிரியமுடன், அகில்.
* From: வதிலை பிரபா <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Thu, January 27, 2011 11:52:12 AM
மகாகவி ஜனவரி 2011 இதழ் படியுங்கள். http://issuu.com/vathilaipraba/docs/mak_jan_11_pdf
கவிஞர். வதிலைபிரபா தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் ஆசிரியர், மகாகவி மாத இதழ் ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202. தமிழ்நாடு, இந்தியா.
phone: 04543 -26 26 86 cell: 96 2 96 52 6 52, 88 70 70 99 63 email:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
,
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
blog: vathilaipraba.blogspot.com
*Wed, January 26, 2011 7:35:53 AM8 வது திருப்பூர் புத்தக கண்காட்சி அழைப்பிதழ் From: books for children nagarajan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
அன்புடையீர் வணக்கம், 8 வது திருப்பூர் புத்தக கண்காட்சி அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன். தாங்களும், தங்களது நண்பர்களும் பங்கேற்க ஆவன செய்ய வேண்டுகிறேன். தமிழகத்தில் ஒரு பதிப்பகத்தின் முயற்சியில் 100 க்கணக்கன பதிப்பகங்கள் பங்கேற்று விரிவான ஒரு புத்தக கண்காட்சி நடப்பது இங்கு மட்டுமே. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடப்பது இங்கு மட்டுமே. இக்கண்காட்சி மேலும் வெற்றி பெற உங்கள் உதவியை நாடுகிறோம்.
க. நாகராஜன் ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் புத்தக கண்காட்சி.
*Tue, January 25, 2011 7:01:39 PM’உறவு’ From: Navam K Navaratnam <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> View Contact
பார்க்காதவர்கள் பார்த்து மகிழ்வதற்கென மீண்டும் 5310 Finch Ave East, # 38 – 39 (Markham & Finch) பாரதி கலைக்கோயில் அரங்கில் ஜனவரி 29 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திவ்யராஜனின் “உறவு” எமது கதையை, எமது மொழியில், எமது கலைஞரூடாகப் பேசும் திரைக் காவியம்!
தொடர்புகளுக்கு: திவ்யராஜன்
*Thu, January 20, 2011 11:35:15 AM தினம் ஒரு தகவல் சேவை From: தினம் ஒரு தகவல் <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
அன்பிற்குரிய நண்பர்களே, அனைவருக்கும் எமது இனிய வணக்கம்! கடந்த மூன்று மாத காலமாக சேகரித்த தினம் ஒரு தகவலின் கருந்தாய்வை பின்தொடர்ந்து இந்த சேவையை மேலும் மேம்படுத்துவதற்காக புதிய முயற்சியினைத் துவங்க உள்ளோம். இந்த புது முயற்சியின் தொடக்கமாக, தாங்கள் அனைவரையும் கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தைச் சொடுக்கி மற்றும் ஒரு முறை தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Important Note: Though you are a SUBSCRIBED member request you to SUBSCRIBE once again to receive this service. என்றும் அன்புடன், கொல்லிமலைச் சாரால் ஆனந்த் பிரசாத். 416-244 2484 / 416-832 5230
*Wed, January 19, 2011 10:33:17 PM From: பாலச்சந்தர் முருகானந்தம் <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>Add';
document.write( '' );
document.write( addy_text75669 );
document.write( '<\/a>' );
//-->
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
to Contacts
தமிழ் புத்தகம் - ஓரு ஆய்வு: தமிழ் புத்தகம் பற்றிய ஆய்வில் கலந்துக்கொள்ளுங்கள். 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பெருங்கள். ஆய்வில் பங்குகொள்ள இதனை சொடுக்கவும்..
https://spreadsheets.google.com/viewform?key=0Ai_E9abOK71CcHQxQ1M3TlhaN0ZYLXpKS1h1ejNhRUE&hl=en#gid=0.
விதிமுறை:
1. எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பது அவசியமில்லை. ஆனால் பதில் அளிக்காவிட்டால் ஆய்வு முழுமையடையாது. ஆய்வினை முழுமையாக்க உதவுங்கள் 2. பெயர், மின்னஞ்சல் போன்றவற்றை பாதுகாக்கப்படும். பணத்திற்காக யாரிடமும் விற்கப்படா! 3. ஆய்வின் இருதியில், ஒருவரை தேர்ந்தெடுத்து 500 ரூ வரை மதிப்புள்ள புத்தகங்களை வாங்கித்தரப்படும். 4. தேர்ந்தெடுக்கப்பட்டவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அவரின் முகவரியை அறிந்தபின் அவர் கேட்கும் புத்தகங்களை அனுப்புவோம். முகவரி இந்தியாவினுல் இருக்க வேண்டும். 5. ஆய்வின் நிறைகள் / குறைகள் அனைத்தையும் mbchandar AT gmail DOT com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
* Sat, December 25, 2010 7:47:44 AM From: Peermohamed Puniyameen <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
அன்பின் சோதர, ஒரு விடயத்தை காலதாமதமாக்குவதால் நாங்கள் பல இழப்புகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. என் வாழ்க்கையில் எனது கவனயீனத்தின் காரணமாக வலக் கண் பார்வையை இழக்க நேரிட்ட போதிலும்கூட, இறைவனின் அருளால் பார்வை மீண்டுவிட்டது. இச்சம்பவம் என் மனதில் ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது. இதனை கீழே உள்ள எனது வலைப்பூவில் பார்க்கலாம்.
http://puniyameen.blogspot.com/ இது பற்றி தங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கின்றேன்.
அன்புடன் புன்னியாமீன் எமது சகோதர வலைப்பூக்கள் http://evarkhalnammavarkhal.blogspot.com/ http://noolthettam.blogspot.com/ http://sinthanaivattam.blogspot.com/ http://mazeethapuniyameen.blogspot.com/
From:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Saturday, November 27, 2010 12:27 AM Subject: Vimbam 2010 Results and Review அன்புடன் கிரிதரனுக்கு, இத்துடன் விம்பம் போடடி முடிவுகளும் விமர்ளனமும் இணைத்துள்ளேன். தயவுசெய்து பதிவுகள் இணையத்தளத்தில் பிரசுரிக்குமாறு பணிவன்புடன் விம்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன் கே.கே.ராஜா
From: Krishnamurthy Sent: Friday, December 03, 2010 5:14 AM Subject: Dinamalar - Writers required வணக்கம், உங்கள் பதிவுகள்.காம் மின்-ஏட்டை அண்மையில் கண்டேன். பல்லின சமூகமும், கனடிய இலக்கியமும்! போன்ற தலைப்புக்கள் பிடித்திருந்தது. தினமலரில் வெள்ளி தோறும் அங்காடி தெரு என்ற இணைப்பு வருகிறது. இதில் வாழ்முறை, நுகர்வோர் கலாசாரம் பற்றிய விஷயங்கள் உள்ளன. ஜூட் என்ற பயண பகுதிக்கும், ஆ/ அம் என்ற உணவு பகுதிக்கும் எழுத்தாளர்கள் தேடி கொண்டு இருக்கிறோம்.
நன்றி கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு துணை ஆசிரியர் தினமலர்
From: ramakrishnan latha Sent: Saturday, November 27, 2010 11:37 PM Subject: on environment மதிப்பிற்குரியீர், நலம், நலமென்று நம்புகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அது குறித்த விழிப்புணர்வு தொடர்பாக நீங்கள் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட முன்வந்துள்ளமை மனநிறைவைத் தருகிறது. இங்கே சென்னையில் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தியின் தலைமையின் கீழ், கவிஞர் கடற்கரை, எழுத்தாளர் ரங்கையா முருகன் போன்ற தோழர்களின் முன்முயற்சியில் சிற்றிலை என்ற அமைப்பு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து மாதாந்திரக் கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முயற்சியை முனைப்பாக மேற்கொண்டு வருகிறது. அது குறித்த சில செய்திகளைத் தங்கள் பார்வைக்கு அனுப்பிவைத்துள்ளேன். முடிந்தால் வெளியிடவும்,
நன்றி, தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்
From: Parthasarathi Seshadri To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Thursday, September 23, 2010 4:44 AM Subject: Partha, Saudi Arabia
Dear Mr.Girithran, I read your short stories, you explain daily life in Toronto city. I read your articles also. I like your writing style. சீதாக்கா A good short story.
Sincerely, Parthasarathi, Saudi Arabia. http://partha-parthaa.blogspot.com/2010/08/partha_31.html
Last Updated on Sunday, 27 March 2011 22:24
|