கட்டுரைச் சுட்டு

எதிர்வினை 6: ஸைபர் வெளியும் மனித உடல்களும்! அவதூறு-- வாழையடி வாழை!  - ஜெயமோகன்

ஜெயமோகன்நாஞ்சில்நாடன் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கூற்று  ஒரு அவதூறு வெட்டவெளிச்சமாக்கப்படும்போது இன்னொன்றுக்குத் தாவும் ஸ்டாலினிஸ்டின் கீழ்த்தர உத்தி மட்டுமே. அதேகட்டுரை அப்படியே காலச்சுவடில் கைப்பிரதியாக நாஞ்சிலநாடனால் அனுப்பபட்டு பிரசுரமாகியுள்ளது. அதில் உள்ள எட்டு சொற்கள் [பொருள் மாற்றம் இல்லாமல்] திண்ணை கட்டுரையில் மாறியுள்ளன என்பதே காலச்சுவடு கண்ணன் முன்வைத்த குற்றச்சாட்டு.  அதை டைப் செய்து அனுப்பியது நான் என்பதை அவரது வாசகர்களுக்குச் சுட்டிக்காட்டும் உத்தியாக அதை மேற்கொண்டார். அதை நான் மறுக்கவுமில்லை. நாஞ்சில்நாடனின் மூலம் என்னிடம் உள்ளது. இம்மாதிரி சில்லறை சர்ச்சைகளுக்குள் புக நேரமில்லை என நாஞ்சில்நாடன் ஒதுங்கிக் கொண்டார். நாஞ்சில்நாடன் என்னைவிடக் காலச்சுவடுக்கு நெருக்கமானவர். அவரது பிரசுரகர்த்தர்களும் கூட . மேலும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்களைப் படிப்பவர்களுக்கு அவரது நடை தெரியாமலிருக்காது.

அவதூறை மறுத்தால் புதிய அவதூறே வரும் என்பது என் அனுபவம்.ஆனாலும் வேறு வழி இல்லை. நான் புனைபெயர்களை பயன்படுத்தும்போது அக்கட்டுரைகள் வெறும் இலக்கியத் தகவல் கட்டுரைகளாகவே இருக்கும். அதே இதழில் என்னுடைய வேறு கட்டுரையும் இருக்கும். ஒருபோதும் என் கருத்துக்களை நான் வேறு ஒருவராக நின்று சொன்னது இல்லை. என் வாசகர்களுக்கும் நான் எது எழுதினாலும் உடனே அடையாளம் தெரியும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[பதிவுகள் விவாதத்தளத்திலிருந்து; http://www.geotamil.com/forum/]

நன்றி: பதிவுகள் ஜனவரி 2005; இதழ் 61

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R