
எழுத்தாளர் ஹம்சத்வனி (தமிழ்ச்செல்வன் கனகசுந்தரம்) எண்பதுகளில் என் கவனத்தையீர்த்த கவிஞர்களிலொருவர். க.தமிழ்ச்செல்வன் என்னும் பெயரில் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதுவரை இவரது மூன்று கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'சிறைகளில் இருந்து' , 'அக்கரைக்குப் போன அம்மாவுக்கு' மற்றும் 'முடிவிலும் அழியாதது' ஆகியவையே அவை. இவற்றில் 'அக்கரைக்குப் போன அம்மாவுக்கு' என்னிடமிருந்தது. அண்மையில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. நண்பர் யாரோ எவருக்கோ வாசிக்கக் கொடுத்திருக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகக் கவிஞர்களென்றால் முதலில் நினைவுக்கு வரும் மூவர்: சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் & ஹம்சத்வனி.
அண்மையில் நூலகத்தில் இவரது 'முடிவிலும் அழியாதது' கவிதைத்தொகுப்பை வாசித்திருந்தேன். தொடர்ந்து இவரும் முகநூலினூடு தொடர்புக்கு வந்தார். இரண்டுமே தற்செயலாக நடந்தவை. ஆனால் அத்தற்செயல்களுக்கிடையில் நிலவிய ஒற்றுமை என்னை வியக்க வைத்தது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கவிதை நடை பிடித்திருக்கும். தேவைக்கதிகமாகப் படிமங்கள் நிறைந்து, விடுகதை போடும், வெட்டி முறித்த கவிதைகளை என்னால் ஒருபோதும் சுவைத்திட முடிந்ததில்லை. ஆற்றொழுக்குப்போன்ற தெளிந்த நடையில்., அவ்வப்போது படிமத்தாமரைகள் பூத்திருக்கும் கவிதைவாவிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. என்ன இவன் படிமங்களை எதிர்த்துகொண்டு படிமத்தாமரைகள், கவிதைவாவிகள் என்று படிமங்களை அள்ளித்தெளிக்கின்றானென்று பார்க்கின்றீர்களா? நான் கூறவந்தது தேவைக்கதிகமான படிமங்களின் தேவை தேவையில்லையென்பதையே. ஹம்சத்வனியின் கவிதைகள் அததகையவை.
கவிஞர் ஹம்சத்வனியின் எழுத்து நடை எனக்குப் பிடிக்கும். மனத்தைத்தொட்டு, வருடிச்செல்லும் நடை. அண்மையில் வாசித்த இவரது 'முடிவிலும் ஆழியாதது' கவிதைத்தொகுதியிலிருந்து என் கவனத்தையீர்த்த கவிதை வரிகளை இங்கு பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கின்றேன்.
கிராமம் என்னும் தலைப்பில் இவர் மூன்று கவிதைகளைத் தொகுப்பில் சேர்த்திருக்கின்றார். இவற்றில் இவர் தன் கிராமம் பற்றிய எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார். முதலில் போர்ச்சூழலால்இருளடைந்த கிராமத்தை அறிமுகப்படுத்தி, பின்னர் அதன் ஒளிமிகுந்த காலத்தை நினைவு கூர்ந்து, தொடர்ந்து போரின் வடுக்களை வெளிப்படுத்தி இறுதியில் இருளடைந்த கிராமம் மீண்டும் உயிர்ப்புறும் என்ற நம்பிக்கையில் முடிகின்றது.
என் பால்ய காலம் இயற்கை வளம் மலிந்த வன்னியில் கழிந்தது. இக்கவிதையினை வாசிக்கையில் எனக்கு அக்காலகட்ட நினைவுகளே படம் விரித்தன. தாமரைகள் பூத்த தடாகங்கள், தொட்டாற் சிணுங்கிகள், மீனோடும் வாய்க்கால்கள், பாலைப்பழங்கள், கட்டாக்காலிகள், செம்மண் வீதிகள், வானம் தொடச் சலித்திருக்கும் மருதைகள், மாமரங்கள் எல்லாம் அக்காலகட்டத்துக்கே என்னைத்தூக்கிச் சென்று விட்டன. காலைவேளைகளில் குருமண் காட்டிலிருந்து வவுனியா மகாவித்தியாலயத்துக்குச் செல்கையில் எதிர்படும் இயற்கை வளம் மிகுந்த சூழலில் நாமடைந்த அனுபவங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தன. இதயத்தை மென்மையாக வருடிச்சென்றன ஹம்சத்வனியின் வரிகள்.
தொகுப்பில் என் கிராமம் - 1, என் கிராமம் - 1 & என் கிராமம் - 3 என்று வெளியாகியிருந்த மூன்று கவிதைகளையும் என் கிராமம் என்று ஒரு கவிதையாக இறுதியில் இணைத்துள்ளேன். இவ்விதம் மூன்று கவிதைகளையும் ஒன்றாக்கி வாசிக்கும்போதுதான் அக்கிராமம் பற்றிய பூரண சித்திரம் கிடைக்கிறது.
தொகுப்பிலுள்ள கவிதைகளில் என்னக் கவர்ந்த, நெஞ்சைத்தொட்ட வரிகளில் சிலவாகப் பின்வருவனற்றைக் கூறுவேன்:
1.
"காற்றுப் போன்றது வாழ்க்கை.
புதியாய் எதனையும் சொல்லத்தவறிய
புத்தகம் போல் பொழுதுகள்" ('உள்ளும், வெளியும்')
2.
'சப்பாத்துகளின் அடியில்
சப்திக்கா சருகுகள்' ('சருகு')
3.
"நாடோடிக்காற்று' ('நாடோடிக்காற்று')
4.
'நிலத்துக்கும் முகிலுக்கும்
தந்து கட்டி
தம்பூரா வாசிக்கும் மழை' ('சுவாசம்')
5.
'வீதியில்
காத்துக் கிடக்கிறது வாழ்க்கை
முகமூடி அணிந்தபடி' ('ஜாஸ்')
6.
'நான் வந்து விழுந்த
இந்த நகரத்தில்
தொலைந்தது என் முகம்.
அடை காத்தது அறை' ('பச்சை')
7.
'வெறி பிடித்தலையும் நினைவுகளைக்
கட்டி வைக்கவென்று ஒரு தொழுவமில்லை' ('தூறல்')
இவ்வரிகளுக்குப் பின் சிறப்பானதொரு படிமம் நினைவுகள் பற்றி மறைந்துள்ளது. நினைவுமாடு கட்டுக்கடங்காமல் முரண்டு பிடிப்பதை எத்துணை சிறப்பாகக் கவிஞர் கையாண்டிருக்கின்றார்.
********
என் கிராமம்
என் கிராமம் இருளடைந்தது
இப்படித்தான்.
ஆம்பலும் தாமரையும்
பூத்துக் கொழித்த குளங்களில்
பாசி படர்ந்து
நெல் விளைந்த கழனியில்
தொட்டாற் சிணுங்கி நாயுருவி அடர்ந்து
மாமர ஊஞ்சல்களின்
கயிறுகள் இற்றுப்போய்
பலா மரங்களின் அடியில்
சருகுக்ள் குவிந்து
பழங்கள் அழுகி விழுந்து
முற்றங்களில் முள்ளி முளைத்து
இருளடைந்தது
என் கிராமம்.
போருக்கு முந்தைய அமைதியான
நாட்களில்
மாரி பொழியவும் குளங்கள் நிறைந்தன.
நீர் வார்ந்தோட
செம்மண் வீதியில் பொன்மணற் படிவுகள்.
காற்றினோடு மாவிலை கதைக்க
பேட்டினோடு சேவல் கலக்க
மஞ்சள் மஞ்சளாய்
உழுந்தின் பூக்கள்.
கடல் நண்டுகளாய்
கலப்பைகளை உயர்த்தியபடி
விடியும்வரை உழவியந்திரங்கள்
விடிந்த பின்
வீதி எங்கணும் சிதறிய களிமண்
திரட்டி நான்
பிடித்த பிள்ளையாருக்கு
வாகைப் பூவை சூடிப்பார்ப்பாள்
தங்கை.
மீனோடும் வாய்க்காலோடு
மிதப்போம் நாங்கள்.
பள்ளி விட்டதும்
பாலைப் பழங்கள் பறிப்போம்.
இப்படி இப்படி
கழிந்தன நாட்கள்.
போருடனான இந்த நாட்களிலும்
மாரி பொழிய குளங்கள் நிறைந்தன.
செம்மண் வீதியில்
செந்நீர் தெளியல்.
கிராமக் கோடியில் ஓடும்
நறுவிழியாற்றின் கரைகளில்
சரசரப்பு.
ஒத்திசைந்தோடிய
வாழ்வின் இயக்கத்தை
மிதித்து நெரித்தது காலம்.
மூச்சற்றுக் கிடக்கிறது
எங்கள் கிராமம்.
சிலுவை யேசுவை
சிலந்தி மூடிற்று.
பிள்ளையார் பலிபீடத்தில்
களிம்பு படர்ந்தது.
எனினும் -
கிராமத்தின் இருப்பைக் காட்ட
உரம் கொண்ட கட்டாக் காலிகளும்
வானம் தொட சலித்திருக்கும் மருதைகளும்
இனியோர் நாளில்
எங்கள் கிராமம் உயிர்ப்புறும்.
* தொகுப்பினை வாசிக்க: https://noolaham.net/project/636/63598/63598.pdf
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems