மூத்த எழுத்தாளர் மா. பா. சி

மூத்த எழுத்தாளர் - நண்பர் மா.பா.சி (மா.பாலசிங்கம்) கடந்த 31 - ம் திகதி (31 - 10 - 2020) சனிக்கிழமை இரவு கொழும்பில் காலமான செய்தி கவலையளிக்கிறது. அவருக்கு வயது 81. முற்போக்குச் சிந்தனையாளரான மா. பா. சி. என அறியப்படும் மா. பாலசிங்கம் யாழ்ப்பாண நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வந்தார். எழுதுவினைஞராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சிறுகதை - குறுநாவல் - நாவல் - கட்டுரைகள் எனப் படைப்புகளை வரவாக்கியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'இப்படியும் ஒருவன்' மல்லிகைப் பந்தல் வெளியீடாக 2002 -ல் வெளிவந்தது. அடுத்த சிறுகதைத் தொகுதியான 'எதிர்க்காற்று' 2008 -ல் வெளியாகியது.

கொழும்பில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாது சமூகமளித்து அந்நிகழ்வுகளைத் தொகுத்து எழுதித் ' தினக்குரல்' பத்திரிகைக்கு அனுப்பிவைப்பார். பத்திரிகையில் அத்தொகுப்பு முழுப்பக்கத்தில் அழகாகப் பிரசுரமாகும். பத்திரிகை வாசகர்கள் - இலக்கிய ஆர்வலர்கள் எங்கிருப்பினும் அத்தொகுப்பினை வாசிப்பதின்மூலம் கூட்ட நிகழ்வினை முழுமையாக அறிந்து திருப்திகொள்வர். மா. பா. சி.யின் இப்பணி எழுத்துலகில் - வாசகர் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எனது நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகள் (இலக்கிய மாலை) யாவற்றையும் அவர் தொகுத்துத் தினக்குரலில் வெளிவரச் செய்தமை மனதில் நிற்கிறது.

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'இப்படியும் ஒருவன்' மல்லிகைப் பந்தல் வெளியீடாக 2002 -ல் வெளிவந்தது. அடுத்த சிறுகதைத் தொகுதியான 'எதிர்க்காற்று' 2008 -ல் வெளியாகியது.

அவர் எழுதிய தொகுப்புகள் பலவும் நூலாக்கப்பட்டு "மா. பா. சி. கேட்டவை - தினக்குரல் பதிவுகள்'' என்ற பெயரில் 2016 -ல் (488 + 26 பக்கங்கள்) வெளியிடப்பட்டது. பழகுவதற்கு இனிய நண்பர் மா. பா. சி. எங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார்..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R