ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2021

பேரன்புடையீர், வணக்கம்!

ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2021

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் மாநாடு, 2021 பெப்ரவரி 12, 13ஆம் திகதிகளில், ‘ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்’ எனும் கருப்பொருளில் இடம்பெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈழத்துத் தமிழ்நாடக வரலாற்றில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பணி மகத்தானது. பேராசிரியர்களான சுவாமி விபுலானந்தர், க. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன் ஆகியோர் தொடக்கம் இன்றுவரையும் ஈழத்தின் தமிழ் நாடக இலக்கியத்துக்கான பேராதனையின் பணி வளமிக்கதாகத் தொடர்கிறது. நாடகப் பிரதி, நாடக ஆற்றுகை முதலாய செயற்பாடுகள் மட்டுமன்றி, ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றைக் கட்டமைப்பதிலும் பேராதனைத் தமிழ்த்துறைப் புலமையாளர்களின் பங்களிப்புக் கனதியானது. இந்த மரபின் தொடர்ச்சியை மீள நினைவுகூரவும், ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம் தொடர்பான புலமைசார் உரையாடலை நிகழ்த்தவும், இந்த மாநாடு வழிசமைக்கும் என்று நம்புகின்றோம்.

ஈழத்தில் வெளிவந்த பல்வகையான தமிழ் நாடகப் பிரதிகளை, இலக்கியப் பிரதிகளாகக் கருதி ஆராய்வதும், அவற்றைச் சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தில் வைத்து வாசிப்பதும் இந்த மாநாட்டுக் கருப்பொருளின் முக்கிய நோக்கங்களாகும்.

ஆய்வு மாநாடு சிறப்புற நிகழத் தங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

ஆய்வு மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, இந்த மின்னஞ்சலின் இணைப்பில் உள்ள மாநாடு பற்றிய அறிவித்தலைப் பார்வையிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.  

நன்றி

தமிழ்த்துறையினர் சார்பில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்

கலாநிதி செல்லத்துரை சுதர்சன்
திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன்
தமிழ்த்துறை, கலைப்பீடம்,
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை, இலங்கை.

தொலைபேசி: +94772323743 / +94778338766
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R