- தம்பா (நோர்வே) -

அரக்க பறக்க ஓடும்
உலோகாய யுகத்தில்
பாலைவன ஓடையில் தூண்டிலுடன்
மீனுக்காக காத்திருப்பவன் போல்
ஓய்வுக்கான நேரத்தை கைப்பற்ற
காத்துக் கிடக்கும் மனிதனுக்கு
இடி மின்னல் இன்றி
மடைதிறவா வந்த
lockdown காட்டாறு வெள்ளத்துள்
மூழ்கி திக்குமுக்காடுகிறான்.

வாயும் வயிறும் துண்டிக்க
தூண்டிலும், கட்டியிருந்த கைலியும்
வெள்ளத்தில் போயிருக்கும்.

திசையறியா சூறாவளியில்
கலங்காது கரையேறும் மாலுமிக்கு
மீன்கள் படாது போவதுமுண்டு,
மீண்டு,
மீண்டும்
பாலைவன ஓடையில் தூண்டிலிலோ
காட்டாறு வெள்ளத்தில் வலையிலிலோ
நேரமேனும் மீனை
துரத்த எண்ணுபவனுக்கு அனுதாபங்களை
முன்கூட்டியே சொல்லி விடுங்கள்.

சிந்தனை சிறையின்
மூச்சு திணறலிலிருந்து
முதலில் விடுபட்டு வா.

பூமி என்னும் பெருமுதலாளி
நேரத்தை உற்பத்தி செய்வதை
நிறுத்த போவதில்லை.
அதன் சுவை நுகர
நீ தரப்போகும் விலைப்பட்டியலை
அடமானம் பிடிக்க
முதலைகள் கரையேற தொடங்கிவிட்டன.





Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R