கவிதை: பாரதியே வருக!

முண்டாசுக் கவியே!
முத்தமிழின் சுவையே!
முத்தாப்பாய் உன்னைப்பாட
முடியவில்லை என்னால்

மூச்சறுக்கும் முகமூடி
முனகுகிறேன் மனம்வாடி
பொய்மையின் புகலிடமோ
புண்ணிய தேசமிங்கு

வறுமையின் வாழ்விடமோ
வானளவு வளத்தினிங்கு
காணி நிலமெனக்கு
கல்லறையிலும் கிடைக்கவில்லை

புழங்கிட புன்செய் 
நிலமும் எனக்கில்லை
பயிரிட நன்செய்
தண்ணீரும் தானில்லை

இரண்டுமே இல்லாமல்
விவசாயம் செழித்திடுமா!
இயற்கையின் சினத்தை
இன்னும் பார்க்கனுமா!

மும்மாரி மழையிங்கு
முழுவதும் பொய்த்ததே
மாரி பெய்யத்தான்
மந்திரங்கள் ஒலிக்குதே

இயற்கை சிறையிலிட்டு
இதயம் இயங்குமா?
அறியாமை இருளில்
ஆதவன் உதிக்குமா?

முறுக்கு மீசையில்
தீமைகளை சுக்குநூறாய்
நொறுக்கிட  மீண்டும்
பிறந்திடு மகாகவியே!

ஓடி விளையாடி
ஓயவில்லை என்நாடி
கூடி விளையாட
இடமில்லை வீட்டுமாடி

இல்லறம் இன்று
தனித் தீவானதே
நல்லறம் ஏனோ
நசுங்கிப் போனதே

தீஞ்சுடர் சுடவில்லையே!
நின்தீந்தமிழ் சுடுகிறதே!
கயவரின் வேரறுக்க
காலதேவனாய் கடுகிவா

சாதித் தீயிலே
சமத்துவம் எரிகிறதே!
சாத்திரம் பேசியே
சரித்திரம் மறைகிறதே!

கோத்திரம் கொண்டு
குலங்கள் பிரிகிறதே
இறைவன் பெயரில்
பிரிவினை வளர்கிறதே

நெஞ்சம் பொறுக்கவில்லை
நிலைகெட்ட மனிதரை
நித்தம் பார்க்கையில்
சித்தம் கொதிக்கிறது

நற்கல்வி புகட்டிட
நாழிகையும் தாமதிக்காமல்
நானில நாயகனே
மீண்டும் பிறந்துவா

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R