- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -


பாளையின் சிரிப்புச் சிந்தும்
பாற்கடற் சிரிப்பா கட்டும்
வாழையின் இலையைப் போலும்
வாழ்க்கையே அழகா கட்டும்
காளையின் வலிமை போலும்
கற்பனை வசமா கட்டும்
நாளைய பொழுதே வெல்லும்
நற்தமிழ்ப் பொழுதே வாழ்க !

தோயுதல் கவிதைக் கின்பம்
துள்ளுதல் சிறுவர்க் கின்பம்
தாயவள் மடியின் இன்பம்
தாலாட்டு மழலைக் கின்பம்
சாயுதல் காதல் இன்பம்
சஞ்சலம் களவுக் கின்பம்
தேயுதல் நிலவுக் கில்லை
திரவியம் உழைப்பின் எல்லை!

வாழ்வது வாய்மை யாகும்
வாகையும் நெறியில் வாழும்
ஆள்வது அறமே யாகில்
ஆட்சியும் தெய்வ மாகும்
பாழ்மனம்; அரசர்க் குண்டேல்
பதைகுழி அவர்க்;கும் உண்டே
ஏழிசை சிறக்கு மென்றால்
இன்னிசை வாழ்வென் றாகும் !

மேழியும் வயலும் சேர்ந்து
மேதினி வளமுண் டாக்கும்
ஆழியும் கடலும் கூடி
அவனியில் மழையுண் டாக்கும்
தூளியும் தமிழும் பாடிச்
சொர்க்கமுண் டாக்கும் இல்லம்
கோளினில் ஒன்றும் இல்லை
குடும்பமே அன்பின் எல்லை !

கவிதையில் நிலம்வா ழட்டும்
கடவுளர் தமிழா கட்டும்
அவியிடும் நெறிவா ழட்டும்
அற்புதம் புவிகா ணட்டும்;
சுவைதரும் எழுத்தா கட்டும்
செந்தமிழ் அலைபா யட்டும்
தவமிடும் தெய்வம் தோன்றும்
தத்துவம் புவிவாழ் கவே!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R